Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழர்கள் வன்னி மீதான தாக்குதலை நிறுத்துமாறு போராட்டங்களை நடத்தவேண்டும்: பிரைன் செனவிரட்ன

Featured Replies

புலம்பெயர் தமிழர்கள் வன்னி மீதான தாக்குதலை நிறுத்துமாறு போராட்டங்களை நடத்தவேண்டும்: பிரைன் செனவிரட்ன

கிளிநொச்சி மீது இலங்கைப் படையினர் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை நிறுத்தக்கோரி உலகெங்கிலும் வாழும் புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் பாரிய போராட்டங்களை நடத்த முன்வர வேண்டும் என அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர் உரிமை சார்பாளரான பிரைன் செனவிரட்ன அழைப்பு விடுத்துள்ளார்.

பெரும்பாலானவர்கள் தம்மிடம் படையினரின் இந்தத் தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் என்ன செய்கிறார்கள் எனக் கேட்பதாக குறிப்பிட்ட பிரைன் செனவிரட்னஇ தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். உலகெங்கிலும் உள்ள பல மில்லியன் புலம்பெயர்ந்த தமிழர்கள் இந்த நிலைக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்றே தாம் கேட்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்றே தமது போராட்டங்களை ஆரம்பிக்க வேண்டும் நாளை என்பது சிலவேளைகளில் வடக்குகிழக்கு தமிழர்கள் காலதாமதத்தை ஏற்படுத்தி விடும் என்றும் செனவிரட்ன கூறியுள்ளார்.இல்லையெனில் இலங்கையில் தமிழ்மக்களின் இனப்படுகொலையையே பார்க்க முடியும் எனத் தெரிவித்துள்ள அவர் இது தொடர்பில் புலம்பெயர்ந்த தமிழர்களே தீர்மானிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது போராட்டங்களை வீதிகளிலும் சனநெருக்கடி மிக்க இடங்களிலுமே நடத்த வேண்டும். அதனை விடுத்து ஒதுக்குப்புற மைதானங்களில் நடத்துவதில் பயனில்லை. கடந்த செப்டம்பர் 10 ஆம் திகதி இலங்கைப் படையினர் நடத்திய வான் தாக்குதலில் கிளிநொச்சியில் மக்கள் குடியிருப்புகள் சேதமாக்கப்பட்டன. இ;ந்தநிலை எதிர்காலத்தில் தொடரக்கூடும்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதாகக் கூறி இலங்கை அரசாங்கம் தமது எதிரான அனைத்துத் தமிழ் சக்திகளையும் அடக்கி வருகிறது. கிளிநொச்சியில் இனப்படுகொலைகள் இடம்பெறுமானால் அதனைக் கண்டு உலகத்திற்கு சொல்ல இன்று ஐக்கிய நாடுகள் சபையினர் உட்பட்ட எவரும் அங்கு இல்லை. சிங்கள அரசாங்கம் திட்டமிட்டு ஏற்கனவே சுமார் ஒரு மில்லியன் தமிழ் மக்களை இலங்கையில் இருந்து வெளியேற்றி விட்டது. இதனை வைத்துக்கொண்டு தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை அழித்து விட சிங்கள அரசாங்கம் முனைகிறது.

தமிழர்கள் வாழ்ந்த பிரதேசங்களில் சிங்களவர்களைக் குடியேற்றுவதன் மூலம்இ சிங்களமயத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்துகிறது. சிங்கள அரசாங்கம் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளை பல வழிகளில் நடத்தலாம் எனக் குறிப்பிட்டுள்ள அவர்இ கொலைகள்இ துப்பாக்கிச்சூடுஇ பட்டினிபோடல்இ அத்தியாவசிய பொருட்களை தமிழ் பகுதிகளுக்கு அனுப்பாது விடுதல்இ விவசாயம் மற்றும் மீன்பிடித்துறையை நம்பியிருக்கும் மக்களை அவற்றை மேற்கொள்ளவிடாது தடுத்தல்இ சந்தைகளையும் வீடுகளையும் பாடசாலைகளையும் வியாபாரங்களையும் தகர்த்தல்இ போன்ற வழிகளில் இந்த இனப்படுகொலைகளை அரசாங்கம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக பிரைன் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்தியாஇ இலங்கை விடயத்தில் இரட்டை வேடம் போடுகிறது. பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் எதிரான போக்கை முன்னெடுப்பதற்காக இந்தியாஇ இலங்கை அரசாங்கத்திற்கு உதவிகளைச் செய்கிறது. இந்த நிலையில் இந்தியா இரட்டை வேடம் போடாது தமிழகத்தில் உள்ள 5 கோடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என செனவிரட்ன கோரியுள்ளார்.

இலங்கைக்கு வருடமொன்றுக்கு 750 பில்லியன் வருமானம் கிடைக்கிறது. அதில் 580 பில்லியன் வாங்கிய கடன்களுக்காகச் செலுத்தப்படுகிறது. மீதமுள்ளது 170 பில்லியன்கள். எனினும் அந்த 170 பில்லியன் ரூபாய்களும் முழுமையாகப் பாதுகாப்புக்காகச் செலவிடப்படுகின்றன. எனவே ஏனைய விடயங்களை மேற்கொள்ள இலங்கை அரசாங்கத்திடம் ஒரு ரூபாக் கூட மீதமில்லை.

இதன் காரணமாகவே இலங்கை மத்திய வங்கி இருப்புகள் அற்ற நிலையில் பணத்தை அச்சிடுகிறது. இதன் காரணமாகவே நாட்டில் பணவீக்கம் ஏற்படுகிறது.

எனவே இலங்கை அரசாங்கம் யுத்தத்தைக் காட்டியே இன்று ஆட்சியை முன்கொண்டு செல்கிறது. இந்தநிலையில் இனப்படுகொலையை நிறுத்த உலகளாவிய புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்றே வீதிகளில் இறங்கிப் போராட்டங்களில் ஈடுபடவேண்டும் என பிரைன் செனவிரட்ன அழைப்பு விடுத்துள்ளார்.

நன்றி தமிழ்வின்

புலம் பெயாந்த தமிழ்மக்கள் எல்லாம் ஒண்டு திரண்டு தங்கள் பலத்தை காட்ட வெளிக்கிட்டால் தேசியத்தலைவர் தனது இலட்சியத்தில் வெற்றியடைஞ்சிடுவர் பாருங்கோ.அவற்றை காலத்தில இந்தப் போராட்டம் வெல்லக் கூடாது எண்டது தானே கனபேற்றை விருப்பம். அப்பத்தானே சாதி சமயம் பிரதேசம் எண்டு தங்கடை பிழைப்பை நடத்தலாம்.புலம் பெயாந்த மக்கள் ஒன்றுதிரண்டு வீதியில் இறங்கிறதுக்கும் உரிய முறையில் தங்கடை பலத்தை காட்டிறதுக்கும் கனபேர் விடாயினம்

ஒரு சிங்களவரிடம் இருக்கும் உணர்வு கூட எம் தமிழரிடையே இல்லாதது வருந்தத்தக்கது. கொஞ்சம் பொறுங்கள் முருகன் கோயிலில் தேங்காய் உடைத்து விட்டு வருகிறேன். பிறகு மற்றதைக் கவனிக்கலாம். அது சரி ரஜனியின் அடுத்த படம் எப்ப ரீலிசாகும்?

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

---------------------------------ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

அவரும் எதிர்பார்த்திருப்பார் , எல்லா புலம்பெயர் தமிழரும் வீதில இறங்கி போராடிவினம் எண்டு,

நாங்க தேர் இழுக்கனும் , தேங்காய் உடைக்கணும் , அடுத்த படத்துகு புக் பண்ணனும் , கலை நிகழ்ச்சிக்கு போகணும்

உதெல்லாம் ...................

எங்கட ஆக்கள் நழுவிற மீனில , வழுவிற மீன் போல இருக்கினம்.

இன்றைக்கு புலம்பெயர் நாடுகளில இருக்கிற எல்லாரும்

இந்த கூத்துகளை நிறுத்திப் போட்டு

கவனயீர்ப்புக்காக அமைதி பேரணிகளை நடத்த வேணும்.

நாட்டில மக்கள் அல்லலுரும் போது

இங்க கூத்தாடுறதை விட்டுட்டு அமைதியா ஏதாவது செய்தா

அது பலரை சிந்திக்க வைக்கும்.

அதைவிட்டுட்டு கூத்தயும் கும்மாளத்தையும் நடத்தினா

இவங்களுக்கு சொந்தங்கள் குறித்து வேதனையே இல்லை என்றே தோன்றும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்தாளுக்கு தெரியாது. புலம்பெயர் தமிழினத்தின் சோகங்கள்.

ஸீரியலில் வரும் கதாநாயகியின் சோகத்தில் பங்கெடுத்து துன்பத்தில் துடிக்கும் எம்மினத்தை மேலும் துன்பப்படச் சொல்லாதீர்கள் பிரையன் செனிவரட்ன அவர்களே.

எங்கட ஆக்கள் நழுவிற மீனில , வழுவிற மீன் போல இருக்கினம்.

இன்றைக்கு புலம்பெயர் நாடுகளில இருக்கிற எல்லாரும்

இந்த கூத்துகளை நிறுத்திப் போட்டு

கவனயீர்ப்புக்காக அமைதி பேரணிகளை நடத்த வேணும்.

நாட்டில மக்கள் அல்லலுரும் போது

இங்க கூத்தாடுறதை விட்டுட்டு அமைதியா ஏதாவது செய்தா

அது பலரை சிந்திக்க வைக்கும்.

அதைவிட்டுட்டு கூத்தயும் கும்மாளத்தையும் நடத்தினா

இவங்களுக்கு சொந்தங்கள் குறித்து வேதனையே இல்லை என்றே தோன்றும்.

தோன்றுவதென்ன பெரும் பான்மை உண்மை நிலவரம் அது தான். சீரியல் பாக்கினம் சினிமா பாக்கினம் எண்டு கத்துவது ஒரு பக்கம் என்னொரு பக்கம் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தமது எழுத்துக்கள் பதிவுகள் ஊடாக அதையே தானே ஊக்கப்படுத்துகினம். வன்னி நிலவரம் குறித்து எந்த வித சலனமும் இல்லாமல் சினிமா ஆராய்ச்சி செய்பவர்கள் ஏராளம். ஒவ்வொரு புலம்பெயர்ந்த ஈழத்தமிழனும் எழுத்துக்கள் ஊடாக அன்றாட உரையாடல் ஊடாக விடும் தவறுகள் பெரியது. அவலங்களை கண்டும் காணாது போங்கள் என்ற வழிகாட்டலை செய்கின்றார்கள். எந்த நேரத்தில் எப்படி நாம் நடந்து கொள்ள வேண்டும் என்ற பொறுப்புணர்வு என்பது சீரளிந்த நிலையில் இருப்பது மிக வேதனையானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.