Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நளினி விடுதலை: பரிசீலிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வரும் நளினியை விடுதலை செய்வது குறித்து, புதிய ஆலோசனைக் குழுவை அமைத்து அதன் பரிந்துரையின் பேரில் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம் நளினி உள்ளிட்ட 3 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து விட்டது.

கடந்த 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூருக்கு வந்தார். மனித வெடிகுண்டு தாக்குதலில் அவர் பலியானார். இந்த வழக்கில் சென்னையை சேர்ந்த நளினிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர் கருணை அடிப்படையில் மரண தண்டனையை ரத்து செய்துவிட்டு, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து வேலூர் மகளிர் சிறையில் நளினி சிறை வாசம் அனுபவித்து வருகிறார்.

இந்த நிலையில், தான் 16 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருவதால் தன்னை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்தார்.

கடுமையான குற்றங்கள் செய்து ஆயுள் தண்டனை குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய இயலாது என்று தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதேபோல, இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரும் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை நீதிபதி நாகமுத்து விசாரித்தார். இரு தரப்பு விவாதங்களும் முடிந்ததால் வழக்கின் தீர்ப்பை கடந்த 19ம் தேதி நீதிபதி தள்ளி வைத்தார்.

இந்த நிலையில் இன்று பிற்பகல் தீர்ப்பினை அறிவித்தார் நீதிபதி நாகமுத்து.

நீதிபதி நாகமுத்து அளித்த தீர்ப்பில், மனுதாரர்களின் விடுதலை கோரிக்கை குறித்து பரிசீலிக்க அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழு முறையாக அமைக்கப்படவில்லை. எனவே புதிதாக ஆலோசனைக் குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும். அங்கு மனுதாரர்கள் விரைவில் விடுதலை கோரும் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுக்களை ஆலோசனைக் குழு பரிசீலிக்க வேண்டும்.

கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு அரசுக்கோ அல்லது சிறை நிர்வாகத்திற்கோ உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது.

ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின் பேரில் தமிழக அரசுதான் இதில் முடிவெடுக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரின் மனுக்களை அவர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

- தற்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

விதானை வீட்டில போய் ஒழித்த மாதிரித்தான் இதுவும்

மத்திய அரசே பறவாயில்லை

இந்த ஆள் இதை வைத்து என்ன பேரம் பேசுவாரோ?????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நளினி விடுதலை குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: கருணாநிதி

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை விடுதலை செய்வது தொடர்பாக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என தமிழக முதல்வர் கருணாநிதி இன்று கூறினார்.

நளினியின் விடுதலை கோரும் மனுவை மீண்டும் பரிசீலித்து, அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு வேலூர் சிறையின் ஆலோசனைக் குழுவை அரசு கேட்டுக்கொள்ளும். ஆலோசனைக் குழுவின் கூட்டம் முறையாக நடத்தப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஆலோசனைக் குழு மீண்டும் கூடி அதன் பரிந்துரைகளை அளித்த பின்னர் சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை அரசு எடுக்கும் என திமுகவின் அதிகார்வபூர்வ நாளேடான முரசொலியில் கருணாநிதி தெரிவித்துள்ளார்

- தினமணி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞருக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம். தமிழ் மக்களின் உணர்வை மதித்து நல்லதொரு தீர்ப்பை வழங்கி நளினியை விடுதலை செய்ய முயற்சிக்க வேண்டும். இல்லையேல் மீண்டும் ஒரு வரலாற்றுத்தவறை இழைத்ததற்காக தமிழ் மக்களின் மனங்களில் இருந்து முற்றாகவே அகற்றப்பட்டு விடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை லயோலா கல்லூரி நடாத்திய கருத்து கணிப்பில் , இப்போது தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு 38.3 சதவீதம் பேர் அதிமுகவுக்கு என்றும், 25.8 சதவீதம் பேர் திமுகவுக்கு என்றும், 19.5சதவீதம் பேர் தேமுதிகவுக்கு என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இதனை மாற்ற விரும்பினால் நளினி விடுதலையாவதற்கு நல்ல முயற்சி எடுக்கவேண்டும் . இந்த சந்தர்ப்பத்தையும் தவறவிட்டால் .வரும் தேர்தலிம் மக்கள் கலைஞர் அரசை நிராகரித்து விடுவார்கள் . பின்பு எதிர்கட்சியில் இருந்து கொண்டு வழமை போல் குரல் கொடுத்து பிரயோசனம் இல்லை .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை லயோலா கல்லூரி நடாத்திய கருத்து கணிப்பில் , இப்போது தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு 38.3 சதவீதம் பேர் அதிமுகவுக்கு என்றும், 25.8 சதவீதம் பேர் திமுகவுக்கு என்றும், 19.5சதவீதம் பேர் தேமுதிகவுக்கு என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இதனை மாற்ற விரும்பினால் நளினி விடுதலையாவதற்கு நல்ல முயற்சி எடுக்கவேண்டும் . இந்த சந்தர்ப்பத்தையும் தவறவிட்டால் .வரும் தேர்தலிம் மக்கள் கலைஞர் அரசை நிராகரித்து விடுவார்கள் . பின்பு எதிர்கட்சியில் இருந்து கொண்டு வழமை போல் குரல் கொடுத்து பிரயோசனம் இல்லை .

லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு--திமுக ஆதரவு சரிவு

சென்னை லயோலா கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பில், தற்போதைய சூழ்நிலையில் அதிமுகவுக்கே பொதுமக்களிடம் அதிக ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது.

தமிழக அரசியலில் தற்போது பல்வேறு பிரச்சனைகள் நிலவிவரும் நிலையில், லயோலா கல்லூரியின் ஊடகவியல் துறை சார்பில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

அதிமுகவுக்கு ஆதரவு:

இதில், "தற்போது தேர்தல் வந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள்?" என்ற கேள்விக்கு, 38.3 சதவீதம் பேர் அதிமுகவுக்கே வாக்களிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

திமுகவுக்கு வாக்களிப்போம் என்று 25.8 சதவீதம் பேரும், மேற்படி இரு கட்சிகளுக்கும் மாற்றாக தேமுதிகவுக்கு வாக்களிப்போம் என்று 19.5சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.