Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளிநொச்சியில் சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல்: பொதுமகன் பலி; 4 சிறார்கள் உட்பட 7 பேர் படுகாயம்

Featured Replies

சிறீலங்கா இராணுவத்தினர் இன்று கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் விமானத்தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் கொல்லப்பட்டும் ஒரு குழந்தை படுகாயமடைந்துள்ளது. இந்த தாக்குதல் இன்று மாலை 12.30 மணியளவில் இடம்பெற்றதாக தமிழீழ காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

http://www.tamilseythi.com/tamileelam/kili...2008-09-27.html

எவ்வளவோ கொடுமையை செய்கின்றான் சிங்களவன் தமிழருக்கெதிராக ஒட்டி இருப்பவர்கள் அறிவார்களா இதை?

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவோ கொடுமையை செய்கின்றான் சிங்களவன் தமிழருக்கெதிராக ஒட்டி இருப்பவர்கள் அறிவார்களா இதை?

ஒட்டியதோட கலர் மாறியாச்சு

திரும்ப எப்படி????

Kili_Air_20090927_001.jpgகிளிநொச்சி, இரத்தினபுரத்தில் சிறீலங்கா வான் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், குழந்தை உட்பட மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

இன்று நண்பகல் 12:30 அளவில் கிளிநொச்சி வான் பரப்பில் நுழைந்த சிறீலங்கா வான்படை வானூர்திகள் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளன.

கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் இருந்து செஞ்சிலுவை அனைத்துலகச் சங்கத்தின் அலுவலகம் இரத்தினபுரத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், அதன் அலுவலகத்திலிருந்து 150 மீற்றர் தொலைவில் இன்று தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீதே தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருப்பதாக, சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

Edited by தராக்கி

கிளிநொச்சியில் சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல்: பொதுமகன் பலி; 4 சிறார்கள் உட்பட 7 பேர் படுகாயம்

[சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2008, 06:47 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

கிளிநொச்சி நகர் இரத்தினபுரம் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கைக்குழந்தையுடன் மூன்று சிறார்கள் உட்பட ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சி நகர்ப்பகுதி மக்கள் குடியிருப்பான இரத்தினபுரம் மீது இன்று சனிக்கிழமை பிற்பகல் 12:10 நிமிடமளவில் சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன.

இத்தாக்குதலில் இதில் இரத்தினபுரம் பிள்ளையார் கோவில் மற்றும் மக்களின் 13 வீடுகள் சேதமாகியும் அழிந்தும் உள்ளன. இரண்டு டுகள் முற்றாக அழிந்துள்ளன.

தாக்குதலின்போது வீடுகளில் இருந்த வீதியில் பயணம் செய்த பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஏழு பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்டவர் அடையாளம் காணப்படவில்லை.

இரத்தினபுரத்தைச் சேர்ந்த சதீஸ் அருட்செல்வி (வயது 27)

அவரின் மகன் சதீஸ் தனுசிகன்

மகள் சதீஸ் தனுசிகா ஆகிய சிறுவர்களும்

மாதக் குழந்தையான காந்தராசா துவாரகன்

அவரின் தாயான காந்தராசா பவானி (வயது 36)

மாணிக்கப்பிள்ளை மங்களேஸ்வரி (வயது 62)

நாச்சிக்குடாவிலிருந்து இடம்பெயர்ந்து வட்டக்கச்சி நோக்கிச்சென்று கொண்டிருந்த கே.ஜெயந்தி ஆகியோர் படுகாயமடைந்தனர்.

அப்பகுதியில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழுவினரின் வதிவிடம் இருக்கின்றது. அதிலிருந்து குறும் தொலைவிலிருக்கும் மக்கள் குடியிருப்பு மீதுதான் சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.