Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கில் இடம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்பில் சர்வதேசத்தை விடவும் எமக்கு அக்கறை அதிகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி நாளேடு - வடக்கில் உக்கிரமடைந்துள்ள மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள 2 இலட்சம் தமிழ் சகோதர, சகோதரிகள் தொடர்பில் சர்வதேச நாடுகள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களை விடவும் எமக்கு அக்கறை அதிகம் என்று அமைச்சரும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளருமாகிய கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அதனாலேயே இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களுக்காக 800 மெட்ரிக் தொன் உலர் உணவுப் பொருட்களை அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் தொடர்ந்தும் கூறியதாவது:.

வடக்கில் மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில் அங்கு தமிழ் மக்கள் தொடர்ந்தும் இடம்பெயர்ந்து வருகின்றனர். இவ்வாறு இடம்பெயர்ந்துள்ள சுமார் 2 இலட்சம் மக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்றும் அம்மக்கள் மீது அரசாங்கத்துக்கு எவ்வித அக்கறையும் இல்லை எனவும் சர்வதேச நாடுகளும் பல்வேறு அரச சார்பற்ற அமைப்புக்களும் அரசாங்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கøளைச் சுமத்தி வருகின்றன.

இதனாலேயே வன்னியில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வரும் தொண்டு நிறுவனங்களையும் அங்கிருந்து உடனடியாக அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது என்றும் அக்குற்றச்சாட்டுக்களின் போது தெரிவிக்கப்பட்டன.

உண்மையில் வன்னியில் இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் மீது சர்வதேச நாடுகளை விடவும் அரசாங்கத்துக்கு அக்கறை அதிகம். அவர்களது குற்றச்சாட்டுக்களை –எண்ணி அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்காது. இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் எமது சகோதர சகோதரிகளே. அவர்கள் குறித்து எமக்கில்லாத அக்கறை வேறு எவருக்கு உண்டு?

அவர்கள் மீது அக்கறை உள்ளபடியாலேயே தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் உலர் உணவுப் பொருட்களை அனுப்ப அரசாங்கம் தீர்மானித்தது. இந்த நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் முதற்கட்டமாக 800 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்களை அனுப்ப நடவடிக்கை எடக்கப்பட்டுள்ளது .

வன்னியில் பொதுமக்கள் மீது குண்டு போடுவதெல்லாம் சகோதரங்களுக்குள்ள அடிச்சு விளையாடுற மாதிரித்தான் எண்டு அவர் சொல்லுறார்போல.

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிந்ததாலேயே அனுப்பிவிட்டு

ஏதோ சொல்கிறார்???

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரர்களை இப்படி செல்லாமாக அடிக்கும்போதே.... மரணத்தின் உச்சியில் நிற்கின்றார்கள்.... ஒரு வேளை கசோதரர்களில் ஏதும் கோபம் வந்து ரம்பு அடித்தால் எப்படி இருக்கும் வன்னி? இந்த கேள்வியைதான் இனி அனைத்துலகம் ரம்புவிடம் கேட்கவேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.