Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கம்யூனிஸ்ட் கட்சியும் ஈழத் தமிழர் ஆதரவும் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கம்யூனிஸ்ட் கட்சியும் ஈழத் தமிழர் ஆதரவும் - வ.ஐ.ச.ஜெயபாலன்

இந்திய கம்யூணிஸ்ட் கட்சியினர் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்த ஈழத்தமிழரையும் தமிழகமீனவரையும் கொல்லாதே என சிக்கள அரசை எச்சரிக்கும் உண்ணா நோன்பு எழுச்சி எதிர்பாராத வெற்றி பெற்றது.

சென்னையில் தோழர்கள் த.பான்டியன், ராஜா, சி.மகேந்திரன் தலைமையிலும் மதுரையில் தோழர் நல்லக்கண்ணு தலைமையிலும் எழுச்சி நிகழ்வுகள் நடந்தது. இது பற்றிய சேதிகளை எனைய இணையத் தளங்களில் வாசித்திருபீர்கள். நிகழ்வில் இந்துதுவா தவிர ஏனைய எல்லா சித்தாந்தப் கொள்கை வட்டங்களில் இருந்தும்கட்சியினரும் ஆர்வலர்களும் கலந்துகொண்டனர். மதுரை மாநாட்டை மதுரை ஆதீனம் அவர்களே ஆரம்பித்து வைத்தார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பை ஏற்று மர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் முதல் முறையாக இத்தகைய ஒரு நிகழ்வில் கலந்து ண்டது குறிப்பிடத்தக்கது. கம்யூனிஸ்ட் மதியில் இத்தகைய மாற்ங்கள் கருக்கொள்வதாக எனது தீராநதி (அக்டோபர் 2006) பேட்டியில் குறிப்பிட்டிருந்தேன். அதில் இந்திய கம்யூனீஸ்ட் கட்சியில் மகேந்திரன் நல்லகண்ணுவும் முன்னிலை வகிப்பதாக குறிப்பிட்டிருந்தேன். இன்று அவர்களுடன் தோழர்கள் ராஜாவும் ஆற்றல்மிகு தலைவரான த.பாண்டியனும் போர்க்குணத்துடன் தீவிரமாக செயல்படுகின்றனர். உண்னாவிரத இறுதியில் சட்டரீதியாக மனிதபிமான உதவிகலையேனும் செய்யமுடியாவிட்டால் சட்டத்தை மீறுவோம் கடத்த்லில் ஈடுபடுவோமென த,பாண்டியன் குறிப்பிட்டார்.

தோழர் பாண்டியன் சிறீபெரும்புத்தூர் தற்கொலைக் குண்டுவெடிப்பில் அடிபட்டு இறந்துவிட்டதாகக் கருதப் பட்டவர். அவற்றையெல்லாம் மறந்தும் மன்னித்தும் தாண்டிவந்து அவர் இன்று எமக்கு ஆதரவாகத் தீவிர நிலைபாடு எடுத்துள்ளமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

மக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் நான் குறிப்பிட்டதுபோலவே தலைமைத் தோழர் சீதாராம் எச்சுரியும் கலை இலக்கிய பெருமன்றத்தைச் சேர்ந்த தமிழ்செல்வன் போன்ற எழுத்தாள நண்பர்களும் தமிழர் போராட்டம்தொடர்பான புதிய அணுகுமுறையை முன்வைக்கிறார்கள். அதன் விழைவுதான் மேற்படி போராட்டத்தில் மாக்சிட்டுகளின் பங்குபற்றுதலாக வளற்ச்சியடைந்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுள் எங்கள் சார்பாக போராடிவரும் தோழர்கள் ராஜா பாண்டியன் நல்லகண்ணு மகேந்திரன் போன்றவர்களின் கரத்தைப் பலப்படுத்த வேன்டிய கடமை ஈழ உலகத் தமிழர்களுக்கு உள்ளது.

நிகழ்ச்சிகள் பெரும்பாலும் பதிரிகைகளாஈவிட தொலைக்காட்சிகளில் சிறப்பாக வெளிப்பட்டது. சண் ரிவி இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களதும் என்னுடையதும் பேச்சு உட்பட பல பேச்சுக்களை நேரலையில் ஒளிபரப்பியது.

என்னுடைய பேச்சில் சோனியா அம்மையார் தலைமையில் அரசு அமையும்போதெல்லாம் இலங்கை அரசின் இனக்கொலைக்கு உதவுவது தொடர்வதைதைச் சுட்டிக்காட்டினேன்.

ஐ.பி.கே.எப் காலத்து எங்கள் இளைஞர் பெண்களைப் பலிகொண்ட இந்திய அரசின் தவறுகளை நாம் மன்னித்துவிட்டோம் அதன்பின் நிகழ்ந்துவிட்ட எங்கள் தரப்புத் தவறுகலையும் மன்னித்துவிடுங்கள். எங்களை இனப்படுகொலை செய்யவும் தமிழக மீனவர்களைக் கொல்லவும் சிங்கள் அரசுகளுக்கு உதவவேண்டாமென்று சோனியா அமையாரைக் கேட்டுக்கொண்டேன். தமிழரான சிதம்பரம் கொடுக்கும் கடன்கள் மூலம்தான் இலங்கை அரசு ஆயுதங்களை வாங்கிக் குவிக்கிறது என்பதையும் சுட்டிக்காடினே,

அண்ணா 100 ஆண்டு கவியரங்கில் வைரமுத்து சென்னையில் மட்டுமல்ல டெல்ஹியிலும் கலைஞரிடம்தான் பவர் இருக்கிறது என்று சொன்னதைக் குறிப்பிட்டு அந்தப் பவர் இனகொலையிலும் மீனவர் கொலையிலும் ஈடுபடும் சிங்களஅரசையே பலபடுதுத்கிறது. தமிழர்கள் கலைஞரை சோழன் என்கிறார்கள். சோழமன்னன் தன் வாசல் ஆராட்சிலமணியை கன்றை இழந்த பசு முட்டியபோது பதிலுக்குச் சோழன் இன்னொருநாளில் நானும் அந்த மணியை முட்டுவேன் என்று கூறாமல் உரிய நடவடிக்கை எடுததைச் சுட்டிக் காடினேன். சோழமன்னா உன் அரண்மனை வாசல் ஆராட்ட்சி மணியை தன் ஈழக் கன்றுக்கு நிகழும் கொடுமை கண்டு தாய்படு முட்டி அடிக்கிறது. நானும் ஆராட்சிமணியை முட்டி அடிப்பேன் 9ம் திகதி உண்ணாவிரதம் இருப்பேன் என்னாமல் உரிய நடவ்டிக்கை எடுங்கள். என்று பேசினேன்.

சிறிய தீவிர இடது மற்றும் பெரியார் வழி அமைப்புகள் சில கலந்துகொண்டன சில வெளியில் இருந்து ஆதரித்தன.

கம்யூனிஸ்ட் கட்சிக்குள் எங்கள் சார்பாக பெரும் உட்கசிப் போராட்டம் இடம்பெறுகிறது. வசதியின்மைக்கும் நெருக்கடிகளுக்குள்ளும் அவர்கள் செயல்படுகிறார்கள். இதருணத்தில் நாம் அவர்கள் கைகளைப் பலப்படுத்த வேண்டும்.

அவர்கள் முயற்சியைப் பாராட்டியும் ஆதரித்தும் தந்திகள் கடிதங்கள் அனுப்பலாம்.

secretary

Comunist party of India

Palan illam.

New N. 43 South Boag st.

T.Nagar

Chennai 17

.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.