Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க "கிறீன் அட்டை' விசாவுக்கு விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி நாளேடு - அமெரிக்க "கிறீன் அட்டை' சீட்டிழுப்புக்கான விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக் கொள்ளப்படுவதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மேற்படி தூதரகத்தால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறி ப்பிடப்பட்டிருந்ததாவது, 2010 ஆம் ஆண்டுக்கான பல்வகைமை குடியேற்ற விசா சீட்டிழுப்பானது

கடந்த 2ஆம் திகதி வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக வாஷிங்டன் டி.சி.யில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி நிகழ்ச்சித் திட்டத்தின் பிரகாரம் குறிப்பிட்ட நோக்க அடிப்படையிலான தராதரங்களைக் கொண்டுள்ள குடியேற்றவாசிகளின் விண்ணப்பங்கள் எழுந்தமானமாக தெரிவு செய்யப்படும். இலங்கை அல்லது மாலைதீவு பிரஜையாக இருத்தல், பாடசாலை உயர் கல்வி அல்லது அதற்குச் சமமான கல்வித் தராதரம் (க.பொ.த. சாதாரண தரத்தில் கட்டாய பாடங்கள் உட்பட ஆறு பாடங்களில் சித்தி) அல்லது கடந்த 5 வருட கால பகுதிக்குள்ளான தொழில் அனுபவம் (இதன்போது 2 வருட கால பயிற்சி அல்லது செயல் நிறைவேற்ற அனுபவமும் கோரப்படும்) போன்ற தகுதி நிலைகளை உடையவர்கள் மட்டுமே இந்த கிறீன் அட்டை சீட்டிழுப்பில் பங்கேற்க முடியும். இந்த சீட்டிழுப்பில் பங்கேற்க விரும்பும் தனி நபர்கள், தாமதத்தைத் தவிர்க்கும் வகையில் முன்கூட்டியே விண்ணப்பிக்கக் கோரப்பட்டுள்ளது. இந்த "கிறீன் அட்டை' சீட்டிழுப்பின் மூலம் உலகெங்குமிருந்து 50,000 தனி நபர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இந்த நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் தேவைப்படும் அத்தியாவசியத் தகுதிகள் சம்பந்தமாக மேலதிக விபரங்களை ந்ந்ந்.ச்ரிலன்க.உசெம்பச்ச்ய்

.கொவ் என்ற கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரக இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

மேற்படி சீட்டிழுப்புக்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதித் திகதி எதிர்வரும் டிசெம்பர் முதலாம் திகதியாகும். இந்த பல்வகைமை விசா சீட்டிழுப்புக்காக பதிவுக் கட்டணம் எதுவும் அறவிடப்பட மாட்டாது. அது முற்றுமுழுதாக இலவசமாகும். முழுமையாக இணையத்தளம் மூலமாக நடத்தப்படும் இந்த சீட்டிழுப்புக்கு கடதாசி ஆவணங்கள் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அமெரிக்காவால் ஸ்தாபிக்கப்பட்ட இணையத்தளம் ஊடாகவே விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன. இதன் பிரகாரம் விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பங்களை ந்ந்ந்.ட்வ்லொட்டெர்ய்.ச்டடெ.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவு செய்து அமேரிக்க லொத்தருக்கான விலாசத்தையும் இதனுடன் இணைத்திருந்தால் எவ்வளவு வசதியாக இருந்திருக்கும்

அமெரிக்காவில் குடியேறுவதற்கான 2010ம் ஆண்டுக்கான பன்முக சீட்டிழுப்பு விசா ஒக்டோபர் 2ம் திகதி முதல் வொசிங்டனில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தெரிவுசெய்யப்பட்ட பல நாடுகளிலிருந்தும் எழுந்தமானமாகத் தெரிவுசெய்யப்படும் 50,000 விண்ணப்பதாரிகள், அதற்குரிய அனைத்துத் தகுதிகளையும் நிறைவுசெய்யும் பட்சத்தில் விரைவாக அமெரிக்காவில் குடியேறுவதற்கு இது அனுமதிக்கிறது.

இதற்கு விண்ணப்பிக்கும் ஒருவர்,

1.அதற்குத் தகுதியுடைய நாட்டின் குடியுரிமையைக் கொண்டிருக்கவேண்டும்(இலங்கை, மாலைதீவுகள் ஆகியவை தகுதிபெற்றவை)

2.உயர் கல்வி அல்லது அதற்குச் சமானமான கல்வித் தகைமை(க.பொ.த. சாதாரணதரத்தில் குறிப்பிட்ட பாடங்கள் உட்பட 6 பாட சித்தி) அல்லது குறிப்பிட்ட தொழிற்துறையில் 5 வருட பணி அனுபவம். ஆகிய தகுதிகளைக் கொண்டிருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமாற்றத்தைத் தவிர்ப்பதற்காக இயன்ற விரைவில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

இதுகுறித்த மேலதிக விபரங்களுக்கு இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரக இணைய முகவரியான www.srilanka.usembassy.gov இல் பெற்றுக்கொள்ளலாம்.

சீட்டிழுப்பு பதிவுசெய்யப்படும் கால எல்லை ஒக்டோபர் 2 முதல் டிசம்பர் 1 வரையானதாக இருக்கும் எனவும், இந்தச் சீட்டிழுப்பு முழுவதும் இலத்திரனியல் பதிவுகள் மூலமே மேற்கொள்ளப்படும் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

தாள்கள் மூலமாக விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கென www.dvlottery.state.gov என்ற பிரத்தியேக இணையத்தளம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், பதிவுசெய்யப்பட்ட விண்ணப்பங்களின் உறுதிப்படுத்தப்பட்ட விபரங்களும் இந்த இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த உறுதிப்படுத்தல் விபரத்தை பிரதி எடுத்து ஆதார ஆவணமாகப் பயன்படுத்த முடியும்.

ஒருவர் ஒரு தடவை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதுடன், ஒரு தடவைக்கு மேல் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டால் அந்த விண்ணப்பங்கள் தகுதியற்றவையாகக் கருதப்படும் என்றும் இராஜாங்கத் திணைக்களம் கூறியுள்ளது.

தெரிவுசெய்யப்பட்ட விண்ணபதாரிகள் தொடர்பான விபரங்கள் தபால் மூலம் 2009 மே முதல் ஜுலை வரையான காலப்பகுதியில் அறிவுறுத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி பெற்றவர்கள் முதலில் ஒருவருடத்துக்கான நுழைவு வாய்ப்பைப் பெறுவர் என்றும், அந்தக் காலப்பகுதிக்குள் அவர்கள் அமெரிக்காவில் குடியேறலாம் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

தயவு செய்து அமேரிக்க லொத்தருக்கான விலாசத்தையும் இதனுடன் இணைத்திருந்தால் எவ்வளவு வசதியாக இருந்திருக்கும்

----> www.dvlottery.state.gov :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நான் புலம் பெயர்ந்தபோது அமெரிக்காவை தெரிவு செய்யாததற்காக பலமுறை சந்தோசப்பட்டிருக்கிறேன்.

இதில் லொத்தர் வேறு? நடக்கட்டும். வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.