Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்களைக் காக்க இந்த அரசை இழக்கவும் தயார் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: மத்திய அரசின் எச்சரிக்கைகள் இலங்கையில் தொடர்ந்து மீறப்பட்டு வரும் நிலையில் இந்த அரசு எங்களுக்குத் தேவையா என்கிற கேள்விக்கு விடை கண்டாக வேண்டும் என முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

'இலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.க.வின் நிலையும் மத்திய அரசுக்கு வேண்டுகோளும்' எனும் தலைப்பில் தி.மு.க. சார்பில் சென்னை மயிலை மாங்கொல்லையில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு தி.மு.க. பொதுச் செயலாளரும், நிதி அமைச்சருமான பேராசிரியர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

நீண்ட காலத்திற்கு பிறகு இலங்கை பிரச்சினை குறித்து பேசவேண்டிய, செயல்பட வேண்டிய உறுதி எடுக்க வேண்டிய, ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையை எந்த கோணங்களில் அணுகப்போகிறோம், அணுக இருக்கிறோம் என்ற நிலைகளை கடந்த 2 நாட்களாக தலைமை கழகத்தின் சார்பில் நானும், பொதுச்செயலாளரும், கழக முன்னோடிகளும் அறிவாலயத்தில் அமர்ந்து சிந்தித்து அதனடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுதான் இந்தப் பொதுக் கூட்டம்.

இந்த கூட்டத்திற்கான விளம்பரங்கள் செய்யப்பட்டு, உங்களை எல்லாம் சந்திப்பதற்கு முன்பு எதற்கும் மத்திய அரசோடு ஒரு வார்த்தை பேசிவிட்டு, நம்முடைய முடிவுகளை எடுக்கலாம் என்று கருதி மத்திய அரசுக்கு நம்முடைய நிலையை விளக்கி நாம் தமிழகத்திலே எத்தகைய தாங்கொணா துயரத்திற்கு ஆளாகியிருக்கிறோம் என்பதை எடுத்துச்சொல்லி, அவர்களுக்கு விளக்கம் அளித்து, 'இதற்கு தக்கதோர் வழிகாண வேண்டும். தமிழர்களை இலங்கைத் தீவிலே காப்பாற்றியாக வேண்டும்' என்ற அபயக்குரலை இங்கே எழுப்புவதற்காகக் கூடியிருக்கிறோம்.

இலங்கைக்கு உதவுவதை ஏற்க முடியாது !

இன்றைக்கு போராட்டத்தை அறிவிக்கப்போகிறோம் என்று யாரும் கருத வேண்டாம். நமது ஆசைகள் நிராசைகளாகுமேயானால், நமது எதிர்பார்ப்பு நமக்கு ஏமாற்றத்தை தருமேயானால், அதைப்பற்றி நாம் ஆலோசிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம் என்பதை தவிர்த்திட நான் விரும்பவில்லை.

ஏனென்றால் இருப்பது ஒரு உயிர். அது போகப்போவது ஒருமுறை. அது நல்ல காரியத்திற்காக போகட்டுமே என்கின்ற பழமொழி இன்றைக்கெல்லாம் கேட்டுக்கேட்டு பழக்கமான ஒரு மொழி. அது கேட்டுக்கேட்டு பழக்கமாக இருந்தது மட்டும் போதாது.

செயல்பட்ட மொழியாகவும் மாறிடும் ஒருநிலையை உருவாக்குவதற்கு இலங்கை அரசும், இலங்கை அரசுக்கு ஏதோ ஒரு வகையில் தங்களையும் அறியாமல் ஏமாற்றப்பட்டு இந்தியப் பேரரசு துணையாக மாறிவருவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை அறிவிப்பதற்காகத்தான் இந்த கூட்டம்.

1956-ல் தீர்மானம்!

1956ம் ஆண்டிலேயே இலங்கை பிரச்சினைக்கான குரல் தமிழகத்தில் எழுந்தது. அந்த பிரச்சினைக்காக எடுக்கப்பட்ட தீர்மானத்தையும், அன்று சிதம்பரத்தில் 29.1.56-ல் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நான் தான் முன்மொழிந்தேன். கழகத்தின் மூத்த தலைவர்களுல் ஒருவரான பொன்னம்பலனார் அதை வழிமொழிந்தார்.

எனவே நேற்று பெய்த மழையில் இன்றைக்கு முளைத்த காளான்கள் சில பேர் இந்த பிரச்சினையை எழுப்பிக்கொண்டு கூச்சலிடுகிறார்கள் என்று யாரும் சொல்ல முடியாது.

என்றைக்கு இலங்கையில் இந்த பிரச்சினை உருவாயிற்றோ, அன்றைக்கே போர் முழக்கம் ஆரம்பமாயிற்று.

தமிழகத்திலே வாழ்கின்ற தாய் தமிழகத்து தமிழர்கள் அனைவரும் இலங்கை வாழ் தமிழர்களின் இன்னலைப் போக்க நமது எல்லா ஆதரவையும் அளிக்கத்தான் இங்கே கூடியிருக்கிறோம் என்பதை மறக்கக்கூடாது. இதை ஒட்டுமொத்தமாக ஒரு தீர்மானமாக ஆக்கி நேற்றைய தினம் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், இந்திய அரசை நடத்துகின்ற தலைவர்களுக்கும், சோனியா காந்திக்கும் அனுப்பி வைத்தோம்.

அந்த தீர்மானத்திற்கு பலன் இல்லாமல் போகவில்லை. இன்று காலை 10 மணி அளவில் மத்திய மந்திரி டி.ஆர்.பாலுவை அழைத்த பிரதமர் மன்மோகன்சிங் அவரிடத்தில் நிலவரங்களைக் கேட்டறிந்து, எனது கடிதத்திற்கும் வேண்டுகோளுக்கும் உடனடியாக பதில் அளிக்கிறேன் என்று சொல்லி, தொலைபேசி மூலமாக என்னையும் தொடர்பு கொண்டு பேசினார். இருக்கும் விவரங்களை எல்லாம் நான் விவரித்து சொன்னேன்.

தினமும் செத்துக் கொண்டிருக்கிறோம்...

எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தப்படுகிறார்க

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கலைஞரே இ இதனைத்தான் உங்ககளிடம் எதிர்பார்த்தோம் . உங்களால் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய தகுதியும் இ பலமும் நிறையவே உள்ளது

நன்றி நன்றி நன்றி

எத்தனை கோடிமுறை சொன்னாலும் போதாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"சொன்ன சொல்லில் உறுதியாக இருங்கள் கலைஞரே"...அதுவே நாங்கள் வேண்டுகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ தமிழகமக்களின் வாக்குகளை பெறும் குறுகிய எண்ணம் இல்லாமல், கலைஞர் இதய சுத்தியுடன் செய்ற்படுவார் என நம்புவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.