Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் டக்ளஸ் சபையில் கடும் வாய்ச்சண்டை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் டக்ளஸ் சபையில் கடும் வாய்ச்சண்டை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையே கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டதனால் சபை சிறிது நேரம் அல்லோலகல்லோலப்பட்டது.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்டநீடிப்பு விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா உரையாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது அவரது பேச்சில் குறுக்கீடு செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஸ்ரீகாந்தாவின் கருத்துகளுக்கு எதிரான கருத்துக்களை கூறிக்கொண்டிருந்தார். ஸ்ரீகாந்தா எம்.பி.டக்ளஸின் கருத்துகளை சாட்டை செய்யாமல் தொடர்ந்தும் பேசிக்கொண்டிருந்தார்.

ஆனால், ஒருகட்டத்தில் பொறுமையிழந்த ஸ்ரீகாந்தா ஜனாதிபதியின் பொக்கட்டுக்குள்ளிருக்கும் நாய்க்குட்டிகளின் குரைப்புகள் எல்லாம் எம்மை ஒன்றும் செய்து விடாது என்று கூறினார்.

இதனால் கடும் கோபமடைந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கூச்சலிட்டார். இதையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் டக்ளஸூக்கு எதிராக கூச்சலிடத் தொடங்கினர். இதனால் அமைச்சர் டக்ளஸூக்கு ஆதரவாக அரசதரப்பினரும் கூச்சலிடத் தொடங்கினர். இதனால் சபை சிறிது நேரம் பெரும் அல்லோலகல்லோலப்பட்டது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை ஆசனத்தில் அமர வைப்பதற்காக அமைச்சர் டியூ குணசேகர பெரும் பிரயத்தனப்பட்ட?ர். அமைச்சர் டக்ளஸோ ஆசனத்தில் அமருவதும் எழும்புவதுமாக உரத்த தொனியில் பேசினார்.

சபாநாயகர் இரு தரப்பையும் பெரும் சிரமத்தின் மத்தியில் அமைதிப்படுத்திவிட்டு அவசரகாலச் சட்ட நீடிப்புக்கான வாக்கெடுப்பைத் தொடங்கினார்.

தொடர்ந்து மீண்டும் சபையில் கூச்சல்கள் எழுந்தன. மீண்டும் சபாநாயகர் பெரும் முயற்சி எடுத்து சபையை கட்டுப்படுத்தினார். சபையில் இடம்பெற்ற கூச்சல், குழப்பங்கள், வாக்குவாதங்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா சிரித்தவாறு அவதானித்துக் கொண்டிருந்தார்.

-தினக்குரல்

ஜனாதிபதியின் பொக்கற்றுக்குள்ளிருக்கும் நாய்க்குட்டிகள் எல்லாம் எம்மை ஒன்றும் செய்யப் போவதில்லை என பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணை மீது சிறிகாந்தா உரையாற்றிக் கொண்டிருந்த போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறுக்கிட்டு சிறிகாந்தாவின் பேச்சுக்கு மாற்றான கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்.

சிறிகாந்தாவோ அதனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த சிறிகாந்தா ஜனாதிபதியின் பொக்கற்றுக்குள்ளிருக்கும் நாய்க்குட்டிகள் எல்லாம் எம்மை ஒன்றும் செய்யப் போவதில்லை எனத் தெரிவித்தார்.

இதனால் கடும் கோபமடைந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கூக்குரலிடத் தொடங்கினார். இதனையடுத்து தமிழ் தேசியக் கூட்டைமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் அமைச்சர் டக்ளஸுக்கு எதிராகக் கூச்சலிடத் தொடங்கினர். அமைச்சர் டக்ளஸுக்கு ஆதரவாக அரச தரப்பினர் கூச்சலிட்டனர். இதனால் சபை சிறிது நேரம் அல்லோலகல்லோலப்பட்டது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை ஆசனத்தில் அமர வைப்பதில் அமைச்சர் டியூ குணசேகரா பெரும் பிரயத்தனப்பட்டார். டக்ளஸோ ஆசனத்தில் அமருவதும் எழும்புவதுமாக உரத்த தொனியில் பேசினார். சபாநாயகர் பெரும் சிரமத்திற்கு மத்தியில் அவசரகாலச்சட்ட நீடிப்பு மீதான வாக்கெடுப்பைத் தொடங்கினார். தொடர்ந்து மீண்டும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட சபாநாயகர் அதனையும் கட்டுப்படுத்தி வாக்கெடுப்பைத் தொடர்ந்தார்.

சபையில் இவ்வாறு கூச்சல்களும் குழப்பமும் வாக்குவாதமும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பாராளுமன்ற உறுப்பினர் கருணா சிரித்தவாறு இதனை அவதானித்துக் கொண்டிருந்தார்.

http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

obdopqrfcf4hfn453b2qjf4hk6.jpg
  • கருத்துக்கள உறவுகள்

obdopqrfcf4hfn453b2qjf4hk6.jpg

பாராளுமன்றத்தில் , ஏன் கனக்க கதிரை அடுக்கி வைச்சிருக்கினம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதனால் கடும் கோபமடைந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கூச்சலிட்டார். இதையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் டக்ளஸூக்கு எதிராக கூச்சலிடத் தொடங்கினர். இதனால் அமைச்சர் டக்ளஸூக்கு ஆதரவாக அரசதரப்பினரும் கூச்சலிடத் தொடங்கினர். இதனால் சபை சிறிது நேரம் பெரும் அல்லோலகல்லோலப்பட்டது.

இது என்ன சுத்த பொருள் குற்றம் நிறைந்த வாசகங்களாய் உள்ளது, கோபம் ரோசம் எல்லாம் நாய்களுக்கு இல்லாத உணர்வுகள் அல்லவா?

பாராளுமன்றத்தில் , ஏன் கனக்க கதிரை அடுக்கி வைச்சிருக்கினம் .

அங்க இருக்கிற பெரும்பாலான ஆக்கள் ஒரே இடத்தில இருந்து பழக்கப்படாததால மாறிமாறி இருக்கத்தான் இந்த ஏற்பாடு.. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அங்க இருக்கிற பெரும்பாலான ஆக்கள் ஒரே இடத்தில இருந்து பழக்கப்படாததால மாறிமாறி இருக்கத்தான் இந்த ஏற்பாடு.. :icon_mrgreen:

மகிந்த சிந்தனையின் அதிக............நீளம் காரணமாக அமைச்சர்கள்அதிகம்

அதனால் கதிரைகளை அளவுடன் போட்டால் என்ர உன்ர என்று அடிபாடுவரும்

அதுதான் கூடுதலாகப்போட்டுவிட்டால்???

வேணுமான அளவுக்கு எடுத்துக்கொள்ளுங்கள் என்ற பெரும்மனது அவருக்கு என்றல்லவா புகளாரம் செய்கின்றனர்

இதுவும் சிறிய கோடு ஒன்றுக்குப்பக்கத்தில் பெரிய கோடுபோடும் தந்திரம்தான்????

புது பதவி புது உடுப்பு புது ஆளுக கலக்கிற கருணா. . .

  • கருத்துக்கள உறவுகள்

புது பதவி புது உடுப்பு புது ஆளுக கலக்கிற கருணா. . .

புது பதவி புது உடுப்பு புது ஆளுக கலக்கிற ............????

இது என்ன சுத்த பொருள் குற்றம் நிறைந்த வாசகங்களாய் உள்ளது, கோபம் ரோசம் எல்லாம் நாய்களுக்கு இல்லாத உணர்வுகள் அல்லவா?

கோபம், ரோசம் இரண்டும் நாய்களுக்கு நல்லாகவே இருக்கு அத்துடன் நாய் நன்றியுள்ளது. இவங்களை நாயுடன் ஒப்பிடுறீங்கள். :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.