Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக மீனவர்கள் சுடப்படுவது ஏன்? -குமுதம் ரிப்போட்டர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கித் தாக்குதல்... தொடரும் உயிர் இழப்பு... மீனவர்களின் ஸ்டிரைக்... கலெக்டரின் சமாதானக் கூட்டம் என்று ராமேஸ்வரம் தீவு மறுபடியும் தகிக்க ஆரம்பித்துவிட்டது.

கடந்த மாதம் 28-ம் தேதி மதுரை தத்தனேரி பாக்கியநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர் முருகன் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு பிணமாக ராமேஸ்வரம் கரைக்கு வந்தபோது, ஒட்டுமொத்த மீனவ சமுதாய மக்களும் அதிர்ந்துவிட்டனர்.

காரணம், கடந்த ஜூலை மாதத்தில்தான் தமிழக மீனவர்களுக்காக கிட்டத்தட்ட எல்லாக் கட்சிகளுமே பெரிய அளவில் குரல் கொடுத்து, தனித்தனியாக ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை நடத்தி, பிரதமரின் கவனத்தை ஈர்த்தன.

ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் நடந்த `சார்க்' மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டபோது, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிடம் `தமிழக மீனவர்கள் சுடப்படுவது நிறுத்தப்பட வேண்டும்' என்று ஞாபகமாய் கேட்டுக் கொண்டார். ராஜபக்ஷேவும் `இனி எங்கள் நாட்டு கடற்படையினரால் தமழக மீனவர்கள் சுடப்படமாட்டார்கள்' என்று உறுதிமொழி தந்தார்.

அதைத் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக துப்பாக்கிச் சூடு எதுவும் நடக்காமல் அமைதி நிலவிய சூழலில், நிம்மதியாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று வந்தார்கள். இந்நிலையில்தான், மீனவர் முருகன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியையும் கடும் கொந்தளிப்பையும் உருவாக்கி இருக்கிறது.

இலங்கை அதிபர் அளித்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டு, மீண்டும் ராமேஸ்வரம் மீனவர்களின் உயிர்களுக்கு உத்தரவாதமில்லாத அசாதாரணமான சூழல்தான் ராமேஸ்வரம் கடல் பகுதியில் நிலவுகிறது.

நிலைமையின் தீவிரத்தை மத்திய- மாநில அரசுகளுக்குப் பொட்டில் அடித்தாற்போல உணர்த்த, மீன்பிடிக்க கடலுக்குச் செல்லும் தங்கள் கணவர்களுக்கு `வாய்க்கரிசி' போட்டு அனுப்பும் நூதனப் போராட்டத்தை நடத்தவும் மீனவப் பெண்கள் வேகமாகத் தயாராகி வருகிறார்கள்.

இது தவிர, தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மீனவ சங்கங்களும் ஒன்று சேர்ந்து `தமிழக மீனவர் போராட்டக் குழு' என்ற புதிய அமைப்பை உருவாக்கி, வருகிற 15-ம் தேதி சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தவும் முடிவு செய்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில்தான், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து சுடப்படுவது ஏன்? மீனவர்களும் இலங்கை ராணுவத்தினரும் மட்டுமே நடமாடும் அந்த நடுக்கடல் பிராந்தியத்தில் நிஜமாக நடப்பதுதான் என்ன? என்பதையெல்லாம் அறிந்துகொள்ளும் நோக்கத்தோடு விசாரணையில் இறங்கினோம்.

நாம் பேசிய ராமேஸ்வரம் மீனவ நண்பர்கள், நாம் தந்த நம்பிக்கையின் பெயரில் நிஜத்தைப் போட்டு உடைத்தார்கள். முகம் காட்ட மறுத்த அந்த மீனவர்கள் நம்முடன் பகிர்ந்துகொண்ட அத்தனையும் இதுவரை வெளி உலகம் அறியாத, ராமேஸ்வரம் மீனவர்கள் மட்டுமே அறிந்த விஷயங்கள் - தொழில் ரகசியங்கள்.

``ராமேஸ்வரம் தீவிலிருந்தும் சரி, வேதாரண்யம், கோடியக்கரைப் பகுதிகளிலிருந்தும் சரி மீன்பிடிக்க கடலுக்குப் புறப்பட்டுப் போகும் நூற்றுக்கணக்கான விசைப் படகுகளும் இலங்கைக் கடல்பகுதியில்தான் மீன்பிடிக்க முடியும். ஒவ்வொரு முறையும் மீனவர்கள் சுடப்படும் போதும் ஏண்டா இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கப் போனோம் என்று நொந்து கொண்டுதான் வருவோம். ஆனால், எங்களுக்கு இலங்கைக் கடல் பகுதியை விட்டால் மீன் பிடிக்க வேறு போக்கிடமே கிடையாது. ஒவ்வொரு முறையும் மீன் பிடிக்க நாங்கள் செல்லும் போது, கச்சத்தீவைக் கடந்து சென்று இரணியன் தீவு அருகேதான் மீன் பிடிப்போம். இந்த இரணியன் தீவு தலைமன்னார் அருகே உள்ளது. கிட்டத்தட்ட இலங்கையை ஒட்டிய கடல்பகுதி. அது, ஆழ்கடலாக இருக்கும் காரணத்தால் அங்கே மீன் வளம் அதிகம் காணப்படும். நமக்குத் தேவையான மீன்வளம் இலங்கையில் ஆழ்கடல் பகுதியில் இருப்பது போல, இலங்கை மீனவர்களுக்குத் தேவையான மீன்வளம் ஆழம் குறைந்த நமது இந்தியக் கடல்பகுதியில் இருக்கிறது. நாங்கள் அங்கேயும் இலங்கை மீனவர்கள் இங்கேயும் மீன்பிடிப்பது பல வருடங்களாக நடந்து வருகிறது.

இலங்கை மீனவர்களின் மீன்பிடிப்பு முறையும் எங்களது மீன்பிடிப்பு முறையும் நிறைய வித்தியாசங்களைக் கொண்டது. அவர்கள் இன்னமும் இழுவலை மூலமாகத்தான் மீன் பிடிக்கிறார்கள். அந்த வலைகளைக் கொண்டு ஆழம் குறைந்த பகுதிகளில்தான் மீன் பிடிக்க முடியும். அதனால்தான் அவர்கள் நமது எல்லைக்குள் வருகிறார்கள். நமது மீன்பிடிப்பு முறை நவீனமானது. மிகப் பெரிய வலைகளைக் கொண்டு மீன் பிடிப்போம். இந்த வலைகள் ஆழ்கடலுக்கு ஏற்றவை. அதனால்தான் நாங்கள் இலங்கையின் ஆழ்கடலுக்குச் செல்கிறோம்!'' என்றவர்கள், மீனவர்கள் சுடப்படும் விவகாரத்துக்கு வந்தார்கள்.

``நாங்கள் இலங்கையின் கடல் பகுதிக்குள் பல வருடங்களாக மீன்பிடித்தொழில் செய்து வருவதால், எந்த நேரத்தில் இலங்கைக் கடற்படையினர் ரோந்து வருவார்கள் என்பது எங்களுக்கு அத்துப்படி. அந்த நேரத்திற்குள்ளாக `பாடு' பார்த்துவிட்டு வந்துவிடுவோம். அப்படியும் அவர்களிடம் மாட்டிக் கொண்டால் சரண்டர் ஆகிவிடுவோம். எங்கள் வலைகளை அறுத்தெறிந்துவிட்டு, படகுகளை சேதப்படுத்திவிட்டு, மீன்களை அள்ளிக்கொண்டு இலங்கைக் கடற்படையினர் போய்விடுகிறார்கள். இந்தச் சித்திரவதையெல்லாம் பகல் நேரத்தில் அவர்களிடம் மாட்டிக் கொண்டால்தான். அதே நேரம் இரவு நேரத்தில் மாட்டிக் கொண்டால் நிச்சயமாக உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

நடுக்கடலில் இருட்டில் நாங்கள் மீன்கள் பிடித்துக் கொண்டிருக்கும்போது, ரோந்து வருகிற இலங்கைக் கடற்படையினர் படகில் இருப்பது மீனவர்களா? அல்லது அகதிகளா? அதுவுமில்லாது விடுதலைப்புலிகளா? என்ற குழப்பத்தில் கண்மூடித்தனமாகச் சுட ஆரம்பித்துவிடுவார்கள். தாங்கள் தாக்கியது தமிழக மீனவர்களைத்தான் என்பது தெரிந்தால், குற்ற உணர்ச்சியில் உடனே ஓடிவிடுவார்கள். தமிழக மீனவர்கள் பெரும்பாலும் சுடப்படுவது இரவு நேரத்தில்தான். பகல் நேரம் என்றால் எங்களைக் கைது செய்வார்கள். அதே இரவு நேரம் என்றால் சுடுவார்கள். இது இலங்கைக் கடற்படையினர் பல வருடங்களாகவே கடைப்பிடித்து வரும் பழக்கம். இலங்கை அரசு அவர்களிடம் விளக்கம் கேட்டால் `இருட்டில் விடுதலைப்புலிகள் என்று நினைத்துச் சுட்டுவிட்டோம்' என்று சுலபமாக பதில் கூறி தப்பி விடுவார்கள்!'' என்று நீளமாய் நடுக்கடல் ரகசியங்களை நம்மிடம் கூறினார்கள், அந்த மீனவர்கள்.

`உயிரைப் பணயம் வைத்து இலங்கைக் கடற்பகுதிக்குச் சென்று மீன்பிடிக்கத்தான் வேண்டுமா?' என்று நாம் கேட்டதற்கு அவர்கள் கூறிய பதில் அதிர்ச்சி தருவதாக இருந்தது.

``நீங்கள் நினைக்கிற மாதிரி ஏதோ ஒரு சில படகுகள்தான் எல்லை தாண்டி மீன் பிடிக்கச் செல்கிறது என்று நினைப்பதும் மீனவர்கள் மனது வைத்தால் அதை நிறுத்திவிட முடியும் என்று கருதுவதும் தவறான விஷயம். ராமேஸ்வரம் தீவில் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இருக்கின்றன. அதில் முக்கால்வாசி விசைப்படகுகள், இலங்கைக் கடற்பகுதியில் பல வருடங்களாகவே மீன் பிடித்து வருகின்றன. அதை நிறுத்தவோ, தடுக்கவோ நிச்சயமாக முடியாது. அப்படிச் செய்தால் பல்லாயிரக்கணக்கான மீனவக் குடும்பங்கள் வீட்டில் அடுப்பு எரியாது. தமிழ்நாட்டு மக்களும் வாய்க்கு ருசியாக மீன்குழம்பு வைத்துச் சாப்பிட முடியாது. மீன்பிடித் தொழிலே படுத்துவிடும். இதுதான் உண்மை. இது நமது மத்திய, மாநில அரசுகளுக்கும் தெளிவாகத் தெரியும்!'' என்றவர்கள் தொடர்ந்து,

``எங்களைப் போலவே இலங்கை மீனவர்களும் நமது கடல் எல்லைக்குள் வந்து மீன் பிடிக்கிறார்கள். அவர்களை நமது கடற்படை சுடுவதில்லை. கைது செய்கிறார்கள், அல்லது விரட்டி விடுகிறார்கள். நமது கடற்படையினரின் பெருந்தன்மை இலங்கைக் கடற்படையினருக்கும் வந்தால்தான் நமது மீனவர்களைச் சுடுவதை நிறுத்தமுடியும். அதனால், அது அவ்வளவு சுலபமானது அல்ல. காரணம், அவர்களுக்கு விடுதலைப்புலிகள் என்ற ஒரு காரணம் இருக்கிறது. அதை வைத்து எங்களைக் காவு வாங்குவதை அவர்கள் தொடர்ந்து கொண்டுதான் இருப்பார்கள்!'' என்றார்கள்.

`இப்படி தமிழக மீனவர்கள் தொடர்ந்து சுடப்படுவதை தடுத்து நிறுத்த வழியே இல்லையா?' என்ற கேள்வியை தமிழ்நாடு - பாண்டிச்சேரி மீனவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் போஸிடம் முன் வைத்தோம்.

``மத்திய அரசு தமிழக நலனில் தொடர்ந்து பாராமுகமாகவே இருந்து வருகிறது. அதே போல், அரசியல் காரணங்களுக்காக தமிழக அரசும் எங்கள் பிரச்னைக்காக மத்திய அரசிடம் தீவிரம் காட்டாமல் அலட்சியம் செய்து வருகிறது. இரண்டு அரசுகளும் உட்கார்ந்து பேசி, இறுதியான ஒரு முடிவை எடுத்து இலங்கை அரசிடம் வலியுறுத்திப் பேசினால் இப்பிரச்னைக்கு நிரந்தர முடிவு ஏற்படும். அதே போல், எல்லா அரசியல் கட்சிகளும் சொல்வது போல் கச்சத்தீவை மீட்டுவிட்டால் மீனவர்கள் நலன் பாதுகாக்கப்படும் என்பதில் கொஞ்சம்கூட உண்மையில்லை. நமது மீனவர்கள் இலங்கைக் கடல் பகுதியில் மீன்கள் பிடிப்பது போல், இலங்கை மீனவர்கள் நமது கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடிக்கிறார்கள். அவர்களை நம் கடற்படையினர் சுடுவதில்லை. அதுபோன்ற நிலையை இலங்கைக் கடற்படையும் எடுப்பதுதான் இந்தப் பிரச்னைக்கு புரிந்துணர்வுத் தீர்வாக அமையும்!'' என்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா! குமுதம் ரிப்போட் யாராலோ நியமிக்கப்பட்ட ஆட்களைப் பேட்டி கண்டு மீனவர்கள் சட்டுக் கொல்லப்படுவதை மிக அழகாக நியாயப் படுத்தியிருக்கிறது. இரவில் சுடுவார்கள், பகலில் சுடமாட்டார்கள், கச்சதீவை எடுக்கத்தேவையில்லை எடுத்தாலும் பிரயோசனமில்லை என்றெல்லாம் அவர்கள் சொல்லுவதைப் பார்க்கும் போது மீனவ சமூகத்திற்குள்ளும் தங்கள் சமூகத்திற்கே எதிரான துரோகிகள் நியமிக்கப்பட்டு வழிநடத்தப்படுகிறார்கள் என்பது துலாம்பரமாகத் தெரிகின்றது.

சிங்களவன் தமிழன் மீதுள்ள குரோதத்தில் வந்து திட்டமிடப்பட்ட விதத்தில் நாயைச் சுடுவதுபோல சுட்டுத்தள்ளிவிட்டுப் போகிறான் என்ற மறைக்க முடியாத உண்மையை இந்த வெளிப்பூச்சுச் சமாளிப்புகள் மூலம் குமுதம் மறைக்க முயன்று எதைச் சாதிக்கப் போகின்றதோ தெரியவில்லை.

இப்படி யார் வலையிலும் அகப்படாமல், இந்திய கடலுக்கும் இலங்கை கடலுக்கும் எல்லை தெரியாமல் நீந்தும் மீன்கள்தான் எல்லாவற்றுக்கும் காரணம்!! :icon_mrgreen:

ஆக இனியும் இந்திய மீனவர்களை காப்பாற்றமுடியாது... இதுதான் நிலை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.