Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடைசி தமிழன் உயிருடன் இருக்கும் வரை இலங்கை தமிழர்களை அநாதையாக விடமாட்டோம்: கவியரசு வைரமுத்து சூளுரை

Featured Replies

கடைசி தமிழன் உயிருடன் இருக்கும் வரை இலங்கை தமிழர்களை அநாதையாக விடமாட்டோம்: கவியரசு வைரமுத்து சூளுரை

[திங்கட்கிழமை, 20 ஒக்ரோபர் 2008, 04:56 மு.ப ஈழம்] [ந.ரகுராம்]

கடைசி தமிழன் உயிருடன் இருக்கும் வரை இலங்கை தமிழர்களை அநாதையாக விடமாட்டோம் என்று பிரபல பாடலாசிரியர் கவியரசு வைரமுத்து சூளுரைத்துள்ளார்.

தமிழ்த் திரையுலகத்தினர் இராமேஸ்வரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய பிரமாண்ட பேரணியில் கவியரசு வைரமுத்து பேசியதாவது:

இலங்கை தமிழ் மன்னர்கள் ஆண்ட பூமி. அது தமிழர்களுக்கு சொந்தமான மண். இலங்கையிலும், மதுரையிலும் உள்ள படிகபாறைகளை ஆய்வு செய்தபோது அவை ஒரே மண்சார்ந்த நிலத்தில் உருவானதுதான் என்று தெரியவந்தது.

நிலவில் இருப்பது என்ன என்பதை அறிந்துகொள்ள 3 லட்சத்து 44 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலாவுக்கு வருகிற 22 ஆம் நாள் நாம் விண்கலத்தை ஏவுகிறோம். ஆனால் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலங்கையில் நடப்பது என்ன என்பதை அறிந்துகொள்ளாமல் இருக்கிறோம்.

சிவகாசி பட்டாசு போல தமிழ் மக்களை வெடிவைத்து கொல்கிறது சிங்கள இராணுவம். அங்கு சிறுவர்கள், சிறுமிகள் மீது கூட அடக்குமுறை கையாளப்படுகிறது.

கடைசி தமிழன் உயிருடன் இருக்கும் வரை இலங்கை தமிழர்களை அநாதையாக விடமாட்டோம். அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் வெற்றிபெற தமிழர்களை அழிப்பதை லட்சியமாக கொண்டுள்ளார் ராஜபக்ச. அதற்காக உங்கள் ஓட்டுப்பெட்டிகளில் எங்கள் தமிழர்களின் தலை, வாக்குகளாக விழவேண்டுமா?.

இந்திய அரசு சிறிலங்கா இராணுவத்துக்கு ராடர் கருவிகளை கொடுப்பதாக கூறுகிறார்கள். தொழில்நுட்பங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிக்க நமது இராணுவ அதிகாரிகளை அனுப்புவதாகவும் கூறுகிறார்கள். உண்மையில் இது நடந்தால் அதனை நிறுத்துங்கள். தமிழின படுகொலையை தடுத்து நிறுத்த ஐ.நா. சபை கொழும்பிலும், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியிலும் கிளைகளை தொடங்கவேண்டும்.

தனது ஒட்டுமொத்த பொதுவாழ்க்கையை பணயம் வைத்து இலங்கை தமிழர்களை பாதுகாக்க போராடும் தமிழக முதலமைச்சரின் கரத்தை இந்த கலைஞர்கள் குடும்பம் வலுப்படுத்தவேண்டும் என்றார் அவர்.

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் இராம.நாராயணன் பேசியதாவது:

இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குள் சென்று சிறிலங்கா இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டினால் பாதிக்கப்படும் மீனவர்களை காப்பாற்றுவதற்காக அம்புலன்ஸ் வசதி கேட்டு பாம்பன் ஊராட்சி தலைவர் அனிபா மனு கொடுத்துள்ளார்.

அனைத்து சங்கங்களின் ஒப்புதலுடன் அதனை நிறைவேற்றுவோம். அகதிகளாக வந்தவர்களுக்கு 6 லட்சம் ரூபா செலவில் வேட்டி-சேலைகளை வழங்கினோம்.

தொடர்ந்து இதுபோலவே அவர்களுடன் இணைந்திருப்போம். அவர்களுக்கும் எங்களுக்கும் உள்ளது அண்ணன்-தம்பி உறவு. இது உணர்ச்சி உள்ளவர்களின் உரிமை காக்கும் போராட்டம். நல்லவன் போல் நடிக்கும் ராஜபக்சவின் நடவடிக்கைகளை பொறுக்கமாட்டோம், பொங்கி எழுவோம் என்றார் அவர்.

இயக்குநர் விஜய டி.ராஜேந்தர் பேசியதாவது:

இன உணர்வு என்ற ஆயுதத்தை கையில் எடுத்து தமிழர்களை அழிக்கும் ராஜபக்சவை நாம் வீழ்த்த வேண்டும். நான் சொல்வதற்காக இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் யாரும் வருத்தப்படக்கூடாது. இராமேஸ்வரத்துக்கு இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வரவேண்டும் என்று சொன்னார்கள். அதனால் நான் நடிகனாக வரவில்லை. ஒரு தமிழனாக வந்தேன்.

சிலர் வரவில்லை என்று எனக்கு ஒருபுறம் ஆதங்கம். மறுபுறம் ஆனந்தம். இது தமிழர் படை. சிலரின் கேள்விக்கு இதுதான் விடை. தமிழினமே இராமேஸ்வரம் கடல் அலையாய் எழும்பினால் தாங்காது உங்கள் பூமி. அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு சிலர் போகவில்லை என்று கூறினார்கள். ஆனால் அங்கு சென்று ஆதங்கப்பட்டு தலைமை எதிர்ப்பாளர் என்று முதலமைச்சர் சொல்லும் வகையில் நான் பேசினேன்.

சில நடிகர்கள் இங்கு வரவில்லை. பாதுகாப்பு இருக்காது என்று கூறுகிறார்கள். அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். உன் மக்களிடமே பாதுகாப்பு கேட்டால் நீ ஹீரோவா? இல்லை ஜீரோவா?

மராட்டியர்கள், கன்னடர்கள், தெலுங்கர்கள், குஜராத்தியர் உள்பட யாரை அடித்தாலும் அந்த மாநில மக்கள் பொங்கி எழுகிறார்கள். ஆனால் தமிழர்களை அடித்தால் இங்குள்ளவர்கள் பேசாமல் இருக்கிறார்கள். மனித சங்கிலி போதாது. ஆட்சியை இழந்தாலும் பரவாயில்லை. உங்கள் காலத்தில் தமிழீழம் பிறக்க வேண்டும்.

இன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவோம் என்று கூறியதும், பிரணாப் முகர்ஜி சிறிலங்கா செல்கிறார். நாங்கள் மீனுக்கு போடுவோம் வலை. உத்தரவு கொடுத்தால் எதிரிகளை செய்வோம் கொலை. தமிழன் தன்நிலை உணரவேண்டும் என்றார் அவர்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசியதாவது:

இலங்கையில் நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்கவும், நியாயம் கேட்கவும் நாம் இங்கு வந்துள்ளோம். மேலும் பாதிக்கப்படும் நம் தமிழ் மக்களுக்கு உணர்வுபூர்வமாக ஆறுதல் கூறவும் கூடி உள்ளோம்.

தமிழர்களான உங்களுக்கு காயம் ஏற்படுத்தும் அரசு நீடிக்காது. உங்கள் காயங்களை ஆற்றும் பணிகள் விரைவாக நடக்கிறது. எதிரிகளே உங்களுக்கு ஓர் எச்சரிக்கை தமிழர்களுக்கு தொடர்ந்து விபரீதம் நடந்தால் தமிழகம் இராமேஸ்வரத்தின் கரையை நிச்சயம் தாண்டும் என்றார் அவர்.

இயக்குநர் சேரன் பேசியதாவது:

ஈழத்தில் 30 வருடமாக தமிழர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். இதனை நமது வீட்டில் நடக்கும் பிரச்சினையாக, சகோதரத்துடன் பார்த்திருந்தால் இந்த பிரச்சினை எப்போதோ முடிந்து இருக்கும். ஆனால் அப்படி யாரும் பார்க்கவில்லை.

ஒரு தீவில் 44 இந்தியர்களை தீவிரவாதிகள் பிடித்து வைத்துக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களை விடுவிக்க இந்திய அரசு இராணுவத்தையே அனுப்பி வைக்கிறது.

ஆனால் நமது பக்கத்தில் இருக்கும் இலங்கையில் நடக்கும் பிரச்சினையில் எந்தவித நடவடிக்கையையும் எடுக்க அரசு மறுக்கிறது. தமிழீழத்தை பற்றி இயக்குநர்களாகிய நாங்களோ, அரசியல்வாதிகளோ பேசுவதால் எந்த முடிவும் ஏற்பட்டு விடப்போவதில்லை. நம்முடைய குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். ஒவ்வொரு நடிகனும் தங்களது இரசிகர்கள் மன்றம் மூலம் ஈழத்தில் தமிழர்கள் படும் துன்பங்களை ஐ.நா. சபைக்கு தந்தியாக அனுப்ப வேண்டும் என்றார் அவர்.

இயக்குநர் சீமான் பேசியதாவது:

இந்த கூட்டத்தை இராமேஸ்வரத்தில் ஏன் நடத்துகிறோம் என்றால், இங்கிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலங்கைக்கு நாம் சென்றுவிடுவோம் என்பதை ராஜபக்சவுக்கு தெரியப்படுத்துவதற்காகத்தான

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.