Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தமிழர் பிரச்சினையால் வைகோ- ஜெயா இடையே முறுகல்

Featured Replies

கடந்த ஒரு மாதமாக தமிழத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர் பிரச்சினை, அ.தி.மு.க.வுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியுள்ளது, என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் : இலங்கையில் பாதிக்கப்படும் ஈழத்தமிழர்களுக்காக இந்தியக் கம்யூனிஸ்ட் உண்ணாவிரதம் இருந்தது. இப்பிரச்சினையில், அரசியல் முக்கித்துவத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து நடைபெற்ற தி.மு.க. பொதுக் கூட்டம், எம்.பி.க்களின் ராஜினாமா மிரட்டல், பிரதமர் கருத்து என ஈழத்தமிழர் பிரச்சினை சூடுபிடித்து வருகிறது.

இலங்கைப் பிரச்சினையில் தமிழத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் நிலை மற்றும் முரண்பட்ட கூட்டணிகள் இதில் வெளிவரத் தொடங்கியுள்ளன.

ஆரம்ப காலம் முதல் விடுதலைப் புலிகளின் இந்திய சட்டத்தரணியாக இருந்து வாதிட்டு வருபவர் வைகோ. இப்பிரச்சிiயில், புலிகளுக்கு ஆதரவாக அவர், இன்றும் குரல் கொடுத்து வருகிறார். ஆனால், ஆரம்பகாலம் முதல் விடுதலைப் புலிகளை எதிhத்து வரும் கட்சியான அ.தி.மு.க தனது நிலையை இப்பிரசினையின் மூலம் மீண்டும் ஒரு முறை தெளிவுபடுத்தி உள்ளது. இரண்டு கட்சிகளுக்குமிடையே உள்ள முரண்பாடுகள், இப்பிரச்சினையில் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளன.

இலங்கையில் நடைபெறுவது ஈழப் போராட்டம் என வர்ணிக்கிறார் வைகோ. ஆனால், இலங்கையில் உள்ள அதிகாரப் பூhவ அரசுக்கும் பயங்கரவாத இயக்கமாக விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடக்கும் போர் என்கிறார் ஜெயாலலிதா.

முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டம் கபட நாடகம் என் ஜெயா விமர்சித்துள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோவும் விமர்சித்திருந்தாலும், அக்கூட்டத்;தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை மறைமுகமாக ஆதரிக்கும் வகையில் 'எனது கட்சி எம்.பிக்களும் ராஜினாமாச் செய்யத் தாயார்' எனப் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

வைகோவின் முடிவை முதல்வர் கருணாநிதி பாராட்டியுள்ளமை, அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க. வுக்கு தாமசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெறும் போரில் அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அ.தி.மு.கவின் கோரிக்கையாக உள்ளது. ஆனால் அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்டுகின்றனர் என்ற பெயரில் புலிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்பது ம.தி.மு.க.வின் கொள்கை நிலைப்பாடாக உள்ளது.

இதில் இரண்டு கட்சிகளுக்கும் இடையே உள்ள முரண்பாடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முரண்பட்ட கொள்கை உடைய கட்சிகள் கூட்டணி அமைத்தால் ஏற்படும் விளைவுகளை அ.தி.மு.க.வும், ம.தி.மு.க.வும் ஈழத்தமிழர் பிரச்சினையில் தற்போது சந்தித்து வருகின்றன. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முதல்வர் கருணாநிதியும் தன் பங்கிற்கு அவர்களிடையே உள்ள கொள்கை முரண்பாடுகளை சீண்டிவிட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயாவின் கருத்துகளைப் பாராட்டும் வகையில் இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகரும், சகோதரருமான பஸில் பேசியிருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார். இலங்கை அரசுக்கு ஆதரவான கருத்தை ஜெயா வெளியிட்டுள்ளமைக்கு, வைகோ பதில் சொல்ல வேண்டு என்று அவர் கேட்டுள்ளார். அ.தி.மு.க., ம.தி.மு.க. இடையே உள்ள இரண்டாண்டு கால அரசில் கூட்டணி முறிவதற்குக் கூட இப்பிரச்சிiனை காரணமாக அமையலாம் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

நன்றி சுடர் ஒளி

மேலும் சில செய்தித் தலைப்புக்கள் :

மஹிந்தவின் கொடும்பாவி எரிப்பு 25 விடுதலைச் சிறுத்தைகள் கைது

ஈழத்தமிழர் பிரச்சிiயில் மத்தி அரசு நல்ல முடிவெடுக்கும் - டி.ஆர்.பாலு

காங்கிரஸ் எம்.பிக்கள் ராஜினாமா? கட்சி மேலிடம் தான் முடிவெடுக்கும் - தங்கபாலு

இலங்கை நிலவரம் கவலையளிக்கிறது- காங்கிரஸ்

ஈழத்தமிழர் பிரச்சினையில் சுமுகத்தீர்வு கிடைக்கும் வரை கறுப்புப் பட்டி அணிக - விஜயகாந்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நிலவரம் கவலையளிக்கிறது- காங்கிரஸ்

சிறிலங்கா அரசுக்கு ஆயூத உதவிகள் வழங்குவதே காங்கிரஸ் அரசு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.