Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தை கலங்க வைத்த ஒளிநாடவின் முழுவடிவம்

Featured Replies

தாயகத்தில் எம் மக்கள் படும் அவலங்களும் தமிழக திரைபட உறவுகளின்

எழிச்சி நிகழ்வுகளும்.... VIDEO

http://vaththirayan.blogspot.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்தை கலங்க வைத்த ஒளிநாடவின் முழுவடிவம்

http://www.tubetamil.com/view_video.php?vi...421d5e1e0c3de25

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தை கலங்க வைத்த ஒளிநாடவின் முழுவடிவம்

http://www.tubetamil.com/view_video.php?vi...421d5e1e0c3de25

தமிழக மக்கள் மனிதாபிமான உணர்வுடன்.. தமிழுணர்வும்.. தமிழன் என்ற உணர்வு கொண்டதால்.. இக்காட்சிகள் அவர்களை எழுச்சியுறச் செய்தது..

ஆனால்.. இதே ஈழமண்ணில் இருந்து புலம்பெயர்ந்த எத்தனை தமிழ் புண்ணாக்குகளும் அவற்றின் வாரிசுகளும்.. இதை எல்லாம் அறிந்தும் அறியாயததும் போல வாழ்த்து கொண்டிருப்பதுடன்.. இன்னும் புலி விரோதம் பேசி சிங்களவனின் தமிழினக் கொலை வெறிக்கு தீனியிட்டுக் கொண்டிருக்கின்றன.

எத்தனை ஈழத்தமிழன்.. வெளிநாட்டில் வாங்கிய அகதி வாழ்வுக்கு அடிபணிந்து தாயக உறவுகளை மறந்து வாழ்கிறான்.. என்று எண்ணிப் பாருங்கள். அவர்களோடு ஒப்பிடும் போது.. எழுச்சி கொண்ட தமிழகம்.. எத்தனை மடங்கு.. மனித உணர்வு மிகுந்ததென்று எண்ணிப்பாருங்கள்.. புலம்பெயர்ந்து சுயநலத்துக்கே மாறிப்போன சுயநலப் பிசாசுகளே..!

மானங்கெட்டவர்களே.. சிந்தியுங்கள்.. உங்கள் சொந்தங்களின் குருதி தாயக மண்ணில் வழிந்து ஆறாகி ஓடுகிறது.. நீங்களோ.. பப்பிலும் கிளப்பிலும்.. பியரில் குளிக்கிறீர்கள்..! கூத்துப் போடுகிறீர்கள்.

இதுவா.. தமிழன் உணர்வு.. தமிழன் ஒற்றுமை..???! தமிழீழம் பெற்றுத் தர கொடுக்கும் உதவிக்கரம்...??!

1000 யூரோவைக் கொடுத்துவிட்டு.. வெற்றிச் செய்திக்காக கொட்டாவி விட்டபடி.. புகைவிடும் புண்ணியவான்களே.. சிந்தியுங்கள்.. உங்களின் பங்களிப்பு எள்ளினும் சிறியது அவர்களின் சிந்தும் குருதியின் அளவுடன்..!

பிறந்த நாளை கொண்டாட மண்டபம் எடுக்கவில்லை என்று.. வீட்டை விட்டு ஓடும்.. புலம்பெயர் ஈழத்தமிழ் வாரிசுகளின்.. இளசுகளே சிந்தித்துப் பாருங்கள்.. உங்களின் பிறப்புரிமைகள்.. வாழ்வுக்கே வழியின்றி.. விழி பிதுங்கியுள்ளதை..!

இவையெல்லாம் ஏன்.. புலம்பெயரும் போதே.. இன மானத்தை தொலைத்துவிட்டு வந்ததன் விளைவுதானே அன்றி வேறில்லை..! :):blink:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக மக்கள் மனிதாபிமான உணர்வுடன்.. தமிழுணர்வும்.. தமிழன் என்ற உணர்வு கொண்டதால்.. இக்காட்சிகள் அவர்களை எழுச்சியுறச் செய்தது..<<<<<<<<<<

நெடுக்ஸ் அண்ணை; உங்கள் கோபம் நியாயமானது ஆனால் இங்கிருந்து இதைச்சொல்லி என்ன பயன்?! ஒன்றாகி ஓரணியில் நின்று போராடி தலைவனே உருவாக்கிவிட நமக்கு கோடாரியாக விளங்கும் "துரோகி முரளிதரன்(கருணா)வின் இரத்தமும் சிலருக்குள் ஓடிக்கொண்டிருக்கும் தானே?!

தமிழ்த்தாயின் மானத்தைக் காக்க தம் உயிரையே ஆடையாக்கும் எம் மாவீரர்களின் கனவு; போராளிகளுக்கு ஆதரவாக நின்று தோளுக்குத்தோள் கொடுக்கும் எம் ஈழத்துச் சோதரர்கள்/மக்கள்....இவர்களை எல்லாம் நினைத்தால் '"வெகுவிமரிசையாகக் கொண்டாடுகின்றார்" என்றெல்லாம் சொல்லக்கூடுமோ?!!

தமிழின அவலங்களை இன்னும் எண்ணிப் பார்த்து உணராத கூட்டங்களுக்கு உணர்த்த வேண்டிய பாரிய பொறுப்பு எங்களூக்குத்தான் அண்ணை இருக்கு.

அவர்களைப் பேசி/திட்டி என்ன பயன்? உறைக்கும் படி உணர்த்த வேண்டும். முதலில் புலம்பெயர் தமிழர் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

இணைப்புக்கு நன்றி...

இந்த ஓளி நாடாவை தமிழகதில் உலா விட்ட மாதிரி..ஏன் மற்ற நாடுகளில் கொண்டுவர முடியவில்லை...

நீங்கள் சொல்வது சரிதான் டிஸ்கோத்தே போறதா..உந்த CD பாக்கிறதா...?

ஏனென்றால் வசதி வாய்ப்புக்கள் கொண்டவர்கள் தான் புலம்பெயர்ந்தவர்கள் ..பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் அதை அனுபவித்து கொண்டுதான் இருக்கிறார்கள்..

நீங்கள் ஒன்று செய்யலாம் நெடுக்ஸ்....

இந்த ஒளி நாடாவை..ஆங்கிலதில் மொழிபெயர்த்து...வெள்ளைகாரன் கிட்ட காண்பித்தாலும்.. நீங்கள் எதிர்பாக்கிறது கிடைக்க வாய்ப்பிருக்கும் என நான் நினைகின்றேன்..

நானும் ஒரு தமிழன் என்கிற உணர்வில் ஆதங்தத்துடன் இதை சொல்கிறேன்.. தவறு இருந்தால்...யாராவது காயப்பட்டால்.. தயவுசெய்து மன்னிபீர்களாக......!

இது குழந்தையின் அழுகுரல்....

  • கருத்துக்கள உறவுகள்

அட நம்ம குழந்தையா இப்படி எழுதியது . நல்ல தமிழ் .நல்ல சிந்தனை .கணனி அறிவும் இருக்கிறது .பார்த்தீரா அக்கா சொன்னேன் தானே .......எங்கே கலக்குங்க பார்க்கலாம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக மக்கள் மனிதாபிமான உணர்வுடன்.. தமிழுணர்வும்.. தமிழன் என்ற உணர்வு கொண்டதால்.. இக்காட்சிகள் அவர்களை எழுச்சியுறச் செய்தது..

ஆனால்.. இதே ஈழமண்ணில் இருந்து புலம்பெயர்ந்த எத்தனை தமிழ் புண்ணாக்குகளும் அவற்றின் வாரிசுகளும்.. இதை எல்லாம் அறிந்தும் அறியாயததும் போல வாழ்த்து கொண்டிருப்பதுடன்.. இன்னும் புலி விரோதம் பேசி சிங்களவனின் தமிழினக் கொலை வெறிக்கு தீனியிட்டுக் கொண்டிருக்கின்றன.

எத்தனை ஈழத்தமிழன்.. வெளிநாட்டில் வாங்கிய அகதி வாழ்வுக்கு அடிபணிந்து தாயக உறவுகளை மறந்து வாழ்கிறான்.. என்று எண்ணிப் பாருங்கள். அவர்களோடு ஒப்பிடும் போது.. எழுச்சி கொண்ட தமிழகம்.. எத்தனை மடங்கு.. மனித உணர்வு மிகுந்ததென்று எண்ணிப்பாருங்கள்.. புலம்பெயர்ந்து சுயநலத்துக்கே மாறிப்போன சுயநலப் பிசாசுகளே..!

மானங்கெட்டவர்களே.. சிந்தியுங்கள்.. உங்கள் சொந்தங்களின் குருதி தாயக மண்ணில் வழிந்து ஆறாகி ஓடுகிறது.. நீங்களோ.. பப்பிலும் கிளப்பிலும்.. பியரில் குளிக்கிறீர்கள்..! கூத்துப் போடுகிறீர்கள்.

இதுவா.. தமிழன் உணர்வு.. தமிழன் ஒற்றுமை..???! தமிழீழம் பெற்றுத் தர கொடுக்கும் உதவிக்கரம்...??!

1000 யூரோவைக் கொடுத்துவிட்டு.. வெற்றிச் செய்திக்காக கொட்டாவி விட்டபடி.. புகைவிடும் புண்ணியவான்களே.. சிந்தியுங்கள்.. உங்களின் பங்களிப்பு எள்ளினும் சிறியது அவர்களின் சிந்தும் குருதியின் அளவுடன்..!

பிறந்த நாளை கொண்டாட மண்டபம் எடுக்கவில்லை என்று.. வீட்டை விட்டு ஓடும்.. புலம்பெயர் ஈழத்தமிழ் வாரிசுகளின்.. இளசுகளே சிந்தித்துப் பாருங்கள்.. உங்களின் பிறப்புரிமைகள்.. வாழ்வுக்கே வழியின்றி.. விழி பிதுங்கியுள்ளதை..!

இவையெல்லாம் ஏன்.. புலம்பெயரும் போதே.. இன மானத்தை தொலைத்துவிட்டு வந்ததன் விளைவுதானே அன்றி வேறில்லை..! :):blink:

நெடுக்ஸ் உங்களது கருத்து மிக மிக உண்மையானது புலம்பெயர் நாட்டில் இருக்கிறோம் மனதில் எங்கோ ஓர் இடத்திலாவது நான் அந்நியன் என்று தோன்றும்

இங்கு எல்லாம் இருக்கு ஆனா நின்மதி எங்க இங்க இருக்கிற தமிழர் யாராவது நான் நின்மதியாய் இருக்கிறேன் என்டு சொல்லட்டும் பார்ப்பம். நெடுக்ஸ் இங்க சிலபேர் தாங்கள் வெள்ளக்காரன் என்டு ஏன் அவனவிட கொஞஙம் ஓவரா திரியினம் இதுக்கொண்டு சொல்லட்டே காகம் எங்க குழிச்சாலும் கறுப்பு கறுப்புத்தான் . நாம் எல்லோரும் தமிழர் நாளைக்கே இவன் அடிச்சுத்திரத்தினா நம்ம ஈழம் தான் அரவனைக்க வேண்டும் வேண்டும் என்ன அரவனைக்கும் .

அங்க இருக்கிறது எங்கட மக்கள் என்ர அம்மா என்ர அப்பா அண்ணா அக்கா தம்பி என்டு நினைச்சு உங்களால் ஆன உதவிகளை செய்யுங்கள் பண உதவி இல்லை அவர்களுக்காக குரல்கொடுங்கள் இறைவனிடத்தில் மன்றாடுங்கள் புலத்திலிருந்து அந்த அந்த நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் விளங்கப்படுத்தி எமது மக்கள் படும் கஸ்ரங்களை கூறுங்கள் அதுவே பெரிய உதவி. எங்கே தான் இருந்தாலும் நான் தமிழன் என்பதை யாராலும் மாற்றமுடியாது ஏன் பெற்றதாயாலே மாற்றமுடியாது நமக்குள் ஓடுற தமிழ் இரத்தத்தை. இவ் அறிவுரை எனக்கும் பொருந்தும்

Edited by puspaviji

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.