Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒற்றைத்தலைவலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றைத்தலைவலி - மைகிறேன்

கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய்க்குறிப்பு..

கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய்க்குறிப்பு:

நாற்பத்தைந்து வயதுடைய பெண்ணொருவர் கடந்த 8 வருடங்களாக கடுமையான தலைவலியால் துன்பப்பட்டடிருந்தார். இவருக்கு கிழமையில் 2 – 3 தடவை இந்த தலைவலி. 24 – 36 மணித்தியாலங்களுக்கு நீடித்திருந்தது. தலையிடி தரும் நோவற்ற நாட்கள் இவருக்கு இருந்ததில்லை. வழமையான நோவு நீக்கிகள் (பெயின் கில்லர்) எதுவித நீண்ட நாள் பலனையுமு; தரவில்லை. சில சமயங்களில் தாங்க முடியாத நோவினால், நாள் முழுவதும் கட்டிலில் படுத்தேயிருக்க நேர்ந்தது.

இவரின் உணவு பெரும்பாலும் காலையில் பாணும் மதிய உணவில் சோறும் இரவில் ( மாப்பொருளாலான) பிட்டும் அமைந்திருந்தன. நாளில் பல தடவை தேநீர், கோப்பி அருந்தியிருந்தார், தனது வாலிபப் பருவம் அடைந்துவரும் பிள்ளைகள் பற்றி மிகுந்த கவலை கொண்டிருந்தார். சில சமயங்களில் பிள்ளைகள் கல்லுரியில் இருந்து வீடு திரும்ப தாமதமானால் கூட தலையிடி தொடங்கிவிடும்.

இவருக்கான நோய் தீர்க்கும் திட்டத்தில் கோதுமை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகள் முற்றாக அகற்றப்பட்டு, தேநீர், கோப்பியும் விலக்கப்பட்டது. தினமும் உணவில் போதியளவு இலங்கை மரக்கறிகளுடன், சிலரி, பாசிலி, அஸ்பராகஸ், போன்றனவும் சேர்க்கப்பட்டன. மேலும் சில உணவு குறை நிரப்பிகளும் கொடுக்கப்பட்டன. 3 மாத சிகிச்சைக்கு பின்பு அவரின் தலையிடித் தாக்கலின் எண்ணிக்கை மாதத்திற்கு 1– 2 ஆகக் குறைந்திருந்தது. 6 மாதங்களின் பின்பு கடுமையான தாக்குதல்கள் இல்லாமல், 8 வருடங்களுக்கு முன்பிருந்ததுபோல் நிம்மதியாக இருக்கிறார்.

கடுமையான (ஒற்றைத்) தலைவலி என்றால் என்ன?

இது மிகவும் குறிப்பிட்ட வகையானதொரு தலைவலியாகும். பெரும்பாலும் தலையின் ஒரு பக்கத்தில் வரும் தலையிடி அதிர்வுற்றுத் துடிக்கும் (அடிக்கும்) நோவைத்தருகின்றது. மேலும் இது ஒலி, ஒளி புலன் உணர்ச்சிகளுடனும் வயிற்றுக் குமட்டல், வாந்தி போன்றவற்றுடனும் தொடர்புபடுத்தப்படுகிறது. தாங்க முடியாத தலையிடியாக இருப்பதனால் அன்றாட காரியங்களைக் கூட செய்ய முடிவதில்லை. இத்தலை தாக்கு வந்து போனதன் பின்பு உடல் சோர்ந்து, களைத்து பலவீனப்பட்டு போனதாக உணர்கிறார்கள்.

சிலர் தலையிடி வரப்போவதை முன்பே எதிர்வு கூறுவார்கள், இதற்கு முன்னகுறியாக பார்வைப்புலன் தளத்தில் பளிச்சென்ற ஒளிக்கீற்றுக்கள், ஒளிவட்டம், குறுக்கு மறுக்கான ஒளிக்கோடுகள் அல்லது தற்காலிகமான பார்வையிழப்பு போன்றன தோன்றுவதாக கூறுவார்கள். இத்தலையிடி வருபவர்களுக்கு இது திரும்ப திரும்ப வருவதாக காணப்படுகிறது. அத்துடன் போதியளவு உணவு, உறக்கமின்மை, சில உணவுகளில் ஒவ்வாமை, ஏற்றுக்கொள்ளாமை, ஒளியின் அளவு, ஓமோன்களினால் ஏற்படும் ஒழுங்கீனங்கள் (பெண்களில் மட்டும்) போன்றவை இதைப் பொறிதட்டிவிடும் ஏதுக்களாகின்றன. மேலும் பதகளிப்பு (அங்சையிற்ரி), மனவழுத்தம் (ஸ்றெஸ்) ஆகியனவும் காரணமாகலாம்.பல காலமாக தலையிலுள்ள குருதிக்குழாய்கள் விரிந்து நெருக்கி சுருங்குதலுடன் தலையிடி தொடர்பானதென விஞ்ஞானிகள் கருதியிருந்தனர். ஆனால் தற்பொழுது இதுவொரு சில மூளைக்கலன்களை கட்டுப்படுத்தும், நிறமூர்த்தங்களின் ஒழுங்கீனமே காரணமென ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.

ஒற்றைத் தலையிடி தோன்றும் அபாயம் யாருக்குண்டு?

இங்கிலாந்தில் எண்மரில் ஒருவர் தலையிடியினால் துன்பப்படுகின்றார். இது இருமடங்குக்கும் அதிகமாக ஆண்களைவிட பெண்களையே தாக்குகின்றது. மேலும் இது இளம்பிள்ளைகள் உட்பட எல்லா வயதினரையும் சமூக வகுப்பினரையும் பாதிக்கின்றது. ஒற்றைத் தலையிடி தாக்கொன்று 4 72 மணித்தியாலங்கள் நீடிக்கலாம். இத்தாக்குதல்களால் துன்பப்படுபவர் வருடமொன்றிற்கு சராசரியாக 13 தாக்குதல்களுக்கு உள்ளாகின்றார். தலையிடியானது, பாற்கட்டி, சொக்கிலட், திராட்சை இரசம் (சிவப்பு வைன்) போன்றவற்றால் மட்டுமல்லாது பல்வேறு வகையான காரணிகளாலும் தூண்டப்படுகின்றது. பெரும்பான்மையானோருக்குத் தனித்தனியாக வரும்போது சமாளித்து இருக்கக்கூடிய காரணிகள், கூட்டாக வரும்போது, தாங்கு நிலையைக் கடந்துவிடும் பொழுது, தலையிடித் தாக்கு ஏற்ப்படுகின்றது.

ஒற்றைத் தலையிடி மிகவும் தனிப்பட்டதாகவும், தூண்டும் காரணிகளும், நோயின் குறிகளும் ஒவ்வொரு பேருக்கும் பரந்த அளவு வேறுபட்டதாகவும் காணப்படுகின்றன. ஒருவருக்கு வழங்கப்பட்ட மருந்து நன்றே நோயைக் குணப்படுத்தும் போது, அதே மருந்து இன்னொருவரைக் குணப்படுத்தாமல் போகலாம். எனவே மருந்து குணப்படுத்தமாட்டாது என எண்ணி மனந்தளர வேண்டாம். மாறாக, வேறெந்த வழிகள் இருக்கின்றன என அலசிப்பார்த்து தனக்குச் சுகம் தரும் ஒரு திட்டத்தை வகுக்கவேண்டும்.

ஒற்றைத் தலைவலியைக் குணப்படுத்த அற்புத மருந்தொன்றும் இல்லை. ஆனால் இந்நிலையைத் திட்டமிட்டு கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.

ஓற்றைத் தலையிடிக்கென நோய் நிலையை அடையாளம் காணவேண்டுமாயின், பார்வைப் புலத்தில் ஏற்ப்படும் ஒளிப்பருதி ‘ஓறா’ இருந்திருக்கவேண்டும் என்னும் தவறான கருத்துப் போக்கு காணப்படுகின்றது. இது உண்மைக்கு புறம்பானது. பலருக்கு ஒளிப்பருதி தோன்றாமலே தலைவலி தோன்றுகின்றது. தலைவலிக்கு மேலே கூறப்பட்ட காரணிகளுடன் சந்ததி அங்கத்தினர், தலையிடி தாக்குதலுக்கு ஆட்படக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். குடும்ப நோய்ச் சரித்திரமும் ஒருவருக்கு நோய் நிலையை முடிவு செய்வதற்கு ஏதுவாகும்.

நோய் கண்டவரின் துன்பமும் துயரும் ஒரு புறமிருக்;க, இவரைச் சார்ந்தவர்களும் குறிப்பிடத்தக்கவளவில் பாதிப்புக்குள்ளாகின்றார்கள

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.