Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் நடைபெறும் மனிதவுரிமை மீறல்கள் பற்றிய கலந்துரையாடல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நடைபெறும் மனிதவுரிமை மீறல்கள் பற்றிய கலந்துரையாடல்.

29.10.2008 அன்று யேர்மனி ஸ்ருட்காட் நகரில் 'இலங்கையில் மனிதவுரிமை மீறல்கள்" எனும் தலைப்பில் மகாநாடொன்று நடைபெற்றுள்ளது.இந்நிகழ்வானத

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் யேர்மனியில் விவாத அரங்கு

[ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2008, 10:57 மு.ப ஈழம்] [ஜேர்மனியிலிருந்து தேவிகா கங்காதரன்]

"உல்லாசப்பயணிகளின் சொர்க்கமாக விளங்கிவரும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள்" எனும் தலைப்பில் ஜேர்மனியில் உள்ள சுட்காட் நகரில் விவாத அரங்கொன்று கடந்த புதன்கிழமை (29.10.08) மாலை நடைபெற்றுள்ளது.

ஜேர்மனியின் பிரபல அரசியல் கட்சியான சமூக ஜனநாயக கட்சியின் (SPD) பல்கலைக்கழக மாணவர்களுக்கான இளையோர் அமைப்பு (JUSOS) இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

Hohenheim பல்கலைக்கழக JUSOS சார்பில் செல்வி துஷ்யந்தி மனோகரன் ஒழுங்கு செய்திருந்த இந்த அரங்கினை திருமதி டொக்டர் டக்மா கெல்மன் இராஜநாயகம் நெறிப்படுத்தினார்.

சிறப்பு பேச்சாளர்களாக பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்தைச் சேர்ந்த கிருபாகரன், உப்சலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பீற்றர் சால்க் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

இலங்கையைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியை நாங்கள் ஏன் நடத்துகிறோம் என்ற விளக்கத்துடன் டொக்டர் இராஜநாயகம் நிகழ்வை தொடக்கி இலங்கையில் தமிழர்-சிங்களவர் பிரச்சினையின் பின்னணியை சுருக்கமாகக் கூறி கிருபாகரனை உரையாற்ற அழைத்தார்.

இலங்கை உல்லாசப்பயணிகளின் சொர்க்கம் இதில் சந்தேகமில்லை எனக்கூறி தனது உரையைத் தொடங்கிய கிருபாகரன், இலங்கையின் எல்லாப்பகுதிகளும் சொர்க்கமாக இல்லை. பத்திரிகைகள் அங்கு நடைபெறும் வன்முறைகள் பற்றிப் பெரிதாக எதுவும் குறிப்பிடப்படாத போதும் ஐ.நா. சபையின் பதிவுகள் அவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன என்றார்.

மேலும் தொடர்ந்து அவர் கூறுகையில்,

சிறிலங்கா அரசு பற்றிய விமர்சனம் எதையும் வைக்காமலே இந்த வன்முறை நிகழ்வதற்கான சாட்சியங்களை நான் உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். இடம்பெயர்ந்த வன்னி மக்களின் அவலநிலை, கடந்த சில வாரங்களாக மக்கள் குடியிருப்புக்களின் மீது குண்டு வீச்சுக்கள், இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை 250,000 தாண்டியுள்ளது. இவர்களுக்கான உணவு வழங்கல் இல்லை. தற்போது மழைக்காலம், ஒதுங்க இடம் இல்லை. ஒரேயொரு நிறுவனம் மட்டுமே இவர்களுக்கான உதவ அங்குள்ளது.

ஒருபுறம் மனித உரிமைகள் மதிக்கப்படுவதில்லை, மறுபுறம் பொருளாதார மையங்கள் அழிக்கப்படுகின்றன. 80,000 பேர் கொல்லப்பட்டும் 20,000 பேர் காணாமல் போயும் உள்ள நிலையில் இந்தக் குற்றவாளிகளை சட்டமா அதிபர் சட்டத்திற்கு முன் நிறுத்த முயன்றும் அவர்களுக்கான தண்டனை வழங்கப்படுவதில்லை.

இலங்கையில் 2,000 வருடகால வரலாறுடைய தமிழர்கள் குறிவைத்து அழிக்கப்படுவது இன அழிப்பே. இராணுவ நடவடிக்கையில் பெண்கள் பாலியல் வன்முறைகளுக்குள்ளாக்கப்படு

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது ஐரோப்பிய நாடுகளில் தங்கியுள்ள எமது நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கு செய்யப்பட்ட முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை. இவர்கள் தமிழ் வானொலிகள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களின் போது புலம்பெயர் மக்கள் என்ன விதத்தில் பரப்புரையை செய்யவேண்டும் என பாடம் நடத்துகிறார்களே தவிர அந்த முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தர முன்வருவதில்லை என தனது கவலையை வெளிப்படுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலபேர் ஜரோப்பாவிற்கு உல்லாசப்பயணத்திற்குதானே வருகிறவை. வாற இடத்திலை பொழுது போறததிற்கு ஏதாவது தமிழ் தொலைக்காட்சி இல்லாட்டி தமிழ் வானொலி எதுக்காவது ஒரு பேட்டி குடுப்பினம்.அதிலை புலம்பெயர் தமிழரெல்லாம்: அந்தந்த நாட்டு மக்களிற்கு அந்த நாட்டு அதிகாரிகள் பாராழுமன்ற உறுப்பினகளிற்கிடையில் தமிழர் படுகிற தன்பங்கள் பற்றி பரப்புரை செய்யச்சொல்லி இலவச ஆலோசனையள் அள்ளிவழங்குவினம். ஆனால் அதை செய்யிறதிற்கு எங்களிற்கு உதவி செய்யச் சொல்லி கேட்டால் வரமாட்டினம்.

ஊதாரணமாய் மேலே செய்தியில் உள்ள சுக்காட் நகரில் நடந்த நிகழ்விற்கு யாராவது ஒரு பாராழுமன்ற உறுப்பினர் யாரையாவது அழைக்கலாமென்று முயற்சி எடுத்தவர்களில் நானும் ஒருவன். பலரை முயற்சி செய்து ஒரு மாதிரி பத்மினி சிதம்பரநாதன்வருவதாய் சம்மதித்திருந்தார். அவரிற்கு வேண்டிய போக்கு வரத்து செலவு மற்றும் வசதியாய் தங்குமிட வசதிகள் எல்லாமே ஒழுங்கு செய்திருந்தேன்.

ஆனால் அவர் இறுதி நேரத்தில் தான்னால் வரமுடியாது என்று ஒரு மின்னஞ்சல் அனுப்பி விட்டார். இவரை ஒழுங்கு பண்ணி வரசம்மதம் வாங்கவே எனக்கு இரண்டு மாதங்கள் ஆகியிருந்ததால். இறுதி நேரத்தில் இன்னொரு தமிழ் நாடாழுமன்ற உறுப்பினரை வரவழைக்க முயற்சி செய்ய முடியாமல் போய்விட்டது.அப்பொழுதுதான் புரிந்தது இவர்கள் போட்ட உடுப்பு மடிப்பு கசங்காமல் இருந்தபடி ஏதாவது தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கத்தான் லாயக்கு. இவர்கள் இறங்கி வந்து எங்களள் மக்களுக்காக சிரமப்பட்டு வேலை செய்வார்கள் எண்று நாங்கள் நினைத்தால் அது எங்கள் முட்டாள்தனம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலம்பிந்தி விளங்கியிருக்கிறீர்கள். பத்மினியக்காவை இந்தியாவுக்கு அனுப்பியிருந்தால் அங்கை ஏதாவது சாதிச்சிருப்பா. அதைவிட்டிட்டு ஐரோப்பாவிலை முடக்கினா அவாவின் பணிகள் இப்படித்தான் தடைவரும்.

தொலைக்காட்சியிலை பத்மினி சிதந்தபரநாதன் அவர்களிடம் புலத்தில் இருந்து நாங்கள் செய்ய வேண்டிய கடமைகளுக்கு ஆலோசனை கேளுங்கோ ஆலோசகராக மாறி ஆலோசனைகளை தொன்கணக்கில தருவா ஆனா உந்த கருத்தரங்கு கத்தரிக்காயெண்டு கேட்டா தேவையில்லாத சிக்கலிலமாட்டுவீங்கள் சாத்திரி.

கிஷோர் எம்பி ஜீரிவியில் ஐரோப்பிய நாடுகளில் வந்து நின்று வெங்காயம் நடுகின்ற சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றி ஒரு பெரிய விபரம் சொல்லியிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டு பத்மினியக்கா தரப்பு சரியாத்தான் கடுப்பாகீட்டினம். ஒளிச்சு நிண்டு கிஷோருக்கும் வெளிச்சம் நிகழ்ச்சியில் கிஷோர் அவர்களை செவ்விகண்ட நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கும் கல்லெறிஞ்சிட்டு இப்பதான் மூச்சுவிடுகினம். அதுக்குள்ளை நீங்கள் வந்து இவையெல்லாம் மடிப்புக் கசங்காமல் அரசியல் செய்யினமெண்டா உது நியாயமோ சாத்திரி ?

Edited by shanthy

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.