Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமா நீயென்று கேட்கேனடா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நலமறிய ஆவலுடன்.....,

"அன்புள்ள அக்கா,

நலம் நலமறிய ஆவல்"

அம்மாவுடன் கதைத்தேன்

அக்காவுடன் சண்டை பிடித்தேன்

பேச்சுவார்தைகள் நடக்கிறது

புலிகளின் நிலவரம்

போர்ப்பிள்ளைகளின் துணிகரம் என

இணையஞ்சல் ஊடாய்

நேசமொடு - என்

நெஞ்சில் இடம் கொண்டான்.

"ஊருக்கு வா அக்கா

உனைக்காண வேண்டும்

போருக்குள் நின்று வன்னி

பாருக்கு அறிமுகமாய்

ஆனகதை சொல்ல

ஊருக்கு வா அக்கா"

அடிக்கடி அஞ்சல் எழுதிய புலி.

பூவுக்கும் அவனுக்கும்

பொருத்தம் நிறைய.

அத்தனை மென்மையவன்.

போராளிப் பிள்ளையவன்

போர்க்களம் புடமிட்ட புலியவன்.

புலம்பெயரா உறுதியுடன்

பலம்பெற்ற தம்பியவன்

ஞாபகத்தில் நிற்கின்றான் - என்

நினைவகத்தில் பத்திரமாய்.

அம்மாவின் கதை

அண்ணாவின் கதை

அக்காவின் கதையென

உள்ளிருந்த துயர் யாவும்

இணைமடலில் கொட்டி

இளைப்பாறிய வேங்கையே !

வன்னியில் குண்டு விழ

இங்கென் இதயத்தில் இடிக்கிறது.

என் போராளித் தம்பியுன்

நினைவுகள் கனக்கிறது.

நலமா நீயென்று கேட்கேனடா - உன்

நலமறிய ஆவலுடன்.....,

எங்காவது இணைவலைத் தொடர்பிருந்தால்

ஒருவார்த்தை எழுதிவிடு

நலமாயிருக்கிறேனென்று.

அன்புடன் ..................................

ம்ம்..சாந்தி அக்கா..கா உங்களிண்ட கவிதையை வாசித்த பிறகு..கு எனக்கு கூட தங்கள் இணையஞ்சல் தம்பி நலத்தை அறிய ஆவலா தான் இருக்கு..கு..கவலைபடாதையுங்கோ.. :)

எங்கிருந்தாலும் அவர் நலமா இருப்பார்..ர்.. :)

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

shanthy

நெஞ்சைத் தொட்டு விட்டீர்கள், இப்படி எத்தனை உறவுகள் நாளும் நாளும் ஏங்கித் தவித்த வண்னம் உள்ளனர் என்பது மறுக்க முடியாத கண்ணீர் கலந்த நிஜம். அவர் எங்கிருந்தாலும் மிக நன்றாக இருப்பார்.

இளங்கவி

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்..சாந்தி அக்கா..கா உங்களிண்ட கவிதையை வாசித்த பிறகு..கு எனக்கு கூட தங்கள் இணையஞ்சல் தம்பி நலத்தை அறிய ஆவலா தான் இருக்கு..கு..கவலைபடாதையுங்கோ.. :icon_mrgreen:

எங்கிருந்தாலும் அவர் நலமா இருப்பார்..ர்.. :D

அப்ப நான் வரட்டா!!

இணைவைலை தாண்டி இன்று இருக்கிறேன் என்று மடல் தந்துள்ளான் தம்பி. ஆயினும் 'அநேகமாக இறுதிக்கடிதமாகக் கூட இருக்கலாம்' என்ற வரிகள் மனசைக் கலவரப்படுத்துகிறது.

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'அநேகமாக இறுதிக்கடிதமாகக் கூட இருக்கலாம்'

இன்று கிடைத்த உனது மடல்...

உறுதியாய் உனதும் உன்னவர்களின்

பலமும் சொல்லிப்

புலம்பெயர் தமிழரின்

கடமையையும்

நினைவுபடுத்தியுள்ளாய்.

இயன்றது இன்று உங்களுக்காய்

உலகின் நுனி வரை

குரலுயர்த்தலே தவிர்த்து

ஊர்வரவோ உங்களுடன்

துணையிருக்கவோ இயலாத

எங்கள் இயலாமையை

என்ன செய்ய...?

தோழனே !

என்றாவது சந்திப்போமென்ற நம்பிக்கை போய்விட்டதாய்

எழுதியுள்ளாய்.

நம்புகிறோம் உன்னையும்

உனது தோழர்களையும்...

நம்பிக்கை தரும்படியாய்

எந்த வார்த்தையுமில்லையடா

ஆயினும் உங்களையே நம்புகிறோம்

நீங்களே எங்களின் ஒளித்திரி.

Edited by shanthy

நல்ல ஒரு கவிதை....வாசிக்கும் போது மனம் ஈரமாகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.