Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீண்டும் நம்ப வைத்து ஏமாற்றிய கருணாநிதி: நெடுமாறன்

Featured Replies

உலகத் தமிழர்களை மீண்டும் ஒருமுறை நம்பவைத்து ஏமாற்றிவிட்டார் கருணாநிதி என்பதுதான் வேதனை என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: உலகத் தமிழர்களை மீண்டும் ஒருமுறை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார் கருணாநிதி என்பது வேதனையாக உள்ளது என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

ஆனந்த விகடன் இதழுக்கு நெடுமாறன் அளித்துள்ள பேட்டியில் இப்படித் தெரிவித்துள்ளார். பேட்டியின் முக்கிய பகுதிகள்...

முதல்வர் கருணாநிதி கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நீங்களும் கலந்துகொண்டீர்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல் முடிவு எடுக்கப்பட்டது. இப்போதோ, அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொடுத்த வாக்குறுதிகள் திருப்திகரமாக இருந்தன என்கிறார் கருணாநிதி. உங்களுக்கும் திருப்தியா?

நெடுமாறன்: இது தனிமனிதர்களின் திருப்தி சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல. ஓர் இனம் நிம்மதியாக ஈழத்தில் வாழ வழி பிறந்ததா என்பதுதான் முக்கியம்.

அன்று அனைத்து கட்சிக்கூட்டத்தில் பேசிய அனைவரும், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும், இந்தியா அந்த நாட்டுக்கு எந்தவகையிலும் இராணுவ உதவிகள் வழங்கக்கூடாது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்க வேண்டும் என்றுதான் சொன்னார்கள். அதை முதலமைச்சரும் ஏற்றுக்கொண்டார். அதையே தீர்மானமாகவும் கொண்டு வந்தார்.

15 நாட்களுக்குள் இதைச் செயவில்லையானால், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவாகள் என்று அனைவர் ஒப்புதலுடன் தீர்மானிக்கப்பட்டது. அந்தத் தீர்மானம், அதன் நோக்கத்தை நிறைவேற்றி இருந்தால், வரலாற்றில் என்றென்றும் பேசப்பட்டிருக்கும்.

ஏனென்றால், கடந்த 40 ஆண்டு காலத்தில் ஈழப் பிரச்னை தொடர்பாக எத்தனையோ போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்-கள், அனைத்து கட்சிக்கூட்டங்கள், டெல்லி சந்திப்புக்கள் நடந்துள்ளன. ஆனால் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக பதவி விலக செய்வார்கள் என்று எடுக்கப்பட்ட முடிவு எடுப்பது இதுதான் முதல் முறை.

அப்படிச் செய்திருந்தால், மத்திய அரசாங்கம் கவிழ்ந்து போகும். அந்த முடிவைக் கேட்டு உலகமெங்கும் வாழக்கூடிய தமிழர்கள் பெரும் நம்பிக்கை கொண்டார்கள். டெல்லியும் அதிர்ச்சி அடைந்தது. கொழும்பில் இருக்கும் சிங்களக் கட்சிகள் அச்சப்பட்டன. ஆனால், அனைத்தும் வீணானதுதான் பிரணாப் முகர்ஜி சந்திப்பால் கண்ட பலன்!

கருணாநிதியின் பதவி விலகல் அறிவிப்பு, போராட்டங்களால்தானே சிறிலங்கா அரசின் அரசின் தூதுக்குழு டெல்லி வந்தது. அது சாதகமானதுதானே?''

நெடுமாறன்: அதனால் என்ன பயன் ஏற்பட்டது? இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்களைக்கொண்ட உயர்மட்டக்குழுவை அனுப்பப் போவதாக சிறிலங்கா அறிவித்தது. ஆனால், அமைச்சர்கள் யாரும் வரவில்லை. இந்தியா போன்ற பலம் வாய்ந்த வல்லரசு நாடு அழைக்கும்போது, சிறிலங்காவின் அரச தலைவரோ, பிரதமரோ, டெல்லிக்கு வந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் வெளிநாட்டு அமைச்சராவது வந்திருக்க வேண்டும். ஆனால், பிரதமரின் ஆலோசகர் என்ற பொம்மை பதவியில் இருக்கும் பசில் ராஜபக்ச இங்கு அனுப்பப்பட்டார். வல்லரசான இந்தியாவைச் சின்ன நாடான சிறிலங்கா அதிகாரபூர்வமாக அவமானப்படுத்தியது.

முடிவெடுக்கும் எந்த அதிகாரமும் இல்லாத பசில் ராஜபக்சவை அனுப்புவதன் மூலம் இந்தியாவின் தலையீட்டை நாங்கள் விரும்பவில்லை என்று சிறிலங்கா வெளிப்படையாகச் சொல்லிவிட்டது. மூன்றாம் தரமான ஒரு நபர் அனுப்பப்பட்டபோது, அவரை மூத்த அமைச்சரான பிரணாப் முகர்ஜி சந்திக்கலாமா? மகிந்த ராஜபக்சவின் ஆலோசகரைச் சந்திக்க மன்மோகன்சிங்கின் ஆலோசகர்தான் போயிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், தமிழர்கள் விவகாரத்தில் இந்தியா கடுமையாக இருக்கிறது என்பதையாவது சிறிலங்கா உணர்ந்திருக்கும்!

பிரணாப் முகர்ஜியின் சென்னை வருகையாலும் எந்தப் பயனும் இல்லை என்கிறீர்களா?

நெடுமாறன்: முதல்வர் கருணாநிதியைச் சந்தித்த பின், நிருபர்களைச் சந்தித்தார் பிரணாப் முகர்ஜி. போர் நிறுத்தம் பற்றியோ, சிறிலங்காவுக்கு இந்தியா செய்துவரும் இராணுவ உதவிகள் பற்றியோ எதையும் அவர் பேசவே இல்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த இரண்டு தீர்மானங்களைப்பற்றி அவர் வாயே திறக்கவில்லை. எதை வைத்து பிரணாப் முகர்ஜி கூறியது தனக்குத் திருப்தி தருவதாக கருணாநிதி சொல்கிறார் என்றும் புரியவில்லை. அப்படி கருணாநிதி சொல்வதே, அனைத்துக் கட்சி கூட்டத்தின் முடிவுகளுக்கு எதிரானதாகும்.

அனுபவமிக்க முதலமைச்சரான கருணாநிதி என்ன செய்திருக்க வேண்டும்? 'இது அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து முடிவெடுத்த தீர்மானம். இதில், நானாக தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது. எனவே, மீண்டும் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி இது குறித்து விவாதித்து, எங்கள் முடிவை உங்களுக்குச் சொல்கிறேன்' என்றுதான் பிரணாப் முகர்ஜியிடம் சொல்லியிருக்க வேண்டும். அப்படிச் சொல்லாததால், அன்று எடுக்கப்பட்ட முடிவுகள் கருணாநிதியால் அர்த்தமற்றதாக்கப்பட்டு விட்டன. உலகத் தமிழர்களை மீண்டும் ஒரு முறை நம்பவைத்து ஏமாற்றிவிட்டார் கருணாநிதி என்பதுதான் வேதனை!

40 ஆண்டு பிரச்சினையை 4 நாட்களில் தீர்த்துவிட முடியாது என்கிறாரே அவர்?

நெடுமாறன்: இது வேதனை தரத்தக்க பதில்!

40 ஆண்டுப் பிரச்சினையைத் தீர்க்க நாளாகும் என்பது உண்மைதான். ஆனால், போரை நிறுத்துங்கள் என்று சொல்லி நிறுத்த, சில மணி நேரமே போதும்.

சிங்களவர் கைவசம் இருந்த ஆனையிறவு முகாமைக் கைப்பற்றிய புலிகள், யாழ்ப்பாணத்தை நோக்கி முன்னேறினார்கள். அங்கு 30 ஆயிரம் சிங்கள இராணுவ வீரர்கள் அப்போது இருந்தார்கள். புலிகள் முன்னேறியிருந்தால், சிங்கள இராணுவ வீரர்கள் மொத்தமாக அழிந்திருப்பார்கள். அப்போது இந்தியா தலையிட்டு, புலிகளை முன்னேற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது. புலிகளும் சம்மதித்தார்கள்.

அன்று, சிங்களச் சிப்பாய்களைக் காப்பாற்றுவதற்காக புலிகளிடம் கோரிக்கைவைக்கத் தெரிந்த இந்தியாவுக்கு, இன்று அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற போர் நிறுத்தம் செய்யவைக்க சில நிமிடங்கள் போதாதா? எவ்வளவு வேதனையான பதில்!

ஒரு நாடு, பக்கத்து நாட்டுக்கு இராணுவ உதவி செய்வது சாதாரணமானதுதான் என்கிறாரே பிரணாப்?

நெடுமாறன்: சாதாரண காலத்தில், சாதாரணமாக உதவி செய்யலாம். ஆனால், ஒரு நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்துகொண்டு இருக்கும்போது ஒரு தரப்புக்கு மட்டும் ஆயுத உதவிகள் செய்வது எப்படிச் சரியாக இருக்க முடியும்?

காஷ்மீரில் இராணுவத்துக்கும் சில அமைப்புகளுக்கும் தொடர்ந்து சண்டை நடக்கிறது. அந்த அமைப்புக்களுக்கு பாகிஸ்தான் உதவி செய்வதை இந்தியா குற்றம் சாட்டுகிறது. ஆனால், இலங்கையில் சிங்களவர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து தமிழர்களைக் கொல்ல இந்தியா உதவி செய்கிறது. பிறகு எப்படி பாகிஸ்தானை இந்தியா குற்றம் சாட்ட முடியும்?

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவிப் பொருட்கள் அனுப்ப முதல்வர் எடுத்து வரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது தானே?

நெடுமாறன்: மருந்து மற்றும் உணவுப் பொருட்களைச் சேகரிக்கலாம். ஆனால், யார் மூலமாகக் கொடுப்பீர்கள்? சிறிலங்கா அரசாங்கத்திடம் கொடுப்போம் என்பது தெரிந்தே செய்யும் தவறு. தமிழர் பகுதியில் இருந்த செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. தொண்டு அமைப்புகளை வெளியேற்றியவர்கள் அவர்கள். எனவே, நாம் அனுப்பும் பொருட்கள் தமிழர்களுக்குப் போய்ச் சேராது. விரக்தியாக இதைச் சொல்லவில்லை. அனுபவ உதாரணம் இருக்கிறது.

ஆழிப்பேரலையால் பல ஆயிரம் தமிழர்கள் இறந்தார்கள். மிகப்பெரிய அளவில் அழிவும் ஏற்பட்டது. இதற்கு உலக நாடுகள் பல்லாயிரம் கோடி பணத்தைக் கொட்டியது. இந்தப் பணத்தை வைத்து நிவாரண உதவிகள் சரியாக நடக்கின்றனவா என்று பார்க்க, நோர்வே நாட்டைத் தலைவராக ஏற்று, சிங்கள - புலிகள் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டார்கள். ஆனால், அதை சந்திரிகா ஏற்கவில்லை. ஒரு கைப்பிடி உதவிப் பொருள்கூட தமிழர் பகுதிக்குள் வரவில்லை.

ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அனான், பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்க்க வந்தபோது, தமிழர் பகுதிக்குள் செல்ல சிறிலங்கா அரசாங்கம் விடவில்லை. அப்படிப்பட்டவர்களிடம் பொருளைக் கொடுத்தால், தமிழர்களுக்குக் கொடுக்கமாட்டார்கள். எனவே, நாம் அனுப்பும் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. அமைப்பு மூலமாகத்தான் வழங்க வேண்டும். அதை தமிழகக் குழு கண்காணிக்க வேண்டும்!

தமிழர் தாயகம், சுயநிர்ணயம் ஆகிய வார்த்தைகளைப் பயன்படுத்தி ஜெயலலிதா முதலில் அறிக்கைவிட்டார். மறுநாளே மாறி அறிக்கைவிட்டாரே?

நெடுமாறன்: தமிழ் மக்களின் கொந்தளிப்பை பார்த்து முதலில் அப்படி அறிக்கைவிட்டார் ஜெயலலிதா. மத்திய உளவுத்துறை அதிகாரிகள் வந்து அவரைப் பார்த்தார்கள். அதன் பிறகு மாறிவிட்டார். காங்கிரசுடன் கூட்டணி ஏற்பட, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள அவரும் திட்டமிடுகிறார். அதுதான் உண்மை.

கருணாநிதி, சிறிலங்காவுக்கு வரவேண்டும் என்று ராஜபக்ச அழைப்பு விடுகிறாரே?

நெடுமாறன்: சிங்களத் தலைவர்கள் அத்தனை பேரும் நரித்தந்திரம் படைத்தவர்கள். அதில் ராஜபக்ச விதிவிலக்கல்ல. உலகத்தை ஏமாற்ற அவர்கள் அப்படித்தான் ஆரம்பத்தில் பேசுவார்கள். அதன் பிறகு நம்மை ஏய்த்து விடுவார்கள்.

புலிகளை எதிர்த்து தமிழக காங்கிரசார் கொந்தளிப்புடன் பேச ஆரம்பித்து உள்ளார்களே?

நெடுமாறன்: மக்கள் உணர்வைப் புரிந்துகொள்ளாமல் காங்கிரஸ் மீண்டும் மீண்டும் அந்நியப்பட்டுக்கொண்டே போகிறது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் என்பதுதான் ராஜீவ் - ஜெயவர்த்தன ஒப்பந்தத்தின் மையக் கருத்து. அந்த இரண்டு மாகாணங்களையும் பிரித்துவிட்டார் ராஜபக்ச. ஆகவே, ராஜீவ் காந்தியின் கனவை நிறைவேற்ற முதலில் அவர்கள் குரல் கொடுக்கட்டும்.''

இன்றைய நிலையில் உங்களின் ஒட்டுமொத்தக் கோரிக்கை என்ன?

நெடுமாறன்: மூன்று விடயங்கள்... அப்பாவித் தமிழர்களைப் பலியிடும் சிறிலங்கா அரசாங்கம் உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும். இந்திய அரசு, சிறிலங்காவுக்கு தரும் இராணுவ உதவியை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தமிழக மீனவர்களை சிறிலங்கா கடற்படை சுட்டால் இந்திய கடற்படை திருப்பித் தாக்கும் என்று அறிவிக்க வேண்டும்.

இங்கே... முதல்வர் கருணாநிதி, உடனடியாக மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். நமது அரசியல், அபிப்பிராய பேதங்களை அப்பாவித் ஈழத் தமிழனின் வாழ்க்கையுடன் சேர்த்துப் பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்றார்.

http://thatstamil.oneindia.in/news/2008/11...-nedumaran.html

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா கலைஞரே! தமிழினமா? ஈனப்பதவியா? - கை.அறிவழகன்

கடைசியில் எதனை எழுதக்கூடாது என்று எங்கள் பேனா முனைகள் தயங்கியதோ, அதை எழுதியே தீர வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. இன்னமும் இதயத்தின் ஓரத்தில் கசியும் நம்பிக்கையின் கடைசித் துளி ஈரத்தில் எழுதப்படும் உணர்வின் வெளிப்பாடு இது.

Imageகழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய், ஆழிப் பேரலைபோல் பொங்கி எழுந்த எம்மக்களின் உணர்வுகளை உண்டியல் ஓட்டைகளில் அடைக்க முயலும் உங்கள் ராசதந்திரங்கள் ஒரு புறம் அரங்கேற, தமிழ் மக்களின் பிணங்களின் மீது ஏறி தொலைந்து போன தங்கள் முகவரியைத் தேடி அலையும் காங்கிரஸ் கணவான்கள் ஒருபுறம், எம்.ஜி.ஆரின் பின வண்டியில் துவங்கிய அரசியல் பயணத்தை, ராசீவின் உடல் சிதறல்களில் வேகப்படுத்தி, ஈழத் தமிழர்களின் கல்லறைகளில் நிறைவு செய்யத் துடிக்கும் பார்ப்பன பனியா ஜெயலலிதா கும்பலின் கால்களில் விழுந்து கிடந்த போதே தமிழர்களின் அரசியல் அறிவு மழுங்கிப் போனது.

தமிழினமா? ஈனப்பதவியா? முதல்வரே! இரண்டில் ஒன்றை இறுதியாகச் சொல்லி முடிவுரை எழுதுங்கள்

மனிதச் சங்கிலியாய், புயல் மழையை எல்லாம் புரமுதுகேற வைத்த உணர்வுகளின் ஆர்ப்பரிப்பில், எம்தமிழ் மக்களின் 40 ஆண்டு கால விடுதலைப் போராட்டம், ஒரு முடிவுக்கு வரும் என்று நாங்கள் ஆர்வமாய் இருந்தபோது, ஒரு வார காலத்தில் முடிவு தெரியவில்லை என்றால், 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள் என்று கொஞ்சம் உறுமலாய் சொன்னீர்கள். அப்பாடா.... என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டு மகிழ்வாய் உறங்கப் போனோம். எழுந்து பார்த்தால், உலகின் மூத்த குடியின் வாழ்வா, சாவா போராட்டம். இந்திய இறையாண்மை என்னும் மூடத்தனத்தில் முடக்கப்பட்டு, முகர்ஜிகளின் அறிக்கைகளில் சமாதி அடைந்திருந்தது மட்டுமல்ல, பார்ப்பன பணியாக்களும், ஆரியக் கூத்தாடிகளும் கைகொட்டிச் சிரிக்கும் கேலிப் பொருளாக்கி மூலையில் முடக்கியதே உங்கள் அறிக்கைகள். Image

பார்ப்பனக் கழுகளால் அடைகாக்கப்படும், இந்திய இறையாண்மை என்னும் விளக்குமாற்றுக்கு நீங்களும் பட்டுக் குஞ்சம் கட்ட முனைந்தால், அந்த விளக்குமாற்றை தூக்கி எரிவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியே இல்லை. தமிழ் மக்களின் மரண ஓலம், இந்திய அரசின் வெளியுறவுத் துறைக்கு தாலாட்டாய் இருக்குமேயானால், நாங்கள் இந்திய தேசியத்திற்கே ஒப்பாரி வைப்பதைத் தவிர வேறு பாதை இல்லை.

"இந்துக்களாய் இருந்து போராடினால், இந்நேரம் ஈழம் கிடைத்திருக்கும்" என்று எரிகிற வீட்டில் பிடுங்கித் தின்கிற இடுகாட்டு நரியாக ஒரு பார்ப்பனன் ஊளையிடுகிறான். அட நாதாரிகளா! உங்கள் மதச் சாயத்தை எங்கள் வீட்டுப் பெண்களின் பிணங்களின் மீது சாத்தும் சேலைகளில்தானா தெளிக்க வேண்டும்? விடுதலையே கிடைக்காமல் வீழ்ந்து போனாலும், உங்கள் இந்துத்துவக் கனவுகள் மட்டும் நிறைவேற விடமாட்டோம் நாங்கள். ஈழத் தமிழ் மக்களின் பிணங்களின் மீது ஏறி நின்று, இறந்து போன ராசீவின் எலும்புத் துண்டைக் கவ்விக் கொண்டு இந்திய இறையாண்மையில் ஓட்டுப் பொறுக்கித் தின்னும், தங்கபாலுவும், ஜெயலலிதாவும் இன்னும் ஈழத் தமிழ் மக்களின் குருதியைப் பச்சையாகக் குடிக்கவில்லை. அதையும் அவர்கள் செய்வார்கள், அதே காய்ந்த மலத்தின் மீது நீங்கள் அப்போது அண்ணன் அமீரையும், அண்ணன் சீமானையும் சிறையில் அடைத்துக் கொண்டிருங்கள்.

http://www.adhikaalai.com/index.php?option...&Itemid=163

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி தமிழக மக்களின் தேவையையும், உணர்வுகளையும் புரிந்து அரசியல் நடாத்துவதால்தான் அவரால் பல தடவைகள் முதலமைச்சர் ஆக முடிந்தது. கருணாநிதி ஈழத் தமிழர்களுக்கும் முதல்வர்போல் நடக்கவேண்டும் என்று எதிர்பார்த்து, பின்னர் ஏமாற்றிவிட்டார் என்று அழுவது எந்த வகையில் தமிழரின் போராட்டத்திற்கு உதவப் போகின்றது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.