Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னி, மெல்பேர்ண் நகரங்களில் 'சமாதானத்துக்காக ஓவியம் வரைவோம்'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி, மெல்பேர்ண் நகரங்களில் 'சமாதானத்துக்காக ஓவியம் வரைவோம்'

அவுஸ்திரேலிய இளையோர் அமைப்பு உங்களை அழைக்கிறது!

துயருறும் எங்கள் தாயக உறவுகளை நாங்கள் மறக்கவில்லை – மறக்க மாட்டோம்.

கலை வடிவில் சமாதானம் பற்றிய எங்கள் கருத்தைப் பகிர்வோம்.

எங்கள் கூட்டுமுயற்சியில் அழகிய படைப்பு ஒன்றை உருவாக்க அணி திரள்வோம்.

நீங்கள் திறமை மிக்க ஓவியராக இருக்கவேண்டியதில்லை. ஓவியம் மூலம் திறமையைக்காட்டமுடியாவிட்டா

நல்லதொரு முயற்சி. நிகழ்வு பலனளிக்க வாழ்த்துக்கள்.

நிகழ்வின் நோக்கம் நிறைவேறட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்நிகழ்வில் வரையப்பட்ட புகைப்படங்கள், செய்திகளைப் பார்வையிட

http://www.tamilsydney.com/content/view/1583/37/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இளையோர் அமைப்பு

22 நவம்பர் 2008

சமாதானத்திற்காக ஓவியம் வரைதல்

"விடுதலையும் சமாதானமும் ஒன்றோடு ஒன்று பிரிக்கமுடியாதபடி இணைந்தவை. விடுதலையைத் தொடர்ந்தே சமாதானம் - அமைதி வரும் " இப்படிக் கூறுகிறார் மல்கம் எக்ஸ் ((Malcom X).).

விடுதலையோடு கூடிய சமாதானமே உலகமெங்கும் பரந்திருக்கும் ஈழத்தமிழரின் இன்றைய கனவு.

நவம்பர் 22ம் நாள் 2008 அன்று ஈழத்தமிழ் மக்கள், தங்களின் இந்தக் கனவை பெரியதொரு திரைச்சீலையில் ஓவியமாக வரைந்து சிட்னியிலும் மெல்போர்னிலும் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.

புதிய புதிய சிந்தனைகளால் சமூகப்பார்வை மாறிவரும் இன்றைய உலகில் பூலோக சொர்க்கம் என்று வர்ணிக்கப்படும் இலங்கையிலே மகிந்த ராசபக்ஸ ஆட்சியில் மனித உறிமைகள் மீறப்பட்டு தமிழ் மக்கள் துயருறுவது கவலயைத் தருகிறது.

இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் சிறுவர்கள் சமாதானம் - அமைதி என்றால் என்ன என்பதை தெரியாமலே இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குண்டுகள் விழுந்து வெடிக்காத புதியதோர் உலகைப் பார்க்கமாட்டோமா என்ற எண்ணத்தோடு தூங்கச்செல்கிறார்கள். பசியும் பட்டினியும் நாளைக்கும் எம்மை வருத்துமா? போரின் உக்கிரத்தால் காயமடைந்து எமது உறவுகளை இழக்கப் போகிறோமா என்ற பயத்துடன் கண் விழிக்கிறார்கள். இன்றும் எமது உறவுகளின் கதறல்களைக் கேட்கவேண்டுமா என்ற ஏக்கத்துடன் விடியலைப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு வேண்டியது அமைதியான உலகம்.

நவெம்பர் 22ம் நாள் 2008 நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் - சிறியோர் முதல் பெரியோர் வரை சிட்னியில் ஹோம்பு~;, மௌன்ற் றூயிற், வென்ற்வேர்திலும் மெல்போர்னில் வன்தினாராவிலும், சிறீலண்கா அரசின் கொடும்கோன்மையில் இருந்து -

"ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி வேண்டும்

அவர்களுக்கு சமாதானம் வேண்டும்"

என்னும் செய்தியைத்தரும் ஓவியங்களையும் வாசகங்களையும் தங்கள் கற்பனைக்கு எட்டியபடி வரைந்து வெளிப்படுத்தினார்கள்.

ஓவியம் வரைய முடியாதவர்கள் தங்கள் துயரத்தை வார்த்தைகளிலே பதிவு செய்தார்கள். சிறுவர்கள் பலர் தங்கள் கைகளை வர்ணக்கலவையில் தோய்த்து துணியிலே பதித்தார்கள்.

அவுஸ்திரேலிய இளையோர் அமைப்பினர் ஒழுங்கு செய்திருந்த இந்தப் பணியில் சிறுவர் இளையோர் முதியோர் யாவரும் கைகோர்த்து இணைந்தார்கள் என்பது முக்கியம். மூன்று வயதுச் சிறுவனின் மலர் ஓவியத்தின் பக்கமாக 70 வயது முதியவரின் கவிதையும் இடம்பெற்றிருந்தது.

மூன்று மீட்டர் அகலமும் ஐந்து மீட்டர் நீளமும் கொண்ட வெள்ளைத் துணியிலே வரையப்பட்ட இந்த ஓவியங்களும் வாசகங்களும் விரைவில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

"நீண்டதொரு பிரசங்கத்திலும் பார்க்க நல்லதோர் ஓவியம் சிறப்பானது"

இப்படி நெபோலியன் கூறியிருப்பதை நினைவு கூர்வோமாக.

-அவுஸ்திரேலிய இளையோர் அமைப்பு

Edited by கந்தப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.