Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாக் கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடா

எனக்கு மின்னஞ்சலில் நண்பரொருவரால் அனுப்பிவைக்கப்பட்டிருந்த இந்தக் கடிதம் இந்தவார ஒரு பேப்பரிலும் வெளியாகியிருந்தது இதனை இங்கும் இணைக்கிறேன்.நன்றி.

கனடாவில் , மனிரோபா மானிலம். வின்னிபெக் நகரம்,இங்கு வாழ்கின்ற ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை 300 க்கும் குறைவு, இந்துக்கள் 200 க்கும் குறைவு.கடந்த மாதம் இங்கு ஈழத்தில் அல்லலுறும் எமது உறவுகளிற்கு உதவுவதற்காக ஒரு கூட்டம் கூட்டப்பட்டது அதற்கு வந்தவர்கள் 20 க்கும் குறைவு. அந்தக் கூட்டத்தில் யாரும் விரும்பினால் நன்கொடையளியுங்கள் அப்பணத்தை இடம்பெயர்ந்த மக்களுக்கு அல்லது வட கிழக்கு பகுதிக்கு என தனிப்பட்ட நிதிஒர்துக்கீடு செய்துள்ள தொண்டு நிறுவனங்களூடாக கொடுப்போம் என கேட்ட போது அதற்கு பணம் கொடுத்தவர்கள் சிலர். ஒரு சிலரை தவிர ஏனையோர் கொடுத்த தொகை 50 ஐயும் தாண்டாது. நிதி பெரிய அளவில் சேராததினால் கூட்ட முடிவில் இடம் பெயர்ந்த மக்களுக்கு ஒரு நிதி சேகரிப்பிற்காக இரவுஉணவு விருந்து ஒன்றினை ஒழுங்கு செய்வது என்றும், அதற்கு இங்குள்ள ஏனைய இன மக்களையும் கூப்பிடுவது என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் அந்த நிதி சேகரிப்புக்கான காலம் வரும் வருடம் ஜனவரி மாதம் என தீர்மானிக்கப்பட்டது.இங்கு தமிழர்களுடைய கோயில்கள் எதுவும் இல்லை. குறிப்பாக வட இந்தியர்களால் நடாத்தப்படும் கோயில்கள் சில உண்டு. அங்கு அவர்களின் அனுமதியுடன் வாரம் ஒரு நாள் தமிழ் பூசை நடப்பதுண்டு, அது தவிர தமிழர்களால் கொண்டாடப்படும் விழாக்களுக்கும் விசேட பூசை நடப்பது வழக்கம். அண்மையில் கந்தசட்டி விரத இறுதியில் நடந்த திருக்கல்யாண நிகழ்வின் முடிவில் 16000 கனேடிய டொலர்களுக்கு கூடிய தொகை, மனிரோபா இந்து கழகத்திற்கு இங்குள்ள தமிழர்களால் கொடுக்கப்பட்டது.மனிரேபா இந்து கழகம் என்பது அதிகளவில் வட இந்திய மக்களால் நிர்வாகிக்கப்படும் நிறுவனம் என்பதுடன் அவர்களால் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வுகளில் இந்தி மொழிக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படும் ஒரு நிறுவனம்.16000 கனேடிய டொலரை தாம் கோயிலில் வழிபடுவதற்காக ஒவ்வொரு வருடமும் 16000 கொடுக்கும் தமிழர்களால் ஏன் இதில் 1/4 பங்கை தன்னும் இடம்பெயர்ந்த மக்களுக்கு கொடுக்க மனம் வரவில்லை. கோயிலுக்கு தமது பிள்ளைகளை 4- 5 மணி நேரம் செலவழிக்க இந்தியர்களின் குர்தா அணிந்து இழுத்துவரும் தமிழர்களால் ஏன் ஈழத்தில் இடம்பெயரும் மக்களி சம்பந்தமான ஒரு அரை மணி நேர கூட்டத்துக்கு அழைத்துவர முடியவில்லை.

கோயில் வேலைகளிற்கு முன்னுக்கு நிற்கும் சில படித்த பேரசிரியர்களும், வைத்திய கலானிதிகளும் ஈழ மக்களுக்கு உதவி செய்யும் நிகழ்வு என்றால் தலைவைத்தும் படுக்க மாட்டார்கள். ஆனால் இந்தி பேசும் மக்களால் ஒழுங்கு செய்யப்படும், இந்தியாவில் ஏழை மக்களுக்கு கண் சிகிச்சை போலியோ ஊசிபோடுவதற்கு அல்லது வேறு நல வாழ்வு திட்டங்களுக்கு என செய்யப்படும் நிகழ்வுகளில் தலையால் நடந்து ஆயிர கணக்கில் காசு கொடுத்து உதவி செய்வார்கள். இவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையில்லை தமிழர்கள் என்று சொல்லவே வெக்கமா இருக்கு.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் தமிழனைத் தவிர மற்ற எல்லோருக்கும் அடிமை. மற்ற இனத்தவரை காசு கொடுத்தாவது திருப்திப்படுத்த நினைப்பது இந்த மனப்பான்மையின் காரணமாகவே..!!

  • கருத்துக்கள உறவுகள்

நம்முடைய குளம்ஸ் அங்கு தான் வசிக்கின்றார். அவர் தான் தெளிவுபடுத்த வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

கோவில் மட்டுமல்ல. எல்லா இடங்களிலும் இது மாதிரித் தான் நடக்குது போல. சனம் அங்க சாப்பிட வழியில்லாமல் இருக்குது. யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் கனடாவில வருடாந்த கழியாட்ட நிகழ்வு 2008 நடத்தி முடித்திருக்கினமாம். ஒரு பழைய மாணவனா இருந்து கொண்டு தான் இதை வெட்கத்தோடு சொல்லுகிறேன். முன்னரும் இவர்கள் நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகள் மூலம் கிடைத்த நிதியை ஒரு ரொறன்டோ மருத்துவ மனைக்குத் தாரை வார்த்தினமாம் எண்டு பெருமையோட சொல்லித் திரிகினம். அங்க யாழ் ஆஸ்பத்திரியில எத்தனையோ தேவைகள் நிறைவேற்ற நிதி வசதியில்லாமல் இருக்கும் போதே இந்தத் தாரை வார்ப்பு நடந்திருக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோவில் மட்டுமல்ல. எல்லா இடங்களிலும் இது மாதிரித் தான் நடக்குது போல. சனம் அங்க சாப்பிட வழியில்லாமல் இருக்குது. யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் கனடாவில வருடாந்த கழியாட்ட நிகழ்வு 2008 நடத்தி முடித்திருக்கினமாம். ஒரு பழைய மாணவனா இருந்து கொண்டு தான் இதை வெட்கத்தோடு சொல்லுகிறேன். முன்னரும் இவர்கள் நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகள் மூலம் கிடைத்த நிதியை ஒரு ரொறன்டோ மருத்துவ மனைக்குத் தாரை வார்த்தினமாம் எண்டு பெருமையோட சொல்லித் திரிகினம். அங்க யாழ் ஆஸ்பத்திரியில எத்தனையோ தேவைகள் நிறைவேற்ற நிதி வசதியில்லாமல் இருக்கும் போதே இந்தத் தாரை வார்ப்பு நடந்திருக்கு

ரொரன்ரோ மருத்துவமனைக்கு நிதியுதவி அழித்ததில் என்ன தவறைக்கண்டீர்களோ? தெரியாது

ஆனால் தேசியம் பேசிய படியே களியாட்ட நிகழ்வுகள் ரொரன்ரோவை அலங்கரிக்கவில்லையா? ஒரு சில பிரதேச, பாடசாலை அமைப்புக்கள் தவிர பெரும்பாலனவை தமது வருடாந்த நிகழ்வுகளை நடாத்தி கொண்டே இருக்கின்றனர் ஆனாலும் அவர்கள் முழுமைக்கும் களியாட்ட நிகழ்வுகளில் கழித்தார்கள் என்று சொல்வதில் உடன்பாடில்லை.

குறிப்பாக பழைய மாணவர் சங்கங்கள், பிரதேச அமைப்புக்கள், பொது அமைப்புக்கள் என்று அனைவரும் இணைந்து அரவணைப்போம் என்ற நிகழ்வை நடாத்தினார்கள்.

அதுமட்டுமன்றி பல்வேறு தரப்பினரும் தாயக மக்களுக்கான செயற்திட்டங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். ரொரன்ரோவில் தாயகம் தொடர்பான செயற்ப்பாடுகளில் ஈடுபடும் இளைஞர்கள் பலர் தங்கள் தூக்கத்தை மறந்து ஒன்றன் பின் ஒன்றாக ஒழுங்கமைக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டங்கள், எழுச்சி நகிழ்வுகள், நிதி சேகரிப்பு நிகழ்வுகள் என்பவற்றில் சோர்வின்றி செயற்ப்பட்டுக்கொண்டிருக்க

  • கருத்துக்கள உறவுகள்

ரொரன்ரோ மருத்துவமனைக்கு நிதியுதவி அழித்ததில் என்ன தவறைக்கண்டீர்களோ? தெரியாது

ஆனால் தேசியம் பேசிய படியே களியாட்ட நிகழ்வுகள் ரொரன்ரோவை அலங்கரிக்கவில்லையா? ஒரு சில பிரதேச, பாடசாலை அமைப்புக்கள் தவிர பெரும்பாலனவை தமது வருடாந்த நிகழ்வுகளை நடாத்தி கொண்டே இருக்கின்றனர் ஆனாலும் அவர்கள் முழுமைக்கும் களியாட்ட நிகழ்வுகளில் கழித்தார்கள் என்று சொல்வதில் உடன்பாடில்லை.

வணக்கம் பறவைகள்,

எந்த மருத்துவ மனைக்கும் நிதி கொடுப்பது தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால் யார் யாருக்குக் கொடுக்கிறார்கள் என்பதை இப்போது தமிழர்கள் இலங்கையில் படுகிற துன்பன்களின் பின்னணியில் வைத்துக் கருத்துச் சொல்லியிருந்தேன். கனேடியக் குழந்தைகள் மருத்துவ மனைக்கு நிதி கொடுக்க தமிழர் மட்டுமில்லை, வேறு பல சமூகத்தினரும் உள்ளனர். யாழ் மருத்துவமனைக்கோ அல்லது கிளிநொச்சி மருத்துவ மனைக்கோ எத்தனை அமைப்புகள் உதவி வழங்கக் கூடிய நிலையில் இருக்கின்றன? சில வருடங்களாகத் தொடர்ந்து கனேடிய குழந்தைகள் மருத்துவ மனைக்கே கொடுத்து வரும் பழைய மாணவர் அமைப்பினர் இப்போதைய நிலையிலாவது வன்னி ஏதிலிகளுக்காக நடைபயண நிதி சேகரிப்பைச் செய்திருந்தால் எவ்வளவு பொருத்தமாக இருந்திருக்கும்? மேலும், கேளிக்கை நிகழ்வுகளில் வன்னி மக்களுக்கு ஏதாவது நன்மை விளைந்தால் கொஞ்சம் கேளிக்கையை சேர்த்துக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் இரவு நடனமும் இராப்போசணமும் இந்த சூழ் நிலையில் தேவை தானா? இருபது பேர் இந்த இராப் போசன விருந்தில் சாப்பிடும் பணத்தில், ஒரு நூறு குழந்தைகள் வன்னியில் ஒரு நேரம் சாப்பிட இயலும், நாம் மனது வைத்தால்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.