Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாட்டி இந்திரா காந்தியின் படுகொலைக்கு பிறகு நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட சீக்கியர்களிடம் மன்னிப்புக்கேட்ட ராகுல் காந்தி, ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு சிங்கள அரசுக்கு ஆதரிக்கும் காங்கிரஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குமுதம் இணையத்தள முச்சந்தியில் 24.11.2008ல் வந்த 'தமிழக அரசியலில் கூட்டணி வியூகம்' என்ற தலைப்பில் வந்த ஆக்கம்

தமிழக அரசியலில் கூட்டணி வியூகம்...

மப்பும் மந்தாரமுமாக இருந்தது வானம். அவ்வப்போது சண்டைக்கோழி மாதிரி மழை பிய்த்துக் கொண்டு அடித்தது.. இந்த நிலையில் அலப்பறை டீமை கூட்டலாமா என்ற யோசனையில் இருந்த சித்தன், சுவரு முட்டி சுந்தரம் சண்டைக்கு வந்து விடுவாரோ என்ற கலக்கத்தில் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். அடுத்த சிலமணி நேரத்தில் லைட் அவுஸ் அருகே ஈரமான கடற்கரை மணலில் கூடியது கூட்டம்.

"என்னப்பா சித்தா. இடியும் மழையுமா இருந்தாலும் கடமையே கண்ணாக கூட்டத்தை கூட்டியிருக்கியே... உனக்கு ஒரு சபாஷ் போடலாமா"- அன்வர் பாய்.

"என்ன செய்யுறதப்பா. கொஞ்சம் தாமதமானாலும், நம்ப சுவருமுட்டி சுந்தரம் தலைமையை மாத்துன்னு எதிர்கோஷ்டியா மாறிடுறாரே. அதான் கூட்டிட்டேன். சரி விஷயத்துக்கு வர்றேன். ஒரு வழியா ஈழப் பிரச்னையில நம்ப பிரதமர் மன்மோகன் சிங் திருவாய் மலர்ந்திருக்காரு. இலங்கை அரசு உடனே போர் நிறுத்தத்துக்கு வழி செய்யணும். சண்டை அமைதிக்கு வழி வகுக்காது. பேச்சு வார்த்தைதான் சரிப்படும். உங்களுக்கு பிரபாகரனோடு, புலிகளோடு பேசப் பிடிக்கலைன்னா அவர்களின் ஆதரவாளர்களா இருக்கிற தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை கூப்பிட்டுப் பேசுங்க. அந்த எம்.பி.ங்க புலிகள்கிட்ட பேசி முடிவெடுப்பாங்க. சீக்கிரம் அதுக்கான முடிவை எடுங்க..." அப்படீன்னு இந்தியப் பிரதமர், ராஜபக்சேவிடம் சொன்னதா இலங்கைப் பத்திரிகையில பெரிசா நியூஸ் போட்டிருக்காங்க. அதுக்கேத்த மாதிரி, ராஜபக்சேவும் பேச்சு வார்த்தைக்கு தமிழ் எம்.பி.க்களுக்கு அழைப்பு கொடுத்திருக்காரு..." என்றார் சித்தன்.

"அப்படிப் போடு அருவாளை. பிரதமர் ஏன் அப்படி பேசுனாருன்னு தெரியுமா? நான் சொல்றேன்.." என்ற சுவரு முட்டி சுந்தரம், "சமீபத்துல பஞ்சாப்புக்கு ராகுல்காந்தி வந்தாரு. தேர்தலை மனசுல வச்சியோ என்னவோ தெரியாது. பாட்டி இந்திரா காந்தி படுகொலையை அடுத்து நடந்த வன்முறையில, சீக்கியர்கள் பாதிக்கப்பட்டது, பலர் படுகொலையானது எல்லாமே ரொம்ப தப்புதான். அப்படி நடந்திருக்கக் கூடாது. அதுக்காக மன்னிப்பு கேட்டுக்கறேன். எங்க குடும்பத்திற்கு சீக்கிய சமூகத்தின் பேர்ல ரொம்ப மதிப்பு இருக்கு. அப்படீன்னு பேசினாரு. காங்கிரஸ் கட்சியில இருக்கிற மூத்தவர்களே ரொம்ப ஆச்சர்யப்பட்டார்களாம்..."

"சரிப்பா. அதுக்கும் பிரதமர், ராஜபக்சேகிட்ட பேசுனதுக்கும் என்னா தொடர்பு?"- கோபாலு

"இருக்கு. தமிழ்நாட்டுலேயும் நாடாளுமன்ற தேர்தல் வரப்போகுதுல்ல. இங்க ஈழ மக்களுக்கு ஆதரவா பெரிய எழுச்சி கிளம்பியிருக்குன்னு மத்திய உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பினது ஒரு பக்கம். அது மட்டுமில்லே. இந்திரா காந்தி படுகொலை சம்பந்தமா நடந்த கலவரத்துக்கு ராகுல்காந்தி பகிரங்கமா சரணடைஞ்சதை, தமிழ் நாட்டு அரசியல் வாதிங்க பிரச்சார கண்ணோட்டத்துல பார்க்க தொடங்கிட்டாங்க. ஒட்டு மொத்த தமிழக கட்சிகள் ஏழை மக்கள் மீதான போர், குண்டு வீச்சை இலங்கை அரசு நிறுத்தணும். அதுக்கு இந்தியா வலியுறுத்தணும்னு சட்டமன்றத்திலேயும் தீர்மானம் கொண்டு வந்தது. தனித்தனியா வேற போராட்டம் செய்துக்கிட்டு வாராங்க. இந்த நிலையில, இந்திய அரசு மேலும் சும்மா இருந்தா, இலங்கைக்கு ஆயுத உதவி செய்துக்கிட்டிருக்கிற மத்திய காங்கிரஸ் அரசு மேல தமிழர்களுக்கு கடுப்பு அதிகமாயிடும். இத்தனை ஆண்டுக்குப் பிறகும் காங்கிரஸ் அரசு ராஜீவ்காந்தி கொலைய மனசுல வச்சுக்கிட்டு தாய் தமிழனின் குரலை கண்டுக்காம இலங்கைத் தமிழனை பூண்டோட அழிச்சுடலாம்னு எதிரிக்கு உதவி செய்யுது. சீக்கிய சமூகத்துக்கு ஒரு பார்வை, தமிழ் சமூகத்துக்கு ஒரு பார்வைன்னு பெரிசா பிரச்சாரம் கிளப்பிடுவாங்க. அது காங்கிரசுக்கு பெரிய பாதிப்பாயிடும்ங்கிற கவலை. அதனால்தான் பிரதமர் உருப்படியா ஒரு யோசனையை ராஜபக்சேவுக்கு சொல்லியிருக்காரு. அம்மிக்கல்லு இப்பத்தான் நகர ஆரம்பிச்சிருக்குப்பா..." என்று விபரத்தை போட்டுடைத்தார் சுவரு முட்டி.

"அது சரிப்பா. இலங்கையில இப்ப போர் ரொம்ப உக்கிரமா இருக்கே. தெனம் தெனம் ஒரு இடத்தை பிடிச்சுட்டதா அந்த ராணுவம் சொல்லுதே. சமாதானத்துக்கு ஒரு வழியவும் காணலியே..."- அன்வர் பாய்.

"அதான் ராஜபக்சே கணக்கு. புலிகள் மேல உக்கிரமான போரை நடத்தி ஒரு வழியா அவர்களை ஒடுக்கிடணும். அதுக்கு இதுதான் சரியான நேரம். பின்வாங்கிடக் கூடாதுன்னு தினமும் முன்னேறிக்கிட்டு வருது ராணுவம்னு சொல்றாரு. என்ன காரணம்னா, வர்ற டிசம்பர் மாதம் அவரது அமைச்சரவைய கலைச்சுட்டு டிசம்பர் கடைசியிலோ அல்லது ஜனவரியிலோ தேர்தலை நடத்திடலாம்னு ப்ளான் வச்சிருக்காரு. அதுக்கு புலிகளை ஒடுக்கிட்டு நிறைய இடத்தைக் கைப்பற்றிட்டோம்ங்கிற பிரச்சாரம் பெரிய வெற்றி வாய்ப்பை கொடுக்கும்னு நினைக்கிறாரு. அது வரைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சு வார்தைன்னு இழுத்தடிச்சு இந்தியாவுக்கும் அல்வா கொடுத்துடலாம்னு நினைக்கிறாரு"

"அது சரிப்பா. ராஜபக்சேவின் கனவு பலிக்குமா"- கோபாலு.

"கனவு பலிக்குமான்னு புலிகள்கிட்டதான் கேட்கணும். அவிங்க கணக்கு வேற மாதிரியாம். இப்போ அக்கராயன், பூநகரி உள்ளிட்ட சில இடத்தை விட்டு புலிகள் பின்வாங்கியிருக்கிறது நிஜம்தானாம். இதிலேயும் ராணுவத்துக்கு பெரிய இழப்பு இருக்கு. இது சும்மா சண்டை. இன்னும் ஒரிஜினல் சண்டைக்கு நாள் இருக்காம். அதாவது எல்லாத்தையும் முடிச்சுட்டோம். வெற்றி எமக்கே. வாக்காளர்களே ஓட்டு போடுங்கள் அப்படீன்னு ராஜபக்சே பிரச்சாரத்துக்குக் கிளம்புவாரில்லே. அப்போதான் அடி இருக்காம். அந்த நேரத்துல ராணுவத்துக்கு ஏற்படுற இழப்பு, பிடிச்ச இடத்தை விட்டுட்டு ஓடி வர்றதுன்னு எல்லாமும் சேர்ந்து அவரோட ஓட்டு வங்கி பிரச்சாரத்துக்கே வேட்டு வச்சிடும்னு பரபரப்பா ஒரு பேச்சு இருக்கு. என்ன நடக்குதுன்னு பார்ப்போம்" என்றார் அரசியல் விபரமறிந்த சித்தன்.

"சரி. தமிழ்நாட்டு மேட்டருக்கு வாப்பா. அப்படியே இலங்கையிலேயே குந்திக்கிட்டு இருந்தா எப்படீ?"

"வந்துட்டேன்யா...வந்துட்டேன்

..." என்று கிண்டலடித்த சுவரு முட்டி சுந்தரம்...

"இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், அம்மா கட்சியும் வர்ற நாடாளுமன்ற தேர்தல்ல கூட்டணி சேர்ந்துடுதாம். அந்தக் கட்சியோட தேசியத் தலைவர் பரதனே சென்னைக்கு வந்து அம்மாவைப் பார்த்து பேசிட்டு போயிட்டாரு. இதுல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வந்து சேர்ந்துடும்னு எதிர்பார்க்கிறாங்களாம்"

"எதிர்பார்க்கட்டும். நல்லா பார்க்கட்டும். எனக்கு ஒரு சந்தேகம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில செயலாளர் தா. பாண்டியன்தான், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான முதல் முழக்கத்தை, முதல் போராட்டத்தை தொடங்கினாரு. தொடர்ந்து முழக்கம் செய்துக்கிட்டு வாராரு தோழர். ஆனா அந்த அ.தி.மு.க அம்மா, ஈழ மக்கள் ஆதரவு சம்பந்தமா ஒரு போராட்டத்தையும் நடத்தல. எப்படி ரெண்டுபேரும் ஒண்ணா கூட்டணி சேரப் போறாங்களாம்? எலியும், தவக்களையும் முடிச்சு போட்டுக்கிட்டு சுத்துன கதைதான் இது..." என்று எதார்த்தமாகக் கேட்டார் சுவருமுட்டி.

"கரெக்ட்டுத்தான்யா. நீ கேட்ட அதே கேள்வியதான் நான் தோழர்கள்கிட்ட கேட்டேன். அதுக்கு என்னா சொல்றாங்க தெரியுமா..? தமிழ்நாடு சட்டமன்றத்துல எல்லாக் கட்சி எம்.எல்.ஏக்களும் சேர்ந்து ஈழ மக்களுக்கு ஆதரவா போர்நிறுத்தம்னு கொண்டு வந்த தீர்மானத்துக்கு அ.தி.மு.க.வும்தானே ஆதரவு தெரிவிச்சது. எதிர்க்கலையே. அதுதான் எங்களுக்கு மையப்பிடிப்பு. அதுலேர்ந்துதான் கூட்டணியை வளர்த்தெடுத்துக்கிட்டு வரப்போறோம்னு சொல்றாங்கப்பா..." என்றார் சித்தன்.

"ரொம்ப நல்ல கண்டுபிடிப்பு. நீங்க வேணும்னா பாருங்க. அந்தம்மா எம்.பி. தேர்தல்ல இப்படிக் கூட்டணி வெச்சு ஜெயிச்சுட்டு, மெஜாரிட்டியா எம்.பி. பதவிகளை வச்சுகிட்டு கடைசியில பா.ஜ.க.வுக்கு ஆதரவுன்னு போயிடும். அப்போ கூட்டணியில இருந்த வைகோவையே புலி ஆதரவாளர்னு சொல்லி உள்ள தூக்கி வைக்க குரல் கொடுக்கும். அப்படியே தோழர்களையும் தொங்கல்ல விட்டுடுவாங்க. அப்புறம் தோழர்களும் புதுவிளக்கத்தை தேடிப் பிடிச்சு மேடையில தத்துவமா பொழிவாங்க..." என நக்கலடித்தார் சுவருமுட்டி.

"எல்லாம் சரி. கலைஞர் எப்படி காய் நகர்த்தப்போகிறாராம்..? யாரை கூட்டணிக்கு கூப்பிடுவாராம்..?"- அன்வர் பாய்.

"அது பற்றி இப்போதைக்கு முழுசா தெரியாதுப்பா... ஆனா ஒரு விஷயத்தைச் சொல்றேன். இன்னைக்கு கோட்டைக்கு வந்த முதல்வர் பத்திரிக்கையாளர்களை கூப்பிட்டிருக்கார். என்னமோ ஏதோன்னு ஓடியிருக்காங்க. நாளைக்கு எனது அறையில இலங்கைத் தமிழர் பிரச்னை சம்பந்தமா ஒரு அவசரக் கூட்டம். அது ஒவ்வொரு கட்சியின் தலைவரோ இல்ல பொதுச்செயலாளரோ கலந்துக்கிடலாம். அதே மாதிரி அந்தக் கட்சியோட சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவர் ஒருவரும் கலந்துக்கலாம். ஆக ஒரு கட்சி சார்பாக ரெண்டு பேர் கலந்துக்கிடணும். இந்த அவசரக் கூட்டம் பத்தி நானும் டாக்டர் ராமதாசும் பேசித்தான் முடிவெடுத்தோம். கட்சியோட நிறுவனத்தலைவர் என்கிற முறையில் டாக்டர் ராமதாசும் இதுல கலந்துக்கிறார். அதே மாதிரி ம.தி.மு.க.விலேர்ந்து வைகோ வருவதென்றாலும் வரலாம் அப்படீன்னு பொடி வெச்சு பேசியிருக்காரு. இதை மனசுல வெச்சுப் பாருங்க. கூட்டணி எப்படி போகும்னு புரியும்...." என்ற படியே எழுந்தான் சித்தன்.

-சபை களைகட்டும்

ஒட்டுக்கேட்டவர்: பா.ஏகலைவன்

  • கருத்துக்கள உறவுகள்

இவரது தந்தை ராஜீவ் காந்தியிடம் இந்திராவின் படுகொலையின் பின் கொல்லப்பட்ட சீக்கியர்களின் படுகொலைபற்றி கேட்டபோது ( ஆனந்த விகடன்) கூறினாராம் ஒரு பெரிய ஆல மரம் விழுந்தா அதன் அதிர்ச்சியிருக்கத்தான் செய்யும் என்று அந்த படுகொலைகளை நியாயப்படுத்தினார். அப்போது அவர் பாரதத்தின் பிரதமராக இருந்து கொண்டே அந்த கருத்தை தனது குடிமக்களின் ஒரு இனத்தவர் மேல் காட்டியிருந்தார்.

பாட்டி இந்திரா அவர்களின் புனித பொற்கோவிலில் படையெடுத்தவர்.

உண்மையாக அவர்களது குடும்பம் சீக்கிய சமூகத்தின் பேரில் மதிப்பு வைத்திருகிறார்களா?

1988 பின் தேசிய கட்சிகளின் செல்வாக்கு இழப்பின் பின் பிராந்திய கட்சிகளின் உதவியின்றி அரசமைக்க முடியாத நிலமையேற்பட்ட பின்னர் பல சாதகமான மனமாற்றங்கள் நிகழுது.

இது தமிழர் வாழ்விலும் ஏற்பட்டால் நன்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.