Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுக்கு அரசியல் ரீதியான கருத்துக்களை தெரிவிக்க எவ்வித உரிமையுமில்லை:

Featured Replies

இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுக்கு அரசியல் ரீதியான கருத்துக்களை தெரிவிக்க எவ்வித உரிமையுமில்லை:

தேர்தல் ஒன்று நெருங்கும் போது அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு கிளிநொச்சியின் நிழல் தெரிவதாக பாதுகாப்பு கண்காணிப்பு நிலையத்தின் பேச்சாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் தலைவருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கெஹெலிய ரம்புக்வெல்ல கிளிநொச்சிக்குள் படையினர் பிரவேசிக்க உள்ளனர் என கூறியிருந்தமை தொடர்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது அவரின் வழமையான நடவடிக்கை எனவும் கிளிநொச்சி தெரிகிறது என கூறுவது பெந்தோட்டவில் இருந்து காலி தெரிகிறது என கூறுவது போலாகும் எனவும் மங்கள கூறியுள்ளார்.

3 பிரதான வைத்தியசாலைகளில் 1650 படையினர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இவர்களில் பலருக்கு கண் தெரியாது –மங்கள சமரவீர:

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மங்கள இதனை குறிப்பிட்டுள்ளார். யுத்தம் தொடர்பாக கருத்து தெரிவி;த்துள்ள மங்கள சமரவீர, களுபோவில வைத்தியசாலையில் 250 படையினர் சிகிச்சை பெறுவதுடன் இராணுவ வைத்தியசாலையில் 700 படையினர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பேராதனை வைத்தியசாலையிலும் காயமடைந்த இராணுவத்தினர் பலருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

அனுராபுரத்தில் உள்ள விக்டர் என்ற மருத்துமனையில் 700 படையினர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அது மாத்திரமில்லாது இங்கு கொண்டு வரப்பட்டுள்ள படையினரில் பலர் கண்பார்வையை இழந்துள்ளனர். தேவையான முகமூடிகள் இன்றி படையினர் முன்னோக்கி நகர்த்தியமையே இதற்கான காரணம் எனவும் கண்ணிவெடிகளை அகற்றியமையினால் இரண்டு கண்கள் இழக்கப்பட்டுள்ளன எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

கிளைமோர்த் தாக்குதலில் கொல்லத் திட்டம்:

இதேவேளை தன்னை கிளைமோர் தாக்குதலுக்கு இலக்காகி கொலை செய்ய திட்டமிட்டுள்ளமை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இது குறித்து அமெரிக்காவுக்கும் தனது சட்டத்தரணிக்கும் கடிதங்களை வழங்கியுள்ளதாகவும் மங்கள குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுக்கு அரசியல் ரீதியான கருத்துக்களை தெரிவிக்க எவ்வித உரிமையுமில்லை:

இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுக்கு அரசியல் ரீதியான கருத்துக்களை தெரிவிக்க எவ்வித உரிமையுமில்லை என பாதுகாப்பு கண்காணிப்பின் நிலையத்தின் பேச்சாளரும் ஸ்ரீலங்கா சுந்திரக்கட்சியின் மக்கள் பிரிவு தலைவருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஆடைத் தைப்பவர்களுக்கு யுத்தம் குறித்து பேசமுடியுமா என சரத் பொன்சேக்கா கூறியுள்ளார். எனினும் பொன்சேக்கா, அரசியலை விமர்சித்தது, சேறுபூசிய இது முதல் தடவையல்ல, இதற்கு முன்னர் அவர் எதிர்க்கட்சி தலைவருக்கு சேறு பூசினார், எனினும் இராணுவ சட்டத்தின்படி இராணுவத் தளபதி ஒருவருக்கு அரசியல்வாதிகள் குறித்து விமர்சனம் செய்ய முடியாது, அரசியல்வாதிகள் எவ்வாறான விமர்சனங்களை இராணுவத் தளபதி தொடர்பில் முன்வைத்தாலும், அதற்கான விவாதங்களில் கலந்துகொள்ள இராணுவ தளபதிக்கு உரிமையில்லை. இதன் மூலம் தெரியவருவது என்னவெனியில் இந்த இராணுவ தளபதி இலங்கை இராணுவத்திற்கு மாத்திரமல்ல இரட்சணீய சேனைக்கும் தளபதி பதவிக்கும் பொருந்தாதவர் என மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

2004 -2005 காலத்தில் சரத் பொன்சேக்கா தன்னை தேடி சகல இடங்களுக்கு வந்ததாகவும் தன்னிடம் வந்து எப்படியாவது சந்திரிக்கா மேடத்திடம் எடுத்துக்கூறி தன்னை இராணுவ தளபதியாக்குமாறு கோரியதாகவும் இதன் காரணமாக தான் பல தடவைகள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிடம் சரத் பொன்சேக்காவை பரி;ந்துரைத்துள்ளதாகவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எனினும் முன்னாள் சந்திரிக்கா, சரத் பொன்சேக்கா இராணுவ தளபதி பதவிக்கு பொறுத்தமானவர் அல்ல என கூறியதாகவும் சமரவீர கூறியுள்ளார்.

இதேவேளை சரத் பொன்சேக்கா 1970 ஆம் ஆண்டிலேயே இராணுவத்தில் இணைந்துள்ளார். 71 ஆம் ஆண்டிலேயே அவர் அதிகாரியாக மதிக்கப்பட்டதாகவும் அன்று தொடக்கம் 38 வருடங்களாக பல இராணுவத்தளபதிகளின் கீழ் இவர் பணியாற்றியுள்ளார். சரத் பொன்சேக்கா ஒருபோது கூட விஷிட்ட விபூசண விருதை பெற்றுக்கொண்டதில்லை எனவும் மங்கள கூறியுள்ளார்.

அண்மை காலத்தில் வரலாற்றில் இடம்பிடித்து கொண்ட சரத் பொன்சேக்கா தான் இராணுவ தளபதியாக இருக்கும் போதே விஷிட்ட விபூசண விருதை பெற்றுக்கொண்டவராக மாறியுள்ளதாகவும் பாதுகாப்பு கண்காணிப்பு நிலையத்தின் பேச்சாளர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை 1975 ஆம் ஆண்டு சிரில் ரணதுங்க இராணுவ தளபதியாக இருந்த போது ஒழுக்கத்தை மீறியதாக சரத் பொன்சேக்க தண்டனையையும் பெற்றுள்ளார். இந்த விடயங்கள் பொய்யானவை எனில் சரத் பொன்சேக்காவை இவற்றை பகிரங்கமாக மறுதலிக்குமாறு தான் சவால் விடுவிவதாகவும் இவற்றை தாம் மிகவும் பொறுப்புடனேயே கூறுவதாகவும் மங்கள குறிப்பிட்டுள்ளார்.

2004-2005 காலப் பகுதியில் நானிருக்கும் இடத்திற்கெல்லாம் வந்து ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவிடம் கூறி தனக்கு இராணுவத் தளபதி பதவியைப் பெற்றுத் தருமாறு என்னிடம் கேடடுக் கெஞ்சியது

சரத் பொன்சேகாவுக்கு இப்போது ஞாபகமிருக்காதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தெரிவித்தார்.

இன்று (27) கொழும்பில் இடம்பெற்ற பாதுகாப்பு கண்காணிப்புத் தொடர்பான ஊடகவியலாளர் மகாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார். உடை தைப்பவனுக்கு யுத்தகளம் பற்றி என்ன தெரியுமென இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக் குறித்து ஊடகவியலாளரொருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு பதிலளித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், உலகத்திலுள்ள எந்த இராணுவத் தளபதியும் அரசியல் செய்வதில்லை. அரசியல்வாதிகளுக்குச் சேறு பூசுவதுமில்லை. ஆனால் இந்த இராணுவத் தளபதியோ செய்திப் பத்திரிகைகள் மூலம் எதிர்க்கட்சித் தலைவருக்கு சேறு பூசுகிறார். இராணுவத்தைச் சேர்ந்த எவரும் அரசியல் பேசவோ அரசியலில் ஈடுபடவோ கூடாதென்ற நியதி இருந்தும் இவர் அனைத்தையும் மீறியே செயற்படுகிறாரெனவும் அவர் தொவித்தார்.

http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=111

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் நாடு நாடாக திரிந்து தமிழீழ வி.புலிகளை தடை செய்ய படாத பாடு பட்டவர் இந்த மங்கள சமரவீர. இவரை தமிழ் மக்கள் மறக்க தயாரில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.