Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"இலங்கை குறித்த வெளியுறவுக் கொள்கையை இந்தியா வகுக்க வேண்டும்'

Featured Replies

நவ. 30: இலங்கை குறித்த வெளியுறவுக் கொள்கையை இந்தியா வகுக்க வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலர் சி. மகேந்திரன்.

திருச்சியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "இலங்கைப் பிரச்னை- சிக்கலும் தீர்வும்' என்ற சிறப்புக் கருத்தரங்கில் அவர் மேலும் பேசியது:

""இலங்கையில் சிங்களர்கள் தோன்றுவதற்கு முன்பாகவே அங்கு தமிழர்கள் இருந்திருக்கிறார்கள் என்ற உண்மையை, சிங்கள ஆய்வாளர்களே தெரிவித்துள்ளனர்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வசித்துவரும் தமிழர்களை, அங்கே இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதுகிறார்களே? என்பதுதான் கேள்வி.

ஆயுதம் தாங்கியப் போராட்டம் ஏதோ உடனே வந்ததல்ல. தமிழ் மக்களின் 60 ஆண்டு காலப் போராட்டத்தில் முதல் 35 ஆண்டுக் காலம் அவர்கள் ஆயுதத்தைத் தூக்கவில்லை.

ஈழத்தின் காந்தி என்றழைக்கப்பட்ட தந்தை செல்வா, அறவழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோதுதானே துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். அதன்பிறகுதான் ஆயுதப் போராட்டம் தொடங்கியது.

பல நாடுகளில் நடைபெற்ற விடுதலைக்கான போராட்டம் பல ஆண்டுகளில் படிப்பினைகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

ஒரு காலத்தில் பிரபாகரனால் தாக்கப்பட்டவர்கள் என்று கூறப்பட்டவர்களும் சேர்ந்துதான் இப்போது தமிழ் எம்பிக்கள் 25 பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறார்கள். 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு போராளிகள் குழுவின் தலைமைப் பொறுப்பை வகித்த பிரபாகரன் பல அனுபவங்களை இப்போது பெற்றிருக்க மாட்டாரா?

ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்கிறார்கள். அதற்கும் புலிகள் தயாரானார்கள். ஆனால், இலங்கை அரசு ஏற்கவில்லையே.

மும்பையில் நடைபெற்றது பயங்கரவாதமா? இலங்கையில் தமிழர்கள் நடத்திவருவது பயங்கரவாதமா?

கொழும்புவில், திரிகோணமலையில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள்; தமிழ்ப் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்; கடத்தப்படுகிறார்கள். எதாவது செய்து ஓர் இனத்தையே அடக்கும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபடுகிறது.

முதலில் இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும். அதன்பிறகு தமிழர்களுக்கான உரிமை குறித்து இலங்கை அரசு முன்மொழிவுகளை அறிவிக்க வேண்டும். அதைக்கொண்டு பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்.

இலங்கை அரசு தொடர்பான வெளியுறவுக் கொள்கைகளை இந்தியா வகுக்க வேண்டும்'' என்றார் மகேந்திரன்.

கருத்தரங்கில் எழுத்தாளர் ஓவியா, கலை இலக்கியப் பெருமன்ற மாநிலப் பொதுச் செயலர் கவிஞர் ரவீந்திரபாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம். செல்வராஜ், மாவட்டச் செயலர் த. இந்திரஜித் ஆகியோர் பேசினர்.

பெருமன்றத்தின் மாவட்டத் தலைவர் மு. கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட சிறப்புத் தலைவர் வீ.ந. சோமசுந்தரம், மணப்பாறை கிளைச் செயலர் த. தங்கமணி, திருவெறும்பூர் கிளைச் செயலர் சூரியகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்டச் செயலர் இ. முத்து வரவேற்றார். மாநகரச் செயலர் ச. துரைசாமி நன்றி கூறினார்.

www.dinamani.com

உண்மைகள் மொட்டு விக்கும் காலமா இது... ?

தாமதமா இருந்தாலும் வரவேற்க்கப்படவேண்டிய கருத்துக்கள் இவைகள்.

Edited by Sooravali

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.