Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர் தொடர்பான கவலையைத் தெரிவித்தோம், ஆறுதல் அளித்தார் பிரதமர்: கனிமொழி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் பிரச்சினை சம்பந்தமாக இன்று தமிழக அனைத்துக் கட்சி எம்.பிக்கள் பிரதமரை நேரில் சந்தித்து இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என எமது கவலையை வெளியிட்டோம். இதனையடுத்து பிரதமர் இது சம்பந்தமாக இலங்கை அரசை நிச்சயம் வலியுறுத்துவதாக ஆறுதல் அளித்தார் என கவிஞர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பு தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் டி.ஆர் பாலு தலைமையில் தமிழகத்தை சேர்ந்த 34 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

கவிஞர் கனிமொழி, கே.வி.தங்கபாலு உட்பட திமுக, காங்கிரஸ், பாமக மக்களவை உறுப்பினர்கள் பிரதமர் சந்திப்பில் பங்கேற்றனர். பிரதமரை சந்தித்து விட்டு வெளியே வந்த கனிமொழியிடம் அச்சந்திப்பு பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர்,

இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டி வலியுறுத்தினோம். அத்துடன் இலங்கையில் நடக்கும் போரினால் அப்பாவி தமிழர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்காக தமிழக அரசின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் நிவராண உதவிகள் கூட முறையாக சென்றடையவில்லை என்ற கவலையை தெரிவித்தோம்.

எங்கள் கவலையை புரிந்து கொண்ட இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், மனு கொடுத்த எம்பிக்களிடம்,

இலங்கையில் நடக்கும் போரினால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது கண்டிக்கத்தக்கது. இது பற்றி இலங்கை அரசிடம் நிச்சயம் பேசுவேன். போர் நிறுத்தம் வேண்டும் என்று வலியுறுத்துவேன்’ என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், ஈழத் தமிழர்களுக்கு தமிழகம் அனுப்பியிருக்கும் நிவாரணம் முறையாக அம்மக்களை சென்றடைய இலங்கை அரசை வலியுறுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இது எமக்கு ஆறுதலை அளித்திருக்கிறது.என்று பதில் அளித்தார்

http://www.tamilwin.com/view.php?20IWnz20e...d42oQH3b02PLS3e

வலியுறுத்தலும் ஆறுதலும் பிரச்சனையையும் வேதனையையும் தீர்க்காதையா....

எடுக்கப்படவேண்டியது நடவடிக்கைதான்.....

சரியாக சொன்னீர்கள் சூறவாளி... கவலைப்படுதல் கலங்குதல், தள, தளத்த குரலில் தொலைபேசியில் பேசுதல் எல்லாம் முற்காலத்திற்கு பொருந்தும்..ஒரு உண்மையான மனிதவுரிமைகளை மதிக்கும் நாட்டிற்கு பொருந்தும்,அவசரமில்லாமல் கவலைப்பட்டு பேசி நடவடிக்கை எடுக்கலாம்...

தெரிந்து தவறு செய்யும் கிட்லரை விடமான மேசமான நாட்டுக்கு, சிறு பாண்மை தமிழ்மக்களை கொலைக்களத்தில் நிறுத்தி எந்த நேரத்திலும் மிகப்பெரிய உயிர்கொலைகள்செய்து கொண்டு செய்ய காத்திருக்கிற நாட்டிற்கு மிகவும் சாதுவான முறையில் பேசி, கண்டித்து காலத்தை இழுத்தடித்து முழு தமிழரையும் சிங்களத்தின் இனவெறிக்கு இரையாக்காமல்

முதலில் எச்சரிக்கை... இந்திராகாந்தி அம்மையாரின் பாணியில் நடவடிக்கைகளே இலங்கையை வழிக்குகொண்டுவரும்... துஸ்டர்களை எப்படி கையாள வேண்டுமோ அதே போன்று தான் இதற்கும்.. அதனை விட்டு ஆயுதங்கள் ஒரு புறம், பாதுகாப்பு அதிகாரிகள் கோத்தபாயவுடன் இரகசிய ச்ந்திப்பு ஒரு புறம், கவலை தெரிவிப்பது ஒரு புறம்?

இப்போதும் காலம் போகவில்லை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.