Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தமிழர்களைக்காப்பாற்ற பிரணாப் முகர்ஜியை அனுப்பவதாக சொல்லிக்கொண்டு கிளிநொச்சியை பிடிக்க இராணுவ தளபதியை அனுப்பியது ஏன்? - பால்.பிரபாகரன்

Featured Replies

ஈழத்தமிழர்களைக்காப்பாற்ற பிரணாப் முகர்ஜியை அனுப்பவதாக சொல்லிக்கொண்டு கிளிநொச்சியை பிடிக்க இராணுவ தளபதியை அனுப்பியது ஏன்? - பால்.பிரபாகரன்

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கொடுத்ததற்காக பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் தா.செ.மணி மற்றும் திரைப்பட இயக்குநர் சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடி 1 ஆம் நுழைவாயில் காந்தி சிலை முன்பாக இன்று(19.12.2008) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழக தூத்துக்குடி மாநகர தலைவர் கோ.அ.குமார் தலைமையேற்றார். ஆதித்தமிழர் பேரவை இரா.வே.மனோகர் ஆர்ப்பாட்டதினை தொடங்கிவைத்து தனது கண்டனத்தினை பதிவு செய்தார். தொடர்ந்து பெரியார் தி.க.வின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு தனது கண்டன உரையினை சிறப்பாக பதிவு செய்தார். அவரைத்தொடர்ந்து புரட்சிகர இளைஞர் முன்னணி இரா.தமிழரசன், தலித்திய சமூக நீதி உரிமைப் பேரவை தவராசு பாண்டியன் , மக்கள் குடியுரிமை ஜனநாயகம் செ.பிரபாகர், மனித உரிமைப்பாதுகாப்பு மய்யம் வழக்கறிஞர் சுப.இராமச்சந்திரன் ஆகியோர் தங்களது கண்டன உரையினை சிறப்பாக பதிவு செய்தார்.

தொடர்ந்து பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமைக்கழக உறுப்பினர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் ஆர்ப்பாட்டத்தின் விளக்கவுரையாற்றினார். அவர் உரையாற்றும் பொழுது காங்கிரசு கட்சியின் வரலாற்றினையும் காங்கிரசு கட்சியானது ஆங்கிலேய பெண்மணி ஒருவரால் ஆங்கிலேய அரசால் உருவாக்கப்பட்டது என்பதை தெளிவுபட கூறியும் காங்கிரசு கட்சியின் போலி தேசப்பற்றினையும் தமிழின விரோதப்போக்கையும், ஈழத்தில் அமைதி திரும்ப பிரணாப் முகர்ஜியினை விரைவில் அனுப்புவோம் என்று கூறிக்கொண்டு ஈழத்தில் தமிழர்களை அழிக்க சிங்கள இராணுவத்திற்கு ஆலோசனை சொல்ல இந்திய இராணுவ உயரதிகாரிகளை உடனடியாக சிறீலங்காவிற்கு அனுப்பியதைக் கண்டித்தும் காங்கிரசை திருப்திப்படுத்த தமிழின உணர்வாளர்களை கைது செய்யும் தமிழக முதல்வர் மு.கருணாநிதியைக் கண்டித்தும் தெளிவுபட தனது கண்டன உரையினை சிறப்பாக பதிவு செய்தார்.

தொடர்ந்து நிறைவுரையாக மக்கள் உரிமைக்குழு வழக்கறிஞர் அதிசயக்குமார் காங்கிரஸ் கட்சி மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியோரைக்கண்டித்து வழக்கறிஞர்களாகிய எங்களுக்கே கருத்து சொல்ல உரிமை உண்டா என்று கேள்வி எழுப்பி தனது கண்டன உரையினை சிறப்பாக பதிவு செய்தார். இறுதியாக பெரியார் திராவிடர் கழக மாநகர துணைத் தலைவர் சா.த.பிரபாகரன் நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்வில் பெரியார் தி.க தலைமைக்கழக உறுப்பினர் நெல்லை சி.ஆ.காசிராசன் , தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் வே.பால்ராசு, மாவட்ட துணைச்செயலாளர் க.மதன் , மாநகர செயலாளர் பால்.அறிவழகன் , தமிழ்நாடு மாணவர் கழக வ.அகரன் பெரியார் தி.க. கள் ச.கா. பாலசுப்பிரமணியன் , அறிவுபித்தன் , சோசப் , நெல்லை இராசா, நெல்லை ஆறுமுகம் மற்றும் தலித்திய சமூக நீதி உரிமைப்பேரவை , புரட்சிகர இளைஞர் முன்னணி , ஆதித்தமிழர் பேரவை மற்றும் வழக்கறிஞர்களும் திரளாக கலந்துகொண்டனர்.

http://www.tamilwin.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர்களைக்காப்பாற்ற பிரணாப் முகர்ஜியை அனுப்பவதாக சொல்லிக்கொண்டு கிளிநொச்சியை பிடிக்க இராணுவ தளபதியை அனுப்பியது ஏன்?

பாக்கிஸ்தான்காரன் அப்பப்ப இந்தியாவுக்கு கண்ணுக்கை விரலை விட்டு ஆட்டுறான் பாருங்கோ

அங்கையங்கை றோட்டாலை போறவன்வாறவனை குருவி சுடுறமாதிரி டெல்லி பம்பாயிலை சுட்டுத்தள்ளுறான்.

இந்தியாவின்ரை பாராளமன்றத்திலையே கைவைக்கிற அளவுக்கு அவன் அட்டகாசம் பண்ணுறான்.

ஏலுமெண்டால் மேலாலை போய் இரண்டு குண்டை போட்டு தாக்க வேண்டியது தானே.அதுவும் அமெரிக்கா லிபியாவுக்கு செய்தது மாதிரி. எல்லாம் ஒரு பயந்தான் :D

இவ்வளவு நடந்தும் பாக்கியளோடை கிரிக்கெற் விளையாடிக்கொண்டிருக்குது இந்தியா :)

இப்போதைய நிலைமையிலை தானும் ஒரு வல்லரசு நிலைமையிலை இருக்கிறன் எண்டதை வெளிச்சம் போட்டு காட்ட கிடைச்ச ஓட்டை ஈழத்தமிழர் பிரச்சனைதான் :D

ஈழத்தமிழர்களைக்காப்பாற்ற பிரணாப் முகர்ஜியை அனுப்பவதாக சொல்லிக்கொண்டு கிளிநொச்சியை பிடிக்க இராணுவ தளபதியை அனுப்பியது ஏன்? - பால்.பிரபாகரன்

அது தான் இந்தியா.

பாகிஸ்தான் கூட எல்லாம் மோதி மூக்கு உடைவதை விட புலிகளுடன் மோதி வெற்றி பெறலாம் என்று எதிர்பார்ப்பது அவர்களின் தாகுதிக்கு இப்ப சரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.