Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிணங்களைப் புணர்ந்த சிறிலங்கா இனவெறி இராணுவத்தின் போர்க் குற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர் நடைபெறும் களங்களில் போரியல் ஒழுங்கு முறைமைகள் எனப் பலநடைமுறைகளைப் போரில் ஈடுபடும் நாடுகள் மேற்கொள்வது நடைமுறை. சிறிலங்காவில் தமிழ் மக்கள் மீது இனவெறிப்போரை பல ஆண்டுகளாக நடத்திவரும் சிறிலங்கா இராணுவம் போர் நடைமுறைகள் பலவற்றையும் பல்வேறு சந்தர்பங்களிலும் மீறியுள்ளமை ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

சர்வதேசங்களில் தடைசெய்யப்பட்ட எரிகுண்டுகள், கொத்தணிக்குண்டுகள், அமுக்கவெடிகள், மிதிவெடிகள் என தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைப் பாவித்து யுத்த மரபுகளை மீறியுள்ளது சிறிலங்கா இராணுவம். போரில் மரணமடையும் போராளிகளை அவமரியாதை செய்வதிலும் அது தனது வக்ரபுத்தியைக் காட்டியது. அநுராதபுரத்தில் தாக்குதல் நிகழ்த்திய கரும்புலிப்போராளிகளின் உடல்களை நிர்வாணமாக்கிக் பொது மக்களுக்கு காட்சிப்படுத்தியது. இத்தகைய காட்சிப்படுத்தல்கள் மூலம் போராளிகளின் மனஉறுதியினைக் குன்றச் செய்யவதும், தமிழ்மக்களைப் பயங்கொள்ளச் செய்வதும் இராணுவத்தின் பிரதான உத்தியாக இருந்தது.

இந்த இராணுவத்தின் வக்கிர உச்சமாக, போரில் களப்பலியான பெண் போராளிகளை நிர்வாணப்படுத்திப் பாலியல் வக்கிரம் செய்த பின் அதை காட்சிப்பதிவு செய்து மகிழ்ந்திருக்கும் அதிர்ச்சித் தகவல் தெரியவந்திருக்கிறது. எமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரு வீடியோப் பதிவில் மனதை அதிரவைக்கும் அந்தக் கொடூரம் பதிவாகியிருப்பதைக் கண்டு அதிர்ந்து போனோம். பெண் போராளிகளை அவமரியாதை செய்யும் வகையில் அமைந்திருந்த அந்தக் காட்சிப்பதிவினை வெளியிட எமது மனச்சாட்சி இடந்தரவில்லை. ஆயினும் இந்தப் போரியற் குற்றத்தை உலகின் கண்களுக்கு வெளிக்கொணர வேண்டிய ஊடக தார்மீக அவசியம் கருதி அக்காட்சிப் படிமத்தில் சில படங்களைத் தணிக்கை செய்து வெளியிடுகின்றோம்.

இதனைக் கண்ணுற்ற பின், இப்போர்க்குற்றத்திற்காக சிறிலங்கா ஜனாதிபதி, இராணுவத் தளபதி, ஆகியோர் என்ன சொல்லப்போகின்றார்கள்?

இவர்களைச் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்போவது யார்?

அரசுசார்ந்து நின்று, ஜனநாயகம் பேசும் தமிழ் தலைமைகள் இதற்கு என்ன செய்வார்கள்?

இலங்கையின் ஒற்றையாட்சிக்குள் தமிழர்களை இணைந்து வாழுங்கள் என வலியுறுத்துபவர்களே! முதலில் இந்த அநீதிக்கு நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்?

வீடியோக் காட்சியில் சிங்கள மொழியில் பேசப்படும் வசனங்களின் தணிக்கை செய்யப்பட்ட தமிழாக்கம்..

.............கரும்புலிகளை..............

முகத்தைக் காட்டு....ஹெல்மெட்டை கழட்டு

எங்கே ஜெயலத் .........காட்டு இவைகளையும் காட்டு

வீடியோவில் எடு உடைகளைக் கழட்டு

மற்றவர்களையும் கூப்பிடு.......

சிங்கமும் குவேனியும் புணர்ந்து பிறந்த நரமாமிசப் பட்சினிகளான இந்த இனம் இவளவு கீழ்த்தரமானது என்பதை, இவர்களுக்கு வால் பிடிக்கும் தேசங்கள் இனியாவது புரிந்து கொள்வார்களா? அல்லது தமக்கும் பங்கென்று இன்னும் தொடர்வார்களா? தமிழா தமிழா இந்தத் தருக்கரை மட்டுமல்ல , இந்தத் தற்குறி அரசுக்குத் துணை போகும் அனைத்த நாட்டு அரசுத் தலைவர்களுக்கும் இது கிடைக்க ஆவண செய்ய எமது இளையோர் படையே இறங்க வேண்டும். அனைத்துத் தமிழ்ப் பெண்கள் அமைப்புக்களும் இதனை ஒவ்வொருவரும் வாழும் நாடுகளில் உள்ள மகளிர் விவகார அமைச்சுக்கு, ஊடக நிறுவனங்களுக்கு, தூதுவராலயங்களுக்கு, (குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, போன்ற சிறீலங்காவுக்கு அனுசரணை வழங்கும் நாடுகளின்) ஆர்ப்பாட்டப் பேரணியாகச் சென்று கொடுக்க வேண்டும். அத்தோடு நகர மட்டத்திலான சங்கங்கள், அமைப்புக்கள் என்பனவற்றுக்கும் வழங்கி இவர்களின் கோர முகத்தை வெளிக்கொணர்வோம்.

  • Replies 78
  • Views 14k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மோதல்களின் போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் உறுப்பினர் ஒருவரை இழிவுபடுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள காணொளி தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என அரசாங்கப் பாதுகாப்பு பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான மற்ற வகையில் புலிகளின் பெண் உறுப்பினர் ஒருவரை உடல் இழிவுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான ஒரு சில சம்பவங்கள் இடம்பெறும் என்பதை முற்றாக மறுக்க முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுமார் ஐந்து லட்சம் பேரைக் கொண்ட பாதுகாப்புத் தரப்பில் இவ்வாறான ஓர் சம்பவம் இடம்பெறுகின்றமை வியக்கத் தக்கதொன்றல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

சில வேளைகளில் இவ்வாறான போலிப் பிரச்சாரங்களை தமிழீழ விடுதலைப் புலிகளும் மேற்கொண்டிருக்கக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக மக்களின் ஆதரவை திரட்டும் நோக்கில் இவ்வாறான காணொளிகள் வெளியிடப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், குறித்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த பின்நிற்காதென அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் குறிப்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பைவிட இராணுவ நீதிமன்றம் இந்த சம்பவம் குறித்து முனைப்புடன் செயற்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

யுத்தத்தில் கொல்லப்பட்ட பெண் போராளி ஒருவரை நிர்வாணப்படுத்தி மிகவும் மோசமான வகையில் நடத்தப்பட்டுள்ளதாக ஆசிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்த சம்பவத்தை மேற்கொண்டவர்கள் பிரயோகிக்கும் மொழி மற்றும் அவர்களது சீருடைகள் என்பவற்றை கவனிக்கும் போது இதனை யார் செய்திருக்கக் கூடும் என யூகிப்பதில் சிக்கல் இல்லை என கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

www.tamilwin.com

Edited by kuddipaiyan26

இராணுவத்தால் எடுக்கப்பட்ட காணொளி எப்படி வெளியாயிற்று. ? பிரசாரங்களுக்காக இப்படிப்பட்ட செயலை உருவாக்க முடியுமா ? பிரச்சனையை திசை திருப்ப முனைகிறார் றம்புக்வெல. அத மட்டுமல்ல, ஒரு போர்க் கற்றத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அவரது கூற்று அமைந்துள்ளது.

எனது ஈமெயில் தொடர்புகொள்ளுங்கள். உங்களிற்கு அனுப்பி வைக்கின்றேன்

nparaneetharan@gmail.com

நட்புடன் பரணீதரன்

Edited by Paranee

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.