Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள நிலவரம்-ஆயிரக்கணக்கில் சிங்களர் சாவு புலிகளின் கடும் எதிர் தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கள நிலவரம்

ஆயிரக்கணக்கில் சிங்களர் சாவு

புலிகளின் கடும் எதிர் தாக்குதல்

வன்னிப் பகுதியில் ஒன்பது படை யணிகளை சிங்கள இராணுவம் குவித்துள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்தும் ஒரு படையணி வன்னியை நோக்கி அனுப்பப்பட்டுள்ளது. வன்னிப் பகுதியைச் சுற்றிவளைத்து மக்களை வாழ்விடங்களிலிருந்து விரட்டியடித்து இறுதியாக கிளிநொச்சியைக் கைப்பற்று வதே சிங்கள இராணுவத்தின் நோக்க மாகும். அதாவது எங்கும் அசைய முடியாத நிலையை புலிகளுக்கு ஏற்படுத்தி சுற்றிவளைத்து அழிப்பதே அவர்களின் திட்டமாகும். அதைப் போல கிழக்குக் கடற்பகுதியை மூடிவிடவும் அது முயல்கிறது. நீண்ட கிழக்குக் கடல் பகுதி கடற்புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே அவர்களால் ஒருபோதும் தங்கள் திட்டத்தில் வெற்றிபெற முடியாது.

17-12-2008

கிளிநொச்சியை நோக்கி முன்னேற முயன்ற சிங்களப் படை மீது விடுதலைப்புலிகள் எதிர்த்தாக்குதல் நடத்தி பின்வாங்கி ஓடச் செய்துள்ளனர். இந்தச் சண்டையில் 130க்கும் மேற்பட்ட சிங்கள இராணுவ வீரர்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள். 300க்கும் மேற்பட்ட வர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள். எஞ்சியவர்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அதைப் போல கிலாளி பகுதியிலும் நடைபெற்ற போரில் 40 சிங்கள வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 120க்கு மேற் பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். போரில் இறந்த சிங்கள வீரர்கள் 28 பேர்களின் சடலங்களை புலிகள் கைப்பற்றியுள்ளனர்.

22-12-08 திங்கள்

போர்க் களத்தில் மாண்ட சிங்கள வீரர்களின் சடலங்கள் சிதறிக்கிடக் கின்றன. எஞ்சியவர்கள் பின்வாங்கி ஓடிவிட்டனர். அந்தப் பகுதி பூராவும் புலிகள் சோதனை நடத்தி ஏராளமான ஆயுதங்களையும் வெடிப்பொருட் களையும் கைப்பற்றியுள்ளனர். இந்த விவரங்களை புலிகளின் சமாதான செயலக இயக்குனர் புலித்தேவன் தெரிவித்துள்ளார்.

அப்போது திடுக்கிடும் உண்மை ஒன்று வெளியானது. போரில் கொல்லப் பட்டவர்களில் பலர் வயதில் சிறியவர் களாக உள்ளனர். வயது முதிராத சிறுவர்களையும் சிங்கள இராணுவம் கட்டாயப்படுத்தி படையணியில் சேர்த் துள்ளது இதன் மூலம் அம்பலமாகி யுள்ளது. இவர்களின் உடல்கள் செஞ்சி லுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன.

வன்னியில் மாங்குளம் பகுதியிலும் குடாநாட்டில் முகமாலைப் பகுதியிலும் நடைபெற்ற மோதலில் சிங்கள வீரர்கள் 100க் கணக்கில் இறந்துள்ளனர். யாழ்குடா நாட்டிற்கான தரைவழிப்பாதையை திறப்பதற்கு சிங்கள இராணுவம் 3 நாட்களாக செய்த கடும் முயற்சிகளை புலிகள் முறியடித்துள்ளனர். இந்த 3 நாள் போரில் 140க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் 450க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந் துள்ளனர்.

விடுதலைப்புலிகளின் கண்ணி வெடிகளில் சிக்கி 100க்கும் மேற்பட்ட சிங்களவீரர்கள் உயிரிழந்தும் படுகாய மடைந்தும் உள்ளனர். கொழும்பு தேசிய மருத்துவமனையில் மட்டும் 1000த்திற்கும் மேற்பட்ட சிங்கள வீரர்கள் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இராணுவ ஆய்வாளர் கருத்து

சண்டே டைம்ஸ் பத்திரிகையின் இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் பி.பி.சி. வானொலிக்குத் தெரிவித்துள்ள கருத்து பின்வருமாறு:

விடுதலைப் புலிகளை குறைத்து மதிப்பிட்டு சிங்கள இராணுவத் தளபதிகள் தவறு செய்துவிட்டார்கள். புலிகள் இராணுவ பலத்தை அறவே இழந்துவிட்டார்கள் என்று கூறுவது முற்றிலும் தவறானது. புலிகள் எதிர்த்தாக்குதலில் ஈடுபடாமல் இருந்தது தந்திரோபாயம் ஆகும். இதை உணராமல் முன்னேறிய சிங்கள இராணுவம் சுற்றி வளைக்கப்பட்டு பெரும் இழப்புகளுக்கு ஆளாகியுள்ளது.

சிங்கள இராணுவத்தின் இந்தச் சதிவலையை விடுதலைப் புலிகள் அறுத் தெறிந்துள்ளனர். உத்தராபுரம் பகுதியிலிருந்து கிளிநொச்சி மற்றும் இரணமடு ஆகியவற்றை நோக்கி நகர்ந்த சிங்களர் படையணியை விடுதலைப் புலிகள் வழிமறித்து தாக்கினர். இந்தப் போரில் சிங்கள இராணுவத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். 250க்கு மேற்பட்டவர்கள் படு காயமடைந்தனர்.

தென் செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.