Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை விஜயம் குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை – பிரணாப் முகர்ஜீ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை விஜயம் குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை – பிரணாப் முகர்ஜீ இந்திய ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

[ சனிக்கிழமை, 03 சனவரி 2009, 06:28.08 AM GMT +05:30 ]

இலங்கைக்கான விஜயம் குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜீ தெரிவித்துள்ளார்.

இலங்கை விஜயத்திற்காக இதுவரையில் நாட்கள் எதனையும் ஒதுக்கவில்லை என இந்திய ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

தமிழக அரசியல் கட்சிகள் இலங்கையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டுமென மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து வரும் போதும் இதுவரையில் இவ்வாறானதோர் தீர்மானம் குறித்து மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் இலங்கையில் அரசியல் தீர்வு நோக்கிய முனைப்பு மிகவும் மெதுவாக இடம்பெற்று வருகின்றமை கவலையளிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளாத போதிலும் வடக்கு கிழக்கு மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் நிவாரணங்கள் தொடர்ச்சியாக வழங்கப்படும் என முகர்ஜீ தெரிவித்துள்ளார்.

நன்றி - தமிழ்வின்

கிளிநொச்சி ஆக்கரமிப்போடு, இந்தியாவின் இராஜதந்திர உள் நகர்வு இடம்பெறும் என்று(ஏலவே இந்திய இராணுவம் உள்ளது) எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிறீலங்கா ஏற்றுக் கொள்ளவில்லையோ அல்லது தமிழினம் அழிந்த பின் தமது ஏவலாளர்கள் ஊடாக தமிழினத்தை ஆளத் திட்டமோ தெரியவில்லை. ஆனால் ஒரு விடயம் இந்தியா தனது தலையில் சிங்களத்தால் குட்டு வேண்டும் காலம் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகா முல்லைத்தீவைப் பிடித்துக் கொடியேற்றிய பின்னர் மகிந்த ஊடாக அனுமதி கொடுப்பார். அதுவரை முகர்ஜி காத்திருக்கவேண்டியதுதான்..

எம்மக்கள் சாவில் பிரணாப் முகர்ஜியும் அவர் அரசும் வாழும் என்று இந்தியாவின் ஆட்சியாளர்கள் நினைத்தால் அது தப்புக்கணக்கு என்பது அவர்கள் புரியும் காலம் வெகுதூரத்தில் இல்லை அத்தோடு புலிகள் பேச்சு வார்த்தைக்கு பலம் இழந்து சென்றது சரித்திரம் இல்லை எனவே முகர்ஜியாரே உம்முடைய பிரயாணத்தை இன்னும் தீர்மாணிக்காமல் 11 மாதங்கள் பிந்தி போட்டால் தமிழினம் நிமிர்ந்து நிக்கும் அதையாவது செய்யும் ஆனால் புலிகள் திருப்பி தாக்கும் போது தயவு செய்து இடையில்வந்து எம்மினத்தின் தலைமையிடம் மண்டியிட வேண்டாம். !!!!!!!!!!!!!!!!!!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.