Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"உயில்" - சிறுகதை - ஆக்கம்- ஆதவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"உயில்" - சிறுகதை - ஆக்கம்- ஆதவி

22/12/2008

--------------------------------------------------------------------------------

என்னடா.... ஊருக்குப் போறதாச் சொல்லீட்டு, வேலைக்கு வந்து நிக்கிறாய்? என்ன நடந்தது?' - வசந்தன்தான் ஆதங்கத்துடன் கேட்டான். 'என்னத்தையடா சொல்றது..?அப்பா இப்படிச் செய்வாரெண்டு கனவிலையும் நான் நினைக்கேல்லையடா... இந்தா....இதை வாசி; விளங்கும்......' என்றபடி, நேற்றைய தினம் பதிவுத் தபாலில் வந்திருந்த மடலினை அவனிடம் கொடுத்து விட்டு நான் அப்பால் நகர்ந்தேன். குளிர் காற்று வேகமாக வீசிக் கொண்டிருந்தது. அதை விட வேகமாக என் மனதில் நினைவுப்புயல் அடித்துக் கொண்டிருந்தது. வேலை தொடங்க இன்னும் பத்து நிமிடங்களே இருந்தன. சரியாக இதே நேரத்துக்கு இன்று வானில பறந்து கொண்டிருந்திருப்பன்........அந்தக

் கடிதம் மட்டும் உரிய நேரத்தில என்னுடைய கைக்கு எட்டி இருந்திராவிட்டால்.

இரண்டு மாதம் முதல் அக்கா அறிவிச்சவ அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை, சரியான சளி, மாறுதுமில்லை, மருந்தும் எடுக்கிறார் இல்லை என்று. அப்பவே நான் தீர்மானிச்சிட்டன்..........இந்த மாதம், இரண்டு கிழமையாவது ஊருக்குப் போய் நின்று தேவையான மருத்துவ சிகிச்சைகளுக்கு ஒழுங்கு செய்து பரிசோதனைகளையும் முடித்து விட்டு, தேவைப் பட்டால் நாலு கிழமையாவது நின்று விட்டு வாறதெண்டு.

நான்தான் எங்களுடைய வீட்டில கடைசிப் பிள்ளை. என்னைப் பெத்த வீட்டுக்குள்ளேயே அம்மா அதிக குருதிப் பெருக்கால எங்கள் எல்லோரையும் தவிக்க விட்டுவிட்டுப் போய்விட்டா. எனக்கு மூன்று அக்காமாரும் இரண்டு அண்ணமாரும் இருக்கினம். எல்லோரும் திருமணமாகி குழந்தையும் குடித்தனமுமாக வெளிநாடுகளில் வசதியாக இருக்க, எனக்கு நேரே மூத்த அக்கா தான் அப்பாவோட எங்களுடைய பரம்பரை வீட்டில இருக்கிறா. அவவுக்கும் எனக்கும் சரியாப் பத்து வயது வித்தியாசம்; இருந்தாலும், அவவுக்கு என்னில நல்ல பாசம். ஒரு பெரிய காணிக்குள்ளே மூன்று அறையுள்ள சின்ன-அடக்கமான வீடு எங்களுடையது. அந்தக் காலத்தில எங்களுடைய வீட்டைத் தெரியாதவர்களே இராயினம்.

சந்தியில இருக்கிற மரக்கறிச் சந்தைக்கு அடுத்து வருகிற முடக்கில் புளியடி வைரவர் கோயிலுக்கு கிழக்கால இருக்கிற ஒரே ஒரு கல் வீடு அது. சுற்றிவர ஒரே மாஞ்சோலை. அநேகமாக அந்தப் பிரதேசத்தில இருக்கிற எங்களுடைய சனங்கள் நல்ல தண்ணிக்கு எங்களுடைய வீட்டுக்குத்தான் வாரவ. என்னுடைய அம்மா ஒரு பிற்போக்குவாதி போல. விடிகின்ற வேளையில யாராவது வெறும் வாளி, குடத்தோடை படலையடியில நின்றாலே விரட்டிப் போடுவவாம். இரவும் பொழுதுபட்டாப் பிறகு தண்ணி அள்ள விட மாட்டாவாம். ஆனால், அப்பா, அப்படி இல்லையாம். அந்தக் காலத்திலேயே, 'சிவப்பு சட்டைக்காரருடைய' முற்போக்குக் கட்சி, கூட்டம் என்று திரிவாராம். அதிகம் படித்து இராவிட்டாலும் 'நாட்டு நடப்பு தர்மம் நியாயம் தெரிஞ்ச மானுசன்' என்று எங்களுடைய ஊரில மட்டுமல்ல அயற் கிராமங்களிளையும் நல்ல பெயர் எடுத்தவர், எங்களுடைய அப்பா மருது.

'மருதம்மான் மாதிரி எல்லோரும் இருந்தா.......எப்படி இருக்கும் இந்த உலகம்...' என்று எங்களுடைய ஊரவர் அங்கலாய்த்துப் பேசுவதை நானும் என்னுடைய காதுபடக் கேட்டு இருக்கிறன். தண்ணீர் அள்ள வருகிற சின்னப் பிள்ளைகளுக்கு மாம்பழங்களைப் பறித்துத் தானே கொடுப்பார். கேட்டால், மாங்காய்களைப் பறித்துக் கொண்டு போகவும் விடுவார். சனங்களும் அப்படித்தான். 'பாவம் மனுசன். தாரம் இல்லாவிட்டாலும் தனியே என்ன மாதிரி தாய்க்குத் தாயாயும் தந்தைக்குத் தந்தையாயும் எல்லா உறவாயும் இருந்து தன்னுடைய பிள்ளைகளை என்ன மாதிரி பக்குவமாய் வளர்க்கிறார்' என்று சொல்லிக் கொண்டு அப்பப்ப வந்து எங்களுடைய வீட்டுக்குத் தேவையான சில வேலைகளைத் தாமாகவே செய்து கொடுப்பினம்.

சிலர் தவணை முறையில வந்து மா இடிச்சுத் தருவினம். சிலர் விடிய வந்து தண்ணீர் அள்ளி விட்டுப் போறதால, தங்களுக்கு நேரம் கிடைக்கிற நேரம் தாங்களாகவே வந்து கோழிக் கொட்டிலைத் துப்பரவு செய்வினம். தென்னை ஓலையில கிடுகு பின்னுவினம். விளக்குமாறு எடுத்து வளவைக் கூட்டித் துப்பரவாக வைப்பினம். நான் வளர்ந்தாப் பிறகு, சின்னக்காவும் நானும் கூடமாட ஏதாவது வேலை செய்தால் 'இஞ்ச பிள்ளைகள், நீங்கள் விடுங்கோ. அம்மா இருந்தால் உப்படி விடுவாவே? போங்கோ......போய்ப் படியுங்கோ.....' என்று அன்புக் கட்டளை இடுவினம். அப்பாவுக்கும் கடைசிப் பிள்ளைகளையாவது நல்லாப் படிப்பிச்சுப் பார்க்க வேண்டும் எண்டு ஒரே ஆசை. நானும் சாதாரண தரம் படிச்சு சோதனை எழுதினவுடனேயே அண்ணமாருடைய வற்புறுத்தலால வெளிநாடு வந்திட்டன். எனக்கு இங்கு வரவே விருப்பமில்லை. ஆனாலும் சின்னக்காவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுக்க வேணும். மூத்த அக்காக்களை தாங்கள் இரண்டு பேரும் பார்த்த மாதிரி, நான் தான் சின்னக்காவுடைய எதிர்கால வாழ்க்கைக்கு உதவ வேணும் என்று சொன்னதால, மறுக்கவே ஏலாமல் போட்டுது.

தொண்ணூற்று இரண்டில இங்கே வந்து படாத பாடெல்லாம் பட்டு, ஒன்றுக்கு இரண்டு, மூன்று வேலை செய்து ஒரு மாதிரி வந்த கடன் காசெல்லாம் திருப்பிக் கட்டி முடிச்சு குருவி மாதிரி கொஞ்சம் கொஞ்சமாக மிச்சம் பிடிச்சுக் காசு சேர்த்தன். சின்னக்காவுக்கு, அவவுடைய வகுப்பிலேயே ஒன்றாகப் படித்து வந்த எங்களுடைய ஊர்ப் பரிகாரியுடைய மகனுக்கு இரண்டு பேருடைய விருப்பத்தின் பேரிலே இரு வீட்டாருடைய சம்மதத்தோட 'யுத்த நிறுத்தம்' வந்த கையோட போய் நின்று கலியாணத்தைச் செய்து என்னுடைய கடைமையையும் நிறைவேற்றி விட்டுத்தான் திரும்பி வந்தனான். இப்ப அவவுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கினம். அப்பாவையும் பார்த்து நாலு ஐந்து வருசத்துக்கும் மேலாகிட்டுது. பேச்சுவார்த்தை நடக்கிற காலத்தில ஒருக்காப் போட்டு வருவம் எண்டு போன வருசத்துக்கு முதல் வருசம் நத்தார் விடுமுறைக்கு விமானச் சீட்டுக்குப் பதியப் போனனான். ஆனால், வேலைத் தளம் இடம் மாறின காலம் என்றதால விடுமுறை தர மறுத்திட்டினம். அதோட, அந்த மாதம் மட்டும் சம்பளமும் இரட்டிப்பாகத் தரப்பட்டதால தைப்பொங்கலோட போகலாம் எண்டு விட்டுட்டு இருந்திட்டன். பிறகு அப்படியே, வேலை மும்முரமாக ஒரு மாத விடுமுறை எடுக்கிறது, முதல் ஒரு வருச காலத்தில் ஏலாமல் போட்டுது.

ஊரில பள்ளிக்கூடங்களும் இரண்டாம் தவணை விடுமுறை வருவதால இந்த ஆவணி மாதம் போவம் என்று என்னுடைய பயணத்தைப் பற்றி எண்ணிக் கொண்டு இருந்த நேரத்தில தான் சின்னக்கா ஒருநாள் முன் வீட்டில இருந்த தொலைதொடர்பு நிலையத்தில இருந்து கதைத்தவ. நான் வரும் வரை அப்பா தாங்குவாரோ தெரியாதென்றும் பரியாரிமாமா - சொந்த பந்தங்களுக்கு சொல்லச் சொல்லி தனக்குச் சொல்லி விட்டார் என்றும் சொல்லி அழுதா. உடனேயே, நான் ஒருமாதிரி, விமானப் பயணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து, தெரிந்தொருவர் மூலம், கூடக் காசு கொடுத்து முட்பதிவையும் செய்து வேலைத் தளத்தில அவசர நிலைமை என்று கூறி சம்பளம் இல்லாத ஒரு மாத கால விடுப்பையும் எடுத்து, புறப்பட முன் இருந்த கடைசி இருபத்து நாலு மணி நேரத்தில தான் அப்பாவுடைய இந்தக் கடிதம் என்னுடைய கையில வந்து சேர்ந்தது.

இதை எல்லாம் உண்மையிலேயே நம்ப முடியாமல் தான் இருக்குது. பாவம் மனுசன், என்னில அவருக்கு நல்ல பாசம்தான். எண்டாலும், அவருக்கு அதேயளவு பாசமும் அக்கறையும் தன்னைச் சுற்றி இருந்த ஆக்களிலையும் எங்களுடைய மண்ணிலையும் இருந்திருக்கு எண்டதை இப்பத்தான் நான் விளங்கிக்கொள்ள சந்தர்ப்பம் வந்திருக்கு. தனக்கு ஏலுமாக இருக்கிற போதே எழுதிய இந்தக் கடிதம் மூலமும், தன்னுடைய உயில் மூலமும் அதைத் தெளிவாக நிரூபித்து விட்டார், அவர். எத்தனை தரம் இதுவரை அந்தக் கடிதத்தைப் படிச்சிட்டனோ தெரியேல்ல; அதில எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு சொல்லும் மனப் பாடமாக்கிட்டுது எனக்கு. கிட்டத்தட்ட, ஒரு வருசம் முதல் எழுதி வைச்சிட்டு, தனக்கு ஏலாம வருகுதென்று தெரிந்த கையோட, தானே தபாலில சேர்த்திருக்கிறார் போல இருக்கு. இல்லாட்டி கட்டாயம் அக்கா சொல்லி இருப்பா அல்லது, கடிதம் கிடைச்சுதா என்றாவது கேட்டிருப்பா.

எனக்குத் தெரியுது நீங்க இப்ப என்ன யோசிக்கிறீங்கள் எண்டு. கொஞ்சம் பொறுங்கோ - அப்பாண்ட கடிதத்தைப் படிச்சிட்டு வசந்தன் வாரான். 'என்னடா, இப்ப என்ன செய்வதாய் உத்தேசம்? இதை நான் எதிர்பார்க்கவே இல்லை.......' 'ஏனடா, நானும் அப்படித்தானே? கொள்ளி வைக்க வராட்டியும் பரவாயில்லை. ஆனால் எங்களுடைய சனத்தைக் காப்பாத்தடா.......' எண்டு அவர் எழுதியதைத் தானடா என்னால தாங்க முடியாமல் இருக்குதடா...' இதோ வேலை தொடங்குவதற்கான மணி அடிச்சிட்டினம். இனி நான் கோப்பி இடைவேளைக்குத்தான் வெளில வருவன். அதுவரை, இதை வாசிச்சிட்டு உங்களுடைய அலுவல்களைப் பாருங்கோ. வந்து சொல்லுறன், வசந்தனுக்கு என்னுடைய பதிலை. அப்ப, உங்களுக்கும் விளங்கும் - நான் என்ன தீர்மானத்தை எடுத்து இருக்கிறன் எண்டு.

இல 100, மூன்றாம் கட்டை,

தபால்பெட்டிச் சந்தி,

கரும்புத் தோட்டம், கிளிநொச்சி.

அன்பு மகன் இந்திரனுக்கு,

இதுதான் அநேகமாக நான் சுயநினைவோடு உனக்கு எழுதிற கடைசிக் கடிதமாக இருக்கும் எண்டு நினைக்கிறன். என்னுடைய நிலைமை எனக்குத் தெரியும். உனக்கு அதை விபரமாக எழுத ஏலாமல் இருக்கிறதால முன் வீட்டு விதானையாரிட்டையும் பரியாரி மாமாவிட்டையும் முதலே விரிவாக எழுதிக் கொடுத்திட்டன். இதோடு அதனுடைய பிரதியையும் அனுப்புகிறேன்; ஆறுதலாகப் படிச்சுப் பார்; உனக்கு எல்லாம் விளங்கும். நீ இங்கே வந்திட்டுப் போனாப் பிறகு, நாங்கள் பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமில்லை. ஏதோ.........வெளிநாட்டுக் காசு மாறி மாறி வந்து கொண்டு இருந்ததால நாங்கள் சமாளிச்சிட்டம். ஆனால், இந்த ஊரில எங்களுடைய சனம் படுகிற பாட்டைப் பார்க்க, எனக்குத் தாங்க முடியுரதில்லையடா.... நாங்கள் ஒரு காலத்தில விட்ட பிழைகளாலதான் எங்களுடைய சந்ததிகள் இந்தப் பாடு படுகுது. ஆனால், நீங்களும் உந்தப் பிழையை விட்டுடாதையுங்கோ. முந்தி இடம்பெயர்ந்து வந்த சனம், திரும்பவும் தங்களுடைய ஊருக்கு மீளக் குடியமரப் போய்விட்டு, கொஞ்ச நாளிலேயே திரும்பவும் இடம் பெயர்ந்து வந்திட்தினம். உங்கே இருக்கிற நீங்களும், இங்கத்தயப் புதினங்களை ஒவ்வொரு நாளும் அறிஞ்சு கொள்ளுவீங்கள் தானே? சிலர் பேச்சுவார்த்தைதான் வழி எண்டு நம்பிக்கொண்டு இருந்தவ.... இப்பவும் கொஞ்சப் பேர் அந்த நினைவோட தான் இருக்கினம்.

ஆனால், உது சரி வராது. ஐம்பது வருசமா நாங்கள் பார்க்காத மேசையும் இல்லை கதிரையும் இல்லை. மாறி மாறி பதவிக்கு வார சிங்கள அரசியல்வாதிகள் எங்களுடைய தலைவர்களைப் பேசிப் பேசியே பேக்காட்டிப் போட்டாங்கள். நாங்களும் நம்பி நம்பி நாசமாப் போனது தான் மிச்சம். இனி, அது நடவாது.........எங்களுடைய வீட்டு வேலிய நாங்கள் தான் போட வேணும், பராமரிக்க வேணும் - பழுதாப் போச்சுண்டால் நாங்கள் தான் புதுசாப் போட வேணும் அல்லது மாத்தி அமைக்க ஒழுங்கு பண்ண வேணும். அது போல தானடா - எங்களுடைய நாட்டின்ட எல்லைகளை நாங்கள் தான் பாதுகாக்க வேணும். ஆள் மாறி ஆள் நிக்க உதவி செய்ய வேணும். 'அவங்கள்' எல்லாப் பக்கத்தாலையும் ஆயத்தப்படுத்திராங்கள் என்ற சங்கதி, எங்களுக்கும் தெரியும். பக்கத்து நாட்டுக் காரன், வெள்ளைக்காரன், அவன், இவன் எண்டு, நான் முந்தி நீ முந்தி எண்டு போட்டி போட்டுக் கொண்டேல்லோ எல்லாரும் உதவி செய்ரான்கள்; அள்ளி அள்ளிக் கொடுக்கிறாங்கள்.........அவயளுக்க

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நொச்சி யாரே ...........கதை தந்த ஆதவிக்கும் பதிந்த உங்களுக்கும் நன்றி. தமிழ் உணர்வுள்ள ,தந்தையால் வளர்க்க பட்ட ,இந்திரன் போன்ற உணர்வுள்ள இளைஞர்கள் தான் இப்போது தேவை என்று சொல்லாமல் சொன்ன கதை மிக மிக பொருத்தமானது. ரசித்தேன். புல்லரித்தேன் .நானும் ஒரு இந்திரனாக கூடாதா என்று ஆதங்க பட்டேன்சிறந்த ஒரு கதை . நிலாமதி அக்கா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.