Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்!!!!!

Featured Replies

Mar21A.jpg

நமது தமிழ்ப் பெண்கள் சுதந்திரப் பறவைகளா? ஆண்களுக்கு உள்ள அனைத்துச் சுதந்திரங்களும் பெண்களுக்கும் இருக்கின்றனவா? இது தீர்க்கப்படாத ஒரு கேள்வியாகவே இன்றளவும் இருக்கின்றது.

சுதந்திரம் என்றால் என்ன? தொடை தரிய மனிஸ்க்கேட் மாட்டிக்கொண்டு ‘அக்கடான்னு நாங் உடை போட்டா”வென்று பாடுவதா சுதந்திரம்!? பிற ஆண்களுடன் சேர்ந்து பீச்சிற்கோ அல்லது சினிமாவிற்கோ தனது விருப்பம்போல உலாத்தி வருவதா சுதந்திரம்!?

இல்லை! சுதந்திரம் என்றால் மூடச் சடங்குகளில் இருந்து சுதந்திரம பெறுவது. மூட நம்பிக்கைகளில் இருந்து சுதந்திரம் பெறுவது. இவைகளைத்தான் பெண்களின் சுதந்திரம் என பகுத்தறிவாளர்கள் வலியுறுத்துகின்றார்கள்.

ஆட்டைத் தானமாகக் கொடுப்பது போல…. மாட்டைத் தானமாகக் கொடுப்பது போல….. கம்பியூட்டர் கற்ற விஞ்ஞானிகள் கூட காட்டுமிராண்டிகள் காலத்து கன்னிகாதானத்தை கைவிடாமல் காப்பாற்றி வருகின்றார்களே! அந்த மூடத்தனமான சடங்குகளை ஒழித்து சுதந்திரம் பெறவேண்டும்!.

பொட்டழிப்பதும் பூவைப் பிய்ப்பதும் வளையல்களை உடைத்தெறிவதுமான மூடத்தனமான சடங்குகளை இல்லாதொழித்து அவைகளில் இருந்து பெண்கள் சுதந்திரம் பெறவேண்டும்!.

ஆண்கள் பொட்டு வைப்பதில்லை. ஆண்கள் மலர்கள் சுடிக்கொள்வதில்லை. ஆண்கள் வளையல்கள் போட்டுக்கொள்வதில்லை. இவையெல்லாம் பெண்களுக்காகவே ஒதுக்கி வைத்துவிட்டார்கள்! ஏன்?. கணவன் என்னும் இன்னொரு உயிர் இறந்ததும் அவற்றை அழிப்பதற்கும்! பிய்த்தெறிவதற்கும்! உடைத்தெறிவதற்கும்தான் என்றால்? அவைகளைப் போடவும் வேண்டாம்! வீசவும் வேண்டாம் என்பதே பகுத்தறிவு காட்டும் பாதையாகும்.

நமது தமிழ்ப் பெண்களின் உடைகளில் ஒரு பண்பாடு இருக்கின்றது. சேலை என்பது அதில் முக்கியமானதொன்றாகும். பருவ வயதினை அடையும் பெண்பிள்ளைகளுக்கு கூட துண்டுத் தாவணி போட்டுவிடுவார்கள். இது பண்பாடு மட்டுமல்ல பெண்களின் கவர்ச்சியான உடலுறுப்புக்கள் மற்றவர்களுக்கு விரசமாகத் தெரியக்கூடாது என்பதற்காக. ஆனால் இன்றோ நம் மண்ணில் வாழ்கின்ற இளம் பெண்களில் இருந்து ஜரோப்பிய நாடுகளில் வாழ்கின்ற நடுத்தரவயதுப் பெண்கள்வரை டெனிம்தான் அவர்களது ஆடைகளாக இருக்கின்றது! (ஜரோப்பிய நாடுகளில் இப்பொழுது சில வயதான தாய்மார்களும் இதற்குள் அடக்கம்!) திருமண வைபகங்களில் மட்டும் பட்டுச்சேலைகள் சரசரக்க மல்லிகைப்பூ வாசனைகள் கமகமக்க பெண்களைப் பார்க்க முடிகின்றது.

பெண்களுக்கு அழகைக் கொடுப்பதில் இன்னொன்று அவர்களின் தலைமுடியும் அதில் போட்டுக்கொள்ளும் அழகான கொண்டையும்தான். இன்று ஜரோப்பாவில் வாழ்கின்ற ஜம்பது வீதமான இளம் பெண்கள் ஜரோப்பியப் பெண்களைப்போல சிலுப்பாவிற்கு மாறிவிட்டார்கள்! திருமண வைபவங்களுக்கு வரும்போது இவர்கள் சேலை கட்டிக்கொண்டு வந்தாலும்! மல்லிகைப்பூ வைக்கின்ற கொடுப்பனவு இவர்களுக்கு இல்லை! காரணம் பூவை வைப்பதற்கான கொண்டை இவர்களுக்கு இல்லை!.

சேலை உடுத்துக்கொண்டோ கொண்டை போட்டுக்கொண்டோ நாங்கள் வேலை செய்ய முடியாது. அது மாத்திரமல்ல காலையில் எழுந்து வேலைக்குப் போவதற்கு முன்னர் சேலை உடுப்பதும் கொண்டை போடுவதும் முடியாத காரியம். என்று தன்னிலை விளக்கம் கொடுக்கின்றார்கள் வேலைக்கும் போகும் பெண்கள். இவை ஏற்கக் கூடியதே. ஆனால் வேலைக்குப் போகாத பெண்களும் இத்தகைய மேலைனாட்டு நாகரீக மோகத்தில் இருக்கின்றார்களே! அது ஏன்? இதுதான் பெண்களின் சுதந்திரமா?

பிரான்சில் வாழ்கின்ற பாண்டிச்சேரி மற்றும் தமிழ்னாட்டைச் சேர்ந்த பெண்கள் வீட்டில்க்கூட சேலை உடுத்திருப்பதோடு தலையில் மல்லிகைப்பூ சுடிக்கொள்வதையும் தினமும் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. அவர்களுக்கு மட்டும் இது எப்படிச் சாத்தியமாகின்றது? அவர்கள் வாழ்வது ஜரோப்பாவாக இருந்தாலும் தங்களின் பண்பாட்டை விட்டு விலகிவிட விரும்பாததே முக்கிய காரணமாகும். அதே நேரத்தில் அதிகூடிய மூட நம்பிக்கைகளைக் கொண்டவர்களும் இந்த தமிழ்னாடு பாண்டிச் சேரியைச் சேர்ந்தவர்கள்தான் என்பதையும் யாரும் மறுத்துவிட முடியாததாகும்.

விதவைகளுக்கு திருமணம் செய்து வைக்க மறுப்பதும்! பால்ய வயதில் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதும்! இன்னமும் அந்த ஊர்களில் நடந்துகொண்டுதான் இருக்கின்றது!

‘……. குலத்தில் பிறந்த முப்பது வயது இளம் விதவைக்கு மணமகன் தேவை. சாதி தடையில்லை. எம்மதமும் சம்மதம்” இவை பத்திரிகைகளில் நாம் அன்றாடம் படிக்கின்ற விளம்பரங்களில் ஒன்று.

இது செய்தி. ஆனால் இந்தச் செய்திக்குப் பின்னால் இருக்கும் இன்னொரு செய்திதான் நமக்கு முக்கியம்.

சுமார் ஜம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இப்படியொரு விளம்பரம் கொடுப்பது சாத்தியம்தானா? ஒரே நாளில் நடந்ததா இத்தகைய மாற்றங்கள்? செவிடர்கள் கேட்கின்றார்கள்! குருடர்கள் பார்க்கின்றார்கள்! என்னும் வேத விளம்பரங்களைப் போன்ற அற்புத நிகழ்ச்சியா இது? இந்த மாற்றத்திற்குக் காரணம் யார்?

இந்த மாற்றத்திற்காக எத்தனையோ போராட்டங்களைக் கடந்து வந்திருக்கின்றது தமிழ்னாடு! இன்று இதுதான் நம்மைச் சிந்திக்க வைக்கும் வினா. விதவைத் திருமணங்களுக்காக இப்படியான விளம்பரங்கள் வெளிவரத் தொடங்கிய காலங்களை நாம் விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படியானால் அதற்கு முன்னர்…? என்னும் கேள்வியும் நம் முன்னே வருகின்றது.

‘அதற்கு முன்னர் என்னும்போது நாம் சற்று பின்னோக்கி பிடரியைத் திருப்பித்தான் பார்க்க வேண்டும்! எந்த நாட்டிலாவது நடக்குமா ஒரு வயதுக் குழந்தை மணமகளாவது? எந்த நாட்டிலாவது நடக்குமா தாயின் மடியில் தவழும் குழந்தை விதவைக் கோலம் அடைவது? எங்காவது நடந்திருக்கின்றதா மண் சோறு சமைத்து விளையாடும் ஜந்து வயதுச் சிறுமிகள் ஜம்பது வயது வயோதிபர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டு அவர்கள் கைம் பெண்களாய் கிழித்து வீசப்பட்ட கோரம்? இவையெல்லாம் நடந்திருக்கின்றது தமிழ்னாட்டில்!

இத்தகையதொரு காட்டுமிராண்டிச் செயல்களையெல்லாம் கேள்விப்படும்போது எம்முள் ஒரு கோபக் கனல் கொழுந்துவிட்டெரிவதைத் எம்மாலேயே தடுக்க முடியவில்லை. குழந்தைகளுக்கு திருமணம் செய்துவைத்து அவர்கள் விதவைகளானாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் விதவைகளுக்கு திருமணம் செய்துவைக்க யாரும் முன்வராத காலமது!

இத்தகைய கொரூரங்களுக்கு எதிராக குமுறி எழுந்தவர்களில் முக்கியமானவர் தந்தை ஈ.வே.ரா. பெரியார். பத்து வயதில் விதவையாகி நின்ற தனது தங்கையின் மகளுக்கு ஊர் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மறுமணம் செய்து வைத்தவர் பெரியார் அவர்கள்!.

ஒரு மனைவியை இழந்த ஆண் திருமணம் செய்யலாமா? வேண்டாமா? என்பது பற்றி எந்தப் பெண்களையாவது கருத்துச் சொல்ல விடுகின்னார்களா? இல்லை! அப்படியிருக்க கணவனை இழந்த பெண் திருமணம் செய்துகொள்ளலாமா? வேண்டாமா? எனக் கருத்துச்சொல்ல ஆண்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது! இப்படியாக கேள்வி கேட்கின்ற சுதந்திரம் பெண்களுக்கு வேண்டும் என்பதே பெரியார் போன்ற பகுத்தறிவாளர்களின் வாதம்.

அன் நாட்களில் பெண்கள் தம்மைத்தாமே ஒடுக்கிக்கொண்டு வாழ்ந்தார்கள். சமூகப் பொறுப்புக்களை செயற்படுத்தக்கூடிய திறமையும் வலுவும் ஆண்களுக்கு மட்டுமே உண்டு! தமக்கில்லையென தாமாகவே ஒதுங்கிக் கொண்டார்கள். அல்லது அப்படியான ஒரு மாயைத் தோற்றத்தை ஆண்கள் அவர்களுக்கு ஏற்படுத்திவிட்டார்கள்! இதுவே ஆணாதிக்கமாக இருந்தது. இவை மாத்திரமல்ல பருவமடைந்த பெண்கள் வீட்டிற்கு வெளியே செல்லக்கூடாது என்னும் கருத்தும் கடுமையாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இதனால் பெண்கள் சுதந்திரமாக இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. தங்களது தேவைகளை தாமே நிறைவேற்ற முடியாத நிலையிலும் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியாத நிலையிலும் பெண்கள் இருந்தார்கள்!

இவை மாத்திரமல்ல பழைய புராண இதிகாசக் கதைகள். மதக் கருத்துக்கள் இவைகளோடு பெண்கள் மெல்லிய அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ஆகிய நாற்படைகளைக் கொண்டவர்கள். என்பற்றையெல்லாம் சொல்லி அவர்களை பெருமைப் படுத்துவதாகக் கூறிக்கொண்டே அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள்.

இத்தோடு பெண்களை ‘இல்லாள்” எனவும் சொல்வார்கள் அப்படியென்றால் இல்லத்தரசியாம்! இப்படியான வார்த்தைகளால் பெண்களும் பெருமைப்பட்டுக் கொள்வதுண்டு ஆனால் எந்த ஆணையும் ‘இல்லான்’ எனச் சொல்வதில்லை ஏனெனில் இல்லான் எனும் சொல் பொருள் இல்லாதவனையே குறிக்கின்றது (இல்லானை இல்லாளும் வேண்டாள்) ஆதலால்த்தான்.

ஆனால் இன்று நிலமை மாறிவிட்டது. இன்று பல குடும்பங்களில் பெண்கள் வேலைக்கு செல்லவில்லையென்றால் அந்தக் குடும்பமே இயங்க முடியாத நிலைக்கு மாறிவிடும் நிலமை இருக்கின்றது. இன்னும் பல குடும்பங்களில் மட்டுமல்ல தொழில் நிறுவனங்களைக்கூட பெண்களே நிர்வாகிக்கின்றார்கள். இவைகளெல்லாம் பெண்கள் தங்கள்மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை உடைத்து கல்வியில் முன்னேறியதால்தான்.

பெண்கள் மீதான இது போன்ற கட்டுப்பாடுகளை உருவாக்கியவர்களும் ஆண் வர்க்கத்தினர்தான். அதே சமயம் பெண்கள் மீது திணிக்கப்பட்டிருந்த இதுபோன்ற கட்டுப்பாடுகளை உடைப்பதற்குப் போராடியவர்களும் ஆண்கள்தான் என்பதனையும் பெண்கள் மறந்துவிடக்கூடாது. ஆனால் இன்று பெண்கள் போராடும் பெண் விடுதலைக் கூச்சலெல்லாம் நாகரீக மோகத்தின் விளைவுதான்! கட்டுரையின் முன் பகுதியில் குறிப்பிட்டதுபோல மிடி போட்டுக்கொண்டு ‘அக்கடாவெண்று நாங்கள் உடை போட்டால்” என்று பாடுவதும்! ஆண்களுடன் கைகோர்த்துக்கொண்டு சினிமாவிற்குப் போவதும் தமது சுதந்திரம்தான் என இவர்கள் சொன்னால் பண்பாட்டை நேசிக்கும் யாரும் இதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

இவைகள் மாத்திரமல்ல இன்று பெண்கள் சினிமா மோகத்தில் கவரப்பட்டு சிக்கித் தவிக்கின்றார்கள்! பல சினிமாக்கள் கலாச்சாரத்தை பண்பாட்டை பாழ் படுத்துவதாகத்தான் உள்ளது. சினிமாவைப் பார்த்துவிட்டு அதில் வரும் கவர்ச்சி நடிகைகளைப்போல இவர்களும் தங்கள் உடைகளில் சிக்கனம் காட்டுவது! இவையெல்லாம்! தங்களது சுதந்திரம் என இப் பெண்கள் கருதுகின்றார்கள்.

சில வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் சென்று வந்த எனது நண்பர் ஒருவர் ஒரு அதிர்ச்சியான தகவலைச் எனக்குச் சொன்னார்! அது யாழ்ப்பாணத்தில் ‘போய்ஸ்” திரைப்படம் தடை செய்யப்பட்டிருந்த காலம். ஒரு இளவயதுப் பெண்பிள்ளை வேலை இன்ரவியூ விடயமாக கொழும்பு சென்று வருவதாகக் கூறிவிட்டு அந்தப் படத்தை பார்த்துவிட்டு வந்தாராம்!

இப்படியானவர்களின் செயல்களால்த்தான் பெண்களின் சுதந்திரத்திற்குக் எதிராக குரல் கொடுப்பவர்களின் குரல்கள் இன்றும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

இன்று பல நாடுகளில் நாட்டை நிர்வாகிக்கும் தலமைப் பொறுப்புகள் பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.