Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரு நாடுகளுக்கு இடையிலான வெற்றியை கொழும்பில் கொண்டாடுகின்றார்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரு நாடுகளுக்கு இடையிலான வெற்றியை

கொழும்பில் கொண்டாடுகின்றார்கள்

2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் இணைந்த கூட்டுப் படைகள,; ஈராக்கின் தலைநகரான பக்தாத்தை கைப்பற்றியபொழுது, பெரும்பாலான ஈராக்கிய மக்கள் சந்தோசப்பட்டு இவ் வெற்றியை பெரும் குதூகலமாகக் கொண்டாடினார்கள்.

காரணம், அப்போதைய ஈராக்கின் ஜனாதிபதி சதாம் உசைனின் சர்வாதிகாரப் போக்கும், அவரினால் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களும் அம்மக்களை சந்தோசத்தில் ஆழ்த்தின. ஈராக்கிய மக்கள் இவ்வெற்றியை கொண்டாடிய அதேவேளை, அமெரிக்கா- பிரித்தானியாவிலும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

கடந்த சில நாட்களாக பெரும்பாலான கொழும்பு இனவாத பத்திரிகைகளும் இணையத்தளங்களும், தொலைக்காட்சிகளும் கிளிநொச்சியை சிறிலங்கா இராணுவம் கைப்பற்றியதையிட்டு, சிங்கள மக்கள் நடாத்தும் கொண்டாட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் பிரசுரித்து வருகின்றன. இதில் நாம் முதலில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில், கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றிய விடயத்தை கொழும்பிலும் அதன் நகர்ப்புறங்களிலும் சில வெளிநாடுகளிலும் கொண்டாடுபவர்கள் யார்? சிங்கள இனவாதிகளும் சிறிலங்கா அரசின் கைப்பொம்மைகளுமே வேறு யாரும் இல்லை.

வழமைபோல் இன்னும் சில வாரங்களில் இராணுவ மிரட்டல்களினாலும,; துப்பாக்கி முனையிலும் சில தமிழரை யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் மற்றைய இராணுவ அடக்குமுறைக்குள்ளான இடங்களில், ~கிளிநொச்சி வெற்றியை| கொண்டாட வைப்பது என்பது ஒரு புறமிருக்க, ஈராக்கில் 2003 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட வெற்றிக்கும், கொழும்பில் தற்பொழுது நடைபெறும் கிளிநொச்சி வெற்றிக் கொண்டாட்டங்களுக்கும் இடையில் உள்ள பல வேற்றுமைகளுடன் சில ஒற்றுமைகளும் உண்டு.

வேற்றுமையென நாம் பார்க்கும்பொழுது ஈராக்கின் வெற்றியை ஈராக்கியர் கொண்டாடினார்கள். கிளிநொச்சி வெற்றியை சிங்களவர்கள் கொண்டாடுகிறார்கள்.

ஈராக்கின் போரில் அமெரிக்கா, பிரித்தானியாவுடன் இணைந்த கூட்டுப்படைகளினால் முன்னெடுக்கப்பட்டது போல், கிளிநொச்சியை கைப்பற்றவும் மற்றைய வடக்கு, கிழக்கு மீதான யுத்தத்தையும் சிறிலங்கா இராணுவம் பல வெளிநாடுகளுடன் இணைந்தே மேற்கொண்டு வருகிறார்கள் என்பது ஒரு முக்கியமான ஒற்றுமை.

இக்கொண்டாட்டங்கள் மூலம் சிங்கள இனவாதிகள் தமிழ் மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் கூறும் செய்தி என்ன? இந்த யுத்தம் இரு நாடுகளுக்கும் இடையிலானது என்பதை மிகத் தெளிவாக தெரிகின்றனர்.

ஈராக்கில் யுத்தத்தை தொடக்கிய அமெரிக்கா, பிரித்தானியா போன்ற சில நாடுகள், ஈராக்கில் உலகை அழிக்கும் மிக மோசமான நச்சு ஆயுதங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கும், மற்றைய நாடுகளுக்கும் மிகைப்படுத்தப்பட்ட பொய்களை கூறியே ஆரம்பித்தனர். ஆனால், இன்று ஐந்து வருடங்களின் பின்னர் இந்த இரு நாடுகளும் ஈராக்கில் அப்படியொரு ஆயுதம் இருக்கவில்லையென ஒத்துக்கொள்கின்றன.

இதேபோல் சிறிலங்கா அரசு தமிழீழ விடுதலைப் புலிகளை உலகிற்கு மிகவும் ஒரு பயங்கரமான அமைப்பாக பொய்ப் பிரச்சாரம் செய்து, தனது போரை வெற்றிகரமாக நடத்த சர்வதேசத்தின் ஒத்தாசைவையும் உதவியையும் பெற்று மேற்கொண்டு வருகிறது. இதனால், தமிழீழ மக்களின் உண்மை நிலையை கேட்கவோ, பரிசீலிக்கவோ இன்னும் சர்வதேசம் முன்வரவில்லையென்பது மிகக் கவலைக்குரிய விடயம்.

ஈராக் மீதான போரில் ஒத்துழைக்க மறுத்த பிரான்ஸ், அந்த வேளையிலேயே இப்போர் நிச்சயம் எந்தப் பயனையும் அழிக்காது. அத்துடன், ஈராக்கில் அமெரிக்கா, பிரித்தானியா கூறுவது போல் எந்த நாசகார ஆயுதங்களும் இல்லையென கூறியதுடன், போரை ஆரம்பிக்கின்றீர்கள் இது எப்படியாக முடியுமென்பதை இருந்து பார்ப்போமென மிகத் தெளிவாகக் கூறியது. இன்று ஈராக்கின் நிலை என்ன?

தற்பொழுது ஈராக்கிய மக்கள் படும் கஷ்டங்களும் இன்னல்களும், இவற்றுடன் அமெரிக்கவின் ஜனாதிபதி தேர்தல் காலங்களில,; தற்பொழுது ஜனதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்ட திரு ஓபாமா ஆற்றிய உரைகளும் அவற்றுக்கு சான்றாக அமைந்துள்ளதுடன், ஈராக்கிய மக்கள் ஓர் புதிய விடயத்தையும் தற்பொழுது முன்வைக்கின்றனர். அது என்னவெனில், ஈராக்கில் ஜனாதிபதி சதாம் உசைனின் பல வருட சர்வாதிகார ஆட்சி காலத்தில் கொல்லப்பட்ட ஈராக்கிய மக்களை விட, பல மடங்கு அதிகமான ஈராக்கிய மக்கள், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்கா பிரித்தானியா கூட்டுப் படை நடவடிக்கையினால் கொல்லப்பட்டுள்ளனாராம்.

யாதார்த்தமான உண்மையென்னவெனில், சந்திரிகா அரசும் 1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் குடாநாட்டை கைப்பற்றி கொண்டாட்டங்கள் வைத்து இன்று பதின்மூன்று பதின்நான்கு வருடங்களாகியும் அங்குள்ள மக்கள் ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையில் - கைது, கொலை, கடத்தல், பாலியல் வல்லுறவு போன்ற இராணுவ அடக்குமுறைக்குள்ளேயே வாழ்கின்றனர்.

தெற்கில் முடிசூடா மன்னாக வர்ணிக்கப்படும் ராஜபக்ச, 2005 ஆம் ஆண்டு பதவிக்கு வந்தவுடன் போரை ஆரம்பித்து கிழக்கை இராணுவ ரீதியாக ஆக்கிரமித்து, அங்குள்ள மக்களை இன்னுமொரு திறந்த வெளிச் சிறைச்சாலையில் அமர்த்தியுள்ளார். அங்கும் இராணுவ அடக்குமுறைக்கு மத்தியில் - கைது, கொலை, கடத்தல், பாலியல் வல்லுறவுகளுடன் தமிழரின் அவலக்குரல் தினந்தோறும் கேட்டவண்ணம் உள்ளது.

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள், ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்க முன்னரே தமது சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதற்கான ஆணையை 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பெரும்பான்மையுடன் வழங்கியுள்ளார்கள்.

இதை 2004 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வலியுறுத்தியதுடன், தமிழீழ விடுதலைப் புலிகள்தான் தமது ஏகபிரதிநிதிகள் என்பதையும் வலியுறுத்தியிருந்தார்கள். இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளை சிறிலங்கா அரசு நினைப்பதுபோல் அழித்துவிட முன்வருமானால், அதன் பினனர் எதற்காக தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வை ராஜபக்ச அரசு முன்வைக்க வரவேண்டும் என்பதை ஒவ்வொரு தமிழரும் மனதில் கொள்ளவேண்டும்.

ச.வி.கிருபாகரன்

7 ஜனவரி 2009

தமிழ்நாதம்

சதாமின் வீழ்ச்சியை ஈராக்கிய மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள்.

அதே போன்று பூநகரி வீழ்ச்சியையும் யாழ் குடா மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அதே போன்று பூநகரி வீழ்ச்சியையும் யாழ் குடா மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள்.

கொண்டாடினார்கள் அல்ல ஒட்டுக்குழுக்களால் கொண்டாட வைக்கப்பட்டார்கள்.

கொண்டாட வைக்கப்பட்டார்கள் என்பது சரி என்று நம்புவோம். ஈராக்கில் மக்கள் கொண்டாடினார்களா? அல்லது சதாமின் எதிரிகளால் கொண்டாட வைக்கப்பட்டார்களா?

மேற்குலக ஊடகங்கள் சொல்வதை நாமும் அப்படியே திருப்பிச் சொல்வதாக இருந்தால், ஆள்பவர்கள் என்ன செய்தி தருகின்றார்களோ, அதை அப்படியே ஏற்றுக் கொள்வதாக இருந்தால், ஈராக்கில் மக்கள் கொண்டாடினார்கள் என்பது சரி.

அப்பொழுது நாம் யாழ் குடாவிலும் மக்கள் கொண்டாடினார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லவா?

அமெரிக்க அடக்குமுறையாளர்களின் கருத்தை தாங்கியபடி வருகின்ற எழுத்துக்களில் வெள்ளைக்கார துரைக்கான விசுவாசம் ஒளிந்து இருக்கிறது என்பது என்னுடைய கருத்து.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.