Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறு மெழுகுவர்த்தியாயிரு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புள்ள மனோ

உனது கடிதம் கிடைத்தது. உன்னைப்போலவே வேறு பலரும் "சேடம் இழுக்கும் பெரியவரின் வீட்டு சுகவிசாரிப்பு" போல விசாரிக்கிறார்கள். இன்று முன்னிரவில் அக்காவும் தொலைபேசியில் பேசினார்.

சிலரது விசாரிப்பு உண்மையில் என்னிடமிருந்து ஏதேனும் நம்பிக்கை தரும் வசனங்கள் வந்து தெம்பு தரலாம் எனும் ஆசையில் விளைந்தது. வேறு பலதின் பின்னால் உள்ள குரூர முகங்கள் என் அகக்கண்களுக்கு தெரியாமலும் இல்லை. சென்றல் - சென்ஜோன்ஸ் கிரிக்கெட் ஆட்டத்தில் தோற்றுப்போன அணிக்கு கைதட்டியவருக்கு ஏற்படும் நிலையை, எனக்கு உண்டு பண்ணும் குரூரம் நிறைந்தது அது. ஆனாலும் நான் மிகவும் நம்பிக்கையுடனும், மிகத்தெளிவுடனும் இருக்கின்றேன். இந்த நிலையில் சில விடயங்களை பேசிவிட வேண்டும் என்றே தோன்றுகின்றது. இன்று பேசாது போனால், இனி என்று பேசுவதிலும் பயனில்லை என்று படுகின்றது.

எனது தன்னம்பிக்கை பற்றி அடிக்கடி நீ குறிப்பிடுவாய். நானும் அதுபற்றி ஆழமாக சிந்திப்பது உண்டு. உண்மையில் தன்னம்பிக்கை என்பதை வெற்றியடைய பயன்படுத்துவதை விட, பின்னடைவுகளில் இருந்து மீண்டு எழு பயன்படுத்துவதிலேயே அது அர்த்தமுள்ளாதாகின்றது. அது இன்று நமது இனத்திற்கும் பொருந்துமல்லவா? நாம் இன்று ஒரு இக்கட்டான நிலையில் இருக்கின்றோம் என்பது உண்மை தான். ஆனாலும் எதிரி ஊடகங்களால் கட்டுவித்துகாட்டும் பிம்பம் போன்ற தோற்றுப்போகும் பின்னடைவு அல்ல.

இன்றைய நிலையை இராணுவ நோக்கில் எடுத்து விளக்கும் போது, சிலர் "அதுசரி. சனங்கள் எல்லோ பாவம்" என்று எனது வாயை மூடச்செய்வதில் கவனம் செலுத்துகின்றனர். இன்னும் சிலர்... "நீங்கள் வெளிநாட்டில இருந்து எல்லாம் கதைக்கலாம்... அங்க உள்ள சனத்துக்கு தானே கஸ்ரம்" என்று இரக்கம் காட்டுகின்றார்கள். எல்லாமே உண்மை தான். ஆனாலும் இவைகளை கடக்காமல் விடுதலைப்போராட்டத்தை நகர்த்த முடியாது என்பது தானே உண்மை. வெற்றி - தோல்வி, மானம் - அவமானம், என்று பிரித்துப் பார்ப்பதற்கு இது விதிமுறைகள், காலவரையறைகள் குறித்துக் கொண்டு தொடங்கிய விளையாட்டு ஆட்டமோ, அல்லது விதிமுறைகளுடன் இடம்பெறும் போர் கூடவோ அல்ல. இது ஒரு வாழ்வுப்பயணம். இந்த பயணத்தில் சில இடங்களில் பல நெருக்குவாரங்களை சந்தித்து உள்ளோம். வெற்றிகளை அனுபவித்து இருக்கின்றோம். இராஜதந்திரத்தால் அடித்து இருக்கின்றோம். தியாகங்களால் உயர்ந்து இருக்கிறோம். அதுபோல இன்று ஒரு இக்கட்டில் இருக்கின்றோம். "இதுவும் கடந்து போகும்" என்பது தானே யதார்த்தம்.

வாழ்வா? சாவா என்று போராடும் எம்மின மக்களுக்கு உரம் சேர்க்கும் வகையில், எம்மாலான அனைத்துப் பங்களிப்புகளையும் வழங்கி, விடுதலைப் பயணத்தின் பக்கம் நிற்றல் தானே ஒரேவழி. இதில் சோர்ந்து போகவும், நொருங்கிப்போகவும் ஏதுமில்லை. ஒற்றைத் துப்பாக்கியுடன் தொடங்கிய போராட்டத்தை அழிக்க முடியாத அடக்குமுறையாளர்கள், இன்று உலக பலத்துடன் மோதவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்கின்ற ஒற்றை யதார்த்தம் போதுமே, நாமெல்லாம் புதுவீச்சுடன் பொங்கியெழுவதற்கு.

நாம் இங்கிருந்து தத்துவங்களையும், வரலாற்றையும் பேசிக்கொண்டிருக்கின்ற தருணங்களில், அங்கே உயிருக்கு போராடியபடி உறவுகள் தவிப்பது தெரியாமல் இல்லை. ஆனாலும் வீணான மிகையுணர்ச்சிக் கதைகளை கதைப்பதால் மாத்திரம் அவர்கள் வாழ்வில் மாற்றம் வந்துவிடுமா? இல்லையே. எனவே அதையதை அதனதன் படியே உற்றுநோக்கி, காலத்தால் செய்யவேண்டிய பணிகளை ஆற்றுவது தான், ஒரு நிரந்தர மாற்றத்திற்கான திறவுகோல். இதனையே மாவோவின் சொற்களில் சொல்வதானால், ஓரிரு வீடுகளில் ஓரிரு சட்டிபானைகள் உடைவதை சகிக்கமுடியாதெனின், காலத்திற்கும் எம் அனைவரினதும் சட்டிபானைகள் உடைவதை தவிர்க்க முடியாது.

இன்று நாம் அனுபவிக்கும் துன்பம் என்பது, கடந்து போகக்கூடிய, தற்காலிக, நாளாந்த வாழ்வுக்கான துன்பம். நாம் போராட விளைந்ததென்பது, ஒரு இனத்திற்கான, நிரந்தரமான, வாழ்வமைதிக்கானது. எனவே இன்றைய துன்பங்களை கண்டு, விடுதலைப்பயணத்தின் வேகத்தை தணிக்கமுடியாது. இப்போது எமக்கு தேவை, நூறு மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் ஓடும் வீரன், எல்லைக்கோட்டை நெருங்கும் போது கொண்டிருக்கும் உள்மூச்சு. இன்னும் இன்னுமாய் எம்மை செப்பனிட்டு, இல்லாதவற்றை உள்வாங்கி, ஒருங்கு குவித்து, இலக்கில் கவனமாய் நிமிர்ந்தே நிற்கலாம்.

"எல்லாம் நன்மைக்கே" என்று என் தந்தை அடிக்கடி சொல்லும் வாசகத்தின் தார்ப்பரியம் இப்போது புரிகின்றது. ஆனையிறவு எதிரியால் ஆக்கிரமிக்கப்பட்டது என்பது செய்தியாகும் முதலே எனது நண்பனொருவன், யாழ்ப்பபாணத்தில் இருந்து கொழும்புக்கு பஸ் போவதாக செய்தி வாசிக்கின்றான். அப்போதே புரிந்து போனது எனக்கு, இது எதிரி ஓட்டும் பஸ் அல்ல, மாறாக எனது நண்பன் மனதுக்குள் ஓட்டி மகிழும் பஸ் என்பது. தனிமனித வாழ்வில், பின்னடைவுகளின் போது தான் அருகிருப்பவன் யார் என்பது துல்லியமாக தெரியவரும். இது ஒரு இனத்தின் விடுதலைப்பயணத்திற்கும் பொருந்திவரும்.

இப்போது மனசுக்குள் சில விடயங்கள் அலார்ம் அடிக்க தொடங்கி விட்டது. நாம் எத்தனை விடயங்களை கவனிக்க தவறியிருக்கின்றோம். எத்தனை காரியங்களை ஆற்றாமல் விட்டிருக்கின்றோம். இந்த இடைவெளிகளில் தானே எதிரி காலூன்றி இருக்கிறான்.

வரலாற்று வழியில், இராணுவ வழியில், ஆன்மிக வகையில், பொருளியல் கூறுகளில் என எக்கூறுகள் கொண்டு ஆய்வு செய்யினும், முடிவு எமக்கான இறுதி வெற்றியே.

சூழ்ந்திருக்கும் கும்மிருட்டு, சிறு மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தை எதிர்ப்பதற்கு கூட திராணியற்றது. நாங்கள் மெழுகுவர்த்தியாக இருந்தால், எந்த இருட்டும் எம்மை ஒன்றும் செய்ய முடியாது.

நம்பிக்கையுடன் இரு. வருகின்ற காலம் நமக்கானதே.

மடல் எழுது. மீண்டும் மறுமடலில் சந்திக்கின்றேன்.

தயா ஜிப்ரான்.

14.01.2009

www.inayatamil.wordpress.com

Edited by Thaya Jibbrahn

நம்பிக்கை தரும் மடல் தயா. நன்றி

தொடர்ந்து எழுதுங்கள்.... பல மாற்றங்களுக்கு இவை வித்திடும்.

  • கருத்துக்கள உறவுகள்

"அதையதை அதனதன் படியே உற்றுநோக்கி, காலத்தால் செய்யவேண்டிய பணிகளை ஆற்றுவது தான், ஒரு நிரந்தர மாற்றத்திற்கான திறவுகோல்"............

மடல் தற்போதிய நிலைமையை .......உணர்த்துகிறது மிகவும் பிடித்த வரிகள் கதை பகுதியில் வந்த மடல் மிக நன்று. .

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வா? சாவா என்று போராடும் எம்மின மக்களுக்கு உரம் சேர்க்கும் வகையில், எம்மாலான அனைத்துப் பங்களிப்புகளையும் வழங்கி, விடுதலைப் பயணத்தின் பக்கம் நிற்றல் தானே ஒரேவழி. இதில் சோர்ந்து போகவும், நொருங்கிப்போகவும் ஏதுமில்லை. ஒற்றைத் துப்பாக்கியுடன் தொடங்கிய போராட்டத்தை அழிக்க முடியாத அடக்குமுறையாளர்கள், இன்று உலக பலத்துடன் மோதவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்கின்ற ஒற்றை யதார்த்தம் போதுமே, நாமெல்லாம் புதுவீச்சுடன் பொங்கியெழுவதற்கு.

இப்போது மனசுக்குள் சில விடயங்கள் அலார்ம் அடிக்க தொடங்கி விட்டது. நாம் எத்தனை விடயங்களை கவனிக்க தவறியிருக்கின்றோம். எத்தனை காரியங்களை ஆற்றாமல் விட்டிருக்கின்றோம். இந்த இடைவெளிகளில் தானே எதிரி காலூன்றி இருக்கிறான்.

தயா ஜிப்ரான்.

14.01.2009

www.inayatamil.wordpress.com

நீண்ட இடைவெளியின் பின் வந்திருக்கிறீ்ர்கள் தயா. காலமறிந்த நம்பிக்கைதரும் மடல்.

நம்புவோம்.

நம்பிக்கைகள் தோற்றதாய் வரலாறில்லை. பலமே நமது வெற்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.