Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை தொடர்பான இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடு சரியானதே

Featured Replies

இலங்கை தொடர்பான இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடு சரியானதே

* பாதுகாப்பு செயலர் கோதாபய ராஜபக்ஷ திருப்தி

எம்.ஏ.எம்.நிலாம்

இலங்கை விடயத்தில் புதுடில்லி அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காது. அங்கு புத்திசாதுர்யமான தலைவர் இருக்கிறார். இலங்கை தொடர்பாக இந்தியா தற்போது எடுத்துள்ள நிலைப்பாடு சரியானதும் நியாயமானதுமென்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரச இலத்திரனியல் ஊடகங்களூடாக நேற்று புதன்கிழமை இரவு அளித்த பேட்டியிலேயே பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். இரவு 8.30 மணிக்கு ஆரம்பித்த இந்தப் பேட்டி சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்தது.

யுத்த நிலைவரம், அரசியல் நிலைமைகள், ஊடகங்கள் என பல விடயங்கள் தொடர்பாக தனது பேட்டியில் அவர் விளக்கமளித்தார்.

கோதாபய ராஜபக்ஷவின் பேட்டியின் விபரம் வருமாறு;

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இனிமேல் தப்பிவிட முடியாது. எந்தவேளையிலும் பிடித்தே தீருவோம். தண்டிக்கப்பட வேண்டியவர் நிச்சயம் தண்டிக்கப்படுவார்.

பயங்கரவாதிகளான புலிகளுக்காக குரல் கொடுப்பவர்கள் எவராக இருப்பினும் எந்த இனத்தைச் சேர்ந்தவராயினும் அவர்கள் தேசத்துரோகிகளாவர். அவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.

பயங்கரவாதத்தை முற்றுமுழுதாக தோற்கடித்து இலங்கையை ஒரே நாடாக மாற்றியமைப்பது மட்டுமே எமது ஒரே இலக்கு. இதைவிட்டு சில்லறைத்தனமான விடயங்களில் ஈடுபாடு காட்டுவது அர்த்தமற்றது.

பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் போரில் வெற்றி சாத்தியமானதற்கு பல முக்கிய அம்சங்கள் காரணிகளாக அமைந்தன. அதில் முதன்மையானது படைவீரர்கள் தம்மை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்டதாகும். ஆயுதங்கள் எந்தளவுக்கு குவிந்து காணப்பட்டாலும் அவற்றின் பின்னால் காணப்படும் படைவீரர்களின் அர்ப்பணிப்பின்றேல் இந்த வெற்றி சாத்தியப்படப்போவதில்லை.

அடுத்தது சிறப்பான அரசியல் தலைமைத்துவம். யுத்தத்தை அரசியல் மயப்படுத்துவதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இருக்கலாம். அது தப்பென நாம் கூறமாட்டோம். சிறந்த அரசியல் தலைமைத்துவம் நாட்டை பாதுகாக்க எத்தகைய முடிவையும் எடுக்கலாம். அந்த அடிப்படையில் அரசியல் தலைமைத்துவம் படைகளை வழிநடத்தியுள்ளது.

ஜனாதிபதி உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் பலத்த சவால்களை எதிர்கொண்டார். ஒரு சந்தர்ப்பத்தில் எந்தவொரு நாட்டிலிருந்தும் ஆயுதங்களை கொள்வனவு செய்ய முடியாத நிலை காணப்பட்டது.

அத்தனை சவால்களையும் முறியடித்து வெற்றியின் இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டோம். எமது நாடு மிகச் சிறந்த திறமைமிக்க இராணுவத் தளபதியைப் பெற்றுள்ளது. அவரின் தைரியம், தூரநோக்கு, வீரச்செயல் இன்றி எம்மால் இந்த வெற்றியின் பக்கம் சென்றிருக்க முடியாது.

ஜனாதிபதியின் மனோவலிமையை அளவுகோள் கொண்டு மதிப்பிட முடியாது. சர்வதேச அச்சுறுத்தல், அழுத்தங்கள், நெருக்கடிகள் ஒன்றன் பின் ஒன்றாக எதிர்கொண்டார். அனைத்தையும் முறியடித்து இலக்கில் பயணித்ததால் வெற்றியின் இறுதிக்கட்டத்துக்கு வர முடிந்தது.

புலிகளைப் பலம்வாய்ந்தவர்கள் என்றார்கள். பிரபாகரனைத் தோற்கடிக்க முடியாதென்றனர். இராணுவ நடவடிக்கையை தடுக்க முற்பட்டனர். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு தேடுமாறு வலியுறுத்தினர். அவற்றை நாம் பொருட்படுத்தவில்லை.

30 வருடங்கள் பலம்கொண்டதாகக் கருதப்பட்ட புலிகளைத் தோற்கடிக்க முடியாதென அர்த்தம் கற்பித்தனர். ஆனால் அரசாங்கத்துக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. இன்று அனைத்தும் வெற்றிகொள்ளும் கட்டத்துக்கு வந்துவிட்டோம். இறுதி வெற்றிவரை நாம் பின்வாங்கப்போவதில்லை.

விடுதலைப்புலிகள் இயக்கம் என்பது ஒரு சர்வாதிகாரியின் பயங்கரவாத இயக்கமாகும். தன்னை எதிர்த்தவர்கள் அனைவரையும் கொன்றொழித்த தலைவனே இந்த சர்வாதிகாரி. தனக்கு அடுத்த தளபதியைக் கூட தலைதூக்கவிடாத சர்வாதிகாரியாகவே பிரபாகரன் செயற்பட்டார்.

இங்குதான் முக்கிய விடயத்தை உறுதிபடத் தெரிவிக்க விரும்புகின்றேன். பிரபாகரனை உயிரோடு பிடிப்பது அல்லது அழிப்பது எமக்கு முக்கியமானதாகும். சின்னஞ்சிறிய பதுங்குக் குழிக்குள் பிரபாகரன் தள்ளிவிடப்பட்டுள்ளார்.

அவரால் இனிமேல் தப்பிச்செல்ல முடியாது. எந்தவேளையிலும் பிரபாகரன் பிடிபடுவார். இது உறுதி.

பிரபாகரன் அழிந்தால் இன்னும் பிரபாகரன்கள் தோன்றலாம் என்கின்றனர். உண்மைதான். ஆனால், அவ்வாறு தோன்றுவதற்கான சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்த மாட்டோம். திட்டமிட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அனைத்தும் முடிந்து விட்டது எனக் கருதிவிடவும் முடியாது. பிரபாகரனோ அல்லது இன்னொருவரோ இந்த வெற்றியை தட்டிப்பறிக்க இடமளிக்க முடியாது.

இன்று புலிகளுக்காகப் பேசுபவர்களே அன்று அவர்களைப் பாதுகாத்தனர். புலிகளுக்கும் எமக்கும் எந்த உடன்படிக்கையும் கிடையாது. நாட்டைக்காட்டிக் கொடுப்பவர்கள் நாமல்ல. துரோகிகளை நாடு விரைவில் கண்டு கொள்ளத்தான் போகிறது. போர் நிறுத்தமும் கருணாவை பிரித்ததுமே யுத்தவெற்றிக்கு காரணமென்கின்றனர். அப்படியாயின் ஏன் அவர்களால் முன்னர் இந்த வெற்றியை ஈட்ட முடியாது போனது எனக் கேட்க விரும்புகின்றேன்.

மங்கள சமரவீரவும் நாட்டுக்கு துரோகியாக மாறிவிட்டார். படைத்தரப்பு இழப்புகள் பற்றிய கணக்குக்காட்டி வருகின்றார். 11 வருடங்கள் அவரும் அமைச்சராக இருந்தவர். அவர் அமைச்சுப்பதவி வகித்த 2000ஆம் ஆண்டில் 2,248 படையினர் பலியானார்கள். அதற்கு அவரும் பொறுப்புக்கூறியாக வேண்டும். முல்லைத்தீவு, ஆனையிறவு, மாங்குளம், கிளிநொச்சி என அனைத்தும் அன்று அவர் அமைச்சராக இருந்தபோதே வீழ்ச்சி கண்டன.

மூன்று வருடங்களுக்கிடையில் இன்று அவை அனைத்தையும் மீட்டெடுத்துள்ளோம். இதுதான் எமது படைவீரர்களின் தியாகத்துக்குக் கிடைத்த வெற்றி. யாழ்.குடாநாட்டை முழுமையாக மீட்டு விட்டோம். கிளிநொச்சி, பரந்தன், பூநகரி அனைத்தையும் வென்றுவிட்டோம். அடுத்த எந்த நிமிடத்திலும் முல்லைத்தீவும் கைப்பற்றப்படும். பிரபாகரனை தப்பிச் செல்ல இடமளிக்கப் போவதேஇல்லை.

பிரபாகரனை பிடிப்பது உறுதியானது பிடிபட்டதும் எவருக்கும் கையளிக்கும் எண்ணம் எமக்குக்கிடையாது. ஜனாதிபதி என்ன செய்வாரோ எனத் தெரியாது. ஆனால் நாம் எடுத்திருக்கும் முடிவு பிரபாகரன் தண்டிக்கப்பட வேண்டும். எமது நாட்டில் தூக்கிலிடப்படவேண்டும் என்பதேயாகும். அதனைச் செய்ய எமக்கு உரிமையுண்டு. அவர் மாபெரும் கொலைக்குற்றவாளி. 200 வருடங்களுக்கு சிறைத்தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பவர். இந்தியாவிடம் கையளித்துவிட்டு எம்மால் ஆறுதலடைய முடியாது.

ஊடகங்கள்

எமது நாட்டின் ஊடகங்கள் நடந்து கொள்ளும் முறை வேதனைதரக்கூடியதாகவே உள்ளது. நேர்மையாக நடக்க வேண்டிய ஊடகங்கள் துரோகத்தனமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. சில முக்கிய ஊடகங்கள் புலிகளுக்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. "சிரச' ஊடகத்தை யார் தீ வைத்தனர். அவர்களே செய்துள்ளனர். காப்புறுதிபெறவும், இன்னொருதரப்புக்கு அரசியல் இலாபம் தேடவுமே அப்படிச் செய்தனர். உலகில் எங்குமில்லாத வகையில் இலங்கையில் ஊடகங்கள் தவறான வழியில் பயணித்துக் கொண்டிருக்கின்றன.

நாட்டில் எந்த ஊடகத்தையும் விட எமது பாதுகாப்புத் தரப்பு இணையத்தை 6 மில்லியன் மக்கள் நாள்தோறும் பார்க்கின்றனர். எமது நாட்டு ஊடகங்கள் பெரும்பான்மையாக புலிகளுக்குத்துணைபோவதாகவே உள்ளன.

சிரச தீவைப்பு தொடர்பாக ஒரு ஊடகவியலாளர் "சி.என்.என்.'னுக்கு பேட்டியளித்து அதனை அரசுதான் செய்ததாகக் கூறியுள்ளார். உண்மையை வெளிக்கொண்டு வந்ததும் முதல் வேலை அந்த ஊடகவியலாளரைப்பிடித்து சிறையில் அடைப்பதுதான்.

புலிகள் மீதான தடை

புலிகளை தாமதமாகியே தடைசெய்துள்ளோம். ஆனால், நான் எப்போதே தடை செய்து விட்டேன். பிரபாகரனைப் பிடிக்க திட்டமிட்ட அன்றே நான் புலிகள் மீது தடையை போட்டுவிட்டேன். பிரபாகரனை பிடிக்காதவரை நான் நித்திரை கொள்ளமாட்டேன். அந்த நல்ல செய்தி எந்த நேரத்திலும் எமதுகாதுகளில் விழத்தான் போகிறது.

இலங்கை விடயத்தில் புதுடில்லி அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காது. அங்கு புத்திசாதுர்யமான தலைவர் இருக்கின்றார். இந்தியா எடுத்திருக்கும் முடிவு சரியானது, நியாயமானது.

ஒரு குழு சொல்வதற்காக இந்தியா அவசரப்பட்டு மூக்குடைபட்டுக் கொள்ளமுற்படமாட்டாது.

அரச சார்பற்ற நிறுவனங்கள் கூட புலிகளுக்காகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. உள்ளூர், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் தமிழ் மக்களுக்கென்று கூறிக் கொண்டு கோடிக்கணக்கான பணத்தை புலிகளுக்கு வழங்கியுள்ளன.

வடக்கிலோ, கிழக்கிலோ அரச சார்பற்ற நிறுவனங்கள் செய்த அபிவிருத்தி எதுவுமே கிடையாது. முழுவதும் புலிகளுக்கே சேர்க்கப்பட்டுள்ளன.

யார் என்ன சொன்னாலும் அரசாங்கத்தின் பயணத்தில் எந்த விதமான மாற்றமும் நிகழாது. இலக்கு நோக்கிய பயணத்தில் வெற்றிக்கம்பம் வரை செல்வோம். மக்களுக்கான பயணமே அரசின் பயணம். காட்டிக் கொடுப்பவர்களுக்கோ, பச்சோந்திகளுக்கோ பயந்து நாம் ஒதுங்கப் போவதில்லையென்றார்.

http://www.thinakkural.com/

  • தொடங்கியவர்

:unsure:பிரபாகரனை பிடிக்காதவரை நான் நித்திரை கொள்ளமாட்டேன் - கோதாபய சபதம் :lol:

http://www.swissmurasam.net/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.