Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத் தமிழர் கோரிக்கைக்கு ஆப்பு வைக்கும் ஜெயலலிதா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர் கோரிக்கைக்கு ஆப்பு வைக்கும் ஜெயலலிதா!

-த.எதிர்மனசிங்கம்-

ஈழ தேசம் என்பது இன்று இல்லையாம் அதனால் ஈழத் தமிழர் என்ற இனமும் இல்லையாம். தமிழச்சியே அல்லாத இந்த அழகு சுந்தரிக்கு இப்படி ஒரு அதிசய சிந்தனை எழுவதில் எவருக்கும் வியப்பு ஏற்பட நியாயம் இருக்காது.

வெள்ளிப் பணத்துக்கு வெள்ளித் திரையில் ஆட்டம் போட்ட அம்மணிக்கு பூர்வீகம் தமிழ் நாடு அல்ல. அதனால் அவர் தமிழச்சியும் அல்ல. அதனால் தமிழர் இனம் பற்றியும் தமிழர் நாடு பற்றியும் அவருக்கு பட்டறிவு கிடையாது. அவரது படிப்பறிவும் நாடுகள், இனம் அல்லது வரலாறு பற்றியதாக இருக்கும் வாய்ப்பே நிச்சயமாக இல்லை.

அதுவல்ல, எமது பிரச்சினை. இங்கு ஈழம், ஈழத் தமிழர் பற்றிய அவரது பொன் மொழிகள் எமது தாய் மண் மற்றும் தமிழ் இனத்தின் விடுதலை பற்றி அவதூறாய் இருப்பதே எமது ஆதங்கமாய் இருக்கிறது.

எதற்கும் முதலில் அவர் பலமுறை ஆட்சி நடத்திய தமிழ் நாடும், தமிழ் மக்களும் 1967 க்கு முன்னர் மதராஸ{ம் மதராஸிகளும் என வழங்கி வந்த வரலாறு தெரியாமல் இருக்கிறதும் ஒருவேளை அவர் படித்த ஆங்கிலக் கான்வென்டுகளில் அவருக்குச் சொல்லிக் கொடுக்கப்படாத காரணமாகவும் இருக்கலாம்.

அவருடன் பதவிகள் வகித்த பேர்வழிகளும் அவை பற்றி அவர் மீதுள்ள பயம் காரணமாகச் சொல்லாமலும் விட்டிருக்கலாம். தன் நாட்டு நிலவரமே சரியாகத் தெரியாத நிலையில் அடுத்த நாட்டையும் மக்களையும் பற்றி அவர் பேசியது யாருக்காகவோ யாரேர கொடுத்த பணத்துக்காக அல்லாது அவரது அறிவு சம்பந்தப்பட்டதாக இல்லை என்பதே உண்மை.

இலங்கையில் தமிழர் என்ற இனத்தையே இல்லாமல் செய்வதே 1948 முதல் இன மேலாதிக்க சிங்கள அரசுகளின் செயற்பாடாக இருந்து வந்துள்ளது. தமிழ் இனத்தை இந்தியத் தமிழர் என்றும் இஸ்லாமியர் என்றும் பிரித்து வகைப்படுத்திச் சட்டங்களை இயற்றி இந்தியத் தமிழரின் வாக்குரிமையைப் பறித்து இந்தியாவுக்குக் கப்பல் ஏற்றி, தனிச் சிங்களச் சட்டம், நாட்டின் அரச மதம் புத்த மதம் என்பவற்றால் இலங்கை என்பதே இல்லாமல் செய்து ஸ்ரீ லங்கா என நாட்டின் பெயரை மாற்றிக் கொண்ட பின்னர்தான், தமிழினம் தனது பூர்வீக தேசத்தின் பெயரை மாற்றிக் கொண்டது.

ஈழம், ஈழத் தமிழர் பெயரால் 1952 இல் முன்னாள் வவுனியாப் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சி. சுந்தரலிங்கம் ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி என்று தனிக் கட்சி அமைத்துத் தனித் தமிழீழம் அமைக்கப் போராடியதும் அம்மையார் அறியாத விடயங்களே. அம்மையார் எப்போதும் உண்மைகள் பற்றிக் கவலைப்படுபவர் அல்ல. அவருக்கு கிடைக்கும் பணப் பெட்டியைப் பொறுத்தே அவரது அரசியலும் அமைவது உலகறிந்த விடையம்.

இத்தனை வருடங்களாகத் தன்னைத் தமிழீழ விடுதலைப் புலிகள் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் எனப் ஒப்பாரி வைத்துத் தனக்கு அதிசிறப்புக் காவல் படை வேண்டும் எனத் தனது அரசியலைச் செய்து வந்தார். ராஜீவ் காந்தியின் கொலையைத் தொடர்ந்து தனது அரசியல் துருப்புச் சீட்டாக இந்தத் தந்திரத்தைப் பயன்படுத்தி வருகிறார். ஆனால், பாவம் புலிகள் அவரை ஒரு பொருட்டாக எடுக்கவே இல்லை.

ராஜீவ் காந்தியின் கொலையால் பல வழியிலும் நன்மை பெற்றவர் ஜெயலலிதா என்பதை உலகமே அறியும். அக்கொலை மீதான பழியில் அவருக்கும் பங்கு இருக்கலாம் என்ற சந்தேகம் பல ஆய்வாளர்களிடமும் உள்ளது. ஒட்டு மொத்தமாக எதுவித சந்தேகமும் தமது பக்கம் வந்து விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாகவே இவரும் சுப்பிரமணிய சுவாமியும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தில் தீவிரமாக உள்ளனர்.

இலங்கை அரசு தனது தமிழின ஒழிப்புப் போருக்குப

தமிழ்நாதம்

எம் ஜீ ஆருக்கு நேர் மாறாக சாக்கடை அரசியல் நடத்தும் பெருச்சாளிகள் சிந்திக்கத்தெரியாத தமிழ்மக்களை ஏமாற்றலாம்... தமிழகம் இப்போது விழிர்ப்புணர்வு பெறத்தொடங்கிவிட்டது... விரைவில் மக்கள் தேர்தல் மூலம் பாடம்படிப்பிற்பார்கள்.. இலங்கை இனவாதிகளிடம் சில எங்கள் விரல்களே சோரம் போகும் போது இப்படியான தமிழ்மக்களின் பணம்,பதவிகளை குறியாக இருக்கும் கன்னடத்திகளுக்கு எப்படி எம்தமிழ்மக்களில் உண்மையான விருப்பம் இருக்கும்..இவர்களை எல்லாம் கணக்கில் எடுக்காமல் எம்மில் உண்மையான அன்பானமக்களை அரவணைப்போம்.. ஒற்றுமையாக செயல்படுவோம்.. ஊழையிடுவன, பிணந்தின்னிகள் தங்கள் வேலையை செய்யட்டும்..மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் போதும்.

Edited by KUGGOO

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த புரட்சித் தலைவர், கடமை வீரர், ஈழத் தமிழரின் நேசக்கரம் மாண்புமிகு எம்.ஜி.ஆர் அவர்களின் பேரும் புகழையும் வைத்து காலமோட்டி வருபவர் தானே இந்த ஜெயலலிதா.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அம்மணிக்கு எம்.ஜி ஆர் சொல்லியிருக்க மாட்டாரா..........

அல்லது எம் .ஜி ஆர் எங்கிருந்து வந்தவர் என்பது கூட தெரியாதா???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.