Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலைஞரே புறப்படுங்கள் இலங்கைக்கு ! - ஞானி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயகாந்தனுக்கு பத்மபூஷண் விருது தரும்படி சிபாரிசு செய்த கலைஞரின் தமிழக அரசு பாவம் கவிஞர் வாலியை ஏன் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதோ தெரியவில்லை.

ஜெயகாந்தன் என்ன கஷ்டப்பட்டாலும் வாலி லெவலுக்கு கலைஞருக்கு கிச்சு கிச்சு மூட்ட முடியவே முடியாது.

வாலியின் ஜொள்ளு கவிதையையும், எந்த ஆட்சி வந்தாலும் அதற்கு செல்லப்பிள்ளையாக மாறும் வித்தைகளையும் தெரிந்துவைத்துக் கொண்டிருக்கும் பட்டிமன்றப் பேச்சாளர்களின் `அவருக்கு நிகர் அவரே' ஜால்ரா சத்தங்களையும் முகத்தில் பரவசம் பொங்க மூன்று மணி நேரம் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்ததன் விளைவு கலைஞர் கருணாநிதிக்குக் கடும் முதுகு வலி ஏற்பட்டு மருத்துவமனைக்குப் போக வேண்டியதாகிவிட்டது.

அடுத்த முறை இப்படி மூன்று மணி நேரம் இன்னொரு ஜால்ரா நிகழ்ச்சியில் உட்கார்ந்து மறுபடியும் முதுகு வலியை வரவழைத்துக் கொள்ளாமல் இருப்பாரா என்றால், நிச்சயம் அந்தப் பக்குவம் அவருக்கு இல்லை. இந்த மாதிரி துதி பாடும் விழாக்களுக்கெல்லாம் வேறு வழி இல்லாமல் நிர்ப்பந்தத்தினால் செல்கிறாரா என்றால் அதுவும் இல்லை.

அவரே விரும்பித்தான் போகிறார். வள்ளுவர் கோட்ட விழாவில் அவரே சொல்லிவிட்டார். முன் தினம் விழா நடக்கும் இடத்தை வந்து பார்வையிட்டாராம். இன்னும் ஒரு தினத்தில் எல்லா ஏற்பாடும் முழுமை அடையுமா என்று கவலையாக இருந்ததாம். ஆனால் தம்பிகள் துரைமுருகனும் ஜெகத்ரட்சகனும் எல்லா ஏற்பாடுகளையும் வெகு சிறப்பாக செய்து முடித்துவிட்டார்களாம்.

தனக்குப் பாராட்டு விழா நடக்கப்போகும் இடத்தை முன் தினமே சென்று பார்வையிடும் அளவுக்கு அக்கறை காட்டிய கலைஞர் அதைச் செய்தது என்றைக்குத் தெரியுமா? இலங்கைத் தமிழரைக் காப்பாற்றும்படி மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய அன்றைக்குத்தான்.

வள்ளுவர் கோட்டத் தமிழர் பெருவிழாவில் நாள் முழுக்க கலைஞர் நாம சங்கீர்த்தனம் முடிந்த பின்னர், கடைசியில் ஐந்து நிமிடம் அவர் உரையில் இலங்கைத் தமிழர்களுக்காக உருகினார். நான் இந்த விழாவில் முழு மகிழ்ச்சியோடு இருக்கிறேனா என்று நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்று இலங்கைத் தமிழர் நிலை தனக்கு வேதனை தருவதை நமக்கு உணர்த்தினார். அப்படியாவது மகிழ்ச்சி இல்லாமல் பாராட்டு விழாவை நடத்திக் கொள்ள வேண்டும் என்று யார் அவரைக் கட்டாயப்படுத்த முடியும்? ரத்து செய்துவிட்டுப் போக வேண்டியதுதானே.

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க யோகாவையும் மனதை உற்சாகமாக வைத்திருக்க வாலி முதலான ஜால்ராக்களையும் கலைஞர் பயன்படுத்துகிறாரோ என்று தோன்றுகிறது.

மத்திய அரசுக்குத் தமிழக சட்டமன்றம் இறுதி வேண்டுகோள் விடுத்த மறு நாளே பிரதமர் மன்மோகன்சிங் மருத்துவமனைக்குப் போய்விட்டார். திரும்பி வர இரண்டு மாதமாகும். இப்போது அந்த இறுதி வேண்டுகோளுக்கு யார் பதில் சொல்வார்கள் என்பது கூடத் தெளிவாக இல்லை. அநேகமாக எம்.கே. நாராயணனிடமிருந்துதான் பதில் வரக்கூடும். அது வெளியே தெரிவிக்கக்கூடிய பதிலாக இருக்கவும் வாய்ப்பில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் அழைப்பு கலைஞருக்கு `வாராது வந்த மாமணி' போன்ற ஒரு வாய்ப்பாக வந்திருக்கிறது. இலங்கைக்கு வந்து விடுதலைப் புலிகளை ஆயுதங்களை வைத்துவிட்டு சரணடையச் செய்யவும் அவர்கள் பிடியில் இருக்கும் பொதுமக்களை விடுவிக்கச் செய்யவும் உதவும்படி கலைஞருக்கு ராஜபக்ஷே கோரிக்கை வைத்திருக்கிறார். இதர தமிழகத் தலைவர்களையும் அழைத்து வந்து நேரில் நிலையைப் பார்க்கும்படி சொல்லியிருக்கிறார்.

புலிகள் சரணடைய வேண்டும் என்ற ராஜபக்ஷேவின் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள அவர் கலைஞரையும் ஜெயலலிதாவையும் தமிழகத் தலைவர்களையும் பயன்படுத்தப் பார்க்கிறார் என்பது தெளிவு. ஆனால் இதே வாய்ப்பை கலைஞரும் தமிழகத் தலைவர்களும் இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த முடியும்.

பிரணாப் முகர்ஜியை அனுப்புங்கள்; எப்போது அனுப்புவீர்கள்? என்று மத்திய அரசிடம் கெஞ்சிக் கொண்டிருந்த தமிழகத் தலைவர்கள், தாங்களே இந்திய அரசின் சார்பாகப் போகும் வாய்ப்பாக இதை ஆக்கிக் கொள்ள முடியும். இந்திய அரசின் சார்பாக இலங்கைக்கு மலையாளிகளும் வடவர்களும்தான் செல்கிறார்கள். தமிழர்கள் செல்வதில்லை என்பதால் பிரச்னையை சரியாகக் கையாள்வதில்லை என்று விமர்சித்து வரும் தமிழக அரசியல் தலைவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும்.

கலைஞர் அவர்களே, மருத்துவமனையிலிருந்து விடுதலையானதும் நேராக இலங்கைக்குப் புறப்படுங்கள். டாக்டர் ராமதாஸ், தா.பாண்டியன், திருமா போன்றோரை உடன் அழைத்துச் செல்லுங்கள். ஜெயலலிதாவும் வைகோவும் நெடுமாறனும் எப்படியும் உங்களுடன் வரமாட்டார்கள். பரவாயில்லை.

இலங்கையில் இரு தரப்பினரும் போரை நிறுத்தச் செய்யுங்கள். பேச்சு வார்த்தையைத் தொடங்கச் செய்யுங்கள். அதற்கான முன்னோட்ட வரையறைகளை உருவாக்கிக் கொடுங்கள்.

இலங்கைத் தமிழர் துயரத்தைப் பேச்சு வார்த்தைகள் மூலம் துடைக்க முடியுமென்று எவனோ ஒரு நார்வேகாரன் நம்பி முயற்சித்தான் என்றால், தமிழராகிய உங்களால் ஏன் முடியாது? இதுவரை இப்படி ஒரு வாய்ப்பு கிட்டியதில்லை. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வரலாற்றில் இடம் பெறுங்கள்.

இதுவரை இலங்கைத் தமிழர் பிரச்னையில் நீங்கள் கபட நாடகம்தான் ஆடினீர்கள் என்ற அவப் பெயரையெல்லாம் துடைத்தெறியக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள். இலங்கைப் பயணமும் ராஜபக்ஷே சந்திப்பும் கொஞ்சம் முதுகுவலியை ஏற்படுத்தலாம். ராஜபக்ஷேவை சந்தித்து போரை நிறுத்தி பேச்சு வார்த்தை தொடங்க நீங்கள் ஏற்பாடு செய்துவிட்டால், அதற்காக நான் முன்னின்று உங்களுக்கு நடத்தக்கூடிய பாராட்டு விழா அந்த வலிக்கு அருமருந்தாக அமைந்துவிடும்.

புறப்படுங்கள் இலங்கைக்கு.

kumudam.com 04.02.2009

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயகாந்தன் தமிழீழ விடுதலையை பலமுறை கொச்சை படுத்திய ஒரு புல்லுருவி

கருணாநிதியை விமர்சிக்க சொற்களை தேடும் நிலையில் உள்ளோம், ஆகையால் மு.க சிபார்சு பொருத்தமானதே

அவர் இன்று மானாட மயிலாட பார்த்து கழுத்து வலி ஏற்பட்டதால் அன்பழகனை கொண்டு ஒரு புரளி கிளப்பியுள்ளார்

அதாவது இலங்கை அறிவித்த 48 மணி போர்நிறுத்தத்தினை புலிகள் பயன்படுத்தாமை ஆச்சரியம் அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதெல்லாம் தமிழரின் ஊழ்வினைப் பயனா?

இத்தகைய கடைந்தெடுத்த சுயநலம் பிடித்தவர்களெல்லாம் தமிழினத்தலைவன் என்று பெயர் எடுத்தது எவ்வாறு?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயகாந்தன் தமிழீழ விடுதலையை பலமுறை கொச்சை படுத்திய ஒரு புல்லுருவி

கருணாநிதியை விமர்சிக்க சொற்களை தேடும் நிலையில் உள்ளோம், ஆகையால் மு.க சிபார்சு பொருத்தமானதே

அவர் இன்று மானாட மயிலாட பார்த்து கழுத்து வலி ஏற்பட்டதால் அன்பழகனை கொண்டு ஒரு புரளி கிளப்பியுள்ளார்

அதாவது இலங்கை அறிவித்த 48 மணி போர்நிறுத்தத்தினை புலிகள் பயன்படுத்தாமை ஆச்சரியம் அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதெல்லாம் தமிழரின் ஊழ்வினைப் பயனா?

இத்தகைய கடைந்தெடுத்த சுயநலம் பிடித்தவர்களெல்லாம் தமிழினத்தலைவன் என்று பெயர் எடுத்தது எவ்வாறு?

எல்லாம் முன்னேற்பாடுகள்/சிபாரிசுகள் தான். அவரின் தமிழைக்குறைசொல்ல முடியாது ஆனால் தமிழினத்தலைவன் என்பது அவருக்கு என்றும் பொருந்தாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.