Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரும் எழுச்சியை ஏற்படுத்திய இறுதி ஊர்வலம்: லட்சம் மக்கள் பங்கெடுப்பு

Featured Replies

muthukumaarr.jpg

ஈழத்தமிழர்களுக்காக நேற்று முன் தினம் சென்னையில் தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் சென்னை கொளத்தூரில் உள்ள அவரது வீட்டில் ஆரம்பமாகிவிட்டது.

கொளத்தூரில் இருந்து மூலக்கொத்தளம் என்கிற இடத்துக்கு இந்த ஊர்வலம் 2 மணி நேரமாக நடைபெற்று வருகிறது.

இந்த ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். இதில் பெண்களும், மாணவர்களுமே பெரும் பங்கேற்றுள்ளனர். 3கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் பங்கெடுத்துள்ள இந்த இறுதி ஊர்வலம் நீண்டுள்ளது.

ஊர்வலத்தின் வழிநெடுகிலும் பொதுமக்கள் தண்ணீர் பந்தல், மோர் பந்தல் அமைத்து ஊர்வலத்தில் பங்கெடுத்துள்ள தமிழுணர்வாளர்களுக்கு தாகம் தீர்க்கின்றனர்.

முத்துக்குமார் உடல் செல்லும் வாகனத்தில் இயக்குநர் அமீர் அமர்ந்துள்ளார்.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைச்சேர்ந்த வைகோ, பழ.நெடுமாறன், திருமாவளவன் உட்பட அரசியல் தலைவர்களும் பாரதிராஜா,சீமான், செல்வமணி உட்பட திரைப்பட உலகினரும் தமிழுணர்வாளர்களும் இலங்கைக்கு துணைபோகும் மத்திய அரசை கண்டித்து ஆவேசமாக கோஷமிட்டபடியே இறுதி ஊர்வலத்தில் செல்கின்றனர்.

முத்துக்குமார் சடலத்தின் மீது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் உருவம் பதித்த துணி போர்த்தப்படிருந்தது.

பாதி ஊர்வலத்தில் அந்த பிரபாகரன் துணியை எடுத்துவிட்டனர்.

ஒடுக்கப்பட்டோருக்கான அமைப்பினர், இந்த ஊர்வலத்தின் போது இந்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி இந்திய தேசியக்கொடியை எரித்தனர்.

சென்னை மாநகரரில் இந்த இறுதி ஊர்வலம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by vasisutha

முத்துக்குமாரும் விதைக்கப்பட்டார்...

இந்தத்தீ நிச்சயம் ஒருநாள் இந்தி வெறியரைச்சுடும்.

  • கருத்துக்கள உறவுகள்

முத்துகுமாரின் கனவு நனவாக வேண்டும்.

  • தொடங்கியவர்

தீப ஒளி விளக்கு ஏந்தி பொதுமக்கள் அஞ்சலி!

ஈழத்தமிழர்களுக்காக நேற்று முன் தினம் சென்னையில் தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் சென்னை கொளத்தூரில் உள்ள அவரது வீட்டில் தொடங்கி இறுதிச்சடங்கு நடைபெறும் மூலக்கொத்தளம் இடத்துக்கு 3மணி நேரமாக போய்க்கொண்டிருக்கு.

சென்னை மாநகரரில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான தமிழுணர்வாளர்கள் பங்கெடுத்துள்ளனர். 3கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் பங்கெடுத்துள்ள இந்த இறுதி ஊர்வலம் நீண்டுள்ளது.

பெரம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஊர்வலம் போன போது பொதுமக்கள் முத்துக்குமாரின் உடல் செல்லும் வாகனத்துக்கு தீப ஒளி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

ஐந்து மணிநேர இறுதி ஊர்வலம்: வழிநெடுகிலும் கடையடைப்பு

ஈழத்தமிழர்களுக்காக நேற்று முன் தினம் சென்னையில் தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் சென்னை கொளத்தூரில் உள்ள அவரது வீட்டில் 3மணிக்கு தொடங்கி இறுதிச்சடங்கு நடைபெறும் மூலக்கொத்தளம் இடத்துக்கு 4,1/2 மணி நேரமாக போய்க்கொண்டிருக்கு.

இன்னும் அரை மணி நேரத்துக்கும் மேல் இந்த இறுதி ஊர்வலம் நீடிக்கும்.

சென்னை மாநகரரில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான தமிழுணர்வாளர்கள் பங்கெடுத்துள்ளனர். 3கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் பங்கெடுத்துள்ள இந்த இறுதி ஊர்வலம் நீண்டுள்ளது.

இறுதி ஊர்வலத்தின் வழிநெடுகிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கடையடைப்பு மூலமாக வணிகர்கள் முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.

ஊர்வலத்தின் வழிநெடுகிலும் பொதுமக்கள் தண்ணீர் பந்தல், மோர் பந்தல் அமைத்து ஊர்வலத்தில் பங்கெடுத்துள்ள தமிழுணர்வாளர்களுக்கு தாகம் தீர்க்கின்றனர்.

பெரம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஊர்வலம் போன போது பொதுமக்கள் முத்துக்குமாரின் உடல் செல்லும் வாகனத்துக்கு தீப ஒளி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

nakkheeran

  • தொடங்கியவர்

ஐந்து மணிநேர ஊர்வலத்துக்கு பின் முத்துக்குமார் உடல் தகனம்

ஈழத்தமிழர்களுக்காக நேற்று முன் தினம் சென்னையில் தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் இன்று(31.1.09)சென்னை கொளத்தூரில் உள்ள அவரது வீட்டில் 3மணிக்கு தொடங்கிது. 5 மணி நேரத்துக்கு பிறகு இறுதிச்சடங்கு நடைபெறும் மூலக்கொத்தளத்தில் ஊர்வலம் முடிந்தது.

இந்த இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான தமிழுணர்வாளர்கள் பங்கெடுத்தனர். 3கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் பங்கெடுத்துள்ள இந்த இறுதி ஊர்வலம் நீண்டுள்ளது.

முத்துக்குமாரின் உடல் மாலை 3 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டது. அவரின் உடலை சட்டக்கல்லூரி மாணவர்களே தோளில் சுமந்து கொண்டு வண்டியில் ஏற்றினார்கள்.

வாகனத்தின் முன்புறம் பிரபாகரன் படமும், முத்துகுமார் படமும் வைக்கப்பட்டிருந்தது. மேலும், வாகனத்தின் இரு புறங்களிலும் முத்துக்குமார் தியாகம் குறித்த சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன.

முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் கட்சிக் கொடிகளை கொண்டு வரவேண்டாம் என்று மாணவர்கள் ஏற்கனவே கேட்டுக் கொண்டனர்.

கட்சி வேறுபாடில்லாமல் வந்திருந்த அனைவரும் கறுப்புக் கொடியை ஏந்தியபடி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

மூலக் கொத்தளம் சுடுகாட்டுக்கு கொண்டு வரப்பட்ட முத்துக்குமாருடைய உடல் அங்கே தகனம் செய்யப்பட்டது.

Nakkheeran

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.