Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை விவகாரத்தில் கனடா மெளனத்தைக் கலைக்க வேண்டும் - அல்பினா குவார்னியறி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

01/02/2009, 14:44 [ கொழும்பு நிருபர் மயூரன் ]

இலங்கை விவகாரத்தில் கனடா மெளனத்தைக் கலைக்க வேண்டும் - அல்பினா குவார்னியறி

இலங்கை விவகாரம் தொடர்பில் கனடிய அரசாங்கத்தன் மௌனம் கலைக்க வேண்டும் என லிபரல் கட்சியின் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் அல்பினா குவார்னியறி கேட்டுக் கொண்டுள்ளார்.

நேற்று சனிக்கிழமை கனடிய பாராளுமன்றில் உரையாற்றிய போது இலங்கை விவகாரம் தொடர்பில் கனடிய அரசாங்கம் நீண்டகாலமாகவே மௌனத்தைக் கடைப்பிடித்து வருகிறது. அந்த மௌனத்தைக் கனடிய அரசாங்கம் உடனடியாகக் கலைக்க வேண்டும்.

அப்பாவித் தமிழ் மக்கள் இராணுவத்தினரால் அகோரமான தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். காணாமல் போதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மக்கள் படையினரின் தாக்குதல்கள் காரணமாக பலவந்தமாக இடம் பெயர வைக்கப்படுகிறார்கள். தேவாலயங்கள், பாடசாலைகள், மருத்துவ மனைகள் என்பன தாக்குதல் இலக்குகளாகியுள்ளன.

உதவிப் பணியாளர்கள் அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். கொல்லப்பட்டு வருகிறார்கள். உண்மைகளை அறிந்து வர அப்பகுதிகளுக்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் கொல்லப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் தொடர்கிறது.

இவ்வாறான நிகழ்வுகளின் போதெல்லாம் கனடிய அரசாங்கம் மௌனம் சாதித்து வருகிறது. இந்த மௌனம் கண்டனத்துக்குரியது.

இந்த மௌனத்தைக் கலைத்து கனடிய கொன்சவேர்ட்டிவ் அரசாங்கம் தமிழ் மக்களின் மனித உரிமைகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் இந்த வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வரும் முகமாக ஒன்றிணைந்த சர்வதேச முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

pathivu

அமெரிக்கா என்னத்தச் சொல்லுதோ அதத்தான் செய்வாங்க. அதுவரை மௌன ராகந்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை விவகாரம் தொடர்பில் எப்போது உங்கள் மௌனம் கலையும்?: கனேடிய எம்.பி. கடும் சீற்றம்

Sunday, February 1, 2009, 11:20 செய்திகள் இலங்கை விவகாரம் தொடர்பில் நீண்டநாட்களாக கடைப்பிடித்துவரும் மௌனத்தை கனேடிய அரசாங்கம் கலைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் அல்பினா குவார்னியறி, அங்கு நடைபெறும் வன்முறைகளுக்கு எதிரான நிலைப்பாடொன்றை கனேடிய அரசு எடுக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

minister_photo.jpg

பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை காலை விடுத்த அறிக்கையொன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ள எம்.பி அல்பினா குவார்னியறி இலங்கையிலுள்ள அப்பாவி மக்கள் இராணுவ நடவடிக்கையால் காடுகளுக்குள் தஞ்சமடைய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ள நிலையிலும் கூட தனது அரசாங்கம் மௌனமாக இருப்பதை தான் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

லிபரல் கட்சி எம்.பி.யான குவார்னியறி மேலும் தெரிவித்துள்ளதாவது;

இராணுவத்தினரால் உதவிப்பணியாளர்கள் கொல்லப்பட்டபோது கனடா அமைதியாக இருந்தது. மருத்துவமனைகள்,பாடசாலைகள் மற்றும் தேவாலயங்கள் குண்டு வைத்து தகர்த்தப்பட்டபோதும் கனடா அமைதியாக இருந்தது. பலவந்த இடப்பெயர்வுகள், எண்ணிலடங்காத கொடுமைகள் மற்றும் பாரியளவில் காணாமல் போதல்கள் நடைபெற்று வரும் நிலையிலும் கூட கனடா தொடர்ந்தும் அமைதியாகவே இருக்கிறது.

அங்கு இலட்சக்கணக்கான மக்கள் காடுகளில் தஞ்சமடைந்துள்ள அதேவேளை, உண்மையை அறிவதற்கு வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ் மக்களின் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனேடிய கொன்சவேடிவ் அரசாங்கம் எடுக்கவேண்டுமெனவும் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒன்றிணைந்த சர்வதேச முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த புதன்கிழமை குவார்னியறியின் மிசிசௌகா நகர வீதிகளில் கூடிய நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதல் பகுதியில் சிக்குண்டுள்ள பொதுமக்களின் உயிரிழப்புகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய குழுவொன்றையும் அப்பகுதிக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.nerudal.com/nerudal.101.html

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை விவகாரம் தொடர்பில் எப்போது உங்கள் மௌனம் கலையும்?: கனேடிய எம்.பி. கடும் சீற்றம்

Sunday, February 1, 2009, 11:20 செய்திகள் இலங்கை விவகாரம் தொடர்பில் நீண்டநாட்களாக கடைப்பிடித்துவரும் மௌனத்தை கனேடிய அரசாங்கம் கலைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் அல்பினா குவார்னியறி, அங்கு நடைபெறும் வன்முறைகளுக்கு எதிரான நிலைப்பாடொன்றை கனேடிய அரசு எடுக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

minister_photo.jpg

இவருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்து மேலும் இவர்போன்றவர்களின் ஆதரவை எமக்காகத் திருப்ப முயல்வது பயனுடையதாயிருக்கும்.

இவரது முகவரி , தொலைபேசி, தொலைநகலி மற்றும் மின்னஞ்சல்.

Canada. Members of Parliament

Mississauga East-Cooksville, Albina Guarnieri (Liberal)

33 City Centre Dr, Ste 364

Mississauga, ON L5B 2N5

Tel: 905-566-0009

Fax: 905-566-0017

Guarnieri.A@parl.gc.ca

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நொச்சி. அவருக்கு நன்றி சொல்லி தொலைநகல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து எங்களூக்காக குரல் கொடுக்குமாறூம் வேண்டிக்கொண்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி!

அனுப்பியுள்ளோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொலைபேசியிலும் அழைத்து ஒரு நன்றி சொன்னேன். தொலைநகலும் அனுப்பி வைப்போம்.

நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.