Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனடாவில் தமிழ் சிறுமியின் உள்ளக்குமுறல் எல்லோரும் பார்க்க வேண்டிய காணோளி

Featured Replies

இந்த உணர்வை காசுக்காகவும் பதவிக்காகவும் மழுங்கவைச்சிருக்கிற மற்றவர்கள் இதைக்கண்டாவது உணர்வார்களா?

கவனம்

அந்தக் குழந்தை விபரம் புரியாமல் பேசுகிறது

அதை ஊடகவியலாளர்கள் கவனத்தில் எடுத்து எடிட் செய்திருக்க வேண்டும்.

ஒரு முறை ஒருவரை கொல்வதாகவும்

மறுமுறை அங்கு சென்று வைத்தியராக உதவி புரியப் போவதாகவும் பேசுகிறார்.

பேசுபவர்தான் ஒரு குழந்தை

எடுத்தவரும் ஒளிபரப்பியவருமா?

இவை எமக்கு எதிராக மாறிவிடும்

புலத்தில் குழந்தைகளை வன்முறை நோக்கி

தமிழர்கள் உருவாக்குகிறார்கள் என்று.................?

பிரிட்டனில் பாகிஸ்தான் இளைஞர்களை

அப்படித்தான் அடையாளப்படுத்தப்படுகிறார்க

Edited by Thalaivan

தவறுக்கு வருந்துகிறேன். அடுத்தமுறை இவ்வாறான விடயங்களைக் கவனத்தில் எடுக்கிறேன். நன்றி தலைவன்.

தவறுக்கு வருந்துகிறேன். அடுத்தமுறை இவ்வாறான விடயங்களைக் கவனத்தில் எடுக்கிறேன். நன்றி தலைவன்.

நன்றி நக்கீரன்.

நாம் மிக விழிப்போடு செயல்பட வேண்டியுள்ளது.

உங்கள் பெரிய மனதை பாராட்டுகிறேன்.

சிறப்பாக தொடரட்டும் உங்கள் பணி.

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தை சொல்வதில் உணர்சிகள் கிளறப்பட்டாலும் தலைவனின் கரு;தைக் கவனத்தில் எடுக்கும் படி எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கவனம்

அந்தக் குழந்தை விபரம் புரியாமல் பேசுகிறது

அதை ஊடகவியலாளர்கள் கவனத்தில் எடுத்து எடிட் செய்திருக்க வேண்டும்.

ஒரு முறை ஒருவரை கொல்வதாகவும்

மறுமுறை அங்கு சென்று வைத்தியராக உதவி புரியப் போவதாகவும் பேசுகிறார்.

பேசுபவர்தான் ஒரு குழந்தை

எடுத்தவரும் ஒளிபரப்பியவருமா?

இவை எமக்கு எதிராக மாறிவிடும்

புலத்தில் குழந்தைகளை வன்முறை நோக்கி

தமிழர்கள் உருவாக்குகிறார்கள் என்று.................?

பிரிட்டனில் பாகிஸ்தான் இளைஞர்களை

அப்படித்தான் அடையாளப்படுத்தப்படுகிறார்க

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப்பிள்ளையின் உண்மையான உணர்ச்சிகள், அதாவது எமது மக்களை கொல்லும் அரக்கர்களை பழிவாங்குவேன், அரக்கர்களால் சிதைக்கப்படும் எமது மக்களை வைத்தியராக வந்து காப்பாற்றுவேன், இதில் என்னங்க தப்பு?

இதிலை எடிட் பண்ணுவதிற்கு ஒன்றுமில்லையங்க, சிறு பிள்ளை மட்டுமல்ல இன்றைய சூழ்நிலையிலை ஒவ்வொரு தமிழ் மகனின் ஆவேசம் இதுதானங்க.

அந்தப்பிள்ளையின் உண்மையான உணர்ச்சிகள், அதாவது எமது மக்களை கொல்லும் அரக்கர்களை பழிவாங்குவேன், அரக்கர்களால் சிதைக்கப்படும் எமது மக்களை வைத்தியராக வந்து காப்பாற்றுவேன், இதில் என்னங்க தப்பு?

இதிலை எடிட் பண்ணுவதிற்கு ஒன்றுமில்லையங்க, சிறு பிள்ளை மட்டுமல்ல இன்றைய சூழ்நிலையிலை ஒவ்வொரு தமிழ் மகனின் ஆவேசம் இதுதானங்க.

நாம் ஒவ்வொருவரை தலைமைக்கு கொண்டு வாறதும்

பின்னர் அவரை கொலை செய்ய நினைப்பதும்

அல்லது கொலை செய்வதும்தான் நாம் நமது பிரச்சனையை தீர்க்க வழி என நினைக்கிறோம்.

ஆனால் இருந்த பேயை விட வந்த பேய் மோசமாகவே இருப்பது யதார்த்தம்.

எனவே மகிந்தவை கொல்வதால் பிரச்சனை தீரும் என்றால்

அதுபோல் முட்டாள்தனம் வேறு எதுவுமில்லை.

அதைவிட மோசமான ஒரு தலைமைதான் அங்கு உருவாகும்.

டீ.எஸ்.சேனாநாயக்காவிலிருந்து மகிந்த வரை அதுதான் நம்மால் காண முடிவது?

வல்வை மைந்தன்

பக்கத்து வீட்டில் உங்களோடு ஏற்படும் பிரச்சனைக்கு

உங்கள் குழந்தையின் கையில் ஒரு துப்பாக்கியை கொடுத்து

அந்த எதிரியை கொன்று போட்டு வா என்று சொல்ல முடியுமா என யோசியுங்கள்

விபரீதம் புரியும்?

இந்த ஒளிப்பதிவு அந்த குழந்தை வாழும் நாட்டு பாதுகாப்பு துறைக்கு கிடைத்தால்

நிச்சயம் அந்த குழந்தையை மனநோயாளர் விடுதிக்கு அனுப்புவார்கள்.

டாக்டர் ஆக அல்ல டாக்டர்களது கண்காணிப்புக்கு......

பெற்றோரும்

அந்த நிலையை தோற்றுவித்தோரும் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு

தண்டனை பெற வேண்டி வரும்.

நான் வாழும் நாட்டில் அப்படி நடந்துள்ளதை நான் அறிவேன்.

குருதீஸ் இனத்தை சேர்ந்த ஒரு பகிஸ்கரிப்பின் போது

ஆயுதங்களை ஏந்தி எதிரிகளை கொன்றுதான் நமது சுதந்திரத்தை பெறுவோம் என

16 வயது பெண் குழந்தை கோஸமிட்டதை கண்ட போலீசார்

அந்தக் பெண்ணை கைதுசெய்து மனநல மருத்துவ மனைக்கு அனுப்பினார்கள்.

பின்னர் சில காலத்துக்கு பின் அந்தப் பெண் விடுவிக்கப்பட்டாலும்

அந்த பாதிப்பிலிருந்து இன்றும் அந்த பெண் விடுபடவில்லை.

தனக்கு நேர்ந்த அவமானத்தால் அந்த பெண் மனநோயாளியாகி விட்டாள்.

அரசு

பணத்தால் உதவுகிறது.

இருந்தும் என்ன பயன்?

அந்த பெண்ணின் வாழ்கை இருளில்.............?

நாம் வாழ்வது இலங்கையிலல்ல?

அதை மறக்க வேண்டாம்.

பிள்ளைகள் தவறு செய்யலாம்

ஆனால் பெரியவர்களும்

சிறுபிள்ளைத்தனமாக இருத்தல் ஆகாது.

ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழரும்

திருப்பி அனுப்ப இதுபோன்ற ஒரு சில நிகழ்வுகள் போதும்.

நீங்கள் ஒரு நாட்டின் குடியுரிமை பெற்றிருக்கலாம்

ஆனால் அதை மறுத்து திருப்பி அனுப்பும் வல்லமை அந்த நாடுகளுக்கு உண்டு.

உலக நாடுகள் தொடர்ந்தும் சிறீலங்கா அரசுக்கு உதவுகிறது.

ஏன் ?

நீங்கள் வாழும் நாடும்தான்

முடிந்தால்

நீங்கள் நடத்தும் கவனயீர்ப்பு போராட்டங்களில்

அந்த நாட்டு சொத்துகளை அழித்துப் பாருங்கள்.

அவர்களுக்கு எதிராக கொலைவெறித் தாண்டவம் ஆடிப்பாருங்கள்.

நிலமை புரியும்?

செப்டம்பர் 11 க்கு பின்னர் உலக இஸ்லாமியர்களின் நிலைக்கு

எம்மவரையும் தள்ள வேண்டாம்.

அதன் பின்னர் மகிந்தவின் சுதந்திர உரைதான்

பதில் சொல்லும்

உள்நாட்டு மோதல்கள் காரணமாக புலம் பெயர்ந்து

சென்ற அனைவரும் நாடு திரும்ப வேண்டுமென

ஜனாதிபதி தனது சுதந்திரதின உரையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

முக்கிய குறிப்பு : முடிந்தால் தயவு செய்து அந்த வீடியோவை யூடியுப்பிலிருந்து

போட்டவர் தூக்கி விட வேண்டுகிறேன்.

இவை எதிரிக்கு ஒரு பலமாக அமைந்துவிடும்

- நன்றி

Edited by Thalaivan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.