Jump to content

போரை முன்னெடுக்கும் பின்னணியில் இந்தியா: தமிழ் மக்கள் கவலை - பா.உ கஜேந்திரன்


Recommended Posts

இன அழிப்பு முன்னரை விடவும் உக்கிரமாக இடம்பெறத் தொடங்கியுள்ளது. இதன் பின்னணியில் இந்தியா ஆயுதங்களையும், இராணுவ நிபுணர்களையும் வழங்கி இலங்கை அரசை ஊக்கப்படுத்தி, போரை முன்னெடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுவருவதாக த.தே.கூ. பா.உ. கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இலங்கையில் இருக்கும் இந்திய உயர்ஸ்தானியர் அலுவலகத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரி்விக்கப்பட்டுள்ளதாவது

வன்னியில் 450000 தமிழ் மக்கள் தங்குமிடங்களோ உணவு மருந்துப் பொருட்கள் உட்பட்ட மனிதாபிமான உதவிகள் எதுவும் இல்லாத நிலையில் அனைத்தும் இலங்கை அரசால் தடை செய்யப்பட்டுள்ள சாவின் விளிம்பில் வாழ்கின்றனர்.

மக்கள் பாதுகாப்பாக ஒதுங்குவதற்கென அறிவிக்கப்பட்ட பகுதிகளை இலக்கு வைத்து சிறீலங்கா அரச படைகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக கடந்த ஒரு மாதகாலத்தில் நூற்றுக்கு மேற்பட்ட சிறுவர்கள் உட்பட 800 ற்கும் அதிகமான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1900 ற்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

தினமும் ஆகக் குறைந்தது 25 பொது மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். இன்றய தினம் மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் மீது சிறீலங்கா இராணுவம் 5000 திற்கும் அதிகமான பல்குழல் றொக்கற் குண்டுகளையும், ஆட்டிலறி எறிகணைகளையும்;, கொத்துக் குண்டுகளையும், எரி குண்டுகளையும் வீசி பெருமளவான பொது மக்களை படுகொலை செய்துள்ளதுடன் நூற்றுக் கணக்கான பொது மக்களை காயப்படுத்தியும் உள்ளது. வைத்தியசாலைகளும் தாக்கி அழிக்கப்படுகின்றன.

வைத்தியசாலைகள் அனைத்தும் இடம் பெயர்ந்து அடிப்படை வசதிகள் எதுவும் அற்ற நிலையில் ஓலைக் கொட்டில்களில் 9 வைத்தியர்களுடன் இயங்கிவருகின்றது. காயமடைந்தவர்களை பராமரிக்க முடியாத நிலையில் வைத்தியசாலைகள் திணறுகின்றது.

வன்னியில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் சென்ற பெருமளவான பெண்கள் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பின்னரே யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் நூற்றக்கணக்கானோர் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன் நூற்றுக் கணக்கானோர் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டு இராணுவத்தினரால் சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர்.

முகாம்களுக்கு அனுப்பப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாது. அந்த மக்களை சர்வதேச தொண்டு நிறுவனங்களோ ஊடகவியலாளர்களோ சென்று பார்வையிட முடியாது.

இவ்வாறான அவலங்கள் தொடரும் போது போரை நிறுத்தி மக்கள் கொல்லப்படுவதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கும் படி புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, அமெரிக்கா ஆகிய அனைத்து நாடுகளுக்கும் தொடர்ச்சியாக கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

தமிழ் நாட்டுத் தமிழ் உறவுகளும் இந்திய மத்திய அரசிடம் இலங்கையில் யுத்த நிறுத்தம் ஏற்படுத் நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசிடமும் மத்திய அரசிடமும் கோரி வருகின்றனர்.

இந் நிலையில் இந்திய உயர் அதிகாரிகளான திரு சிவ்சங்கர்மேனன் அவர்களும் அவரைத் தொடர்ந்து திரு பிரணாப் முகர்ஐp அவர்களும் இலங்கை சென்று திரும்பியுள்ளனர். இவர்களது இலங்கை விஐயம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு தீவிரப்படுத்தியுள்ள இன அழிப்பு போரை தடுத்து நிறுத்தி உடனடி போர் நிறுத்தம் ஒன்றினை ஏற்படுத்த வழி வகுக்கும் என்று தமிழ் மக்கள் பெரிதும் நம்பினர்.

எனினும் போர்ச் சூழலில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாத நிலையில் இன அழிப்பு முன்னரை விடவும் உக்கிரமாக இடம்பெறத் தொடங்கியுள்ளது. இதன் பின்னணியில் ஆயுதங்களையும், இராணுவ நிபுணர்களையும் வழங்கி இலங்கை அரசை ஊக்கப்படுத்தி, போரை முன்னெடுக்கும் செயற்பாட்டில் இந்தியா செயற்படுவதாகவே தமிழ் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு போருக்கு இந்தியா வழங்கிவரும் ஆதரவை உடன் விலக்கி கொள்ள வேண்டும் என கோருவதுடன்.

உடனடி போர் நிறுத்தம் ஒன்றினை ஏற்படுத்வும் உணவு மருத்து உட்பட அவசர மனிதாபிமான உதவிகள் அனைத்தையும் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகின்றேன். தமிழ் மக்களை பாதுகாக்க அவசர நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகின்றோம்.

pathivu.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இன்ஃப்ளூயன்ஸா தொற்றுகள் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து வரும் நிலையில், தலைவலி மற்றும் சோர்வு. காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் அல்லது அடைத்தல், தசை அல்லது உடல் வலி போன்ற அறிகுறிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், இது குழந்தைகள் மத்தியில் அதிகமாகக் காணப்படுவதாகவும், எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். “வழக்கமாக நவம்பர் முதல் பெப்ரவரி வரை மற்றும் ஏப்ரல் முதல் ஜூலை வரை காய்ச்சலின் இரண்டு உச்சநிலைகள் உள்ளன,” என்று அவர் கூறினார். “இந்த நேரத்தில், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியிலும் தொற்றுகள் கணிசமாக உயர்ந்துள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நோயாளர் தொகை இரட்டிப்பாகியுள்ளன. நோய் அறிகுறிகள் தொடர்ந்தால், உடனடி மருத்துவ உதவியை நாடுவது அவசியம் என அவர் வலியுறுத்தினார். கர்ப்பிணித் தாய்மார்கள், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். கொழும்பு, ராகம, களுபோவில, நீர்கொழும்பு வைத்தியசாலைகள், லேடி ரிட்ஜ்வே சிறுவர்களுக்கான வைத்தியசாலை மற்றும் தொற்று நோய் வைத்தியசாலை உட்பட 20 வைத்தியசாலைகளில் இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய் கண்காணிப்பை அதிகரிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் ஆலோசனை வழங்கியுள்ளார். https://thinakkural.lk/article/301578
    • சவுக்கின் முன்னாள் மனைவி/பிள்ளையின் தாயின் கருத்து.
    • ஓம் .அதில் அவர்கள் காட்டும் ஆர்வம்👍 நீங்கள் சொன்னது உண்மை தான்.   மேலே உள்ள மாட்டுக்கறி பாடல் என்ற வீடியோவில் மாட்டு கறியின் புகழை பாடுகிறார்கள்  என்று நம்புகிறேன்.இப்படி இது போல் நல்ல உணவுகள் சாப்பிடுங்கோ என்று பாட்டு பாடி இருப்பார்களா. பாடலில் மாட்டுக்கறி வேறுலெவல் என்கிறார்கள்.  வேறுலெவல்  என்றால் தமிழில் ஒப்புவமையற்றது தானே
    • நோயாளி மருந்தை விலைகொடுத்துப் பெற்று உட்கொண்ட பின்னர்  மருந்துக்கடைக்காறரைக் கைகாட்டுவது சரியானதாகுமா?  உலகம் முழுதும் எல்லாவற்றையும் கண்காணிக்கத் தெரிந்த அமெரிக்காவிற்கு உள்ளூர் மருந்து வினியோகத்தர்கள் யாரென்று  மட்டும்  தெரியாது..  😁
    • நாட்டிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய கல்வி அமைச்சும், சமூக வலுவூட்டல் அமைச்சும் இணைந்து குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்துள்ளன. இதேவேளை இலங்கை வரலாற்றில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் வழங்குவது குறித்த யோசனை முன்வைக்கப்படுகின்றமை இதுவே முதன்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/301557
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.