Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தமிழருக்கு உலக நாடுகளின் ஆதரவினைத்திரட்ட 11பேர் கொண்ட குழு - தமிழக அரசு

Featured Replies

இலங்கைத் தமிழர்கள் முழு உரிமைகளையும் பெற உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதற்கு கி.வீரமணி தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் பூரணநலம் (என்ன வருத்தம்) பெறுவதற்காக ஒத்த கருத்துகளுடைய கட்சிகள்,அமைப்புகள், சான்றோர்களை உள்ளடக்கிய இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற அமைப்பை உருவாக்க தி.மு.க செயற்குழு முடிவு செய்துள்ளது. தற்போது இந்தப் பேரவைக்கு துணை அமைப்பாக 11பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

இந்தக் குழுவின் தலைவராக கி.வீரமணி அறிவிக்கப்பட்டுள்ளார். அமைப்பாளராக அமைச்சர் துரைமுருகன். செயலார்கள் மத்திய அமைச்சா ராசா, மாநிலங்களைவை தி.மு.க உறுப்பினர் கனிமொழி ஆகியோர் செயற்படுவர்.

உறுப்பினர்களாக நீதிபதிகள் மோகன், கோகுலகிருஷ்ணன், ராஜன்,சிவசுப்பிரமணியன், பாஸ்கரன், ஜனார்த்தனன், சாமித்துரை ஆகியோர் இடம் பெ;றுள்ளனர்.

இந்தக் குழு இலங்கைத் தமிழர்களது உரிமைகளைப் பெற உலக நாடுகளின் ஆதரவை திரட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

http://img150.imageshack.us/my.php?image=virars7.jpg

நன்றி : வீரகேசரி

கருணாநிதி குட்டையை குழப்ப முயற்சிக்கிறார். மேலும் தமிழரை முட்டாள்களாக்காமல், முதலில் தனது நாட்டிடம் தான் முண்டு கொடுத்துக் கொண்டிருக்கும் இந்திய ஆளும் வர்க்கத்திடம், கொலை வெறி சிங்கள அரசிற்கு உதவி செய்வதை நிறுத்த முயலட்டும், கேட்கட்டும். அதை விடுத்து இந்தச் செயல் உலகத் தமிழரை ஏமாற்ற முயலும் ஒரு செயலாகவே நோக்கப்படும். அதற்காக தமிழ் உணர்வாளர்கள் பலிகடாவாக்கப்படுகின்றார்கள

Edited by Janarthanan

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர்

நீங்கள் என்னமும் உங்களின் அரசியல் சாணக்கியத்தை மாற்றிக் கொள்ளவில்லை போலு

:) ஏன் கொஞ்சமெண்டாலும் இருக்கிற ஆதரவு பொறுக்க முடியாம இருக்காமோ?
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை நண்பர்களே எமக்காக உல அரங்கில் பேச என யாருமே இல்லை. ஈழதமிழராகி நாங்கள் மாணவராக பேசினாலும் பயங்கரவாதிகள் என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் தமிழகத்தில் இருந்து ஒரு குழு உருபெற்று எந்த காலகட்டத்திலும் செயலாற்றுமெனில் அது கலைஞருடைய அறிவுபூர்த்தியான அரசியல் காய்நகர்த்தல் என்றே எனக்குபடுகின்றது. அந்த குழுவை வலுவிக்கதாக்க வேண்டிய ஒரு கடமையும் எமக்கிருக்கிறது. எந்த கட்சி ஆட்சி ஏறினாலும் இந்த குழுவுக்கு பங்கம் வராதபடி இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு அமையபெற்றால் நன்மை பல உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை. ஏமாந்து போகாதீர்கள். இந்தக் காலத்தில் ஏற்படும் தனக்கு எதிரான சூழ்நிலைக்காகவே இப்படி ஒரு நாடகம். பதவி விலகுகின்றேன் என்று சொன்ன பதங்கள், பிற்பாடு ஏதோ ஈழத்தில் சாப்பாடு தான் பஞ்சம் என மாற்றிய அரசியல் தந்திரத்தின் தொடர்ச்சி தான் இது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னடாப்பா 6 கோடி தமிழரை வைத்துக்கொண்டு மத்திய அரசுக்கு வால் பிடிச்சு ஒரு எடுபிடிமாதிரியெல்ல இருக்குது

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குழுவின் தலைவராக கி.வீரமணி அறிவிக்கப்பட்டுள்ளார். அமைப்பாளராக அமைச்சர் துரைமுருகன். செயலார்கள் மத்திய அமைச்சா ராசா, மாநிலங்களைவை தி.மு.க உறுப்பினர் கனிமொழி ஆகியோர் செயற்படுவர்.

உறுப்பினர்களாக நீதிபதிகள் மோகன், கோகுலகிருஷ்ணன், ராஜன்,சிவசுப்பிரமணியன், பாஸ்கரன், ஜனார்த்தனன், சாமித்துரை ஆகியோர் இடம் பெ;றுள்ளனர்.

இந்தக் குழு இலங்கைத் தமிழர்களது உரிமைகளைப் பெற உலக நாடுகளின் ஆதரவை திரட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையான மனச்சுத்தியுடன் இக்குழுவை நியமித்திருந்தால் ........ இந்தக் குழுவில் வைகோ . வையும் இடம் பெற செய்திருக்கலாமே .... :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமக்கு உலக ஆதரவை திரட்டுவதில் அல்லது உலக நாடுகளிடம் எமது பிரதிநிதியாக செல்வதற்கு கருணாநிதிக்கோ அல்லது வேறு அரசியல் கட்சிகளுக்கோ உரிமை கொடுக்கப்படாது,நாம் தமிழக உறவுகளின் உணர்வுகளை மதிக்கிறோம் நம்புகிறோம் ஆனால் எந்தவொரு அரசியல் கட்சிகளையும் நம்பதயாரகவில்லை, அரசியல் கட்சிகள் என்ற பெயரில் ஆட்சியில் இருக்கும் நீங்கள் எல்லோரும் பதவி இருக்கிற இடத்திலே செய்யமுடியாதவர்கள் வெளி உலகத்தில் செய்யவேண்டியதேவையில்லை , வெளிஉலக விடயங்களை எமது புலம்பெயர் தமிழர்கள் பார்த்துக்கொள்வார்கள் ஒருவேளை இவர்களை நாம் ஏற்றுக்கொண்டு வெளிஉலக தொடர்புகளுக்கு அனுமதித்தால் ஒருவேளை இவர்கள் பதவி ஆசையால் கருணா போன்று எமக்கு துரோகம் செய்யமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் அப்படி நடந்தால் எமது விடுதலை இன்னும் பல ஆண்டுகள் பின்னோக்கி தள்ளப்படும் அதை நாம் விரும்பவில்லை, நீங்கள் உங்கள் பதவி உள்ள நாட்டில் உங்கள் பதவிகளை பயன்படுத்தி எமக்கு ஏதாவது செய்ய முனைந்தால் நன்று,நீங்கள் வெளயுலகத்தில் எமது பிரதிநிதிகளாக சென்று எமக்கு விருப்பமில்லாத ஒரு முடிவை எடுத்துவிட்டு எம்மை நீங்கள் ஏற்க்கசொல்லி கூறினால் நாம் ஏற்கவேண்டிய நிலையிலே இருப்போம் அப்படியொரு நிலை எமக்கு தேவையில்லை.அப்படி இல்லை நாங்கள் செய்யத்தான் போகிறோம் என்றால் உலகத்திலே தமிழ் மக்கள் எல்லோரும் வாழும் நாடுகளிலிருந்து பிரதிநிதிகளை தெரிவுசெய்து உலக தமிழ் அரசு என்று ஒன்றை உருவாக்கிவிட்டு (நிச்சயம் ஈழத்தில் இருந்தும் தெரிவுசெய்யப்படவேண்டும்) உலக நாடுகளிடம் செல்லுங்கள் முடியுமா இதை செய்ய? ஆனாலும் கருணாநிதி ஐயாக்கு நன்றி ஏனென்றால் இலங்கை தமிழர் என்ற எமது பெயரை உச்சரித்ததற்காக.

முதலில் இந்திய மத்திய அரசினை மாற்றவும்..

பின்னர் வெளி நாடுகளைப்பற்றி யோசிக்கலாம்..

தமிழர்களுக்கு காதில் பூ சுற்றுவதே தொழிலாக கொண்டுள்ள கருணானிதிக்கும்,ஜெயலலிதா கொள்ளைக்கூட்டம், கொள்ளி வைக்கும் கூட்டம்...

வெளி நாடுகளில் போய் புலிகளை அழித்தால் தமிழ்மக்கள் காப்பாற்றுவார்கள் என்று சொல்லுவார்கள்..

வெளி நாடுகளில் தமிழ்மக்கள் மிக உசாராக உள்ளனர் என்பது தெரியவில்லை போல் தெரிகிறது..

  • தொடங்கியவர்

குழு அமைப்பதும், மூக்கணங்கயிறு இருப்பதும் மு.கருணாநிதியின்; கையில்;. குழுவில் மூவர் மு.கருணாவின் எடுபிடி இந்தக் குழு ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணினால் கூட முதுகுவலிக்காரர் மூக்கணாங்கயிற்றை விட்டுக் கொடுப்பார் என்று என்னினால் அது எமது முட்டாள்தனம். திரண்டு வரும் உலகத் தமிழர் ஆதரவையும் ஒன்றிணைவையும் வேகத் தடை போட்டு திசைதிருப்ப முயல்கிறாரார் முன்னாள் உலகத் தமிழர் தலைவர்.

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.