Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆடு நனைகிறதென்று, இன்ன்னொரு ஓநாய் .........

Featured Replies

சண்டையை நிறுத்த இலங்கை அரசு, புலிகளுக்கு இந்தியா கோரிக்கை

டெல்லி: இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் சண்டையை நிறுத்தி விட்டு, பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இன்று காலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை நிலவரம் கவலை தருகிறது.

இலங்கை அரசு தான் பிடித்து வரும் வினோதப் பிடிவாதத்தைக் கைவிட வேண்டும். அதேபோல விடுதலைப் புலிகளும் தங்களது சண்டைய நிறுத்த வேண்டும். இரு தரப்பும் இந்தியாவின் கோரிக்கையை காது கொடுத்துக் கேட்க வேண்டும்.

இலங்கையில் நடந்து வரும் நிகழ்வுகள் மத்திய அரசுக்கு கவலையை அளிப்பதாக உள்ளது.

இந்திய அரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, 48 மணி நேர போர் நிறுத்தத்தை இலங்கை அரசு அறிவிக்க வைத்தது. ஆனால் அதற்கு விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இல்லை.

தற்போது மீண்டும் ராணுவ நடவடிக்கை தொடங்கியுள்ளது. இன்னும் கூட புலிகளிடமிருந்து பதில் இல்லை,.

இரு தரப்பும் போரை நிறுத்தி விட்டுப் பேச முன்வர வேண்டும். இலங்கை அரசு தனது தாக்குதலை நிறுத்த வேண்டும். இரு கரமும் சேர்ந்தால்தான் ஒலி எழுப்ப முடியும்.

உயிர்கள் அநியாயமாக பறிபோவது மனதுக்கு வேதனையாக உள்ளது. எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை இந்திய அரசு நிச்சயம் செய்யும் என்றார் சிதம்பரம்.

நாய்களையிம் ஓநாய்களையும் இந்தியாவுடன் ஒப்பிடு கேவலபடுத்தியதை வன்முறையாக கண்டிக்கிறேன்.

சண்டையை நிறுத்தினால் இன்னொரு முறை இந்தியா தோற்றதாகிவிடும்.

  • தொடங்கியவர்

பெங்களூர்: சென்னையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்பட்ட இலங்கை விமானப்படை வீரர்களுக்கு பெங்களூர் அருகே உள்ள எலஹங்கா விமான தளத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இலங்கை விமானப்படை வீரர்கள் எட்டு பேருக்கு தாம்பரம் விமான தளத்தில் பயிற்சி அளிக்கப்படுவதாக இருந்தது. இதற்காக அவர்கள் சென்னைக்கு வந்திருந்தனர். சேலையூர் காவல் நிலையத்தி்ல் விசா பதிவுக்காக அவர்கள் வந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இதையடுத்து முதல்வர் கருணாநிதி மத்திய பாதுகாப்புத்துறையுடன் தொடர்பு கொண்டு சிங்கள வீரர்களை திருப்பி அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து இலங்கை வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி கூறியிருந்தார்.

ஆனால் திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாக கூறப்பட்ட இலங்கை வீரர்கள் தற்போது பெங்களூரில் ஜாம் ஜாமென்று பயிற்சியில் ஈடுபட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து சிங்கள வீரர்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, எலஹங்கா விமான தளத்திற்கு வெளியே போராட்டம் நடத்த பெங்களூர் வாழ் தமிழர் அமைப்புகள் தீர்மானித்துள்ளன.

லோக்சபா தேர்தலை அனைவரும் புறக்கணிப்போம்: விஜயகாந்த்

சென்னை: தமிழ் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து வருகிற லோக்சபா தேர்தலை அனைத்துத் தமிழக கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும். அப்படி செய்வதாக இருந்தால் அதில் முதல் கட்சியாக தேமுதிக இருக்கும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அதிரடி அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் சிங்கள அரசின் முப்படைகளும் தமிழர் பகுதிகளைத் தாக்கியதால், முல்லைத் தீவின் ஒரு சிறிய பகுதியில் சுமார் இரண்டரை லட்சம் தமிழர்கள் சிக்கியுள்ளனர்.

எந்த நேரத்திலும் அவர்களுக்கு எதுவும் நேரலாம் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. சிங்கள அரசோ பாதுகாப்பு மண்டல பகுதிகள் என்று ஒரு சில பகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும், போர் முனையில் சிக்கியுள்ள தமிழர்கள் அந்த பகுதிகளில் வந்து பாதுகாப்பாக தங்கிக்கொள்ளலாமென்றும் அறிவித்துள்ளது.

சிங்கள அரசின் பாதுகாப்பு மண்டல பகுதிக்கு தமிழர்கள் சென்றால், வயதானவர்கள், குழந்தைகள் தவிர, மீண்டும் தீவிரவாதிகள் உருவாக கூடாது என்று சொல்லி சிங்கள போர் படையினர் தமிழ் வாலிபர்களை கொன்று விடுகின்றனர். பெண்களையும் மானபங்கப்படுத்தி அழித்து விடுகின்றனர். சிங்கள அரசின் பாதுகாப்பு மண்டலங்கள் என்பது தமிழர்களின் மரணப்படுகுழிகள் தான் என்பதை சிங்கள அரசு வேண்டுமென்றே மறைத்து வருகிறது.

சிங்கள அரசின் இத்தகைய போக்கின் காரணமாக அங்குள்ள தமிழர்கள் சிங்களர்கள் கையில் சிக்கி சாவதை விட அவர்களை எதிர்த்து போராடி செத்து மடிவதே மேல் என்ற நிலைக்கு ஆளாகி விட்டனர். இந்த சூழ்நிலையில் சிங்கள அரசு போரை மேலும் நீடித்தால் பல லட்சக்கணக்கான தமிழர்கள் பேரழிவையே சந்திக்க வேண்டியிருக்கும். இதை அனுமதிப்பது நாகரீக உலகிற்கு எவ்விதத்திலும் சரியல்ல.

போன உயிர்களை மீண்டும் தருவது யாராலும் முடியாது. ஆகவே உயிர்கள் போவதை தடுக்க மனிதாபிமானமுள்ள உலகம் அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இத்தகைய மனிதகுலப் பேரழிவு ஏற்படும் அபாயக்கட்டத்தில், உலகில் பல்வேறு நாடுகளில் ஐ.நா.மன்றம் தலையிட்டுள்ளது. அது போல ஐ.நா.மன்றம் இந்த பிரச்சினையிலும் தலையிட்டு உடனடியாக போர் நிறுத்தம் செய்யவும், அதை கண்காணிக்கவும், உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருள்களை வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

தமிழினப் பேரழிவை தடுக்க ஐ.நா.மன்றத்தில் எழுப்ப இந்திய அரசால் தான் முடியும். அண்டை நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட முடியாது என்று சொல்வது சரியல்ல. மனிதாபிமான அடிப்படையிலும், அண்டை நாட்டில் ஏற்படும் பிரச்சினையால் தங்கள் நாட்டின் அமைதிக்கு பங்கம் எற்படுமென்றாலும் நிச்சயமாக ஒரு அரசு தலையிட கடமைப்பட்டுள்ளது.

ஒன்றரை கோடி சிங்களர்களுக்கு தனி நாடு உள்ளது என்ற காரணத்தால் உலக நாடுகளிடமிருந்து ஆயுத உதவியை எளிதில் பெற முடிகிறது. ஆனால் ஆறரை கோடி தமிழர்களைக் கொண்ட தமிழகம், இந்திய அரசைத்தான் நம்ப வேண்டியுள்ளது. எனவே இந்திய அரசு, ஐ.நா. மூலமோ, நேரடியாக தலையிட்டோ இனப் படுகொலையை தடுக்க வேண்டும்.

கருணாநிதி தமிழினத் தலைவரா?

தமிழினத் தலைவர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் முதல்வர் கருணாநிதி, இலங்கைத் தமிழர் பிரச்னையில் உருப்படியான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை.

இலங்கைப் பிரச்னை பற்றி தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்ட குரலைத்தான் எழுப்பி வருகின்றனர். அப்படியிருக்க இலங்கைத் தமிழர் பிரச்னையை விளக்கிக் கூட்டங்கள் நடத்த வேண்டும், மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று திமுக அறிவித்துள்ளது மக்களை திசை திருப்பும் வேலை. எத்தனைக் காலம்தான் தமிழக மக்களை கருணாநிதி ஏமாற்றப் போகிறார்?

இந்திய அரசு தமிழினப்படுகொலையைத் தடுக்க தவறுமானால், தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் தேசிய அரசில் பங்கு பெறுவதில் அர்த்தமில்லை. ஆகவே வரும் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சியினரும் போட்டியிட போவதில்லை என்று முடிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சாதாரணமாக தங்கள் ஊரில் உள்ள குறைகளை செய்து கொடுக்காததற்கே அந்த ஊர் மக்கள் தேர்தலை புறக்கணிக்கிறார்கள் என்றால், அரசு ஓடோடி சென்று அந்த மக்களின் குறைகளை தீர்க்க உறுதி கொடுத்து அவர்களை தேர்தலில் ஈடுபட வைக்கிறது. அப்படியிருக்க இலங்கையில் தமிழினமே படுகொலைக்கு ஆளாகும் சூழ்நிலையில், தமிழ்நாடு பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்தால் அப்பொழுதாவது இந்திய அரசு தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காதா என்பதே நம்முடைய எதிர்பார்ப்பு.

தேர்தல் புறக்கணிப்பு முடிவு எடுக்கப்படுமானால், தே.மு.தி.க.வை பொறுத்தவரை முதலாவதாக இடம் பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

சிங்கள ராணுவத்தின் அநீதியை தடுத்து நிறுத்த தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், மக்களும் ஒருமித்த கருத்தோடு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க ஒன்றுப்பட வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

சண்டையை நிறுத்தினால் இன்னொரு முறை இந்தியா தோற்றதாகிவிடும்.

அந்த நரிகளுக்கு பாகிஸ்தான் இல்லை நேபாளம் இல்லை பர்மா இல்லை சீனா இல்லை பங்களாதேசமும் இல்லை இலங்கையின் குண்டியை நக்கினால் அதுவாதௌ இருக்கும் என்று நப்பாசை ஆனால்? உண்மை புரியும் போது இலங்கையில் புலிகள்(தமிழ்மக்கள்) இல்லை,

அந்த நரிகளுக்கு பாகிஸ்தான் இல்லை நேபாளம் இல்லை பர்மா இல்லை சீனா இல்லை பங்களாதேசமும் இல்லை இலங்கையின் குண்டியை நக்கினால் அதுவாதௌ இருக்கும் என்று நப்பாசை ஆனால்? உண்மை புரியும் போது இலங்கையில் புலிகள்(தமிழ்மக்கள்) இல்லை,

வெளிவருகின்ற செய்திகள், கோரிக்கைகள் சிறிலங்காவினால் நிராகரிக்கப்படுகின்ற நிலையில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய நாடான இந்தியா இனியும் பேசாமல் இருக்க முடியாது. எதையாவது பேசித்தானாக வேண்டும். உலக ஓட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ளத்தான் இந்த ஓநாய் புலம்புகிறது. என்ன செய்வது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.