Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகள் வைத்திருப்பது கேடயம் - ராணுவம் வைத்திருப்பது கத்தி : விஜயகாந்த் பேச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த ஆளுங்கட்சி திமுகவும், எதிர்க்கட்சி அதிமுகவும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவ்வாறு இவ்விரு கட்சிகளும் இணைந்து போராடினால் அவர்களின் பின்னால் தேமுதிகவும் சேர்ந்து போராடுவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசை கண்டித்தும், அங்கு போரை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் தலையிட வலியுறுத்தியும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் சார்பில் தீவுத்திடலில் இருந்து சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வரை பேரணி நடைபெற்றது.

கருப்புச்சட்டை அணிந்து இதில் பங்கேற்ற விஜயகாந்துடன் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட ஏராளமான மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பேரணியின் முடிவில் விஜயகாந்த் பேசியதாவது:

இலங்கைத்தமிழர் பிரச்சனையில் நமக்கு உணர்வு இருக்கிறது என்பதற்கு இந்த கூட்டமே சான்றாகும். இவ்வளவு பேர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டிருப்பது அதனை எடுத்துக் காட்டுகிறது. நம் மக்கள் இலங்கையில் தினம் தினம் செத்து மடிகிறார்கள். அதனால் நமக்கு இந்த வெயில் ஒன்றும் பெரிதல்ல.

இங்குள்ள கட்சிகள் இலங்கை பிரச்சனையில் நாடகமாடி வருகிறார்கள். இலங்கை அதிபர் ராஜபக்சேவோ, ‘ விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டால்தான் போர் நிறுத்தம்’ என்று கூறுகிறார். அதே கருத்தைத்தான் மத்திய அமைச்சர்கள் பிரணாப்முகர்ஜியும், சிதம்பரமும் தெரிவிக்கிறார்கள்.

பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு வந்தால்தானே விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட முடியும். விடுதலைப்புலிகள் வைத்திருப்பது கேடயம்தான். சிங்கள அரசு தான் கத்தி வைத்திருக்கிறது. கேடயம் வைத்திருப்பவர் அதனை கீழே போட்டுவிட்டால் கத்தி வைத்திருப்பவர் அவரை குத்திவிட மாட்டாரா? ஆகையால் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிட்டு அதன் பிறகே விடுதலைப்புலிகளை ஆயுதங்களை கீழே போட சொல்ல வேண்டும்.

அடுத்த நாட்டு பிரச்சனையில் ஓரளவுக்குத்தான் தலையிட முடியும் என்று மத்திய அரசு கூறுகிறது. அப்படியானால் இலங்கையுடன் இந்தியா எப்படி ஒப்பந்தம் போட்டது. மத்திய அரசுக்கு உரிமை இல்லை என்று சொன்னதால்தான் இந்த பிரச்சனையில் ஐ.நா. தலையிட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். எங்களை பார்த்து தான் இப்போது மற்ற கட்சிகளும் ஐ.நா. தலையிட வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

இலங்கையில் தமிழினம் அழிந்து கொண்டிருக்கிறது. எனவேதான் இதில் ஐ.நா. தலையிட்டு போரை நிறுத்த வழிவகை காண வேண்டும் என்று இந்த பேரணியை நாங்கள் நடத்துகிறோம். தேமுதிக எப்போதும் ஆக்கப்பூர்வமான வேலைகளையே செய்யும்.

நான் நடிகனாக இருந்தபோதே இலங்கை தமிழர் பிரச்சனைக்காக எம்.ஜி.ஆர்., சிவாஜி நடத்திய ஊர்வலங்களில் பங்கேற்றிருக்கிறேன். இலங்கை தமிழர் பிரச்சனை முடியும் வரை பிறந்தநாள் கொண்டாடுவ தில்லை என்றும் முடிவு செய்திருக் கிறேன்.

இந்த திமுக அரசு சாதாரண சட்டக் கல்லூரி சண்டையையே நிறுத்த முடியவில்லை. நேற்று ஐகோர்ட்டில் நடைபெற்ற சண்டையையும் இந்த அரசால் நிறுத்த முடியவில்லை. இவர்களால் எப்படி இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க முடியும்.

அதனால் தான் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று நான் தெரிவித்தேன். உடனே தேர்தலுக்கு நான் பயந்தவிட்டதாக கூறுகிறார்கள். நான் என்றைக்கும் தேர்தலை கண்டு அஞ்சுபவன் அல்ல. ஒவ்வொரு கட்சியும் தனித்து நின்று தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதை ஆரம்பத்தில் இருந்தே கூறிவருகிறேன். அப்படி தனித்து நிற்பதற்கு இங்கு எந்த கட்சிக்கும் தைரியம் இல்லை.

ஒரு சாதாரண தண்ணீர் பிரச்சனைக்காக கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கும்போது, அதிகாரிகள் ஓடோடி வந்து நடவடிக்கை எடுக்கிறார்கள். அந்த அடிப்படையில் தான் நாடாளுமன்ற தேர்தலையும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் புறக்கணித்தால் இந்த விஷயத்தில் ஐ.நா. தலையிடும் என்று நான் கூறுகிறேன்.

தமிழர்கள் மீது இலங்கையில் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டு அவர்கள் படுகொலை செய்யப்படு கிறார்கள். அதனை இந்த திமுக அரசு இதுவரை கண்டிக்கவில்லை. இங்குள்ள கட்சிகள் கூட்டணி பற்றிதான் பேசுகின்றார்களே தவிர, இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி பேசுவதில்லை.

தமிழ்நாட்டில் திமுகவும், அதிமுகவும் பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள். இந்த இரண்டு பெரிய கட்சிகளும் இலங்கை தமிழர் பிரச்சனைக்காக ஒன்றிணைந்து போராடுவார்களா? அவ்வாறு இவர்கள் ஒன்றிணைந்து போராடினால் நானும் அவர்களின் பின்னால் வருவேன்.

வரும் 24 ந் தேதி அமெரிக்க நாடாளுமன்றம் கூடுகிறது. அப்போது நம்முடைய போராட்டம் அவர்களுடைய செவிக்கு எட்டும் வகையில் அமைய வேண்டும். இருந்தாலும், தேமுதிக தொண்டர்கள் அனைவரும் ஐ.நா. பொதுச் செயலாளருக்கும், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் இலங்கையில் போரை நிறுத்தக்கோரி ஒரு கோடி தந்திகள் அனுப்ப வேண்டும்.

இந்த பிரச்சனையில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார். அதன் பின்னர் அவரது தலைமையில் தேமுதிக நிர்வாகிகள் அமெரிக்க தூதரகம் சென்று இலங்கையில் போரை நிறுத்த கோரி மனு அளித்தனர்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=3812

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர்களுக்கான விஜயகாந்தின் பேரணி

http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

நன்றி நக்கீரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில விஜயகாந் சொல்லுறதில ஒண்டு நல்லவிசயம் ஒட்டுமொத்ததமிழர்களும் தேர்தலைப்புறக்கனித்தால் மத்திய அரசு ஆட்டம் கானும் என்பது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான். தமிழக மக்கள் அனைவரும் உணரணுமே. சில 'சோ.சாமி. சு.சாமி. ச.சாமி என்றொரு கூட்டம் இருக்கிறதே?!!

  • கருத்துக்கள உறவுகள்

அ.தி.மு.க, தி.மு.க எதிலும் ஒன்று சேராது என்று கப்படனுக்கு நல்லாகவே தெரியும்.

என்னய்யா இது?

இலங்கையில் போரை நிறுத்த ஐ.நா.,அமெரிக்காவின் தலையீட்டை வலியுறுத்தி விஜயகாந்த் பேரணி

* தி.மு.க., அ.தி.மு.க.வை இணைந்து போராட வருமாறு அழைப்பு

இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த தமிழ்நாட்டின் ஆளுங்கட்சி தி.மு.க.வும் எதிர்க்கட்சி அ.தி.மு.க.வும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டார்.

இவ்விரு கட்சிகளும் இணைந்து போராடினால் அவர்களின் பின்னால் தே.மு.தி.க.வும் சேர்ந்து போராடுவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் தமிழர்கள் கொலையை கண்டித்தும் அங்கு போரை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் தலையிட வலியுறுத்தியும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தலைமையில் நேற்று அக்கட்சியின் சார்பில் தீவுத்திடலில் இருந்து சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகைவரை பேரணி நடைபெற்றது.

கறுப்புச்சட்டை அணிந்து இதில் பங்கேற்ற விஜயகாந்துடன் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், அவைத்தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரன், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட ஏராளமான மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பேரணியின் முடிவில் விஜயகாந்த் பேசியதாவது;

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நமக்கு உணர்வு இருக்கிறது என்பதற்கு இந்தக் கூட்டமே சான்றாகும். இவ்வளவு பேர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கலந்துகொண்டிருப்பது அதனை எடுத்துக்காட்டுகிறது. நம் மக்கள் இலங்கையில் தினம் தினம் செத்து மடிகின்றார்கள். அதனால் நமக்கு இந்த வெயில் ஒன்றும் பெரிதல்ல.

இங்குள்ள கட்சிகள் இலங்கை பிரச்சினையில் நாடகமாடி வருகின்றார்கள். இலங்கை அரசோ விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டால்தான் போர்நிறுத்தம் என்று கூறுகிறது. அதே கருத்தைத்தான் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜியும், சிதம்பரமும் தெரிவிக்கிறார்கள்.

பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு வந்தால்தானே விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட முடியும். விடுதலைப்புலிகள் வைத்திருப்பது கேடயம் தான். இலங்கை அரசு தான் கத்தி வைத்திருக்கிறது. கேடயம் வைத்திருப்பவர் அதனை கீழே போட்டுவிட்டால் கத்தி வைத்திருப்பவர் அவரை குத்திவிட மாட்டாரா? ஆகையால் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட்டு அதன் பிறகே விடுதலைப்புலிகளை ஆயுதங்களை கீழே போட சொல்லவேண்டும்.

அடுத்த நாட்டு பிரச்சினையில் ஓரளவுக்குத்தான் தலையிட முடியும் என்று மத்திய அரசு கூறுகிறது. அப்படியானால் இலங்கையுடன் இந்தியா எப்படி ஒப்பந்தம் போட்டது. மத்திய அரசுக்கு உரிமை இல்லை என்று சொன்னால்தான் இந்த பிரச்சினையில் ஐ.நா. தலையிட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். எங்களை பார்த்துதான் இப்போது மற்றக் கட்சிகளும் ஐ.நா.தலையிட வேண்டும் என்று கூறிவருகிறார்கள்.

இலங்கையில் தமிழினம் அழிந்து கொண்டிருக்கிறது. எனவேதான் இதில் ஐ.நா. தலையிட்டு போரை நிறுத்த வழிவகை காணவேண்டும் என்று இந்தப் பேரணியை நாங்கள் நடத்துகிறோம். தே.மு.தி.க. எப்போதும் ஆக்கபூர்வமான வேலைகளையே செய்யும். நான் நடிகனாக இருந்தபோதே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக எம்.ஜி.ஆர், சிவாஜி நடத்திய ஊர்வலங்களில் பங்கேற்றிருக்கிறேன். இலங்கைத் தமிழர் பிரச்சினை முடியும் வரை பிறந்தநாள் கொண்டாடுவதில்லை என்றும் முடிவு செய்திருக்கிறேன்.

இந்த தி.மு.க. அரசு சாதாரண சட்டக்கல்லூரி சண்டையையே நிறுத்த முடியவில்லை. நீதிமன்றத்தில் நடைபெற்ற சண்டையையும் இந்த அரசால் நிறுத்த முடியவில்லை. இவர்களால் எப்படி இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க முடியும்.

அதனால்தான் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று நான் தெரிவித்தேன். உடனே தேர்தலுக்கு நான் பயந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். நான் என்றைக்கும் தேர்தலை கண்டு அஞ்சுபவன் அல்ல. ஒவ்வொரு கட்சியும் தனித்து நின்று தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதை ஆரம்பத்தில் இருந்தே கூறிவருகின்றேன். அப்படித் தனித்து நிற்பதற்கு இங்கு எந்தக் கட்சிக்கும் தைரியம் இல்லை.

ஒரு சாதாரண தண்ணீர் பிரச்சினைக்காக கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கும்போது, அதிகாரிகள் ஓடோடி வந்து நடவடிக்கை எடுக்கிறார்கள். அந்த அடிப்படையில் தான் பாராளுமன்றத் தேர்தலையும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் புறக்கணித்தால் இந்த விடயத்தில் ஐ.நா.தலையிடும் என்று நான் கூறுகிறேன்.

தமிழர்கள் மீது இலங்கையில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு அவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்.அதனை இந்த தி.மு.க.அரசு இதுவரை கண்டிக்கவில்லை. இங்குள்ள கட்சிகள் கூட்டணி பற்றித்தான் பேசுகிறார்களே தவிர, இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி பேசுவதில்லை.

தமிழ் நாட்டில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள். இந்த இரண்டு பெரிய கட்சிகளும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக ஒன்றிணைந்து போராடுவார்களா? அவ்வாறு இவர்கள் ஒன்றிணைந்து போராடினால் நானும் அவர்களின் பின்னால் வருவேன்.

எதிர்வரும் 24 ஆம் திகதி அமெரிக்க பாராளுமன்றம் கூடுகிறது. அப்போது நம்முடைய போராட்டம் அவர்களுடைய செவிக்கு எட்டும் வகையில் அமையவேண்டும். இருந்தாலும், தே.மு.தி.க. தொண்டர்கள் அனைவரும் ஐ.நா. பொதுச் செயலாளருக்கும், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கும் இலங்கையில் போரை நிறுத்தக்கோரி ஒரு கோடி தந்திகள் அனுப்பவேண்டும்.

இந்தப் பிரச்சினையில் அடுத்த கட்டப் போராட்டம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார் விஜயகாந்த். அதன் பின்னர் அவரது தலைமையில் தே.மு.தி.க. நிர்வாகிகள் அமெரிக்க தூதரகம் சென்று இலங்கையில் போரை நிறுத்தக்கோரி மனு கையளித்தனர்.

http://www.thinakkural.com/

அரசியல்வாதிகள் அவர்களது செயற்பாடுகள் மக்களின் உணர்வு பூர்வமான, செயற்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்த பின்புதான் தமிழ் நாட்டில் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.

தமிழர் தலைவன் என்ற கருணாநிதியும் இந்தியெதிர்ப்பு இயக்கங்களை நடத்தி அதில் தமிழர்களைக் கவர்ந்து ஆட்சிக்கு வந்ததும் அதனை மறந்துவிட்டார்.

வைகோவும் எவ்வளவுதான் தமிழருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தாலும் தமிழர்களை அழிக்கத் துணியும் காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

ராமதாசும் அவ்வாறே.

இதில் விஜயகாந் எம்மாத்திரம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.