Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழம் கிடைக்காமல் போவதற்கு தடையாக இருப்பவர்கள் தமிழகத் தலைவர்கள் - தமிழக இயக்குநர் குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இன பிரச்சினை குறித்து தொடக்க காலத்திலிருந்து இன்று வரை தமிழகத்தில் விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருபவர்களில் குறிப்பிடத்தக்கவர், "எழுச்சி இயக்குநர்' என்று பாராட்டப்படும் திரைப்பட இயக்குநர் வி. சி. குகநாதன். வீரகேசரி இணையத்திற்கு அளித்த விசேட செவ்வியில் இருந்து...

ஈழத்தமிழர் போராட்டத்தில் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும், கலைஞர்களும் அடிக்கடி தங்கள் நிலைபாட்டை மாற்றிக் கொள்கின்றனரே?

இதனால் ஈழத்தமிழர்களின் போராட்டம் பலவீனம் அடையாதா? பாதிக்கப்படாதா? ஈழத்தமிழர்கள் விடயத்தில் தமிழ்நாட்டில் மாணவர்கள், சட்டத்தரணிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள், கலைஞர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் ஒரே நிலைபாட்டில் இருக்கிறார்கள்.

தலைவர்கள் தடுமாறுகிறார்கள். தள்ளாடுகிறார்கள். அடிக்கடி தங்கள் நிலைபாட்டினை மாற்றிக்கொள்கிறார்கள். ஆனால் யாரும் ஈழத்தமிழர்கள்குக்கு ஆதரவு இல்லை என்று சொன்னதில்லை. அப்படி ஒரு மாநிலக்கட்சி சொல்லுமேயானால், அந்த கட்சி நிச்சயமாகத் தமிழ்நாட்டில் அரசியல் பண்ணமுடியாது.

இன்னும் ஒரு விடயத்தை வெளிப்படையாகவே சொல்கிறேன். தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளால் தான் தமிழ் ஈழம் கிடைக்கும் வாய்ப்பு முதல் தடவையாக நழுவிப்போனது. இல்லையெனில் இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர் காலகட்டத்திலேயே அது நிறைவேறியிருக்கும்.

பாகிஸ்தானிலிருந்து வங்க தேசத்தைப் பிரித்து முஜுபுர் ரஹ்மான் தலைமையில் புதிய நாடு படைத்தவர் அன்னை இந்திரா. அதே பாணியில் ஈழத்தமிழ் போராளிகள் இந்தியா வரவழைக்கப்பட்டனர். பயிற்சிகள் நடந்தன. ஆயுதங்கள் வழங்கப்பட்டன. சகல ஒத்துழைப்புகளும் அளிக்கப்பட்டது.

ஒரு கட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் அன்னையிடம் கோள் சொல்ல ஆரம்பித்தனர். தமிழகத்தில் திராவிட நாடு கேட்ட கட்சிகள் இன்னமும் செல்வாக்குடன் தான் இருக்கிறார்கள். தங்கள் உதவியோடு தனி ஈழம் அமைந்தால்.... அந்த தமிழர்கள் பாணியில் இங்கேயும் பிரிவினை வாதம் பேச ஆரம்பித்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள். அகண்ட தமிழ்நாடு உருவாக வழிவகுத்துவிடும் என்றெல்லாம் ஓதப்பட்டது.

இந்த வாதம் வந்தேறிகளான ஆரியர்களாலும் ஆதரிக்கப்பட்டது. அன்னை இந்திரா அவர்களுக்கும் இது சரியெனப்பட்டு விடவே, தன் நிலைபாட்டை சற்று மாற்றிக்கொண்டார். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தருவது. தனி ஈழத்தை தவிர்ப்பது.

ஆனால் எம். ஜி. ஆர் தன் முடிவிலிருந்து மாறவில்லை. தம்பி தலைமையில் தனி ஈழம்... இறுதி வரை இதுவே அவர் கொள்கை. இந்த இடத்தில் ஈழத்து மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விடயம் ஒன்றிருக்கிறது.

பல மொழிகள் பேசும் மக்கள் வாழும் இந்திய தேசம், சுதந்திரம் அடைந்த பின்னால், மொழிவாரி மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு, தனித்தனி மாநில அரசுகள் அமைக்கப்பட்டு, நடுவில் ஒரு மைய அரசு நிறுவப்பட்டு.. பெற்ற சுதந்திரத்தை நூறு கோடி மக்களும் இன்றுவரை பயன்பெறும் விதமாகப் பரவலாக்கப்பட்டது.

தமிழ் மாநிலத்தில் முழுச்சுதந்திரத்துடன், யாருடைய அடக்கு முறைக்கும் ஆளாகாமல் தமிழர்களால் வாழ முடிந்தது. கல்வியறிவில் தமிழகம் அந்தக் காலத்தில் பின்தங்கியிருந்ததனால்.. இங்கே ஆரிய ஆதிக்கம் இருந்தது. பெண்ணடிமை இருந்தது.

அதை எதிர்க்க பகுத்தறிவுப் போராட்டம் தேவைப்பட்டது. தந்தை பெரியார் அரசியல் கலப்பில்லாத பகுத்தறிவுப் போராடடத்தை கையிலெடுத்தார். பாதிக்கப்பட்ட திராவிடர்கள் ஓரணியில் திரண்டனர். அடக்கு முறையை சாதீய கொடுமைகளை, மூடத்தனமான கடவுள் நம்பிக்கையை, பெண் அடிமைத்தனத்தை மூர்க்கத்தனமாக எதிர்த்தனர்.

இதற்கான அவசியம் அன்றைய தமிழகத்தில் இருந்தது.பேரறிஞர் அண்ணா அவர்கள் இதையே ஒரு சில மாற்றங்களுடன் அரசியல் இயக்கமாக மாற்றி.. தனியாகவே வந்து கட்சி ஆரம்பித்தார். "அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு'' என்ற ஜீவாதாரக் கொள்கையை முன் வைத்தார்.

அண்ணா கட்சிக்கு எதிராக பிரிவினை வாத தடைச்சட்டடத்தை கொண்டு வந்தது நேரு தலைமையிலான அரசு. அண்ணா, ஜீவாதாரக் கொள்கையை கைவிட்டு தமிழக ஆட்சியைப்பிடித்தார். ஏனெனில் தமிழ் மாநில அரசின் மூலமே ஆறரைக்கோடித் தமிழர்களுக்கும் நல்லது செய்ய முடியும் என நம்பினார். செய்தார். பிற்காலத்தில் அண்ணா மறைவுக்கு பின், கட்சி இரண்டானது. இடையிலே மறுபடி தேசீயகட்சிகள் நுழைந்து கூட்டணி என்ற பெயரில் கொடி தூக்க ஆரம்பித்தனர்.

கொள்கைகளில் பொருளாதார திட்டங்களில் பெரிய வேறுபாடுகள் இருக்கவில்லை. மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? மத்தியில் யாருடன் கூட்டணி எத்தனை மத்திய மந்திரிகள்? இசைதான் தமிழக கட்சிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள். இது காலத்துக்கு காலம் மாறும்போது தலைவர்கள் தடுமாறுகிறார்கள். தள்ளாடுகிறார்கள். தங்கள் நிலைபாட்டை அடிக்கடி மாற்றிக்கொளகிறார்கள்.

இதற்கிடையில் ஈழப்பிரச்சினை அவர்களுக்கு ஒரு தலைவலியே! இங்குள்ள தலைவர்களுக்கான அதிகார வரம்பிற்கு உட்படாத பிரச்சினை இது. வெளிநாட்டு பிரச்சினை. மத்திய அரசு தான் சாதிக்க முடியும். மத்திய அரசில் ஆட்சியிலிருக்கும் கட்சி, தங்கள் தலைவர் ராஜீவ் காந்தி அவர்களை இழந்த கோபத்தோடு செயல்படுகிறார்கள் என தமிழர்கள் நம்புகிறார்கள்.

மத்தியில் கூட்டணியில் இருக்கும் தமிழினத்தலைவர் கலைஞர் அவர்கள் மனது வைத்தால் ஈழத்தமிழர்களுக்கு விடியல் கிடைக்கும் என உலக தமிழினம் நம்புகிறது. இலங்கையில் நிலைமை வேறு. அது ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டம். இருபத்தியிரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் இனம் தமது உரிமைகளைப் பாராளுமன்றத்தில் பேசி பெற முடியாத நிலை.

இங்கு ஒரு இனம் ஒதுக்கப்பட்டது. பின்னர் மொழிப் போராட்டத்தின் பின்னர்ல் எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்டது. தந்தை செல்வா கடலிலே தூக்கி வீசப்பட்டார். வட்டுக்கோட்டை மகாநாட்டில் தனி ஈழமே ஒரே வழி என்று முரசு கொட்டினார். அதன் பின்னர் தான், போராளிகளின் ஆயுதப்போராட்டம். அதன் பின் தான் இனம் அழிக்கப்பட்டது.

தற்போது ஈழத்தில் தமிழ் இனம் பூண்டோடு அழிக்கப்படுகிறது. உலகுக்கு இந்த உண்மை தெரியும். ஆனால் பக்கத்து நாடான இந்தியா தீர்க்கமான முடிவை எடுக்காமல் பழி வாங்கும் நோக்குடன் நடற்து கொள்வது, போராளிகளையும் தமிழர்களையும் பிரித்துக்காட்டி வேண்டாத குழப்பத்தை ஏற்படுத்துவது இவை எல்லாம் மற்ற நாடுகள் ஆதரவு தெரிவிக்க அஞ்சும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொன்னால் சொல்லமுடியும். தலைவர்கள், கட்சிகளை புறந்தள்ளி தொப்புள்கொடி உறவான தாயகத் தமிழர்கள் ஈழத்தமிழர்களை காக்க, சட்ட வரம்புகளை மீறி, நாட்டின் எல்லைக்கோடுகளை கடந்து, கடல் பரப்புகளையும் தாண்டி வர தயாராகிறார்கள் என்ற உண்மை நிலையை நாம் மறுப்பதில்லை.

இந்த உண்மை இப்ப தான் செய்தியாக வருதுப்பா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதுகெலும்பில்லாத கலைஞர்(மு.க) அவர்கள் தான் தமிழ் ஈழத்தின் தலைவர் என்று யாராவது வாக்கு கொடுத்திருந்தால் இப்ப நிலமை வேறு.

எல்லாம் பதவி மோகம்.

தமிழ் நாட்டு அரசியல் பேதைகளுக்கு எங்கே தெரியப்போகிறது. இன்று ஸ்ரீ லங்கா, தமிழ் ஈழம்,தமிழ் நாடு, ஏன் இந்தியாவைக்கூட ஆள்வது சிங்கள பாசிச பயங்கரவாதி ராஜபக்சவும் அவனுடைய கூட்டமும் தான்.

பாவம் தமிழ் நாட்டு மக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ...அப்டி எல்லாம் சொல்லாதீங்கோ...நாகள் எல்லாரையும் அரவணைச்சு போகவேண்டும்... இப்படியான தலைப்புக்கள் யாழில சிலபேருக்கு பிடிக்காது,.,வந்து உடன 'ஜனநாயம்' பேசுவினம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.