Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளுக்கும் கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதலுக்கும் சம்பந்தமில்லை!-உதய நாணயக்கரா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளுக்கும் கிரிக்கெட் வீரர்கள் மீதான

தாக்குதலுக்கும் சம்பந்தமில்லை! - உதய நாணயக்கரா

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தீவிரவாதத் தாக்குதலுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் தொடர்பில்லை என இலங்கை இலங்கை ராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பொதுவாகவே இலங்கை அரசப் பிரதிநிதிகளும், ராணுவத்தினரும் பொய்ப் பிரச்சாரங்களில் முனைவர் பட்டமே பெறும் அளவுக்கு முன்னேறிப் போய்விட்டவர்கள்.

அதுவும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பொய்க் குற்றச்சாட்டுகளை அடுக்குவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே. வேற்று கிரகத்தில் எங்காவது குண்டு வெடித்தால் கூட, அதில் புலிகளின் கை இருக்கிறது, என யோசிக்காமலேயே கூறும் அளவுக்கு புலிப் பயம் அவர்களை ஆட்டிப் படைத்து வருகிறது.

இந்த சூழலில்தான் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடச் சென்ற இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது கொடும் தாக்குதலை நடத்தியது தீவிரவாத கும்பல் ஒன்று. இதில் முன்னணி ஆட்டக்காரர்கள் 6 பேர் காயமடைந்தனர்.

உடனடியாக அனைவரும் பாதுகாப்பாக நாடு திரும்பினர்.

தாக்குதல் நடந்த உடனே இதற்கு யார் காரணமாக இருப்பார்கள்? என்ற கேள்வியை அனைவருமே கேட்டு வருகின்றனர்.

சிலர் தாலிபான்களைக் கைகாட்டினர். இன்னும் சிலரோ தாக்குதல் நடந்த விதத்தைப் பார்த்து, இது லஷ்கர் இ தொய்பா வேலை என்றனர்.

இந்தியர்கள் சும்மா இருப்பார்களா… ராஜ்தீப் சர்தேசாய் என்ற செய்தியாளர் போகிற போக்கில், ‘விடுதலைப் புலிகளுக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பு இருக்குமா?’ எனக் கேட்டு வைக்க, சற்று நேரத்தில் பல சேனல்களிலும் இதே பாணியிலான கேள்விகள்.

கொழும்புவில் இதே கேள்வியை அந்நாட்டின் ராணுவ பேச்சாளர் உதய நாணயக்காரவிடமும் சில நிருபர்கள் கேட்டனர்.

உடனே அவர் சொன்ன பதில்:

நிச்சயம் இந்த தாக்குதலுக்கும் புலிகளுக்கும் சம்பந்தமில்லை. விடுதலைப் புலிகள் இம்மாதிரி தாக்குதல்களைச் செய்யமாட்டார்கள்’ என்றார் பளிச்சென்று.

அட பரவாயில்லையே… இந்த அளவு குறைந்த பட்ச நாகரீகமாவது தெரிந்துள்ளதே…! எல்லா நேரத்திலும் இந்தத் தெளிவு சிங்கள ஆட்சியாளர்களுக்கும் இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

இது ஒரு குறிப்புக்காக:

இதுவரை கிரிக்கெட் வீரர்கள், சுற்றுலாப் பயணிகள், பிற நாட்டு விருந்தினர்… இப்படி யாருக்குமே விடுதலைப் புலிகளால் எந்த இடையூறும் நேர்ந்ததில்லை என்பதை நினைவு கூர்வது நலம்.

இலங்கையின் வடமுனையில் பெரும் போர் நடந்து கொண்டிருந்தாலும, கொழும்பு, கண்டி, காலே உள்ளிட்ட பல நகரங்களில் வழக்கம் போல அமோகமாக நடந்தன கிரிக்கெட் போட்டிகள். சமீபத்தில் இந்திய அணி இலங்கையில் எவ்வித கூடுதல் பாதுகாப்புமின்றி பயணம் செய்துவிட்டுத் திரும்பியது. சில சிங்கள ரசிகர்கள்தான் தேவையில்லாத தொல்லைகளைக் கொடுத்தார்களே தவிர, வேறு எந்த அச்சுறுத்தலும் அவர்களுக்கு இல்லை.

இதற்கு முக்கியக் காரணம், புலிகள் வெறும் போராளிகள் அல்ல, ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் இயக்கம், என்பதே.

http://www.envazhi.com/?p=4677

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் சர்தேசாயின் கேள்விக்குப் பிறகு இத்தாக்குதலில் வெளினாட்டு ஊடகங்களில் புலிகளுக்கும் சம்பந்தமிருக்கிறதா என்று சந்தேகம் எழுப்பியிருக்கிறது. தலிபானுக்குத் தான் செய்திருக்கலாம் என்ற தலைப்பில் இன்று வந்த சிட்னி மொர்னிங்கரல் பத்திரிகையில் யார் யாருக்கு சம்பந்தமிருக்கலாம் என்றும் கேள்விகேட்டிருக்கிறது. புலிகளுக்கும் பற்றிக் குறிப்பிட்டு , பாகிஸ்தானில் தனியாக இத்தாக்குதலை புலிகள் செய்யமுடியுமா என்றும் கேட்டிருக்கிறது. அத்துடன் ஒரே ஒரு தாக்குதலைத் தவிர புலிகள் வெளினாடுகளில் தாக்குதல்கள் செய்யவில்லை என்றும் அப்பத்திரிகை சொல்லியிருக்கிறது.

வழமையாக எதுக்கெடுத்தாலும் புலிகள் மீது குற்றம் சாற்றும் உதய நாணயக்காரா இம்முறை அவ்வாறு குற்றம் சாட்டாமைக்கு காரணங்கள் - இதனால் சிறிலங்காவின் சுற்றுலாத்துறை மிகவும் பாதிக்கும், அத்துடன் சிறிலங்காவில் இனிமேல் சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகள் நடைபெற முடியாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன கண்டுபிடிப்பு! உட்கார்ந்திருந்து யோசிப்பாங்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கும் கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதலுக்கும் சம்பந்தமில்லை!-உதய நாணயக்கரா

இவர் இப்படிச் சொன்னதில உள்ள தார்ப்பரியம் என்னவென்றால்......

1) செய்தது யாரென்று எமக்குத் தெரியும் என்று கோடி காட்டுகிறார்..!

2) ஆகலும் ஆடினால் யாரென்று சொல்லிவிடுவோம் என்கிறார்..!

3) புலிமீது பழிபோட்டுவிட்டு தப்ப முடியாது என்கிறார்..!

4) தலையீட்டைக் குறைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்துகிறார்..!

யாரென்று சொல்லவும் வேணுமே...! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவனே பரவாயில்லை இந்த நிகழ்ச்சியில். டைம்ஸ் ஆப் இண்டியா பத்திரிக்கையில் புலிகளுக்கும் ஜிகாத் அமைப்புக்கும் தொடர்பு என எழுதியிருப்பதாக நண்பர் ஒருவர் தெரிவித்தார். முழு விபரம் கிடைத்தவுடன் இணைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலரும் இப்படிப்பட்ட செய்திகள் தர ஆரம்பித்துவிட்டார்கள்.. சிலர் புலிகளுக்கும் அல் கொய்தாவுக்கும் தொடர்பு அன்று கூட எழுதுகிறார்கள் ..

http://www.google.com/hostednews/afp/artic...MghBoaXfhasOElA

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.