Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறுமிகள் சிறீலங்கா படையினரால் கருத்தரிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் குடாவில் கலாசார சீரழிவு உச்சக்கட்டத்தில் - பெற்றோர் கவலை

யாழ் குடாநாட்டில் கலாசார சீரழிவு என்றுமில்லாதவாறு உச்சக்கட்டத்தில் உள்ளதாகவும், இதனால் தாம் தமது பிள்ளைகளை யாழ் குடாநாட்டில் தொடர்ந்தும் வைத்திருக்க அஞ்சுவதாகவும், குறிப்பாக பெண் பிள்ளைகளை வைத்திருக்கவும் அவர்களை வீதியில் நடமாட அனுமதிப்பதற்கும் தாம் அஞ்சுவதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒருபுறம் சிறீலங்கா படையினரின் அச்சுறுத்தல்கள், மறுபுறம் தமிழ் ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தல் என்பனவற்றுடன் அண்மையில் ஆயுதக் குழுக்களின் உறுப்பினர்கள் என தம்மை அடையாளப்படுத்தும் சில சமூக விரோதிகளின் தொல்லை என தமக்கான நெருக்கடிகள் அதிகரித்து செல்லவதாக பெற்றோர் கூறினர்.

இதனால் பிள்ளைகள் கல்வி கற்றலுக்குரிய சூழல் குடாநாட்டில் இல்லாது போய்க்கொண்டு இருப்பதாகத் தெரிவித்துள்ள பெற்றோர், கடந்த காலங்களில் படையினர் குடாநாட்டை ஆக்கிரமித்த பின்னர் இவ்வாறான சூழல் ஏற்பட்டதையும் அந்த சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் தமது பிள்ளைகள் பாதுகாக்கப்பட்டதையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தனர்.

இதேவேளை, யாழ் குடாநாட்டில் சிறுமிகள் அதிகளவில் கருத்தரிப்பதாக திடுக்கிடும் செய்தி ஒன்றினை மகளிர் அமைப்பு பிரதிநிதிகள் நேற்று முன்தினம் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வில் வெளியிட்டுள்ளனர்.

இந்தக் கருத்தரிப்புக்கு முக்கிய காரணம் சிறீலங்கா படையினரின் பலாத்காரம் எனவும், அவர்களின் அச்சுறுத்தல் காரணமாக பிள்ளைகள் மற்றும் பெற்றோர் இதனை உரிய இடங்களுக்கு அறிவிக்காது மறைத்து, பின்னர் சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்பு செய்ய முனைவதாகவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு வெல்லாவெளியிலும் 14 அகவையுடைய சிறுமி ஒருவர் சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதுடன், அவரது பெற்றோர் படையினரால் பல தடவைகள் தாக்கி துன்புறுத்தப்பட்டிருந்தனர்.

தமிழ் மக்களின் பலம் இழக்கப்பட்டால் இவ்வாறான சம்பவங்கள் மேலும் அதிகரிக்கும் என்பதால், தமிழ் மக்களும் அவர்களின் தலைமையும் மிகவும் பலத்துடன் இருக்க வேண்டும் எனவும், இதனை அனைத்து தமிழ் மக்களும் உணர தலைப்பட வேண்டும் எனவும் யாழ்ப்பாணத்திலுள்ள சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

பதிவு.கொம்

  • கருத்துக்கள உறவுகள்

எமது சமூக அமைப்பில் , இப்படியான சம்பவங்கள் இடம் பெற்றால் ....... அதனை வெளியே கொண்டுவரமாட்டார்கள் என்ற துணிவில் இந்த ஈனப்பிறப்புகள் ஈடுபடுகின்றன .

வெளியே கொண்டு வந்தாலும் நீதியா கிடைக்கப்போகின்றது . :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசங்களில் இப்படியான பல சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன நடக்கவும் போகின்றன ஆனால் இவை எதுவுமே வெளியில் வராது.தமிழ் ஒட்டுக்குழுக்களால் பல ஈன செயல்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஒரு குறித்த பிரதேசத்தில் இப்படியான ஒரு சம்பவம் நடக்கின்றது என்றால் அந்த பிரதேசத்தில் உள்ள மக்கள் எல்லோரும் மனிதபிமானத்தோடும் ஒற்றுமையோடும் இருந்தால் நடக்க இருப்பதை தடுக்கலாம் அல்லது இனிமல் நடக்காமல் தடுக்கலாம் ஆனால் எம மக்கள் அப்படி இல்லையே.எல்லோருக்கும் தங்கள் தங்கள் குடும்பம் தான் முக்கியம் மற்றவனுக்கு என்ன நடந்தால் என்ன ..எண்ட பிள்ளை நல்லா இருந்தால் காணும் என சிந்திக்கும் மக்கள் இன்று மற்றவனுக்கு நடப்பது நாளை எனக்கு நடக்க எத்தனை காலம் ஆகும் என்பதை சிந்திக்க மறுக்கிறார்கள் .

யாழ் குடாவில் உள்ள மக்களில் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பார்களானால் வீதியில் இருக்கும் ராணுவத்தையே முகாம்களுக்குள் முடங்க செய்யமுடியும் யாழ் மீட்ப்புக்கு காத்திரமான பங்களிப்பை செய்யமுடியும் .ராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் மக்கள் என்ன செய்யமுடியும் என்று கேட்பதில் அர்த்தமில்லை மனமுண்டானால் இடமுண்டு.........இழப்புக்கள் நிச்சயம் வரும் தோல்விகள் நிச்சயம் வரும் ஆனால் முடிவு உங்களுக்கு சாதகமானதாகவே இருக்கும்,யாழில் முன்னெடுக்கப்பட்ட பல திட்டங்களுக்கு யாழில் காணப்படும் ஒர்ருமையின்மையே முட்டுக்கட்டைகளை போட்டது.எனது குடும்பம் என்று சுயநலத்தால் யாழில் இழந்தவை பல ஆனால் இன்று கூட மக்கள் மாறுவதாக தெரியவில்லை.

யாழில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் விருப்பமுள்ள இளையவர்களை தேர்ந்தெடுத்து அவர்களோடு ஒன்றோ அல்லது இரண்டோ அனுபவமுள்ள விடுதலைப்புலிகள் வழிநடத்தி வீதியில் இருக்கும் சிறு சிறு முகாம்களையோ அல்லது வீதியில் இருக்கும் ராணுவத்தையோ தாக்க தொடங்கினால் .........இப்படியே யாழ் முழுவது நடைபெற்றால் ....ராணுவம் எங்கு சுற்றிவளைப்பது எத்தனை ராணுவத்தை பாதுக்ப்புக்கு அமர்த்துவது .அனால் இந்த இளையவர்கள் குறிப்பிட்ட ஆரம்ப பயிற்சியை பெற்றிருக்கவேண்டும் அவற்றை சமாதான காலத்தில் புலிகள் அழைக்கும் போது பெற்றிருக்கலாம் இப்பொழுதும் ஆரம்ப பயிற்சிகளை வழங்கக்கூடிய நிலையில் இருப்பார்கள் ....உங்களுக்கு வேண்டிய ஆயுதங்களையும் நெறிப்படுத்தல்களையும் சம்பந்தப்பட்டவர்கள் வழங்குவார்கள் அனால் இங்கு ரகசியம் காத்தல்,மக்களின் ஒற்றுமை,ஏதிரியை அடையாளம் கானல்,துரோகியை களையெடுத்தல் என்பன முக்கியமானது,எல்லாவற்றுக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.