Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிமுகவுடன் சேருவது ஈழத் தமிழர்களுக்கு விரோதமானது - திருமாவளவன்

Featured Replies

"அ.தி.மு.கவுடன் கூட்டணி சேர்வது என்பது ஈழத் தமிழர்களுக்குச் செய்யும் துரோகம், ஈழத் தமிழர்களுக்கு எதிரானது. தி.மு.க. கூட்டணியில் இருப்பதை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம்" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இல்லை என்ற நிலை கிட்டத்தட்ட ஏற்பட்டு விட்டது. இந்த நிலையில் நேற்று முதல்வர் கருணாநிதியைத் திருமாவளவன் மாலையில் சந்தித்துப் பேசினார். அப்போது தொகுதிப் பங்கீடு குறித்தும், பா.ம.க. குறித்தும் பேசப்பட்டது.

திருமாவளவனுடன் கட்சி எம்.எல்.ஏ. ரவிக்குமார், தலைமை நிலைய செயலாளர் வன்னியரசு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பா.ம.க., அ.தி.மு.க. கூட்டணிக்குப் போவதை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசினார்.

அவர் கூறுகையில்,

"இலங்கையில் வாழும் தமிழ் இனத்திற்கு எதிராகப் பேசியவர் ஜெயலலிதா. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனைக் கைது செய்ய வேண்டும், விடுதலைப்புலிகள் சரணடைய வேண்டும் என்றெல்லாம் தமிழ் இனத்திற்கு எதிராகப் பேசியவர் ஜெயலலிதா.

ஆனால், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு காட்டுவதுபோல, உண்ணாவிரதம் என்ற ஒருநாள் கூத்தை நடத்தினார். அ.தி.மு.க., தி.மு.க.வுடன் ஒப்பிட முடியாத கட்சி. ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் அ.தி.மு.க. நேர் எதிரான கட்சி.

அ.தி.மு.க. கூட்டணியில் சேர்வது ஈழத் தமிழர்களுக்கு எதிரானது. தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு, எங்கள் கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி பா.ம.க.வுக்கு அழைப்பு விடுத்தோம். அந்த தீர்மானத்தையும் விலக்கிக்கொண்டு, நேற்று இரவு நீண்ட நேரம் டாக்டர் ராமதாசை சந்தித்துப் பேசினேன். அப்போது, தோழமை உரிமையுடன் கூட்டணிக்கு அழைப்பு விடுத்தேன்.

ஒரே அணியில் இருந்தால் சமூக எழுச்சியை வளர்க்க முடியும் என்று அப்போது நான் கேட்டுக்கொண்டேன். எங்கள் கோரிக்கையை புறந்தள்ளாமல், கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் கலந்துபேசி கூறுவதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

சூசகமாக என்னை அ.தி.மு.கவுக்கு அழைத்தார். தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.கவினர் வருவர் என்ற நம்பிக்கை இன்னும் எனக்கு உள்ளது. எங்களை அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு டாக்டர் ராமதாஸ் அழைக்கவில்லை. பா.ம.கவுடன் வர சூசகமாக அவர் அழைத்தார். நாங்கள் தற்போது தி.மு.க.வுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேசி வருகிறோம். அணி மாறுவது குறித்து எந்த ஊசலாட்டமும் எங்களிடம் இல்லை.

சிதம்பரம் தொகுதியில் பா.ம.க.வும், விடுதலை சிறுத்தைகளும் தனித்தனி அணியில் நின்று போட்டியிட நேரிட்டால், எங்களுக்குள் போட்டிதான் இருக்குமே தவிர, மோதல் இருக்காது.

நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, 2 தனித் தொகுதி, ஒரு பொதுத் தொகுதி என மொத்தம் 3 தொகுதிகளை ஒதுக்கித்தர முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

தி.மு.கவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொள்கை அடிப்படையிலான உறவு கொண்டதை முதலமைச்சர் கருணாநிதி கடந்த வாரம் அறிவித்தார். தேர்தல் கூட்டணிக்காக இல்லாமல் சாதி ஒழிப்பு, சமத்துவ கொள்கை ரீதியில் பெரியார், அண்ணா வழியில் செயல்படுவதை முதலமைச்சர் கருணாநிதி அப்போது சுட்டிக்காட்டினார். இதை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கிடைத்த பாராட்டு மடலாக கருதுகிறேன்.

கூட்டணி உறவை மனப்பூர்வமாக ஏற்று, மகிழ்ச்சியோடு தேர்தலைச் சந்திக்கிறோம். ஈழத்தமிழர் ஆதரவுக்காக எங்கள் குரல் வலுவாக ஒலிக்கும். இலங்கை தமிழர்கள் வாழ்வுக்காக தி.மு.க. எவ்வளவோ செய்துள்ளது. அதற்காக எத்தனையோ இடர்பாடுகளை சந்தித்துள்ளது.

சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது, பிரதமரைச் சென்று சந்தித்தது, மனிதச்சங்கிலி நடத்தியது போன்றவற்றில் முதலமைச்சர் கருணாநிதி முன் நின்றார். இலங்கை தமிழர்கள் மீது மிகுந்த அக்கறை வைத்துள்ள தி.மு.கவுடன் தேர்தல் உறவு வைத்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என்றார்.

வீரகேசரி இணையம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிரியைவிட துரோகி கொடியவன்,

ஜெ தன் சொந்த வாயாய் தனது உண்மை நிலையை வெளிப்படுத்தியவர்.

கருணாதியோ ஈழத்தவர்களுக்கு தீங்கான ஆயிரம் பாதகங்களுக்கு உடன் இருந்தவர்.

அபயம் என்று நம்பி இருந்தவனின் துரோகத்தனத்திற்கு ஈடாக உலகில் எதுவுமே இல்லை.

இந்த நரியைத் தோற்கடிப்பதே தமிழ் உணர்வாளர் அனைவரதும் கடமையாக வேண்டும்.

புலிதன்னைக் கொல்லப் போகின்றது என்று இந்த நரி சொல்லவில்லையா?

வை கோவை விரட்டி கட்சி உரிமையை தன் குடும்பத்திற்கு சொந்தமாக்க, ஈழத்தின் விடிவையே அன்று கழுகேற்றியவன் இந்தக் கயவன்.

இன்னும் சொன்னால் தாய் மானம் கூட அரசியலுக்கு கப்பம் கொடுத்து வெற்றி பறிக்க முயலும் இழிந்த மனிதப் புளு,

காங்கிரசுடன் தேர்தல் கூட்டணி என்பது ஈழத்தமிழர்கள் மொத்தத்திற்கும் தி.மு.க தோண்டும் மரணப்படுகுழி!

காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற்றால்

உங்கள் கூட்டணி பதவிகளுக்கு

காங்கிரஸ் கேட்கப் போகும் விலை

ஈழத்தமிழர்களின் தலை

அதற்கும் அந்த கிழவர் தஞ்சாவூர் பொம்மை போல் தலையாட்டி விட்டு

பதவிக்காக தமிழனுக்கு பாடை கட்டத்தான் போகிறார்.

இதை உங்கள் குறிப்பேடுகளில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நண்பர் திருமா அவர்களே

தென்றல் போன்ற நண்பன் தான்! தீயை போலே மாறினான்!! சொன்ன வார்த்தை மீறினான்!!!

Edited by vettri-vel

ஆட்சியில் இருந்து ஏதும் செய்யாமல் இருக்கும் திமுகதான் கொடியது...

கருணா- நிதியுடன, சோனியாவுடன் இருப்பது தவறு. கருணா- நிதி முதுகிகில் குத்தியதை நியாயப்படுத்தவேண்டாம்

காங்கிரசுக்கும் அதன் கூட்டணிக்கும் ஓட்டுப் போடாதீங்க...

போருக்கு துணைபோகும் காங்கிரஸ்காரனை யாரெல்லாம் தங்கள் முதுகில் சுமந்து வருகிறார்களோ (திமுக, பாமக விடுதலை சிறுத்தைகள் யாரானாலும்) அவர்களும் ஏதோ ஒரு வகையில் இந்தப் படுகொலைகளில் கை நனைக்கிறார்கள்.

இந்தத் தேர்தலில் அவர்களுக்கும் சேர்த்தே முடிவு கட்ட வேண்டும் என்பதுதான் நமது திட்டமாக இருக்க வேண்டும்.

திரு. திருமாவளவன் அவர்களுக்கு!

நீங்கள் கலைஞருடன் கூட்டணி சேர்து பற்றி குறிப்பிட்டிருந்திர்கள்........ நல்லது!

நீங்கள் கலைஞருடன் கூட்டணி சேர்வது பற்றி நான் ஒன்றும் குறிப்பிட விரும்பவில்லை.

ஆனால்......

அது காங்கிரசுடனான கூட்டணி என்பதை (புத்திசாலித்தனமாக என்று நினைத்து) நீங்கள் குறிப்பிடவில்லை.

காங்கிரசை தமிழ் நாட்டிலிருந்து அகற்றுவோம் என புறப்பட்டு காங்கிரசுடன் கூட்டுச்சேர்ந்துள்ள உங்களை 'விடுதலைச் சிறுத்தைகள்' என்று அழைப்பதைவிட 'விடுதலை நரிகள்' என்று அழைப்பது சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிவின் பின்பு ,பல கட்சிகள் இடமாறலாம்.

விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதியில் காங்கிரஸ் ஆதரவாளர்கள் விடுதலைச்சிறுத்தைக்கு ஆதரவாக வாக்களிக்கமாட்டினம் .அதே போல விடுதலைச்சிறுத்தைகள் ஆதரவாளர்கள் காங்கிரஸ் பாட்டாளி மக்கள் போட்டியிடும் தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சிக்கே ஆதரவு தரும்.

தேர்தல் முடிய காங்கிரசு ஆட்சி அமைக்க சில தொகுதிகள் தேவைப்படும் போது சிலவேளை பாட்டாளிமக்கள் கட்சி அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி தரும் நிபந்தனையுடன் காங்கிரசுக்கு ஆதரவு தரலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.