Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலைக்கெதிரான கூட்டங்களில் புலிக்கொடி தேவையா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தராக்கியுடைய சந்தேகம் அதை நாங்கள் தான் விளக்கவேண்டுமே தவிpர குறை கூறக்கூடாது :mellow::) இப்படி பலபேருக்கு சந்தேகம் இருக்கிறது என்னவென்றால்

அங்கே எமது மக்கள் செத்து மடிந்துகொண்டிருக்கிறார்கள் அவர்களுடைய படுகொலைகளை முதலில் நிறுத்தவேண்டும் அதன் பின்னர் தேசியக்கொடியை தூக்கிப்பிடிக்கலாம் என்பது சிலபேருடைய வாக்குவாதம் தராக்கி உட்பட ஆனால் நாமும் யோசிக்கவேண்டும் புலிக்கொடி அவசியம் தான் இல்லையென்டுசொல்லவில்லை நாம் முதலில் மக்களுடைய படுகொலைகளைத்தான் நிறுத்தவேண்டும் அதுதான் நமக்கு தற்போதைக்கு முக்கியமான ஒண்றும் சர்வதெசத்திடம் எடுபடக்கூடியதும் கூட படிப்படியாக நமது பேராட்டத்தை மாற்றலாம் என்பது எனது கருத்து அதற்காக புலிக்கொடி வேண்டாம் என்று சொல்லவில்லை கட்டாயம் முக்கியமான ஒண்று ஆனால் படுகொலைகளை முன்நிறுத்தவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

கையில் ஏந்துவோம் புலிக்கொடி! அதுவே எமது வெற்றிக்கொடி!!

புலிக்கொடியென்பது தமிழர்களின் வரலாற்றுக்கால சோழ மன்னர்களிற்குரிய அவர்களின் வீர வரலாற்றை பறைசாற்றிய கொடியென்பது சரித்திரம். அந்தவகையிலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் தமக்கான கொடியாக, சின்னமாக புலிக்கொடியை தேர்ந்தெடுத்திருந்தனர் தற்போதும் தமிழரின் வீரத்தினை இப்புலிக்கொடியே பறைசாற்றி வருகின்றது. அண்மையில் அனைத்துலக நாடுகளில் நடந்த தமிழர் எழுச்சிகள் அனைத்திலும் விடுதலைப் புலிகளைக் குறிக்கும் புலிக்கொடி பாவிக்கப்பட்டிருந்ததானது பல மட்டங்களில் பலவிதமாக பேசப்பட்டிருக்கிறது. அதற்கு எதிராக மற்றும் ஆதரவாக எழுப்பப்பட்டுள்ள கருத்துக்களை உற்றுநோக்கும்போது, தமிழீழ தேசியக்கொடியான புலிக்கொடி பாவிக்கப்பட்ட விடயம் அனைவர் மத்தியிலும் ஏதோவொரு தாக்கத்தினை உண்டுபண்ணியிருக்கிறது என்பது தெளிவாகப் புலப்படும். குறிப்பாக இலங்கை அரசு பாய்ந்தடித்துக்கொண்டு தனது எதிர்ப்பை வெளியிட்டிருப்பதென்பது அதன் விளைவுகள் மிக அழுத்தமாக இருக்கும் என்பதனையே கோடிட்டுக் காட்டுகிறது. இத்தாக்கங்களின் பிரதிபலிப்புகள் எவ்வாறு அமையும் அதன் பலாபலன்கள்,விளைவுகள் எவ்வாறிருக்கும் என்பது பற்றி பார்ப்போமானால்... எழுச்சிகள், பேரணிகளில் கலந்துகொள்ளும் மக்கள் தமிழீழ தேசியக்கொடியை தாங்கி வருவதிலிருந்து சர்வதேசத்திற்கு அழுத்தம் திருத்தமாக சில விடயங்களை சொல்லவருகிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழரும் வேறுவேறில்லை; விடுதலைப்புலிகளே தமிழர்களுக்கான ஏக பிரதிநிதிகள், புலிகளே தமிழரது காவலர்கள்; தமிழர்கள் அனைவரும் தமிழீழத் தீர்வினையே எதிர்பார்க்கின்றார்கள், தமிழீழத் தீர்வே தமிழரின் நிரந்தரத் தீர்வாக அமையும்; என்பவற்றை ஆணித்தரமாக உலகத்திற்குச் சொல்லிவைக்க முற்பட்டிருக்கிறார்கள்... தமிழீழ தேசியக்கொடியின் கீழ் ஓரணியாகத் திரண்டிருக்கிறார்கள். அது காலத்தின் கட்டாயமாகவும் அமைந்திருக்கிறது. ஏனெனில், சர்வதேசத்தின் பார்வை இலங்கையை நோக்கித் திரும்பியிருக்கும் நிலையில், சர்வதேசம் தமிழர் விடயத்தில் ஏதாவது தீர்வினை முன்வைக்க முயற்சிக்கும்.அத்தீர்வானது தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யும் அளவுக்கு அமையுமா? என்பது சந்தேகமே. சர்வதேசமானது இலங்கையரசையும் அனுசரித்தே நடக்க முனையும். அப்படிப்பட்ட தீர்வானது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக அமையாது. தமிழ்மக்களின் முப்பது வருடகாலப் போராட்டத்திற்கும் அவர்களின் தியாகங்களுக்கும் ஈடாக அது இருக்குமா என்பது கேள்விக்குறியே. ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களின் மரணங்களுக்கும் , பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் தியாகங்களுக்கும், இந்த நிமிடம்வரை வன்னி மண்ணில் சிந்தப்பட்டுக்கொண்டிருக்கு

  • 2 weeks later...

கூலிக்கும்பல்கள் கண்ணில் உறுத்தும் தமிழீழத் தேசியக்கொடி

மீண்டும் கிளம்பிவிட்டது துரோகிகளின் நடவடிக்கைகள்!

எதிரிகளின் கண்ணில் உறுத்தும் தமிழீழத் தெசியக்கொடியை முடக்க சதித்திட்டம் ஒன்று ஆரம்பமாகியுள்ளது! குறிப்பாக லண்டனில் மெல்ல மெல்ல இந்த விசம் ஏற்றப்படுகிறது. இதற்கு தேசிம் வளர்க்கிறோம் என கூறிக்கொள்ளும் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) தொலைக்காட்சியும் இவர்கள் தெரிந்தா அல்லது ஒட்டுக்குழுக்களின் வார்த்தைகளில் கவரப்பட்டுவிட்டார்களோ தெரியாது! திரும்பத் திரும்ப அந்த தொலைக்காட்சி கொடி பிடிக்கவேண்டாம் என்பவர்களின் கருத்தை கேட்டு அதை ஆமோதித்து கருத்து தாங்களும் கூறுவதுடன், அதனை எதிர்த்து கருத்து கூற வரும் தமிழீழ ஆதரவாளர்களை கருத்து சொல்லவிடாமல் தடுக்கிறது!

சமீபத்தில் சிறீலங்கா பயங்கரவாத அரசின் அழைப்பின்பேரில் இலங்கை சென்ற சில கூலிக்கும்பல்கள் பயங்கரவாத அரசின் தலைவர் மகிந்தவுடன் கூட்டம் போட்டு பல சதித்திட்டங்களுடன் திரும்ப வந்திருக்கிறார்கள்! அதில் முதன்மையானது எமது தேசியக் கொடியை முடக்குவது!

வன்னியில் மக்களை தாங்ஙகள் மீட்டுவிட்டோம் என பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுவரும் இவ்வேளையில் மக்கள் கையில் இருந்து தமிழீழத் தேசியக் கொடியை அகற்றுவதன் மூலம் இப்போதைய பிரச்சாரத்துக்கு அருமையான ஆதரவு சிறீலங்கா அரசுக்கு கிடைக்கும்!

புலிகளை மக்கள் ஒதுக்கிவிட்டார்கள் என காட்டுவதற்கும்.. நடப்பது புலிகளுக்கு எதிரான கூட்டங்கள் என காட்டுவதற்கும் முதலில் செய்ய வேண்டியது கொடிகளை அப்புறப்படுத்துவது! அடுத்தது தலைவரின் படங்கள்.. புலிகளுக்கு ஆதரவான கோசங்கள் இவற்றை தவிர்க்ச் செய்வது. இதன் மூலம் புலிகளை தமிழ் மக்கள் ஒதுக்கிவிட்டார்கள் என சர்வதேசத்துக்கு காட்டுவது. இதற்கு நாம் உடந்தையாக வேண்டுமா?

லண்டனில் கூட இவ்வாறு பலர் சதி செய்வதாக தெரிகிறது! முதலில் கொடிகளை அப்புறப்படுத்தி, பின்னர் தலைவரின் படங்கள் புலிகளுக்கு எதிரான கோசங்களை அடக்குதல் போன்றவை லண்டனில் நடந்து வருகிறது!

இதனை எதிர்த்த பல மக்கள் பேரணியை விட்டு விலகி வீடு திரும்பியுள்ளார்கள்!

Edited by வசி_சுதா

என்னத்த கிழிச்சாங்க நேற்று கனடாவிலே? தேசிய கொடிய பிடித்தோம் என்ற நிம்மதியாவது இருந்திருக்கும்....இனிமேலும் இந்த விவாதங்களை நிறுத்துங்க! இல்ல டப்பா டேன்ஸ் ஆடிறும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியோர் தலைப்பு தேவையா தேவையா தேவையா?!!!!!

புலிகள் இல்லாவிட்டால் அத்தனை தமிழினத்தையும் எலிமாதிரி நசுக்கிவிடும் சிங்களம்! இதை இன்னுமா அறியாதபேதைகளாக இருக்கின்றோம் நாம்.

நம் தேசியக்கொடியை நாம் பிடிக்க நமக்கு யார் தடை போடுவது?! அதை முன்னிலைப்படுத்தவேண்டிய நாமே நமக்குள் குழப்பிக்கொண்டு இப்படியான கேள்விகள் முன் வைப்பதை தவிர்க்கலாம்.

தேசியக்கொடி நம் மானம்!! மானத்தை இழந்து உயிரை வைத்திருந்து என்ன பயன்?!

  • 3 weeks later...

ஆளாளுக்குக் கோவணத்தை கழற்றிபுடிக்கத் தொடங்கினால் மனுசர் நிம்மதியா இனப்படுகொலைக்கெதிரான கூட்டங்களுக்கு, ஆர்ப்பாட்டங்களுக்குப் போறதில்லையா?

இது மக்கள் எழுர்ச்சிப் போராட்டம், எந்தவொரு சமூக ஒன்றுகூடலுக்கும் மக்கள் தமது தேசியக்கொடியைப் பிடிப்பது அவசியமாகிறது. எமது தமிழீழவிடுதலைப்போரட்ட அமைப்பை சர்வதேசம் தடைசெய்திருக்கும் பட்சத்தில், அத்தடையை நீக்கும்படி புலம்பெயர் நாடுகளின் அரசாங்கங்களுக்குக் கோரிக்கை வைத்தவண்ணமே ஆர்ப்பாட்டங்களை நடாத்திவருகின்றோம்.

வெளிநாட்டவர் எமது தேசியக்கொடியில் உள்ள புலியைப் பார்த்துத்தான் இலங்கைத் தமிழர் என

இனம் காணத்தொடங்கியுள்ளனர். அதனால் இந்த நேரத்தில் ஆளாளுக்குக் கோவணத்தை கழற்றிபுடிக்கத் தொடங்காதீர்கள்.

நுனாவிலான் சேர்த்த கருத்துக்கள் போல் மக்களாகிய நாம் நமது தமிழீழ தேசியக்கொடியை தாங்கி வருவதிலிருந்து சர்வதேசத்திற்கு வெளிப்படையாகவே சில விடயங்களை சொல்லிவருகிறோம். விடுதலைப்புலிகள் சுதந்திரப் போராட்டவீரர்கள், ஈழத்தமிழருக்கு விடுதலைப்புலிகளே ஏக பிரதிநிதிகள், விடுதலைப் புலிகளும் தமிழரும் வேறுவேறில்லை, புலிகளே தமிழரது காவலர்கள், தமிழர்கள் அனைவரும் தமிழீழத் தீர்வினையே எதிர்பார்க்கின்றார்கள், தமிழீழத் தீர்வே தமிழரின் நிரந்தரத் தீர்வாக அமையும்; என்பவற்றை ஆணித்தரமாக உலகத்திற்குச் சொல்லிவைக்க முற்பட்டிருக்கிறார்கள். தமிழீழ தேசியக்கொடியின் கீழ் ஓரணியாகத் திரண்டிருக்கிறார்கள். அது காலத்தின் கட்டாயமாகவும் அமைந்திருக்கிறது.

"வெற்றிக்கொடி கையில் எடு!!! வெல்வோம் என்று சொல்லி எழு!!!"

internat18577d.jpg

tamil-protest.jpg

protest-tamil.jpg

" இலட்சியத்தால் ஒன்றுபட்ட எழுச்சிகொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிடமுடியாது..." தமிழ் ஈழத் தேசியத் தலைவர்

கொடி விடயத்தில் எனது கருத்து........

வெற்றிக் கொடி கையில் எடு...!

வெல்வோம் என்று சொல்லியெழு...!

Edited by பருத்தியன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கபூர்வமான விவாதம்!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=50550&hl=

http://www.yarl.com/forum3/index.php?showtopic=52972&hl=

Edited by Valvai Mainthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.