Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

(2ம் இணைப்பு)புதுக்குடியிருப்பில் சிறிலங்கா படையினரின் கவசப் போர் ஊர்தி தாக்கியழிப்பு

Featured Replies

புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலின் போது டாங்கி ஒன்று அழிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஆனந்தபுரத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சிறிலங்கா படையினர் கவசப் போர் ஊர்திகள் சகிதம் செறிவான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியவாறு முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தீவிர தாக்குதலின் போது படையினருக்கு பெரும் எண்ணிக்கையிலான இழப்புக்கள் ஏற்பட்டுத்தப்பட்டு நகர்வும் முறியக்கப்பட்டது. இதில் படையினரின் டாங்கி ஒன்று விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த மூன்று நாட்கள் மேற்கொள்ளப்பட்ட சிறு சிறு தாக்குதல்களில் மட்டும் 108 படையினர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க, விடுதலைப் புலிகளின் மறிப்புச் சண்டைகள் மற்றும் மட்டுப்படுத்திய வலிந்த தாக்குதல் நடவடிக்கையின் காரணமாக சிங்களப் படைகளிடையே மனச்சோர்வும் அச்சமும் அதிகரித்து வருவதாகவும் வலிந்த தாக்குதல்கள் நடத்தும் மனநிலையில் இருந்த சிங்களப் படைகள் தற்போது தற்காப்பு நிலையை எடுக்கும் மனநிலையை நோக்கிச் செல்வதாகவும் தெரிய வருகின்றது.

அதன் அறிகுறியாக, விடுதலைப் புலிகள் இரவு நேரத்தில் ஊடுருவித் தாக்கி விடலாம் என்ற அச்சத்தில் சிங்களப் படைகள் தங்கள் முன்னணி நிலைகளைச் சுற்றி மின் விளக்குகளை பொருத்தி வருகின்றனர் என்றும் கூறப்படுகின்றது. அதேநேரத்தில் முல்லைத்தீவு நகர காப்பு நிலைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் 59 டிவிசனின் துருப்புக்கள் பலர் தற்போது தப்பியோடுவதாகவும் கடந்த 27 ஆம் நாள் வரையுமான ஒரு மாதத்தில் மட்டும் அந்த டிவிசனில் இருந்து குறைந்தது 100 படையினர் வரை தப்பியோடியுள்ளதாகவும் நம்பகமான உள்ளகத் தகவல்கள் உறுதி செய்கின்றன.

ஏனைய சிங்களப் படையினரின் டிவிசன்களில் இருந்து தப்பியோடுவோர் தொகையும் இந்த மாதத்தில் அதிகரித்திருந்தாலும் அது குறித்த சரியான தொகை விபரங்களைப் பெற முடியவில்லை.

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

  • கருத்துக்கள உறவுகள்

புதுக்குடியிருப்பு அனந்தபுரம் மற்றும் மந்துவில் பகுதியில் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் கடும் மோதல் இடம் பெற்று வருவதாக அறியப்படுகிறது.

நேற்று நடைபெற்ற தாக்குதலில் 2 கவசவாகனமும் இன்று இடம்பெற்ற தாக்குதலில் ஒரு கவசவாகனமும் தாக்கியழிக்கப்பட்டுள்ளதாக புலிகள் தெரிவித்துள்ளனர் :) .

தொடரும் மோதல்களில் பல இராணுவம் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. புதுக்குடியிருப்பில் ஊடறுத்து தாக்குதலை தொடுத்திருக்கும் விடுதலைப் புலிகளின் அணியின் கடும் தாக்குதல் காரணமாக இராணுவம் பாரிய இளப்புக்களை சந்தித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

புதுக்குடியிருப்பு பகுதி துப்பாக்கி வேட்டுச் சத்த்தில் அதிர்ந்த வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

http://www.athirvu.com/target_news.php?sub...amp;ucat=4&

Edited by kuddipaiyan26

தொடரும் மோதல்களில் பல இராணுவம் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. புதுக்குடியிருப்பில் ஊடறுத்து தாக்குதலை தொடுத்திருக்கும் விடுதலைப் புலிகளின் அணியின் கடும் தாக்குதல் காரணமாக இராணுவம் பாரிய இளப்புக்களை சந்தித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இராணுவம் கொல்லப்படுவது அச்சப்படவேண்டிய செய்தியா? அப்படியானால் மக்கள் கொல்லப்படுவது???????????????????

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலின் போது கவசப் போர் ஊர்தி (Tank) தாக்கியழிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்னி சமர்-கட்டளைப்பீட வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'புதினம்' செய்தியாளர் தெரிவித்ததாவது:

புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஆனந்தபுரத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சிறிலங்கா படையினர் கவசப் போர் ஊர்திகள் சகிதம் செறிவான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியவாறு முன்நகர்வினை மேற்கொண்டனர்.

இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தீவிர தாக்குதலின் போது படையினருக்கு பெரும் எண்ணிக்கையிலான இழப்புக்கள் ஏற்பட்டுத்தப்பட்டு நகர்வும் முறியக்கப்பட்டது.

இதில் படையினரின் கவசப் போர் ஊர்தி ஒன்று விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில் விடுதலைப் புலிகளின் மறிப்புச் சண்டைகள் மற்றும் மட்டுப்படுத்திய வலிந்த தாக்குதல் நடவடிக்கையின் காரணமாக சிங்களப் படைகளிடையே மனச்சோர்வும் அச்சமும் அதிகரித்து வருவதாகவும் வலிந்த தாக்குதல்கள் நடத்தும் மனநிலையில் இருந்த சிங்களப் படைகள் தற்போது தற்காப்பு நிலையை எடுக்கும் மனநிலையை நோக்கிச் செல்வதாகவும் தெரிய வருகின்றது.

அதன் அறிகுறியாக, விடுதலைப் புலிகள் இரவு நேரத்தில் ஊடுருவித் தாக்கி விடலாம் என்ற அச்சத்தில் சிங்களப் படைகள் தங்கள் முன்னணி நிலைகளைச் சுற்றி மின் விளக்குகளை பொருத்தி வருகின்றனர் என்றும் கூறப்படுகின்றது.

அதேநேரத்தில் முல்லைத்தீவு நகர காப்பு நிலைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் 59 டிவிசனின் துருப்புக்கள் பலர் தற்போது தப்பியோடுவதாகவும் கடந்த 27 ஆம் நாள் வரையுமான ஒரு மாதத்தில் மட்டும் அந்த டிவிசனில் இருந்து குறைந்தது 100 படையினர் வரை தப்பியோடியுள்ளதாகவும் நம்பகமான உள்ளகத் தகவல்கள் உறுதி செய்கின்றன.

ஏனைய சிங்களப் படையினரின் டிவிசன்களில் இருந்து தப்பியோடுவோர் தொகையும் இந்த மாதத்தில் அதிகரித்திருந்தாலும் அது குறித்த சரியான தொகை விபரங்களைப் பெற முடியவில்லை.

http://www.puthinam.com/full.php?2b44OO44b...df1eo2cc0IcYS3e

ஒரே செய்தியை பலமாதிரி மற்றி மாற்றி இணைச்சிருக்கு?... ஒரே உறுப்பினரே அதை செய்யும் போது கொஞ்சம் நெருடலா இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆளாளுக்கு உசுப்பேத்துறாங்களே

தேசிய பாதுகாப்பு சபை தோற்றாலும் தோற்கும் போலத்தான் கிடக்குது

நானுமொரு பாவப்பட்ட ஜென்மம் தானப்பா

கொஞ்சமாவது உறுதிப்படுத்துங்கோவேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.