Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட இந்தியர்களுக்கும் ஈழத் தமிழர் நிலை விளக்க ஒரு சந்தர்ப்பம், ஓடிச் சென்று உங்கள் கருத்தை எழுதுங்கள்

Featured Replies

ஈழத் தமிழர்கள் படும் அவலத்தையும், அதுபற்றிய செய்திகள் மூடி மறைக்கப்ப்டுவது பற்றியும் 'த ரைம்ஸ் ஒப் இந்தியா' ( The Times Of India) வில் ஒர் செய்தி வந்துள்ளது. சிறீ லங்காவின் இன அழிப்புக் குற்றங்களுக்கு இந்தியா துணைபோவதாக செய்திகள் வருவதாகவும் இது ஒரு வரம்பு மீறிய செயல் எனவும் குறிப்பிட்டதோடு, சிறீ லங்காவின் பத்திரிகைகள்தான் வெள்ளை வானுக்கு பயப்படுகின்றன, இந்திய ஊடகங்கள் எதற்காக அஞ்சுகின்றன? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. இந்திய அரசின் பிழையான அணுகுமுறையைச் சுட்டிக்காட்டி, மனித அவலம் ஒன்று அரங்கேறுகிறது, இனியும் உலகம் பொறுத்திருக்கக்கூடாது, காலம் கடப்பதற்குகுள் உடனடியாக கருத்திற் கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. செய்தியை எழுதியவர் 'அருந்ததி றோய்'

தமிழர்களே, இந்திய தேர்தல் நெருங்குகிறது, ஓடிச்சென்று, செய்தி வெளியிட்டமைக்கு நன்றி கூறி, எம்தரப்பு நியாயங்களை எடுத்துக்கூறுங்கள். சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்துவதே சாலச் சிறந்தது.

http://timesofindia.indiatimes.com/India/T...how/4331986.cms

Edited by Thesiyaveeran

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்புக்கு நன்றி தேசியவீரன், எல்லோரும் இதற்க்கு பினூட்டம் எழுதுங்கள் இங்கும் எதிரிகளே அதிகம் எழுதுகிறார்கள்

வணக்கம்

முழு விவரமும் தெரியாத இந்தியர்கள் அப்படிதான் எழுதுவார்கள் . அவர்களை எதிரிகள் என கூறுவதை நான் எதிர்க்கிறேன். முதன் முறையாக ஒரு வட இந்திய பத்திரிக்கையையில் ஏறக்குறைய நம்மவரை ஆதரிப்பது போல வந்து இருக்கும் முதல் கட்டுரை என நினைக்கிறன் . முதல் பக்கத்தில் வெளி வந்திருக்கும் இச்செய்தி கொஞ்சமாவது பிற இந்தியர் மனதை மாற்றும் அளவில் உள்ளது . இந்தியர்கள் எப்போதிலிருந்து எதிரிகள் ஆனார்கள் ??? . நீங்கள் இனைய தளத்தில் தவறாக எழுதியிருப்பவர்களுக்கு விளக்கங்கள் மட்டும் எழுதுங்கள் . அது போதும் . கோஷங்களும் ஆவேஷமும் வேண்டாம் .

நன்றி

  • தொடங்கியவர்

இந்த செய்தியாளர் Arunthati Roy பற்றிய சில குறிப்புகள்.

arunthatiroy.jpg

அருந்ததி றோய் அவர்கள் ஒரு தலைசிறந்த எழுத்தாளரும் ஒரு சமூகசேவகியும் ஆவார். இந்தியாவின் கேரள மாநிலத்தில் பிறந்த இவர், தனது இழமைப் பருவத்திலே, காலியான போத்தில்களை விற்று வரும் வருமானத்திலே, டெல்லியிலே ஒரு குடிசையிலே வாழ்ந்துவந்தார்.

1997 ஆம் ஆண்டு தனது முதல் புதினமான த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்க்கு (The God of Small Things) புக்கர் பரிசு(Booker Prize) பெற்றார். புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

2003ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்படவிருந்த சாகித்ய அகாதமி பரிசை இவர் மறுத்து விட்டார். இது பற்றி அவர் கூறியிருப்பதாவது.

"சாகித்ய அகாதமி தேர்வுக் குழுவினர் மீது நான் மிகுந்த மதிப்பு வைத்து இருக்கிறேன். ஏராளமான எழுத்தாளர்கள் இந்த உயரிய விருதை கடந்த பல ஆண்டுகளாகப் பெற்றுள்ளனர். இம்முறை இந்த விருதை நான் பெறப்போவது இல்லை. மாறாக அரசுக்கு எதிரான என்னுடைய போராட்டத்தை பதிவு செய்ய நான் இதை பயன்படுத்திக் கொள்வேன்'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அரசின் கொள்கைகளையும, அதைக் கடைப்பிடிக்க அவர்கள் மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்களையும் கண்டித்து எழுத்தாளர் அருந்ததிராய் இந்த சாகித்ய அகாதமி விருதை வாங்க மறுத்துவிட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மே 2004-ல் சிட்னி அமைதிப் பரிசையும் வென்றார்.

Edited by Thesiyaveeran

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

முழு விவரமும் தெரியாத இந்தியர்கள் அப்படிதான் எழுதுவார்கள் . அவர்களை எதிரிகள் என கூறுவதை நான் எதிர்க்கிறேன். முதன் முறையாக ஒரு வட இந்திய பத்திரிக்கையையில் ஏறக்குறைய நம்மவரை ஆதரிப்பது போல வந்து இருக்கும் முதல் கட்டுரை என நினைக்கிறன் . முதல் பக்கத்தில் வெளி வந்திருக்கும் இச்செய்தி கொஞ்சமாவது பிற இந்தியர் மனதை மாற்றும் அளவில் உள்ளது . இந்தியர்கள் எப்போதிலிருந்து எதிரிகள் ஆனார்கள் ??? . நீங்கள் இனைய தளத்தில் தவறாக எழுதியிருப்பவர்களுக்கு விளக்கங்கள் மட்டும் எழுதுங்கள் . அது போதும் . கோஷங்களும் ஆவேஷமும் வேண்டாம் .

நன்றி

இல்லை. நான் எதிரிகள் என்று குறிப்பிட்டது இந்தியர்களை அல்ல. சிங்களர்களே அவ்வாறு பெயர்களை வைத்து எழுதுகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.