Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிக்கல் நிறைந்த போர்க்களத்தில் அடுத்து நடக்கப் போவது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிக்கல் நிறைந்த போர்க்களத்தில் அடுத்து நடக்கப் போவது என்ன?

[ ஆய்வு:அங்கதன் ]

ஞாயிறு, 29 மார்ச் 2009 21:44

வன்னிச் சமர் இப்போது புதுக்குடியிருப்பின் எல்லைகளைக் கடக்கின்ற நிலையை அடைந்திருக்கிறது. புதுக்குடியிருப்புச் சந்தியை இந்த மாதத் தொடக்கத்தில் கைப்பற்றிய படையினர், புதுக்குடியிருப்புப் பிரதேசம் முழுவதையும் கைப்பற்ற இன்னும் சண்டையிட வேண்டிய நிலையில் உள்ளனர்.

கிளிநொச்சியைக் கைப்பற்றவோ, பூநகரியைக் கைப்பற்றவோ, மாங்குளம் அல்லது மல்லாவி, துணுக்காய், முல்லைத்தீவு நகரங்களைக் ஆய்வு:அங்கதன்

கைப்பற்றவோ, படையினர் இதுபோன்று அங்குலம் அங்குலமாகச் சண்டையிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கவில்லை. மேற்படி நகரங்களின் சில பகுதிகள் கைப்பற்றப்பட்டதும், அவற்றை முழுமையாகக் கைப்பற்றும் வாய்ப்பு படையினருக்குக் கிடைத்து வந்தது.ஆனால், புதுக்குடியிருப்பு நகரின் ஒவ்வொரு வளவிலும், ஒவ்வொரு வீட்டு முற்றத்திலிலும், குச்சொழுங்கைகளிலும் சண்டைகள் நடக்கின்றன.

புதுக்குடியிருப்பு புலிகளின் பலமான கோட்டையாக இருந்த பகுதி. அதை இழப்பதற்குப் புலிகள் தயாராக இருக்கவில்லை.இதனால் அவர்கள் தொடர்ந்து கடுமையான எதிர்த்தாக்குதல் நடத்தி படையினரின் முன்னகர்வைத் தடுத்து வருகின்றனர்.

இது முதற் காரணம்.புலிகளின் கட்டுப்பாட்டில் இப்போது சுமார் 26 சதுர கிலோ மீற்றர் பரப்பளவான பகுதி மட்டுமே இருக்கிறது.இந்தப் பகுதியையும் இழந்து விடாமல் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் புலிகளுக்கு இருக்கிறது. இதனால் அவர்கள் கடுமையாகச் சண்டையிட்டு படைநகர்வைத் தடுக்க முனைகின்றனர்.

பரந்த பிரதேசத்துக்குள் புலிகளைச் சண்டைக்கு இழுத்து, சாதகமான இடத்தில் ஊடறுத்து நுழையும் படைத்தரப்பின் வழக்கமானதந்திரோபாயத்தை இந்தக் களமுனையில் கையாள்வது கடினமானது.அதைவிடப் புலிகள் இந்தப் பகுதியில் கனரக இயந்திரத் துப்பாக்கிகளை பயன்படுத்தித் தாக்குதல் நடத்தி வருகின்றனர்

இது இரண்டாவது காரணம்.புதுக்குடியிருப்புச் சண்டை குறுகிய பிரதேசத்துக்குள் தான் நடக்கிறது. ஆனால் படைத்தரப்பு மிகப் பெரியளவிலான படைபலத்தை இங்கு குவித்து வைத்திருக்கிறது.இலங்கை இராணுவம் மட்டுமன்றி உலகின் எந்தவொரு இராணுவமுமே இத்தகையதொரு சிறிய பிரதேசத்துக்குள், குறைந்த எண்ணிக்கையான ஆட்பலத்தைக் கொண்ட ஒரு படையணியை அழிப்பதற்கு, இந்தளவு பிரமாண்டமான படையணிகளையோ, சுடுபல சக்தியையோ வளங்களையோ பயன்படுத்தியதாக வரலாறு இல்லை.

கரையோரப் பாதுகாப்பு வலயத்தின் வடக்கே சுமார் 2 கி.மீ தொலைவில் பிரிகேடியர் பிரசன்ன சில்வாவின் 55 ஆவது டிவிசன்.கரையோரப் பாதுகாப்பு வலயத்தின் மேற்குப் பகுதியில் பிரிகேடியர் சவீந்திர சில்வாவின் 58 ஆவது டிவிசன்.இந்தப் பாதுகாப்பு வயலத்தின் தெற்மேற்குமற்றும் மேற்குப் பகுதிகளில் 53 ஆவது மற்றும் 68 ஆவது டிவிசன்.தெற்குப் புறத்தில 59 ஆவது டிவிசன்.இவ்வாறு புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள குறுகிய நிலப்பரப்பைச் சுற்றியதாக 5 டிவிசன் படையினர் முன்னரங்குகளை அமைத்திருக்கின்றனர்.இவற்றில

  • கருத்துக்கள உறவுகள்

என்னமோ எல்லாம் சொல்லுறாங்க...ஒன்டுமே விளங்கேல்ல

அதெல்லாம் பெரியவங்க சமாச்சாரம்... அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்..!

மாவீரரான நீங்கள் இப்போதைக்கு செப்புவைத்து விளையாடுங்கள்..! :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.