Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலண்டன் கவனயீர்ப்பு-அமைப்பாளர்கள் கவனத்திற்க்கு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலண்டன் கவனயீர்ப்பு-அமைப்பாளர்கள் கவனத்திற்க்கு

மேற்கண்ட கவனயீர்ப்பில், ஆளாளுக்கு கமராக்களஈ கொண்டு வந்தும், மொபைலிலுல் படம் எடுக்கிறார்கள். இதை உடனடியாக தடுத்து நிறுத்தவும். நிரந்தர விசா இல்லாத பலர் இந்த கவனயீர்ப்பில் பங்கு பெறுவார்கள். இந்த படங்கள் எடுப்பதால், அது ஒருக்கால் எதிரி கைக்கு போனால் நிலமை மோசமாகும்.

நேற்றும் கூட இளம் பிள்ளையள் கோசம் போடுவதை ஒருத்தர் வளைத்து வளைத்து படம் எடுத்தார். எடுக்கவேண்டாம் என்று சொன்னதும் தான் புதினத்தின் பிரதினிதி என்றும் சொன்னார்

இப்படி ஆளாலுக்கு படம் எடுக்க விட்டால், நிச்சயமாக கூட்டத்துக்கு வரும் ஆக்களின்ர அளவு குறையும். இந்த படம் எடுப்பு தொடர்ந்தால் பொம்பிளை பிள்ளையள் கூட்டத்துக்கு வாரது முற்றாக நிக்கவும் கூடும்.

மற்றது இந்த படம் எடுக்கிற ஆக்கள் ஆமி இன்டலிஜின்சாயும் கூட இருக்கலாம்.

எனவே உடனடியாக இதை நிறுத்தவும். குறிப்பக இரவு நேரங்களில்.

கவனயீர்பில் வந்து படம் பிடிக்கும் பாலுமகேந்திராக்களுக்கு.

தயவு செய்து இந்த வேலையை விடுங்கோ.

அங்க ஒண்டும் கானிவெல் நடக்கவில்லை படம் பிடிக்கிறதுக்கு.

படம் பிடிக்க ஆசை என்டா வன்னிக்கு போய் மனித அவலத்தை வடிவா படம் எடுத்து உலகிற்க்கு காட்டுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவனயீர்ப்பு நிகழ்வுகளின் படம் எடுப்பதை தடை செய்வது முடியாத காரியம். அப்பிடி செய்வது ஊடகங்களுக்கான முழுமையான சுதந்திரத்தை மறுப்பதாக கருதப்பட வாய்புள்ளது. ஆனால் ஏற்ப்பாட்டாளர்கள், தகவல் மையம் ஒன்றை தொடங்கி அதல் அனுமதி பெற்றவர்களுக்கு மட்டும் படம் எடுக்கும் அனுமதியை வழங்க முடியும். ஆனால் தகவல் மையம் அமைத்து விட்டு நாளாந்தம் ஓடிக்கொண்டிருக்க முடியாது. உண்ணாவிரதமிருப்போரையே துரத்தி கொண்டிருக்கின்றது காவல்துறை.

படம் எடுப்பவர்களிடம் ஏற்ப்பாட்டாளர்கள் தவிர்ந்த மக்களும் அவர்களை உறுதிப்படுத்தி கொள்ளலாம். இப்படியே கடந்த முறை அமெரிக்காவில் நடைபெற்ற இடத்தில் உண்மையாக ஊடகங்களுக்கு படம் எடுப்பவர்களே மற்றவர்கள் ஊடகவியலாளர்களா என்று பரிசோதித்து பார்க்கும் விதத்தில் கேள்விகளைத் தொடுத்தனர்.

எனவே இந்த விடயத்தில் ஏற்ப்பாட்டாளரிலும் பார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கவனம் மிக முக்கியம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்க சொல்லுறது சரிதான் நிதர்சன். அதுக்குதான் சொல்லுறன்.

இடைக்கிடை யாரும் தயவு செய்து படம் எடுக்காதயுங்கோ என்று கூட்டம் நடக்கும் இடத்திலும், டீவி ரேடியோவிலும் அறிவிப்பு சொன்னா, படம் எடுக்கிறவையும் வரமாட்டினம். போராட்டகாரரும் விழிப்பாயிருப்பினம்.[

இப்ப என்னாடா என்டா வாரவன் போறவன் எல்லாம் படம் எடுக்கிரான். ஊடகவியளாரர் யாரும் மொபைலில படம் எடுப்பினமே?

ஆகவே போராட்டகாரரும் விழிப்பாயிருக்கவும், யாரும் படம் எடுத்தால் உடனடியாக அதை தடுக்கவும், அல்லது அடையாள அட்டையை கேட்கவும்.

இதில நான் வெள்ளைகார பேப்பர் ரிப்போட்டரை சொல்லேல்ல, எங்கட ஆக்கலைத்தான் சொல்லுறன்

Edited by me_tamilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ளைக்காரார் என்றிட்டு அசட்டையாக இருக்க முடியாது சிங்களவனுக்கு வேலை செய்யிற வெள்ளையள் கனபேர் இருக்கினம்.

வெள்ளைக்காரார் மட்டுமில்லை, 10 வயதுள்ள சிறுவர்கள்கூட கைத்தொலைபேசியில் நேற்று தொடர்ந்து படம் பதிவுசெய்து கொண்டிருந்தார்கள், என்கடைமக்கு நானும் ஓர் தடவை சொன்னேன், அச்சிறுவன் கேட்டதாகத்தெரியவில்லை, எல்லோரையும் சுத்தி சுத்தி முகங்களையும் தெளிவாக எடுத்த வண்ணம் இருந்தார். சிறுவர்களைப் பாவித்து சில பெரியவர்கள் இலாபமடையக்கூடும். தயவுசெய்து இந்த நடவடிக்கைகளை தடைசெய்யுமாறு மாணவரமைப்பு/ இளையோரமைப்பு உரக்க அறிவிக்கவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் சொல்லுறது மிகவும் சரி !

அங்கு போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களில் 50% மாணவர்கள் Student Visaவில் தான் நிக்கிறார்கள் (என்ர கூட்டாளி மார் நிறையப்பேர் அங்க தான் நிக்கின) பகலில் படமெடுத்தால் தங்கள் முகம் தெரிந்துவிடும் என்பதால் இரவினில் போவார்கள். ஆனாலும் அங்குள்ள பாலுமகேந்திராக்கள் தொல்லை காரணமாக அவர்கள் இரவு போராட்டத்திற்க்கும் போகப்பயமடைவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு சிக்கலான விடயம்தான். இதிலே ஏற்பாட்டாளர்கள் என்பதைவிட எல்லோரும் விழிப்பு நிலையிலே இருந்து அவதானிக்க வேண்டியது கடமையாகிறது. நாம் நடத்துவது வெளிப்படையான போராட்டம். அதோடு பல்வேறு விதமான வசதியீனங்கள்(அனுமதி,நேரமின்ம

ை, வேலைப்பளு......) கொண்டதாகவே எமது போராட்டங்கள் நடைபெறுகிறது. நாம் ஒன்று செய்யலாம் யார் படம் எடுக்கிறார்கள் என்பதை அவதானிப்பதூடாக அவரது செயற்பாட்டைக் கண்காணித்துப் பார்க்கலாம்.வாழ வேண்டுமாயின் போராட வேண்டியது தமிழினத்தின் தலைவிதியாகியுள்ள சூழலில் அனைத்து விதமான அச்சுறுத்தல்களும் எம்மை நோக்கியுள்ளன என்பதே உண்மை. எல்லா நாடுகளிலும் இதுபோன்ற விடயங்கள் இருக்கத்தான் செய்கிறது. அதற்காகப் பயந்து ஒதுங்கிவிட முடியாது.

Edited by nochchi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.