Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது சிங்கள நாடு!" என மிரட்டல்: அச்சுறுத்தலினால் றக்குவானை சிறீ முத்துமாரியம்மன் ஆலய திருவிழா நிறுத்தம்

Featured Replies

இரத்தினபுரி இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மகோற்சவம் முதல் தடவையான நிறுத்தப்பட்டுள்ளது. இரத்தினபுரியான்:

இலங்கையில் சிங்களவர்களுக்கு உள்ள உரிமைகளை போலவே தமிழர்களுக்கும் சமவுரிமை உள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கூறி வருகின்ற நிலையிலேயே இந்த மகோற்சவம் நிறுத்தப்பட்டுள்ளது.

இத்தனை வருடங்கள் இலங்கையில் தமிழர்கள் சந்தோஷமாக தான் வாழ்த்து வந்தனர்.

இதற்கான முக்கிய காரணம் என்று கூறும் போது, இலங்கையிலுள்ள தமிழர்களை பாதுகாத்து வந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள், அவர்களின் மீது உள்ள அச்சத்தினால் இத்தனை வருடங்களும் இலங்கையிலுள்ள தமிழர்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி வாழ்த்து வந்தனர்.

அவர்கள் சற்று பின்னகர்ந்து சென்றதினால், முதற்கட்டமாக இறக்குவானையிலுள்ள மிக பழைமை வாய்ந்த ஆலயத்தின் மகோற்சவத்தை நிறுத்தி விட்டனர் சிங்களவர்கள்.

இறக்குவானை ஆலயத்தின் மகோற்சவம் சித்திரை பௌர்ணமியில் தான் நடைபெறும். கடந்த இரு வருடங்களாக பௌத்தர்கள், தமக்கு பௌர்ணமி தினத்தன்று பௌத்த விகாரைக்கு சென்று வழிபட முடியவில்லை எனவும், இவ்வருடம் ஆலய திருவிழா நடைபெறும் திகதியை தள்ளிப்போடுமாறும் கூறி சிங்களவர்கள் பெரும் அச்சுறுத்தல்களை விடுத்து வருகின்றனர்.

தம்மை மீறி மகோற்சவத்தை நடாத்தினால் பெரும் களவரத்தை உண்டுப்பண்ணுவதாகவும் சிங்களவர்கள் தற்போதும் அச்சுறுத்தல் விடுத்த வண்ணம் உள்ளனர்.

இதனால் இங்குள்ள தமிழ் மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படும் என கோவில் நிர்வாகம் நினைத்து ஆலய மகோற்சவத்தை இவ்வருடம் நடாத்துவதில்லை என முடிவெடுத்துள்ளது.

100 வருடத்திற்கு மேல் பழைமை வாய்ந்தது இறக்குவானை ஆலயம். அதுமட்டுமின்றி இரத்தினபுரியின் தேர்தல் திருவிழா நடைபெறும் ஒரே ஆலயம் இதுமட்டும் தான்.

இங்குள்ள மக்கள் இன்று அச்சுறுத்தப்பட்ட நிலையில் வாழ்த்து வருகின்றனர். இவர்களுக்கு இன்று என்ன முடிவு. ஈழத் தமிழர்கள் பாதிக்கப்பட்டமைக்கு உலக நாடுகளே எதிர்த்து வருவதை இலங்கை அரசாங்கம் மறுத்து வந்தது. ஈழத் தமிழர்களை தாம் பாதுகாத்து வருவதாகவும், இங்குள்ள தமிழர்களுக்கு சமவுரிமை வழங்குவதாகவும் கூறுகின்றது இலங்கை அரசு.

யுத்தத்தில் முடிவொன்று கிடைக்காத போதே தமது இனவாத்தை வெளிப்படுத்தும் இங்குள்ள சிங்களவர்கள். இலங்கை அரசு யுத்தத்தில் வென்றால். ஈழத் தமிழரின் நிலை?

இந்தச் சிறிய செய்தி ஆய்வு இரத்தினபுரியில் இருந்து எமக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆலைய சூழலில் வாழும் ஒருவரது மன வெளிப்பாடு இது என்பதனால் அந்த சிறிய ஆக்கத்தை திருத்தம் ஏதும் செய்யாமல் அப்படியே இங்கு தருகிறோம்.

www.globaltamilnews.net

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமுறை திருவிழாவை நிறுத்தி சிங்களவனுக்கு இடங்கொடுத்தால் பிறகு நடாத்த விடமாட்டார்கள்.

அது ஒரேயடியாக நிறுத்தியதாகத் தான் அர்த்தம்.

அது என்ன "தேர்தல் திருவிழா" ? - தேர்த்திருவிழா என்று பதியப்பட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

புதன்கிழமை, 29, ஏப்ரல் 2009 (23:13 IST)ரத்தினபுரி திருவிழா: சிங்கள இளைஞர்கள் மிரட்டல்!

இது சிங்கள நாடு!" என மிரட்டல்: அச்சுறுத்தலினால் றக்குவானை சிறீ முத்துமாரியம்மன் ஆலய திருவிழா நிறுத்தம்

இலங்கையில் உள்ள இரத்தினபுரி மாவட்டத்தில் சிங்கள இளைஞர்களின் அச்சுறுத்தல்களினாலும் மிரட்டல்களினாலும் சுமார் 200 வருட வரலாற்றைக்கொண்ட றக்குவானை ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய ஆண்டுத்திருவிழா நிறுத்தப்பட்டுள்ளது.

முத்துமாரியம்மன் ஆலயத்தின் திருவிழாவை ஏப்ரல் மாதம் 28 ஆம் நாள் தொடங்கி மே மாதம் 10 ஆம் நாள் வரை கொண்டாட தீர்மானித்து அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த வேளையில்தான் இந்த அச்சுறுத்தல் வந்துள்ளது.

சிங்கள இளைஞர்கள், ’’இது சிங்கள நாடு. நாம் சொல்வதையே தமிழர்கள் கேட்க வேண்டும்’’ எனக்கூறி அச்சுறுத்தியுள்ளனர்.சிங்கள பௌத்தர்களின் வெசாக் கொண்டாட்டம் மே மாதம் 4 ஆம் நாள் தொடக்கம் 10 ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது.

வெசாக் வாரம் கடைப்பிடிக்கப்படவுள்ளதால் இக்காலப்பகுதியில் எந்தவொரு கோவில் விழாக்களும் நடத்தமுடியாது என கட்டளையிட்டனர்.

அவ்வாறு மீறி நடத்தினால் எதிர்விளைவுகள் ஏற்படும் என்று சிங்கள இளைஞர்கள் ஆலய சபையினருக்கு எச்சரிக்கை செய்தனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான ஆலய திருவிழா நிறுத்தப்பட்டதனால் இறக்குவானை இரத்தினபுரி தமிழர்கள் கவலை அடைந்துள்ளதுடன் மிரட்டல்களினால் அங்கு மக்கள் மத்தியில் அச்சமும் நிலவுகின்றது.

நக்கீரன்

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது மீண்டும் 1981ம் ஆண்டுக்கு எம்மை அழைத்து செல்கின்றார்கள்........ மீண்டும் 1999 2000 2001 ம் ஆண்டுகள் வரும் என்பதே மகிழ்சியாக இருக்கின்றது.

ஸ்ரீலங்கா சிங்கள நாடா இல்லையா என்று நாங்கள் வாதிடவில்லை....

தமிழீழம் தமிழர்களுடையது.....எங்களது போராட்டமும் அதற்கானது தான்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.